Wednesday, July 31, 2024

கனடாவில் 3 லட்சம்

கனடாவில் 3 லட்சம் தமிழர் மட்டுமே உள்ளனர். கனடா அரசு “இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்பட வேண்டும் " என தெரிவித்துள்ளது. இந்தியாவில் எட்டுக்கோடி தமிழர் உள்ளனர். ஆனால் இந்திய அரசு இது பற்றி எதுவுமே கூறுவதில்லை. மாறாக, தமிழினப்படுகொலை செய்துவரும் சிங்கள அரசுக்கு உதவி வருகிறது. ஐ.நா வில் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இது குறித்து இந்திய அரசிடம் தட்டிக் கேட்க வேண்டிய உரிமையும் பொறுப்பும் தமிழக முதல்வருக்கு உண்டு. ஆனால் திராவிட முதல்வர் மௌனமாக இருக்கிறார். அது ஏன்? ஈழத் தமிழருக்கு உதவுவோம் என தேர்தலில் கொடுத்த வாக்குறுதி எல்லாம் பொய்யா? கைக்கெட்டும் தூரத்தில் எட்டுக்கோடி தமிழர் இருந்தும் தமிழர்களை கொல்லும் தைரியம் ஒன்றரைக் கோடி சிங்களவர்களின் அரசுக்கு எப்படி வந்தது?

No comments:

Post a Comment