Wednesday, July 31, 2024

இருவரும் விளையாட்டு

இருவரும் விளையாட்டு வீரர்கள். ஒருவர் மரடோனா. இன்னொருவர் நடராஜன். ஆங்கிலம் பேச வரவில்லை என்று வருத்தப்படுகிறீர்களா? என்று பத்திரிகையாளர் ஒருவர் மரடோனாவிடம் கேட்டபோது "அடுத்தவன் மொழி எனக்குத் தெரியவில்லை என்று நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? என் தாய்மொழி சரியாக பேச வரவில்லை என்றால் தான் நான் வருத்தப்பட வேண்டும். " என அவர் பதில் அளித்தார். இந்தி தெரியவில்லை என வருத்தப்படும் நடராஜனுக்கு இது தெரியுமா? தமிழ்நாட்டுக்கு பிழைக்க வரும் இந்திக்காரர்கள் தமக்கு தமிழ் தெரியவில்லை என்று வருத்தப்படுவதில்லை. அப்படியிருக்க இந்தி தெரியவில்லை என்று நடராஜன் ஏன் வருத்தப்படுகிறார்?

No comments:

Post a Comment