Wednesday, July 31, 2024

ஒரு நாள் சமையலுக்கு

ஒரு நாள் சமையலுக்கு வாங்கும் வெண்டிக்காயைக்கூட உடைத்து பார்த்து வாங்குகிறோம். ஆனால் 5 வருடம் எம்மை ஆளும் அரசியல்வாதிகளை ஆராயாமல் தெரிவு செய்கிறோம். ஒரு துண்டு தேங்காயைத் திருடியதற்காக எலிக்கு விஷம் வைத்து கொல்கிறோம். ஆனால் பல்லாயிரம் கோடி ரூபாய்களை திருடும் அரசியல்வாதிகளை கொல்ல நினைப்பதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது பொறுப்பற்ற அரசியல்வாதிகளை எமது பிரதிநிதிகளாக தெரிவு செய்கிறோம். அப்புறம் பிரச்சனை வந்ததும் யாராவது ஒரு தனி நபர் வந்து தீர்வு பெற்றுத் தருவார் என நம்ப முயல்கிறோம். தனி நபர்களால் சாகசம் செய்ய முடியுமேயொழிய ஒருபோதும் தீர்வு பெற்றுத் தர முடியாது. அரசிடமே அதிகாரம் உண்டு. அரசே பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். ஆனால் அரசோ மக்களை திசை திருப்பி அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க முயல்கிறது. எனவே அரசுக்கு எதிராக மக்களை திரட்டி போராடுவதே உரிய வழியாகும். இதுவே மக்கள் போராட்ட அரசியல் ஆகும்.

No comments:

Post a Comment