Wednesday, July 31, 2024

கடந்த வருடம்

கடந்த வருடம் ஒரு நீதிபதி உயிருக்கு ஆபத்து என்றுகூறி நாட்டை விட்டு வெளியேறினார். இந்த வருடம் ஒரு மருத்துவர் தனது உயிருக்கு ஆபத்து என்கிறார். பிரச்சனைக்கு காரணமான அரசு இது ஏதோ அதிகாரிகளுக்கிடையான மோதல் போன்று சித்தரித்து தப்ப முயல்கிறது. நீதிபதி மறக்கப்பட்டது போல் இந்த மருத்துவரும் விரைவில் மறக்கப்படலாம். நாம் எப்போதும் நோயாளிகளுடனே போராடுகிறோம். நோய்களுடன் போராடுவதில்லை. அதனால்தான் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருந்துகொண்டே உள்ளன. வடக்கில் வசந்தம் என்றார்கள். கிழக்கில் உதயம் என்றார்கள். ஆனால் மீண்டும் புலிகள் வந்தால் நல்லது என்று தமிழ் மக்களை நினைக்க வைத்துள்ளார்கள். இதுதான் சிங்கள அரசின் கடந்த 15 வருட சாதனை.

No comments:

Post a Comment