Wednesday, July 31, 2024

1983 இனப்படுகொலைகளுக்காக

1983 இனப்படுகொலைகளுக்காக சிங்கள அரசு மன்னிப்பு கோரியுள்ளது. சிங்கள அரசு இவ்வாறு மன்னிப்பு கோரும் நிலை வரும் என யாராவது 1983ல் கூறியிருந்தால் எவரும் நம்பியிருக்கமாட்டார்கள். சிங்கள அரசு இவ்வாறு மன்னிப்பு கோருவதற்கு முக்கிய காரணம் 1983 இனப்படுகொலைகளை தமிழ் மக்கள் மறக்கவில்லை. அவ் இனப்படுகொலைகளுக்கு நீதிகோரி ஒவ்வொரு வருடமும் தமிழ் மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். ஆனால் இவ் இனப்படுகொலைகளுக்கு வெறும் மன்னிப்பு மட்டும் போதாது. விசாரணை செய்து இதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நட்டஈடு வழங்க வேண்டும். முக்கியமாக இனி இவ்வாறான இனப்படுகொலைகள் நிகழா வண்ணம் உறுதி செய்ய வேண்டும். அதுவரை தமிழ் மக்கள் நீதி கோரி நினைவு கூர்வதை நிறுத்தக் கூடாது.

No comments:

Post a Comment