Wednesday, July 31, 2024

மா.செ.தமிழ்மணி ஐயாவுக்கு

•மா.செ.தமிழ்மணி ஐயாவுக்கு அஞ்சலிகள் ஈழத் தமிழர்கள் மீது அன்பும் பாசமும் கொண்ட , தன் வாழ் நாள் முழுவதும் தமிழுக்காக வாழ்ந்த தமிழ்மணி ஐயா அவர்களுக்கு எமது அஞ்சலிகள். அவரை நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன். ஏனெனில் அவரது மகன்களான தமிழ் முகிலன் தமிழ்இனியன் ஆகியோர் எனது தோழர்களாக இருந்தனர் ஆனால் அவரை நேரில் காணும் வாய்ப்பு ஒரேயொரு முறைதான் எனக்கு கிடைத்தது. அது என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. தன் பிள்ளைகள் தமிழ்முகிலன் , தமிழ் இனியன் ஆகியோர் மீதான கொடைக்கானல் வெடிகுண்டு வழக்கின் தீர்ப்பு நாளின் போது திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்திருந்தார். அன்று என்னையும் அவ் வழக்கிற்காக பொலிசார் அவ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அவருடைய மகன் தமிழ் முகிலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்ட்டது. நான் நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தும் பொலிசார் என்னை விடுதலை செய்யாது மீண்டும் காவலுடன் சிறப்புமுகாம் கொண்டு சென்றனர். அப்போது எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக மனம் வருந்தியதுடன் நான் எப்படியாவது விரைவில் விடுதலையாகி விட வேண்டும் என தமிழ்மணி ஐயா என் கரம்பற்றி ஆறுதல் கூறியது இப்போதும் என் நினைவில் இருக்கிறது. தனது மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அந்த துயரமான நிலையிலும்கூட தனது மகன் அருகில் நின்று ஆறுதல் கூறாமல் எனது அருகில் வந்து எனது விடுதலைக்காக அவர் குரல் கொடுத்தது ஈழத் தமிழர்கள் மீது அவர் கொண்ட அன்புக்கு சான்றாகும். அவர் ஈழத் தமிழர்கள் மீது கொண்ட அன்பும் பாசமும் அளப்பரியது. அவர் எமக்கு அளித்த ஆதரவு மறக்க முடியாதது. • ஈழத் தமிழர்கள் சார்பில் அவருக்கு எமது அஞ்சலிகளை செலுத்துகின்றோம். • தோழர்கள் முகிலன் இனியன் மற்றும் அவரது குடும்பத்தவர்கள் துயரில் பங்கு கொள்கிறோம். குறிப்பு – 10.07.2015யன்று மா.செ.தமிழ்மணி ஐயா அவர்கள் மரணமடைந்தபோது நான் எழுதிய அஞ்சலிக் குறிப்பு இது. அவரின் 9வது நினைவு தினத்தை முன்னிட்டு மீள் பதிவு செய்துள்ளேன்.

No comments:

Post a Comment