Wednesday, July 31, 2024

மக்கள் போராட்ட முன்னணி

மக்கள் போராட்ட முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமன்றி மக்கள் போராட்ட முன்னணி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று வெளியிட்டுள்ளனர். இவர்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர். தேர்தலுக்கு பின்னரும் இக் கொள்கையை சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ந்து முன்னெடுப்போம் எனவும் உறுதி அளித்துள்ளனர். சோசலிசக்கட்சியின் சிறீதுங்க அவர்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பல வருடங்களாக ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைவர். ஆனால் அவரால் இக் கருத்தை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சென்று ஆதரவைத் திரட்ட முடியவில்லை. ஜேவிபி யின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரா அவர்கள் தமிழ் மக்களுக்கு சம உரிமை உண்டு என்று கூறிவருகிறாரேயொழிய தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அரகலய போராட்டத்தை ஒன்று சேர்ந்து முன்னெடுத்த இவர்களால் தற்போது ஒன்று சேர்ந்து தேர்தலில் போட்டியிட முடியவில்லை. இவர்கள் பிரிந்து நின்று போட்டியிடுவது சஜித் , ரணில் போன்றவர்களுக்கே உதவிகரமாக அமைகிறது.

No comments:

Post a Comment