Wednesday, July 31, 2024

அண்மையில் எனது முகநூல்

அண்மையில் எனது முகநூல் நண்பர் ஒருவர் ஆசிரியர் சிவபாதசுந்தரம் அவர்களை நினைவு கூர்ந்து பதிவு ஒன்று இட்டிருந்தார். அதை படித்ததும் எனக்கு ஆசிரியர் சிவபாதசுந்தரம் அவர்களுடனான சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. ஆசிரியர் சிவபாதசுந்தரம் அவர்கள் காட்லிக்கல்லூரியல் படிப்பித்துக்கொண்டிருந்தவேளை அவரிடம் விஞானப்பாடம் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது. ஒருநாள் அவர் மனித இனம் தோன்றிய கூர்ப்பு விதி பற்றி படிப்பித்துக்கொண்டிருந்தார். நான் எழுந்து “விஞ்ஞான பாடத்தில் மனிதன் தோன்றியதற்கு கூர்ப்பு விதி கூறுகின்றீர்கள். சமய பாடத்தில் மனிதனை கடவுள் படைத்தார் என்று கூறப்படுகிறது. இதில் எது சரி?”எனக் கேட்டேன். அவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தச்சந்தோப்பு பிள்ளையார் கோவிலில் வணங்கிவிட்டே பாடசாலைக்கு வருவார். இதை நான் நேரில் கண்டிருக்கிறேன். இதனால்தான் நான் கேட்கிறேன் என்பதைப் புரிந்தகொண்ட அவர் சிரித்துவிட்டு “பரீட்சையில் இந்த கேள்வி வந்தால் மேலே பாரு. அது சமயபாட வினாத்தாளாக இருந்தால் கடவுள் படைத்தார் என்று எழுது. விஞ்ஞானபாட வினாத்தாளாக இருந்தால் கூர்ப்பு விதியை எழுது” என்றார். சரி. நான் விடயத்திற்கு வருகிறேன். பூமி உருண்டை என்பதை விஞ்ஞானி கலிலியோதான் கண்டு பிடித்ததாக கூறுகின்றனர். ஆனால் அதற்கு முன்னரே ஸ்ரீ வராகப் பெருமாள் பூமியை சுமக்கும் சிற்பம் உள்ளது. அதில் பூமி உருண்டையாக உள்ளது. அப்படியென்றால் பூமி உருண்டை என்பது கலிலியோவுக்கு முன்னரே இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டதா? அல்லது அந்த சிற்பத்தில் இருக்கும் உருண்டை பூமியைக் குறிக்கவில்லையா? யாராவது தெரிந்தவர்கள் பதில் பிளீஸ்

No comments:

Post a Comment