Wednesday, July 31, 2024

41 வருடங்களுக்கு முன்னர்

41 வருடங்களுக்கு முன்னர் 1983 யூலையில் இதே நாட்களில் இலங்கையில் , •2000வரையிலான அப்பாவி தமிழர் கொல்லப்பட்டனர் •600 வரையிலான தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர் •5000வரையிலான தமிழர் கடைகள் அழிக்கப்பட்டன •1800 வரையிலான தமிழர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. •பலத்த காவலில் சிறையில் வைக்கப்பட்டிருந்த 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். இத்தனையும் சிங்கள அரசே திட்டமிட்டு பொலிஸ் மற்றும் ராணுவத்தின் முன்னிலையில் அவற்றின் உதவியோடு செய்தது. நடந்தது இனப்படுகொலை. ஆனாலும் இன்றுவரை சிங்கள அரசும் இந்திய அரசும் இதனை இனக்கலவரம் என்றே கூறிவருகின்றன. அதுமட்டுமல்ல இதுவரை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியும் வழங்கப்படவில்லை. உன் கோவணம் உரியப்பட்டதா? உரிந்தவன் கைகளை வெட்டு. ஆனால் ஒருபோதும் கெஞ்சிக் கோவணம் கட்டாதே. அதைவிட அம்மணமாகவே போராடு

No comments:

Post a Comment