Friday, February 28, 2020

பாஜக வுடன் கூட்டணி அமைத்தால்

பாஜக வுடன் கூட்டணி அமைத்தால் ஊழல் வழக்கு வாபஸ். அது மகாரஸ்ரா மாநிலம். பெரியாரை திட்டினால் வருமான வரி வழக்கு வாபஸ். இது தமிழ்நாடு. மராட்டிய நடிகர் ரஜனி, வருமானத்திற்கு ஒழுங்காய் வரி கட்டவில்லை பள்ளிக்கூடத்திற்கு வாடகை செலுத்தவில்லை இவர் தமிழ் நாட்டிற்கு நேர்மையான ஆட்சி தரப் போகிறாராம். இன்னுமாடா இந்த பரட்டையை நம்புறீங்க? குறிப்பு - தர்பார் படம் 65 கோடி ரூபா நட்டம் Image may contain: 1 person

அன்று இதே நாளில் காந்தியைச் சுட்டார்கள்

அன்று இதே நாளில் காந்தியைச் சுட்டார்கள் இன்று அதே நாளில் மாணவர்களை சுடுகின்றார்கள் “ஹே ராம்” சொல்லிக் கொண்டு சுட்டால் பயங்கரவாதியும் தேச பக்தன் ஆயிடுவான் ஜெய. ஹிந்! பாரத் மாதாக்கி ஜே! Image may contain: 1 person, standing, possible text that says '30 JAN 1948 30 JAN 2020'

ஆமைக்கு மயிர் கிடையாது

ஆமைக்கு மயிர் கிடையாது முதலைக்கு நாக்கு கிடையாது மீனுக்கு இரைப்பை கிடையாது பாம்புக்கு காது கிடையாது நண்டுக்கு தலை கிடையாது சுமந்திரனுக்கு ---------- கிடையாது! நான் சுமந்திரனுக்கு அறிவு கிடையாது என்றே எழுத நினைத்தேன். ஆனால் உங்களுக்கு வேறு ஏதும் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பு கிடையாது. முதலில், நடந்தது இனப்படுகொலை இல்லை, போர்க்குற்றம் மட்டுமே என்றார் அடுத்து, சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்றார். பின்னர் இலங்கை அரசுக்கு இரண்டு முறை கால அவகாசம் பெற்றுக் கொடுத்தார். இப்போது , விசாரணைகள் யாவும் முடிந்துவிட்டது. இனி சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது என்கிறார். அதுமட்டுமல்ல சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பேசி வைத்திருந்தேன். அதற்குள் ஆட்சி மாற்றம் எற்பட்டுவிட்டது என்கிறார். ஜந்து வருடமாக அவர் முக்கியது இதுதான். இத்தனைக்கும் பிறகுகம்கூட அவரை சிலர் நம்புகிறார்களே? குறிப்பு - அந்த மானஸ்தன் பாக்கட்டில் இப்பவும் அந்த ராஜினாமாக் கடிதம் இருக்கிறதா? Image may contain: one or more people, people standing and text

•என்னது ரணில் தலைவரா?

•என்னது ரணில் தலைவரா? சுமந்திரன் - ஜயா! UNPக்குள்ள யார் தலைவர் என்று பெரிய பிரச்சனையாக இருக்காம். எங்களை உதவும்படி மங்களா கேட்கிறார். சம்பந்தர் - எங்கட பிரச்சனை அதைவிட மோசமாய் இருக்கு. நாங்க எப்படி அவைக்கு உதவ முடியும் தம்பி? சுமந்திரன் - பேசாமல் ரணிலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக போட்டுவிடுவம். அவையின்ர பிரச்சனையும் தீர்ந்துவிடும். எங்கட பிரச்சனையும் தீர்ந்துவிடும் அல்லவா ஜயா? சம்பந்தர் - என்னது தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு ரணில் தலைவரா? ஒரு சிங்களவரை தலைவராக எங்கட தமிழர் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் தம்பி. சுமந்திரன் - ஏன் ஜயா? இத்தனை நாளும் ரணில் தலைமையில்தானே நாங்கள் இயங்கினோம். ரணிலுக்காகத்தானே இயங்கினோம். இதெல்லாம் தமிழ் மக்களுக்கு தெரியும்தானே? சம்பந்தர் -- தேர்தல் வேற வரப் போகுது. இந்த நேரத்தில ஏன் தம்பி இந்த விஷப் பரீட்சை? சுமந்திரன் - இல்லை ஜயா, அதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். நான் சொன்னால் உடனே என்னுடைய தம்பிகள் “சம்பந்தர் ஜயாவின் சாணக்கியம். - ஒரு சிங்களவரை வைத்தே சிங்களவரை எதிர்க்கும் சுமந்திரன் சாதுரியம்” என்றெல்லாம் பேஸ்புக்கில் எழுதுவாங்கள். சம்பந்தர் - அப்படி எல்லாம் எழுதுவாங்களா தம்பி? எனக்கே வெட்கமாய் இருக்கு. ஆனால் தம்பி “ நீர் என்ன வேண்டுமானாலும் செய்யும். எனக்கு என் சொகுசு பங்களா முக்கியம். தெரியும்தானே? அதை விட்டிட்டு என்னால இந்த வயசில் இருக்க முடியாதென்று? சுமந்திரன் - என்ன ஜயா இப்படிச் சொல்லிட்டீங்க? ஒரு சின்ன வீட்டில் இருக்கிறியள். உட்காருவதற்கு ஒரு கதிரை கூட இல்லை. கட்டிலில்தான் உட்காருவோம் என்று பொய் சொல்லி இந்த சொகுசு பங்களாவை பெற்றுத் தந்ததே நான்தானே.. அதை மறப்பேனா? குறிப்பு - யாவும் கற்பனை இல்லை. Image may contain: one or more people

•இலங்கை மக்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?

•இலங்கை மக்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா? ஆங்கிலேயரிடமிருந்து 04.02.1948 யன்று இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது என்று சிலர் கூறுகிறார்கள். இந்த சுதந்திரம் போராடிப் பெற்றதில்லை என்றும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும்போது கொசுறாக இலங்கைக்கும் சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் கொடுத்துவிட்டு சென்றதாக அந்த சிலர் கூறுகிறார்கள். இந்த சிலரிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறோம் (1) இலங்கை மக்கள் போராடாமலே ஆங்கிலேயர்கள் சுதந்திரம் கொடுத்தனர் என்றால் அதற்கு முன்னர் போர்த்தக்கேயரும் ஒல்லாந்தரும் எப்படி இலங்கையை விட்டு வெளியேறினார்கள்? (2) இந்தியாவில் கோவாவை 300 வருடம் ஆண்ட போர்த்துக்கேயர் இலங்கையில் நூறு வருடத்தில் எப்படி வெளியேற்றப்பட்டார்கள்? (3) போர்த்தக்கேயரும் ஒல்லாந்தரும் ஏன் முழு இலங்கையையும் கைப்பற்ற முடியவில்லை? (4) ஆங்கிலேயர்கூட இறுதியாகத்தானே கண்டி ராஜ்ஜியத்தை கைப்பற்ற முடிந்தது. அதற்கு என்ன காரணம்? (5) இந்தியாவில் இருந்து 265 மைல் தொலைவில் உள்ள லட்சதீவுகளையும் 740 மைல் தொலைவில் உள்ள அந்தமான் தீவையும் இந்தியாவுடன் இணைத்த ஆங்கிலேயர்கள் வெறும் 20 மைல் தொலைவில் உள்ள இலங்கையை ஏன் இந்தியாவுடன் இணைக்க முடியவில்லை? (6) மன்னர் காலத்தில்கூட இலங்கை தமிழக மன்னர்களின் பிடியில் நீண்டகாலம் இருக்கவில்லையே. அது ஏன்? மேற்கண்ட வினாக்களுக்கு விடை தெரிந்து கொண்டால் இலங்கை மக்களின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை அந்த சிலரால் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் இலங்கை சுதந்திரம் என்பது காலனி நாடாக இருந்தது நவகாலனி நாடாக மாறியுள்ளது. அப்படியென்றால் இலங்கையில் யாருக்கு சுதந்திரம் இருக்கிறது? • இலங்கை முழுவதையும் ஆக்கிரமித்து சுரண்டுவதற்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மட்டுமன்றி அமெரிக்காவுக்கும்கூட சுதந்திரம் இருக்கிறது. • தமது பதவி நலன்களுக்காக இலங்கையை விற்பதற்கு ஆட்சியாளர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. • தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ய மகிந்த குடும்பத்திற்கு சுதந்திரம் இருக்கிறது. • தமிழ் மக்களை கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்யவும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கவும் கோத்தபாயாவுக்கு சுதந்திரம் இருக்கிறது. • தன் ஆசைக்கு இணங்கவில்லை என்பதற்காக பெண்ணின் காதலனை கொலை செய்ய மகிந்தவின் மகனுக்கு சுதந்திரம் இருக்கிறது. • பிரித்தானிய ராணியின் குதிரையை வாங்கி கெலிகொப்டரில் சென்று நுவரேலியாவில் குதிரைச் சவாரி செய்ய மகிந்தவின் இன்னொரு மகனுக்கு சுதந்திரம் இருக்கிறது. • அரசுக்கு எதிராக போராடும் மாணவர்களையும் தொழிலாளர்களையும் சுட்டு அடக்குவதற்கு இலங்கை படைகளுக்கு சுதந்திரம் இருக்கிறது. சிங்கள மக்களுக்கு ஒரு வேண்டுகோள்! இலங்கையில் மக்களுக்கு சுதந்திரம் இல்லை. எனவே இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை இலங்கை மக்கள் அனைவரும் நடத்த வேண்டியுள்ளனர். இந்தியாவில் ஜின்னா கேட்டதுபோல் இலங்கையில் தமிழ் மக்கள் 1948ல் பிரிவினை கோரவில்லை என்பதை உணர வேண்டும். அதுமட்டுமல்ல காஸ்மீரில் சில அமைப்புகள் தம்மை பாகிஸ்தானுடன் இணைக்குமாறு கோருகின்றனர். ஆனால் இன்றுவரை ஒரு தமிழ் அமைப்புகூட தம்மை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரவில்லை. இந்தளவு உணர்வுமிக்க தமிழ் மக்களை தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதிக்குமாறு கெஞச வேண்டிய நிலையில் இலங்கை ஆட்சியாளர் தள்ளியுள்ளனர். குறிப்பு - ஒரு இனத்தை அடக்கி ஆள முற்படும் எந்தவொரு இனமும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. எனவே சிங்கள மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் தமிழ் மக்களின் சுதந்திரத்தை முதலில் அங்கீகரிக்க வேண்டும். Image may contain: one or more people

•இலங்கை சுதந்திரதினம் தமிழருக்கு கரி நாளா?

•இலங்கை சுதந்திரதினம் தமிழருக்கு கரி நாளா? இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக முதன்முதலில் 1956ல் அறிவித்தவர்கள் தமிழரசுக்கட்சியினரே. அதற்கமைய நடராஜா என்பவர் திருகோணமலை கச்சேரியில் பறந்த இலங்கை தேசியக் கொடியை அகற்றிவிட்டு கறுப்பு கொடியை ஏற்றினார். அப்போது இலங்கை பொலிஸ் அவரை சுட்டுக் கொன்றது. இன்று அவரது 64வது நினைவு தினம் ஆகும். கடந்த ஆண்டு இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக அனுட்டிக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரினார்கள். அப்போது தமிழரசுக்கட்சி எம்.பி யான சுமந்திரன் சுதந்திரதினத்தை கரிநாள் எனக் குறிப்பிடுவது தவறு என்றார். அதுமட்டுமல்ல தன் மனைவியுடன் சென்று இலங்கை அரசின் சுதந்திpரதின வைபவத்திலும் கலந்துகொண்டார். ஆனால் இம்முறை அதே சுமந்திரனும் சம்பந்தரும் தமிழும் தமிழரும் அரசால் புறக்கணிக்கப்படுவதால்; சுதந்திரதின வைபவத்தில் கலந்துகொள்வதில்லை என அறிவித்துள்ளார்கள். தமிழர் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை அறிவதற்கு சம்பந்தர் ஐயாவுக்கும் சுமந்திரனுக்கும் 72 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது பாவம் திருமலை நடராஜன்? Image may contain: 7 people, people smiling, text 88You, தமிழரசன் சீனிவாசன், Nad Raj and 85 others 11 comments 42 shares Like Comment

இவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்?

•இவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்? செய்தி - இலங்கை 72வது சுதந்திரதினத்தை கோலாகமாக கொண்டாடியது. முப்படைகள் அணிவகுக்க பீரங்கி குண்டுகள் முழங்க ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றினார். வரலாற்றில் முதல்முறையாக, முஸ்லிம் பிரதிநிதி இல்லாத அமைச்சரவை தமிழருக்கு வெறும் இரண்டு அமைச்சுகள் தமிழில் தேசியகீதம் பாட தடை 512 கைதிகள் விடுதலை. ஆனால் ஒரு தமிழ் அரசியல் கைதிகூட விடுதலை செய்யப்படவில்லை இத்தனையும் செய்தவிட்டு “ அனைத்து இனங்களும் சமமாக நடத்தப்படும்” என ஜனாதிபதி கோத்தா பேசியுள்ளார். சரி. பரவாயில்லை. என்னவாவது பேசிவிட்டு போகட்டும். ஆனால் புலிகளை அழித்தால் மக்கள் வாழ்வில் பாலும் தேனும் ஆறாக ஓடும் என்றீர்களே? ஏன் இன்னும் ஓடவில்லை? புலிகளை அழித்து பத்து வருடமாகிவிட்டதே. ஏன் இன்னும் இவர்களுக்கு ஒரு வீடு கிடைக்கவில்லை? நல்ல உடை உணவு கிடைக்கவில்லை? இவர்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேலாக வாரத்தில் ஏழு நாட்களும் உழைக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் தலைமீது எப்படி 58 பில்லியன் டாலர் கடன் வந்தது? பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 3 லட்சம் ரூபா கடனுடன் பிறக்கிறது என்கிறீர்களே, அப்படியென்றால் அந்த பணம் எல்லாம் எங்கேயடா போயிற்று? Image may contain: 1 person, sitting, standing and outdoor

என்னது சுமந்திரனுக்கு “போராளி” பட்டமா?

என்னது சுமந்திரனுக்கு “போராளி” பட்டமா? தமிழ்நாட்டில் தலைவர்களுக்கு புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சிப்புயல் என்று பட்டங்கள் வழங்குவார்கள். அவர்களுக்கும் புரட்சிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இப்போது அந்த வருத்தம் (நோய்) ஈழத் தலைவர்களுக்கும் தொற்றிவிட்டது போலும். இது கொரோணா வைரஸைவிட பயங்கரமானது. சில வருடங்களுக்கு முன்னர் சம்பந்தர் ஜயாவை அழைத்து கனடாவில் சில கிழடுகள் “வாழும் வீரர்” என்று பட்டம் வழங்கினார்கள். அவ்வாறு பட்டம் வழங்கியவர்களில் ஒருவரான குகதாசன் என்பவர் இப்ப திருகோணமலை வந்து அடுத்த தேர்தலில் போட்டியிட சீட் பெற்றுவிட்டார் என்கிறார்கள். அடுத்து இப்பொழுது சுமந்திரனுக்கு “ போராளி” என்ற பட்டம் கம்பன் கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி தெரிவிக்கிறது. இந்த கம்பிவாரதி மன்னிக்கவும் கம்பவாரதி எதற்காக சுமந்திரனுக்கு அதுவும் “ தரம் மிகுந்த போராளி” என்று பட்டம் வழங்கியுள்ளார் என்று தெரியவில்லை. சுமந்திரன் செய்த போராட்டம் என்ன? எதற்காக அவருக்கு போராளி என்ற பட்டம் வழங்கப்பட்டது? தமிழ் இனத்திற்கு துரோகம் செய்யும் சுமந்திரன் தரம் மிகுந்த போராளி என்றால் தமிழ் இனத்திற்காக அர்ப்பணிப்பு செய்த போராளிகளை என்னவென்று அழைப்பது? Image may contain: one or more people and people standing

சம்பந்தர் அய்யாவை எதை சொல்லி வாழ்த்துவது?

•சம்பந்தர் அய்யாவை எதை சொல்லி வாழ்த்துவது? சம்பந்தர் அய்யாவின் 87வது பிறந்தநாள் இன்று ஆகும். காது கேட்கவில்லை. கண் தெரியவில்லை. மற்றவர் உதவி இன்றி எழுந்து நடமாடக்கூட முடியவில்லை. ஆனாலும் பதவியை விட்டு ஒதுங்க இன்னும் மனம் வரவில்லை. வவுனியாவில் பெண்கள் உருவப் பொம்மையை எரித்தார்கள். கிளிநொச்சியில் மண்ணை வாரி எறிந்து தூற்றினார்கள். யாழ்ப்பாணத்தில் செத்துப்போ எனத் திட்டித் தீர்த்தார்கள். ஆனாலும் கொஞ்சம்கூட வெட்கமின்றி பதவியை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார். இலங்கை வரலாற்றில் ஒருவர் வாழும்போதே செத்து தொலை என்று மக்களால் தூற்றப்பட்ட ஒரே தலைவர் நான் அறிந்த வரையில் சம்பந்தர் அய்யா ஒருவர் மட்டுமே. ஒருவர் எத்தனை தவறு செய்திருந்தாலும் அவரது மரணம் அவர் தவறுகளை மன்னித்துவுpடும் என்பார்கள். ஆனால் மரணம்கூட சம்பந்தர் அய்யாவுக்கு மன்னிப்பை பெற்று தரப்போவதில்லை. ஒவ்வொரு தீபாவளிக்கும் அடுத்த வருடம் தீர்வு வந்துவிடும் என்று கொஞ்சம்கூட கூச்சமின்றி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். சோத்தில் கொஞ்சமாவது உப்பு போட்டு தின்பவராக இருந்தால் கூறியபடி தீர்வு பெற்று தந்திருக்க வேண்டும். இல்லையேல் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு மனிதரை என்ன சொல்லி வாழ்த்துவது? Image may contain: one or more people and close-up

நாய் நன்றியுள்ள மிருகம்தான்.

நாய் நன்றியுள்ள மிருகம்தான். ஆனால் அது தன் இனத்திற்கு விசுவாசமாக இருப்பதில்லை அது எப்போதும் இறைச்சித்துண்டுக்காக வாலாட்டும் அது எலும்புத் துண்டை வீசும் எஜமானுக்கு விசுவாசமாக இருக்கும். அது நடுக்கடலில் போனாலும் நக்கித்தான் குடிக்கும் எனவே அதற்கு “கம்பவாணர் அருணகிரிநாதர்” என்னும் பட்டம் வழங்கப்பட்டது அதென்ன “கம்பவாணர் அருணகிரிநாதர்” ? அப்பாவியாய் கேட்டான் ஒருவன். அப்படியென்றால் “தரம் மிக்க போராளி” என்று பொருளாம் என்றேன் நான். “அடி செருப்பாலே நாயே” என்றான் அந்த ஒருவன் கோபத்தோடு. யார்ரா இவன் ரொம்ப கோவக்காரனாக இருக்கிறான்? என்று நினைத்தபடி மௌனமானேன் நான்.. குறிப்பு - இதை படிக்கும்போது சுமந்திரன் நினைவுக்கு வந்தால் அதற்கு கம்பனி பொறுப்பு இல்லை. Image may contain: 1 person, sitting and dog

நடந்தது இனப்படுகொலை என டப்ளின் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

நடந்தது இனப்படுகொலை என டப்ளின் தீர்ப்பாயம் கூறியுள்ளது. நடந்தது இனப்படுகொலை என்று பிறீமன் தீர்ப்பாயம் கூறியுள்ளது நடந்தது இனப்படுகொலை என பேராசிரியர் பொயில் கூறியுள்ளார் நடந்தது இனப்படுகொலை என வடமாகாண சபை தெரிவித்துள்ளது நடந்தது இனப்படுகொலை என தமிழ்நாடு சட்டசபை தெரிவித்துள்ளது ஆனால் நடந்தது இனப் படுகொலை அல்ல என்கிறார் சுமந்திரன். தான் சட்டம் படித்ததால் தனக்கு மட்டும் அது தெரிகிறது என்கிறார். சரி, மேலே கூறிய அத்தனை பேருக்கும் சட்டம் தெரியாது என்றே வைத்துக் கொள்வோம். இப்போது எமது கேள்வி என்னவென்றால் இனப்படுகொலை என்று நிரூபிப்பதற்கான ஆதாரங்களை ஏன் சுமந்திரனால் இதுவரை சமர்ப்பிக்க முடியவில்லை? நடந்தது இனப்படுகொலை என்பதை தானும் எற்றுக்கொள்வதாக கூறுகிறார். சட்டம் படித்த சுமந்திரன் அதற்குரிய ஆதாரங்கள் இல்லாமல் நிச்சயம் இனப்படுகொலை என்று ஒத்துக்கொள்ளமாட்டார். எனவே தனக்கு தெரிந்த அல்லது தனக்கு கிடைத்த அந்த ஆதாரங்களை ஏன் சுமந்திரன் சமர்ப்பிக்க முயலவில்லை? இதுவரை பல ஆதாரங்களை தானே சமர்ப்பித்துள்ளதாகவும் கூறுகிறார். அப்படியென்றால் தேவையான ஆதாரங்களை என் வழங்கவில்லை? அல்லது, இனப்படுகொலை என்பதற்கு என்ன ஆதாரங்கள் வேண்டும் என்பதை மற்றவர்களுக்குகூறி மற்றவர்களையாவது அவற்றை சமர்ப்பிக்க வைத்திருக்கலாம் அல்லவா? கடந்த பத்து வருடமாக நடந்தது இனப்படுகொலை என நிரூபிப்பதற்கு வேண்டிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் அதற்கான பொறுப்பும் சுமந்திரன் மீதுதானே இருக்கிறது என்பதையாவது யாராவது அவருக்கு புரிய வையுங்கள். குறிப்பு - சுமந்திரனின் வீடியோ பேட்டி கீழே தரப்பட்டுள்ளது. தயவு செய்து ஒருமுறை பாருங்கள். Image may contain: 1 person

• ராக்கிங் அல்லது பகிடிவதை

• ராக்கிங் அல்லது பகிடிவதை ராக்கிங்க்கு யார் பகிடிவதை என்று மொழிபெயர்ப்பு செய்தார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில் வதை எப்படி பகிடியாக இருக்க முடியும்? இந்த ராக்கிங் என்பது ஒரு இறக்குமதி செய்யப்பட்ட கலாச்சாரம். ஆனால் எந்த நாடுகளில் இருந்து இது இறக்குமதி செய்யப்பட்டதோ அந்த நாடுகளில் இப்பொழுது இது இல்லை. ஒவ்வொரு வருடமும் ராக்கிங் காலங்களில் இதை ஒழிக்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால் இன்றுவரை ஒழிக்கப்படவில்லை. இயக்கங்கள் பலமாக இருந்த காலத்தில்கூட இந்த ராக்கிங் கலாச்சாரத்தை முற்றாக ஒழிக்க முடியவில்லை. அது மறைமுகமாக இருந்தது. இப்போது இயக்கங்கள் இல்லை. அதுமட்டுமல்ல தகவல் தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டது. எனவேதான் ராக்கிங் வடிவமும் மாறியுள்ளது. இன்று சில மாணவர்கள் நிர்வாண போட்டோ அனுப்புமாறு மாணவியிடம் கேட்டதை அதிர்ச்சியுடன் பலரும் கண்டித்து வருகின்றனர். ஆனால் சில மாணவிகளே சக மாணவிகளை இதைவிட கொரூரமாக ராக்கிங் செய்து வருவதை இவர்கள் அறியவில்லை போலும். இந்த ராகிங்கை நிறுத்த வேண்டும் என்று மாணவர்களும் பல்கலைக்கழக நிர்வாகமும் உண்மையாகவே இன்னும் உணரவில்லை. குறிப்பாக புதிய மாணவர்களை கட்டுப்படுத்தவும் தமக்கு கீழ்படிந்து நடக்கவும் ராகிங் வேண்டும் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் எண்ணுகிறார்கள். தாம் அனுபவித்த ராக்க்pங்கை அடுத்த வருட்ம் வரும் புதிய மாணவர்களுக்கு திருப்பி செய்ய வேண்டும் என்று பழைய மாணவர்கள் நினைக்கிறார்கள். 1984ம் ஆண்டு எமது கரவெட்டி கிராமத்தில் ஒரு ஏழை மாணவன் யாழ் மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டான். அவனை ராக்கிங் செய்ய சில மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கரவெட்டிக்கே வந்திருந்தனர். இதை அறிந்த நான் அவர்களை விரட்டிவிட்டேன். ஆனால் வேதனை என்னவென்றால் எந்த மாணவனுக்காக அவர்களை விரட்டிவிட்டேனோ அந்த மாணவனே அடுத்த வருடம் முன்நின்று ராக்கிங் செய்தான். எனவே ராக்கிங் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதை எப்படி நிறுத்த வேண்டும் எனபதில்தான் மாறுபட்ட கருத்துகள் வருகின்றன. இதில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் தண்டனை வழங்குவதன் மூலம் நிறுத்த முடியும் என சிலர் கருதுகின்றனர். அது வெற்றியளிக்கும் என்று தோன்றவில்லை. மாறாக மேலைநாடுகளில் இது எப்படி நிறுத்தப்பட்டது என்பதை கண்டறிந்து அதில் இருந்து ஒரு வழிமுறையை மேற்கொள்ள வேண்டும். இது தமிழ் மாணவர்களுக்கான பிரச்சனை மட்டும் இல்லை. சிங்கள மாணவர்களுக்கும் இதே பிரச்சனை இருக்கிறது. Image may contain: one or more people

•தோழர் சண் அவர்களை நினைவில் கொள்வோம்!

•தோழர் சண் அவர்களை நினைவில் கொள்வோம்! 08.02.2020 யன்று தோழர் சண் அவர்களின் 27 வது நினைவு தினம் ஆகும். •நாம் ஏன் தோழர் சண் அவர்களை நினைவு கூர வேண்டும்? அவர் ஒரு தமிழர் என்பதாலா நினைவு கூர வேண்டும்? இல்லை. அப்படியென்றால் , அவர் ஒரு புரட்சியாளர் என்பதால் நினைவு கூர வேண்டுமா? இல்லை. அப்படியென்றால் தமிழர் ,சிங்களவர், முஸ்லிம்கள் என மூவின மக்களாலும் மதிக்கப்பட்ட ஒரு தமிழ் தலைவர் என்பதாலா நினைவு கூர வேண்டும்? இல்லை. அப்படியென்றால் மாசேதுங் உட்பட சர்வதேச புரட்சியாளர்களால் மதிக்கப்பட்ட ஒரு இலங்கை தலைவர் என்பதாலா நினைவு கூர வேண்டும்? இல்லை. அப்படியென்றால் எந்தவித மந்திரிப்பதவி, எம்.பி பதவிகளுக்கும் சோரம் போகாமல் இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்ததாலா? இல்லை. அப்படியென்றால் நினைவு கூர வேண்டிய அளவுக்கு அவர் செய்த சாதனைதான் என்ன? இலங்கையில் மாவோயிசத்தை அறிமுகப்படுத்தி வளர்த்தமைக்காக அவரை நினைவுகூரத்தான் வேண்டும். இலங்கையில் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள்யுத்தப்பாதையை முன்வைத்தமைக்காக நினைவு கூர வேண்டும். “அடிக்கு அடியே” சாதீய கொடுமையில் இருந்து விடுபட வழி வகுக்கும் என கூறி தீண்டாமைக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை அளித்தமைக்காக நினைவு கூர வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த ஒரு கம்யுனிஸ்ட் தலைவர் என்பது மட்டுமன்றி இனப்பிரச்சனைக்கு தீர்வாக பிரதேச சுயாட்சியை முன்வைத்தவர் என்பதால் நினைவு கூர வேண்டும். மேலும் அவர் பற்றிய சில குறிப்புகள். •வறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நன்கு படித்து பட்டதாரியானவர். தமிழ் சிங்களம் ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் சிறந்த புலமை மிக்கவர். •அவர் விரும்பியிருந்தால் ஒரு நல்ல உத்தியோகம் பெற்று வசதியான வாழ்வு வாழ்ந்திருக்கலாம் •அல்லது பின்னரும்கூட பல கம்யுனிஸ் தலைவர்கள் தேர்தல் பாதையில் சென்று அமைச்சு பதவிகள் பெற்றதுபோல் இவரும் பெற்றிருக்கலாம். •ஆனால் அவர் இறுதிவரை உறுதியான புரட்சியாளராக வாழ்ந்து மறைந்தார். •அவரது திருமணம்கூட கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒரு விதவையையே திருமணம் செய்;தார். •சீனாவின் உதவி கிடைக்காமல் போய்விடும் என்று தெரிந்தும் சீனாவின் தவறுகளை விமர்சித்தவர். •மாசேதுங் உயிருடன் இருக்கும்போதே சீனா இலங்கை அரசுக்கு செய்த ஆயுத உதவிகளை கண்டித்தவர். சீனா முதலாளித்தவ பாதைக்கு திரும்புகிறது என்று கூறி அதனுடனான உறவுகளை கைவிட்டவர். •தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியபோது இலங்கை அரசு அவர்களை “பயங்கரவாதிகள்” என்று அழைத்தது. அமிர்தலிங்கம் உட்பட தமிழர்விடுதலைக்கூட்டணியினர் “பொடியன்கள்” என்று அழைத்தனர். ஆனால் தோழர் சண்தான் முதன் முதலில் அவர்களை “போராளிகள்” என்று அழைத்தார். (அதுவும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, கொல்வின் ஆர்டி சில்வா, என்எம் பெரராரோ பீட்டர் கெனமன் அமிர்தலிங்கம் இருந்த மேடையில் கொழும்பில் சிங்கள மக்கள் மத்தியில் தைரியமாக கூறினார்.) •தமிழ் சிங்கள மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்காக பல தொழிற்சங்கங்களை நிறுவி அவர்களுக்காக இலவசமாக வழக்குகள் பேசி வென்று கொடுத்தவர். (1)ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் இந்திய ஆதரவுடன் அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் மலரும் என்று கூறியபோது “இந்தியாவை நம்ப வேண்டாம். இந்தியா ஒரு போதும் தமிழீழம் பெற்று தராது. மாறாக போராளிகளை அழிக்கும்” என்று கூறியவர். (2)இலங்கையில் சமசமாஜக்கட்சி டிராட்சியவாதிகளுக்கும் , தேர்தல் பாதையில் பயணிக்கும் திரிபுவாத கம்யுனிஸ்டுகளுக்கும் தோழர் சண் கொடுத்த தத்துவார்த்த அடி இன்னும் அவர்களால் எழும்ப முடியாத அடியாக இருக்கிறது. (3)இலங்கையில் இனி யார் புரட்சியை செய்தாலும் அவர் முன்னெடுத்த புதிய ஜனநாயகப்புரட்சியில் இருந்தே தொடர வேண்டும்.. தோழர் சண் அவர்களை மறுத்து விட்டு யாராலும் புரட்சி செய்ய முடியாது. ஆம். தோழர் சண் இலங்கையில் ஒரு மாபெரும் தலைவர் மட்டுமல்ல மகத்தான தலைவரும்கூட. அவரை நினைவு கூர்வது எமது கடமையாகும். குறிப்பு - இத்தகைய மகத்தான ஒரு தலைவரின் இறுதி நாட்களில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தமை என்னால் மறக்க முடியாதது. அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது “ ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” நூலை 1990ல் சென்னையில் அச்சடித்து வெளியிட்டிருந்தேன். Image may contain: Arul Nagamuthu, smiling Image may contain: 1 person, sitting Image may contain: 1 person, sitting Image may contain: one or more people

மன்னிக்கவும் சுமந்திரனை வாழ்த்த முடியவில்லை

•மன்னிக்கவும் சுமந்திரனை வாழ்த்த முடியவில்லை குறிப்பு - இன்று சுமந்திரனின் 56வது பிறந்ததினம் ஆகும். சில வருடங்டகளுக்கு முன்னர் லண்டனில் சுமந்திரனின் கூட்டம் ஒன்று இடம் பெற்றது. அக் கூட்டம் 5 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 5 மணிக்கு இருவர் மட்டுமே வந்திருந்தனர். ஒருவர் உரையாற்றும் சுமந்திரன். இன்னொருவர் உரையை கேட்க சென்ற நான். அப்போதுதான் அவர் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதை கண்டு கொண்டேன். இது அவருடைய வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்து எம்.பி மாருக்கு ஒதுக்கிய சொகுசு வாகனத்தை பெற்றுக்கொள்ளாத ஒரு சிலரில் அவரும் ஒருவர் என்பதை அறிந்து கொண்டேன். அவர் விரும்பியிருந்தால் அந்த சொகுசு வாகனத்தை பெற்று 5 கோடி ரூபா சம்பாதித்திருக்க முடியும். அதைவிட அவர் அரசியலுக்கு வர முன்னர் தனது வழக்கறிஞர் தொழில் மூலம் பல லட்சம் ரூபாய்க்களை சம்பாதித்துக்கொண்டிருந்தார். உண்மையில் அவர் தன் வருமானத்தை இழந்தே அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். பல தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மீது லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் சுமந்திரன் மீது இதுவரை யாரும் இத் தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை. முக்கியமாக மற்ற அரசியல்வாதிகள் போல் கொழும்பில் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் இன்னொன்றும் அவர் பேசுவதில்லை. தனது கருத்துகளை தைரியமாக வெளிப்படையாக கூறி வருகிறார். இத்தகைய சிறப்பு அம்சங்களை அவர் கொண்டிருந்தாலும் அவரை மனதார பாராட்ட முடியவில்லை. ஏனெனில் அவர் தனது திறமை எல்லாவற்றையும் தமிழ் இனத்திற்கு எதிராகவே பயன்படுத்தி வருகிறார். ஒருசிலர் அவரை பாராட்டி வாழ்த்துகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் அவரிடம் உதவி பெற்றவர்கள் அல்லது உதவி கிடைக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்கள். அவர், நடந்தது இனப் படுகொலை அல்ல போர்க்குற்றம் மட்டுமே என்றது சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்றது உள்ளக விசாரணைக்கு இலங்கை அரசு கேட்காமலே கால அவகாசம் பெற்று கொடுத்தது போன்றவை தமிழ் இனத்திற்கு இழைத்த பாரிய துரோகமாகும். அதுவும் ரணில் அரசுக்கு ஆபத்து எற்பட்டவேளை அவர் காட்டிய அக்கறையையும் அவசரத்தையும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் மீது காட்டாதது ஏமாற்றம் அளிக்கிறது. அவர் இவ்வாறு நடந்து கொள்கின்றமைக்கு முக்கிய காரணம் (1)தேர்தல் பாதை மூலம் தீர்வு பெற முடியும் என நம்புகிறார். (2)பேச்சுவார்த்தை மூலம் தீர்வு பெற முடியும் என நம்புகிறார். (3)இந்திய அரசு தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுத்தரும் என நம்புகிறார். எனவே சுமந்திரனாலோ அல்லது சுமந்திரனின் இத்தகைய நம்பிக்கைகளை கொண்டிருப்பவர்களாலோ ஒருபோதும் தீர்வு பெற முடியாது என்பதற்கான மாற்றுக் கருத்தை முன்வைக்க வேண்டும். எனவே (1)தேர்தல் பாதை மூலம் தீர்வு பெற முடியாது. ஆயதம் ஏந்திய மக்கள் யுத்தப்பாதை மூலமே தீர்வு பெற முடியும். (2)பேச்சுவாhத்தை மூலம் தீர்வு பெற முடியாது. மாறாக போராட்டத்தின் மூலமே தீர்வு பெற முடியும். (3) இந்திய அரசை இனியும் நம்பி ஏமாறக்கூடாது. போன்ற மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து தமிழ் மக்களை அணி திரட்டுவதன் மூலமே சுமந்திரனையோ அல்லது சுமந்திரன்களையோ அகற்ற முடியும். ஏனெனில் சுமந்திரன்களை அகற்ற வேண்டுமெனில் பிரச்சனை சுமந்திரன் அல்ல அவர் நம்பும் கருத்துகளே என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். Image may contain: 1 person, sitting

•செய்தி - இந்தியாவின் உதவி இல்லாமல்

•செய்தி - இந்தியாவின் உதவி இல்லாமல் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது. - பிரதமர் மகிந்த ராஜபக்ச மகிந்த - மோடிஜி! இத்தனை அழிவிற்கு பிறகும் இத்தனை அழிவிற்கும் இந்தியாவே காரணம் என்று தெரிந்த பிறகும்கூட தமிழர் எப்படி இந்தியா உதவும் என்று இப்பவும் நம்புகிறார்கள்? மோடி- ஓ! அதுவா? அது ரொம்ப சிம்;பிள். அவர்களில் சில நாய்களை பிடித்து அவற்றுக்கு இறைச்சித்துண்டு போட்டால் அவை விசுவாசமாக வாலாட்டிக் கொண்டிருக்கும். எமக்காக குரைத்துக் கொண்டடே இருக்கும். மகிந்த - புரியவில்லையே மோடிஜி? நானும்தான் சம்பந்தருக்கு சொகுசு பங்களா கொடுத்துள்ளேன். சுமந்திரனுக்கு நிதிக்குழுத் தலைவர் பதவி கொடுத்துள்ளேன். ஆனாலும் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லையே? மோடி - இப்போ உதாரணத்திற்கு, இந்து தமிழீழம் கேட்டால் இந்தியா உதவும் என்று சில நாய்களை தமிழ் மக்களிடம் கூற வைப்போம். இந்தியா இல்லாமல் தீர்வு கிடைக்காது என்று இன்னொரு பக்கத்தில் சில நாய்களை தமிழ் மக்களிடம் கூற வைப்போம். மகிந்தா - இந்தியாவில் இருக்கும் இந்து தமிழ் அகதிகளுக்கு உதவி செய்யாத இந்தியா, ஈழத்தில் உள்ள இந்து தமிழருக்கு உதவுமா என்று தமிழ் மக்கள் கேட்க மாட்டார்களா? மோடி - ஆம். தமிழ் மக்கள் புத்திசாலிகள். நிச்சயம் கேட்பார்கள். அப்போது “ புலிகள் ராஜீவ்காந்தியை கொன்றபடியால்தான் இந்தியா ஈழத் தமிழருக்கு உதவி செய்ய தயங்குது” என்று கூறுவதற்கு சில நாய்களை செட் பண்ணி வைத்திருக்கிறோம். அத்துடன் “இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு. அதை புலிகள் குழப்பியது தவறு” என்றும் இந்த நாய்கள் மூலம் கூற வைப்போம். மகிந்தா - இந்தமுறைகூட நீங்கள் நிறைய பண உதவி எமக்கு செய்துள்ளீர்கள். இராணுவ உதவி தந்துள்ளீர்கள். ஒரு பேச்சுக்குகூட தமிழருக்கு தீர்வு வழங்கும்படி நீங்கள் கேட்டதில்லை. ஆனாலும் இப்பவும் தமிழர்கள் உங்களை நம்புகிறார்களே? மோடி - நம்ம சுமந்திரன் லாப்டப் கொடுத்து சில ஊடகவியலாளர்களை செட்பண்ணி வைத்திருக்கிறார். அவர்கள் “ தமிழருக்கு சம உரிமை வழங்குமாறு மோடி வலியுறுத்தல்” என்று செய்தி போடுவார்கள். அதை தமிழர் நம்பிவிடுவார்கள். மகிந்தா - ஆனாலும் நீங்கள் தரும் உதவிகளை நான் என் சிங்கள மக்களுக்கு கூறிவிடுவேன் அல்லவா? மோடி - பரவாயில்லை. உடனே நம் நாய்கள் “ அமைச்சர் ஜெய்சங்கர் தமிழில் உரையாடினார். இந்திய ஜனாதிபதி தமிழில் வணக்கம் கூறினார்” என்ற செய்திகளை பரப்புவார்கள். உடனே தமிழர் கவனம் அதில் போய்விடும். மகிந்தா – ஓ! இவ்வளவு இருக்கா? இத்தனை நாளும் தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்களுக்கு மூளையே இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் கவனம், அவர்களில்தான் தானுவும் இருக்கிறாள். Image may contain: 2 people, people standing and beard

ராகுல் காந்தி - ஹாய் பிரசன்னா!

ராகுல் காந்தி - ஹாய் பிரசன்னா! பாராளுமன்றத்தில் மிளகாய்தூள் வீசுவதில் நீங்கள் வல்லவர் என்று மகிந்தா கூறினார். எங்கட காங்கிரஸ் எம்.பிக்களுக்கும் மிளகாய்தூள் வீசுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்க முடியுமா? பிரசன்ன ரணவீர - ஓ! கண்டிப்பாக சொல்லிக் கொடுக்கலாம் சேர். ஆனால் நான் மிளகாய்தூள் கொண்டு வரவில்லையே? காந்தியின் பேரனுக்கு பாராளுமன்றத்தில் மிளகாய் தூள் வீசுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. ராகுல் காந்தி - மன்னிக்கவும். நான் காந்தியின் பேரன் இல்லை. பிரசன்ன ரணவீர - என்னது? நீங்கள் காந்தியின் பேரன் இல்லையா? அப்ப உங்கள் பெயரில் உள்ள காந்தி யார்? ராகுல் காந்தி அதுகூட உங்களுக்கு தெரியவில்லையா? அது என் பாட்டி இந்திராவின் கணவர் பெரோஸ் காந்தி யின் பெயர். உங்களை எல்லாம் எப்படி சிங்கள மக்கள் எம்.பி யாக தெரிவு செய்கிறார்கள் ? Image may contain: 2 people, people smiling, people standing, text and indoor

நெற்றியில் பட்டை

நெற்றியில் பட்டை கையில் உருத்திராட்சம் கொட்டை ஈழத்தில் இந்து கோயில்களை அழித்துவிட்டு இந்தியா சென்று இந்து கோவில்களில் வழிபாடு கடவுள் இல்லை கடவுளை நம்புபவன் முட்டாள் கடவுளை வணங்குபவன் அயோக்கியன் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? வாழ்க தந்தை பெரியார்! குறிப்பு - கடவுள் பக்தி என்பது ஒருவகை மனவியாதி - அமெரிக்க விஞ்ஞானி. Image may contain: 8 people, people smiling, people sitting and people standing

• சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன!

• சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன! இவர் சிறந்த கல்விமான் என்கிறார்கள் இவர் சிறந்த மார்க்சியவாதி என்றும் கூறுகின்றனர். இவர் படித்த காலத்திலும் பகிடிவதை அல்லது இவர் கூறுகின்ற பாலியல்வதை இருந்தது. இவர் மாகாணசபையில் ஆட்சி செய்த காலத்திலும்கூட இந்த பகிடிவதை அல்லது இவர் கூறுகின்ற பாலியல்வதை இருந்தது. அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் பொங்குகிறார்? சரி. பரவாயில்லை. அப்போது பொங்கவில்லை என்பதற்காக இப்போது பொங்கக்கூடாது என்று அர்த்தம் இல்லைத்தான். ஆனால் ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் கூறிவிட்டு தாராளமாக பொங்கட்டும். பாலியல்வதைக்காக மாணவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பொங்கியவர், பாலியல் வல்லறவு மற்றும் கொலை செய்த இந்திய அமைதிப்படை தண்டிக்கப்பட வேண்டும் என்று பொங்குவாரா? அல்லது, முள்ளிவாய்க்காலில் தமிழ்பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ராணுவத்தை தண்டிக்க வேண்டும் என்று பொங்குவாரா? குறிப்பு - இதுவரை எப்படி தன் சமூக மற்றும் கலாச்சார சீர்கேடுகளை அகற்றி வளர்ந்து வருகின்றதோ அதேபோன்று இனியும் வளரும் வல்லமை தமிழ் இனத்திற்கு உண்டு. Image may contain: 4 people, including தோழர் அருண் சோரி, text

பாட்டியுடன் ஒரு உரையாடல்

பாட்டியுடன் ஒரு உரையாடல் குறிப்பு - நேற்றைய எனது பதிவின் கீழ் முன்னாள் அமைச்சர் ஒருவர் “ பாலன்! தமிழர் ஜனத்தொகை குறைந்திருக்கும் இந்நேரத்தில் இன்னொரு ஆயுத போராட்டம் சாத்தியமா?” எனக் கேட்டிருந்தார். அவருக்காக எனது இப் பதிவை மீள்பதிவு செய்கிறேன். கேள்வி- பாட்டி! ஆயுதம் தூக்கி போராடுவது பயங்கரவாதம் என்கிறார்களே? பாட்டி- சரி, தூக்குவது தவறு என்றால் தூக்க வைத்தது அதைவிட தவறு அல்லவா? முதல்ல போய் தூக்க வைத்தவனிடம் கேள். அப்புறம் என்னிடம் வா. கேள்வி- என்ன பாட்டி சொல்லுகிறீர்கள்? பாட்டி- கிழவி என்றும் பாராமல் கற்பழிக்கிறான். சிறு குழந்தைகளைக்கூட சுட்டுக் கொல்கிறான். விமானத்தில் வந்து குண்டு போடுகிறான். நான் என்ன செய்ய சொல்லுறாய்? கேள்வி- நீங்க அகிம்சை வழியில் போராடலாம் அல்லவா? பாட்டி- அகிம்சை வழியில்தானே தந்தை செல்வா போராடினார். அவருக்கு என்னத்தைக் கொடுத்தாங்க? கேள்வி – அகிம்சை வழியில்தானே இந்தியா சுதந்திரம் அடைந்தது? பாட்டி- இந்தியா எந்த வழியில் சுதந்திரம் அடைந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் அதே இந்திய அரசு அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து இறந்தபோது அந்த அகிம்சைப் போராட்டத்தை மதிக்கவில்லையே? கேள்வி- அப்ப, மகாத்மா காந்தி சொன்னது தவறா? பாட்டி- காந்தி வெள்ளைக்கார ஆட்சிக்கு எதிராக சொன்னது இப்ப உள்ள கொள்ளைக்கார அரசுகளுக்கு பொருந்துதில்லையே? காந்தி இப்போது இருந்தால் அவர் கையில் ஊன்று தடி இருக்காது அவர் கையிலும் துப்பாக்கி இருந்திருக்கும். கேள்வி- என்னது, காந்தியும் ஆயுதம் ஏந்தியிருப்பாரா? பாட்டி- ஆம். முட்ட வரும் மாட்டை கட்டியணைக்க முடியாது. எட்டி உதைக்க வேண்டும். அதுபோல் கற்றபழிக்க வரும் காமுகனை கை நகத்தினாலாவது தாக்குங்கள் என்றுதானே அவர் சொல்லியிருக்கிறார். கேள்வி- ஆயுதம் தூக்கியவர்களை பயங்கரவாதிகள் என்றுதானே நம்மட சம்பந்தர் அய்யாவும் கூறுகிறார். பாட்டி- அவர் மகள் கற்பழிக்கப்பட்டிருந்தால், அவர் வீட்டின் மீது கொத்துக் குண்டு வீசப்பட்டிருந்தால் ஒருநாளாவது பதுங்கு குழியில் வாழ்ந்திருந்தால் யார் பயங்கரவாதி என்று அவருக்கு தெரிந்திருக்கும். கேள்வி- இருந்தாலும் இந்த போராட்டம் தேவைதானா? பாட்டி- எனது மூதாதையர் போராடியிருந்தால் இன்று நான் போராட வேண்டி வந்திருக்காது. அதேபோல் நான் என் அடிமைத்தனத்தை என் பரம்பரைக்கு விட்டுச்செல்ல விரும்பவில்லை. கேள்வி- அடுத்த பரம்பரையும் இந்த போராட்டத்தை தொடரும் என நம்புகிறீர்களா? பாட்டி- தம்பி- நான் எந்த இயக்கத்தையும் நம்பவில்லை. தலைவர்களையும்கூட நம்பவில்லை. நான் நம்புவதெல்லாம் இந்த போராட்டத்தை மட்டுமே. எனவே இயக்கமோ அல்லது தலைவரோ இல்லாவிட்டாலும்கூட இந்த போராட்டம் தொடரும். கேள்வி- எப்படி ? புரியவில்லையே! பாட்டி- என்ன காரணங்களுக்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அதில் ஒன்றுகூட இன்னும் தீர்;க்கப்படவில்லை. எனவே போராட்டத்திற்கான தேவை இருக்கும்வரை அதற்கான போராட்டமும் இருக்கும். குறிப்பு- தமிழ் இனம் மீண்டும் எழுந்து போராடும் என்ற நம்பிக்கையை இத்தகைய பாட்டிகளின் தியாகங்களே உருவாக்குகின்றன. Image may contain: one or more people and outdoor

முருகதாசன் மரணம்

முருகதாசன் மரணம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? போரை நிறுத்துமாறு கோரி 12.02.2009 யன்று ஜ.நா முன்றலில் முருகதாசன் தனக்குதானே தீயிட்டு மரணமடைந்தார். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை.மாறாக 40 அயிரம் அப்பாவி தமிழ் மக்கள் முள்ளிவாயக்காலில் கொல்லப்பட்டார்கள். போரை நிறுத்துமாறு தமிழகத்தில் முத்துக்குமார் உட்பட 16 பேர் தீயிட்டு தற்கொலை செய்தார்கள். ஆனால் இந்திய அரசு அதனை கண்டுகொள்ளவும் இல்லை. போரை நிறுத்தவும் இல்லை. மாறாக தமிழின அழிப்பிற்கு பெரும் உதவி புரிந்தது. தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றினார். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. மாறாக அதன்பின்னரே கொடிய கிளாஸ்ரர் குண்டுகள் வீசப்பட்டன. மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். போரை நிறுத்தூமாறு கோரி உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் , சாலை மறியல் செய்தார்கள். சங்கிலி போராட்ம் நடத்தினார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள். வெளிநாட்டு அரசுகளிடம் மன்றாடினார்கள். மனிதவுரிமை அமைப்பகளிடம் கரம் கூப்பி வேண்டினார்கள். அனைத்து சாத்வீக வழிகளிலும் மக்கள் கேட்டார்கள். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் அழிவு தடுக்கப்படவில்லை. ஆயுதம் தூக்கினால் அது பயங்கரவாதம் என்றவர்கள், மக்கள் ஜனநாயகவழியில் சாத்வீக முறையில் போராடிய போது கண்டு கொள்ளவில்லையே. இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோது அகிம்சையை போதித்த இந்திய அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை. அன்னைபூபதி உண்ணாவிரதம் இருந்தபோது அவர் ஒரு பெண் என்றுகூட இந்திய அரசு இரங்கவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் இரோம் சார்மிளா என்ற பெண்மணி 15 வருடமாக உண்ணாவிரதம் இருந்தார் இந்திய அரசு மட்டுமல்ல உலகில் எந்த அரசுமே கண்டுகொள்ளவில்லை. புலிகள் ஆயுத பலத்தோடு இருந்தபோது தமிழீழம் தவிர அனைத்தையும் தருவதாக கூறிய சந்திரிக்கா பண்டாரநாயக்கா இப்பொது புலிகள் இல்லை என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும் என்று கூறகிறார். இதன் அர்த்தம் அதிகாரத்தை பெறுவதில் துப்பாக்கிகள் தீர்மானிக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன? புலிகள் வெல்லவில்லை என்பதால் ஆயுதப் போராட்டம் வெற்றி பெறாது என்று சிலர் கூற முற்படுகிறார்கள். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று ஆயுதப் போராட்டம் பயங்கரவாதம் என்றும் கூறுகிறார்கள். அவர்களிடம் நாம் கேட்க விரும்புகிறோம், கோப்பாப்பிலவில் மக்கள் அமைதியாக அகிம்சை வழியில் தானே போராடுகிறார்கள். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லையே? காணாமல் போனவர்களின் உறவுகள் அமைதியாக அகிம்சை வழியில் தானே 900 நாளாக போராடுகிறார்கள். அவர்களை அரசு ஏமாற்றிவிட்டதே? அகிம்சை வழியில் தீர்வு பெற முடியும் என்பவர்கள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? அகிம்சை வழியில் போராடி தமது சொந்த நிலத்தையே திருப்பி பெற முடியாத தமிழ் மக்களுக்கு அகிம்சை வழியில் போராடினால் சமஸ்டி தீர்வு கிடைத்துவிடுமா? இன்று தமிழ் இனவிடுதலைக்காக சிலர் தேர்தல் பாதையை முன்வைக்கிறார்கள். அவர்கள் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெற முடியும் என மக்களை நம்பவைக்க முயல்கிறார்கள். ஆனால் "துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது" என்றும் "ஆயுதம் ஏந்திய மக்கள்யுத்தப்பாதை மூலமே விடுதலை அடைய முடியும்" என்று மாபெரும் ஆசான் மாசேதுங் கூறியுள்ளார். அதுவே இன்றும்கூட பொருத்தமாக உள்ளது என்பதே உண்மையாகும். Image may contain: 1 person

•ஆழ்ந்த இரங்கல்கள்!

•ஆழ்ந்த இரங்கல்கள்! தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசன் வரலாற்றை “ தமிழ்தேசிய தலைவர் தமிழரசனின் வாழ்வும் அறமும்” என்னும் நூலாக எழுதியவர் தோழர் இளங்கோவன் இறுதிவரை ஈழத் தமிழருக்கு தன் உறுதியான ஆதரவை வழங்கியவர் தோழர் இளங்கோவன் தோழர் இளங்கோவனை இழந்து தவிக்கும் அவரது உறவினர்கள் தோழர்கள் அனைவருக்கும் ஈழத் தமிழர் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். Image may contain: 2 people, including தமிழ்நேயன் தமிழ், meme and text

நல்லது நடந்தால் கடவுள் செயல்.

நல்லது நடந்தால் கடவுள் செயல். கெட்டது நடந்தால் விதி எனில் மனிதனுக்கு மூளை எதற்கு? மனித மூளையில் உள்ள மயலின் நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176000 கிலோ மீற்றர் என்கிறார்கள். மனித மூளையில் உள்ள 60 பில்லியன் நரம்பணுக்களில் சுமார் 10 பில்லியன் புறணிக் கோபுர உயிரணுக்கள். இவை தமக்குள் சமிக்கைகளை அனுப்பிக்கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் நரம்பிணைப்புகளை பயன்படுத்துகின்றன. நல்லது நடந்தால் கடவுள் செயல் , கெட்டது நடந்தால் அது விதி எனில் இத்தகைய சிறப்பான மூளை மனிதனுக்கு எதற்கு? பூசை செய்யவா? சிவன் என் முப்பாட்டன் என்று முகநூலில் படம் போடுற பயலுகள் எல்லாம் ரோட்டைக் கடக்கும்போது சிவனை நம்புவதில்லை. மாறாக எதிரில் இருக்கும் சிக்னல் லைட்டையே நம்பி கடக்கின்றனர். உலகம் உருண்டை என்று கூறிய விஞ்ஞானியை கொன்ற பாப்பரசர்கள்; எல்லாம் இப்போது அப்பிள் போனில் கூகிளில்தான் இயேசுவை தேடுகின்ற நிலைமை. ஆம். கடவுள் இருக்கிறார் என்று கூறும் கருத்துமுதல்வாதிகள் எல்லாம் நடைமுறையில் கடவுள் இல்லை என்னும் பொருள்முதல்வாதிகளாகவே வாழுகின்றனர். உலப் புகழ்பெற்ற அறிஞர் ஸ்டீபன் கேவாக்கிங் கேட்கிறார் “கடவுள் தன்னால் தூக்க முடியாத ஒரு கல்லைப் படைக்க முடியுமா?” பக்தர்களே உங்கள் பதில் என்ன? Image may contain: one or more people

காதலர் தினம்!

காதலர் தினம்! மாபெரும் மாக்சிய ஆசான் எங்கெல்ஸ் கூறுகிறார் “ஒரு புதிய தலைமுறை அதாவது தம் வாழ்நாள் முழுவதற்கும் தன்னிடம் ஒரு பெண்ணின் சரணாகதியைப் பணமோ வேறு எவ்விதமான சமூக அதிகாரமோ கொண்டு விலைக்கு வாங்காத ஆண்களினதும் உண்மையான காதலன்றி வேறு எந்தக் காரணத்ததுக்கும் தம்மை சரணளிக்காதவர்களும் பொருளாதார பின்விளைவுகளுக்கு அஞ்சி தம்மைத் தமது நேயத்திற்குரியோருக்கு அளிக்காதவர்களுமான பெண்களின் தலைமுறை வளர்ந்து வந்தபின்பு இப் பிரச்சனை தீர்வு பெறும். இத்தகைய மக்கள் உருவாகிய பின்னர் அவர்கள் என்ன செய்யலாம் என்று நாம் இன்று நினைப்பது பற்றி அவர்கள் துளியளவும் அக்கறைப்படமாட்டார்கள். அவர்கள் தமது சொந்த நடைமுறைகளையும் தங்கள் சொந்த பொது அபிப்பிராயங்களையும் உருவாக்கி ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட நடைமுறையுடன் நிறைவு காண்பர். அத்தகைய ஒரு சமூகத்தில் பெண்கள் ஆண்களுடன் பூரண சமத்துவம் அனுபவிப்பர் என்பதில் ஜயமில்லை.” Image may contain: flower

ஈழத் தமிழர்களால் வரலாற்றில்

ஈழத் தமிழர்களால் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பெயர் சுபா. முத்துக்குமார் ஈழத் தமிழருக்கு ஆதரவாக 16 தமிழக தமிழர்கள் தீக்குளித்து மரணமடைந்தார்கள். ஈழத் தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் தோழர்கள் தமிழரசன், சுந்தரம், லெனின் , மாறன் போன்றவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். தமிழக இளைஞர்கள் சிலர் ஈழம் வந்து ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள். அந்த சிலரில் சுபா.முத்துக்குமாரும் ஒருவர். அவருடைய தியாகம் மறக்க முடியாதது. சுபா. முத்துக்குமார் ஈழத் தமிழர்களுக்காக மட்டுமன்றி தமிழக மக்களுக்காகவும் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர். •5 ஆண்டுகள் புலிகள் அமைப்புடன் சேர்ந்து தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம். •5 ஆண்டுகள் வீரப்பனுடன் சேர்ந்து தமிழ்நாடு விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் •6 ஆண்டுகள் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தமைக்காக தலைமறைவு வாழ்க்கை •10 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை •4 ஆண்டுகளுக்கு மேலாக நாம்தமிழர் இயக்கத்தை தோற்றுவித்து அரசியல் வாழ்க்கை. இவ்வாறு போராட்டமே வாழ்கையாக கொண்ட சுபா. முத்துக்குமாரின் 9 வது நினைவு தினம் 15.02.2020 ஆகும். அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக அஞ்சலியை செலுத்துவதுடன் அவரை என்றும் நன்றியுடன் நினைவு கூறுவோம். Image may contain: 2 people, people smiling, text

•இலாபம் எங்கிருந்து வருகிறது?

•இலாபம் எங்கிருந்து வருகிறது? இலாபம் எங்கிருந்து வருகிறது என்று கேட்டால் வரவு – செலவு = இலாபம் ( Income – Expenses = Profit ) என்று ஒரு அக்கவுண்டன் கூறுவார். இதையே லாபம் எங்கிருந்து வருகிறது என்று ஒரு பொருளாதார அறிஞரிடம் கேட்டால் அவர் “ முதலாளி முதலீடு செய்யும் மூலதனம் அவருக்கு இலாபத்தை பெற்றுக் கொடுக்கிறது” என்பார். இதையே ஒரு ஆன்மீகவாதியிடம் கேட்டால் “இது எல்லாம் போன பிறப்பில் செய்த பாவ புண்ணிய விதிப்படி இந்தப் பிறப்பில் கடவுள் தருவது” என்பார். ஆனால் மார்க்சியவாதிகள் மட்டுமே தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டியே லாபம் பெறப்படுகிறது என்ற உண்மையை கூறுவார்கள். இந்த உண்மையை விஞ்ஞான முறைப்படி நிரூபித்து இந்த சுரண்டலை ஒழிக்க புரட்சி மட்டுமே தீர்வு என்பதையும் கூறியவர் காரல் மார்க்ஸ். எனவேதான் இந்த உண்மையை தொழிலாள வர்க்கம் உணர்ந்துவிடக்கூடாது என்பதில் முதலாளித்துவ அரசுகள் கவனமாக இருக்கின்றன. ஏனெனில் உலக ஜனத்தொகையில் 97% மானவர்கள் உழைக்கும் மக்களாவர். அவர்களை வெறும் 3%மான முதலாளிகள் அடக்கி ஆள்வதுடன் ஏமாற்றி சுரண்டிக் கொழுக்கின்றனர். இங்கு வேடிக்கை என்னவெனில் மத அடக்குமுறையை எதிர்த்தே வளர்ந்தது முதலாளித்துவ வர்க்கம். ஆனால் அதே முதலாளித்துவ வர்க்கம் தற்போது மதத்தை பேணிக் காத்து வருகின்றது. ஏனெனில் உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களாக மதமும் கடவுளும் இருக்கின்றன. Image may contain: 3 people, people smiling, text

செய்தி - லண்டனில் நாளை மதியம் சுமந்திரன் உரையாற்றுகிறார்.

செய்தி - லண்டனில் நாளை மதியம் சுமந்திரன் உரையாற்றுகிறார். தேர்தல் வருகிறது யோக்கியன் வருகிறார் செம்பை எடுத்து உள்ளே வையுங்கள். Image may contain: possible text that says 'rk உன் மூஞ்சிய காட்டு........'

இது செருப்பு அல்ல. நெருப்பு

•இது செருப்பு அல்ல. நெருப்பு இந்த தாயின் கனவு லண்டனில் நாளை நிறைவேறுமா? சில தருணங்களில் பேனாவை விட “செருப்பு” வலிமையாக பேசுகின்றது "செருப்பு" காலில்;தான் தொங்குகிறது ஆனால் அது தோளில் தொங்கும் துப்பாக்கியை விட எதிரியை அதிகம் அம்பலப்படுத்துகின்றது. முறத்தால் புலியை விரட்டினாள் ஒரு தமிழ்பெண் என்பது புறநானூறு. செருப்பால் துரோகிகளை விரட்டினாள் ஒரு தமிழ்பெண் என்பது இனி வரலாறு. இதுவரை உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு பொறியில் இருந்தே ஆரம்பித்தது. சுமந்திரனின் தமிழின துரோகத்திற்கு எதிராக இந்த தமிழ் பெண் வீசி எறிவது செருப்பு அல்ல நெருப்பு என்பதை காலம் நிச்சயம் காட்டும். குறிப்பு - தனது கருத்தை கூற சுமந்திரனுக்கு எந்தளவு உரிமை இருக்கிறதோ அதேயளவு உரிமை சுமந்திரனின் துரோகத்திற்கு எதிர்ப்பு காட்ட தமிழ் மக்களுக்கும் உண்டு. Image may contain: 2 people, people smiling, people standing and outdoor

ஏழு தமிழர் விடுதலைக்கு

•ஏழு தமிழர் விடுதலைக்கு ஒரு ஈழத் தமிழர் அமைப்புகூட குரல் கொடுக்கவில்லையே? ஏழு தமிழர் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கவும், அரசமைப்பு சட்டத்தின் 161 ஆவது பிரிவு மாநில அரசுக்கு வழங்கிய இறையாண்மை உரிமையை பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்தியும், வரும் 17.2.2020 திங்களன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கீழ்வரும் 38 அமைப்புகள் முற்றுகை செய்யப்போவதாக அறிவித்துள்ளன. 1. நாம் தமிழர் கட்சி 2. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3. மார்க்சிய பொதுவுடமைக் கட்சி 4. இந்திய பொதுவுடமைக் கட்சி 5. தமிழ்ப்புலிகள் கட்சி 6. புரட்சிப் புலிகள் கட்சி 7. தமிழ்த் தேசிய பேரியக்கம் 8. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் 9. தமிழ்த் தேச மக்கள் முன்னணி 10. உயர் நீதிமன்றத்தில் தமிழ் போராட்டக் குழு 11. சம நீதி வழக்கறிஞர்கள் சங்கம் 12. ஆதித்தமிழர் கட்சி 13. புரட்சிகர இளைஞர் முன்னணி 14. மே 17 இயக்கம் 14. பெரியார் திராவிடர் கழகம் 15. திராவிடர் விடுதலை கழகம் 16. மக்கள் சட்ட உரிமை இயக்கம் 17. இஸ்லாமிய சேவைச் சங்கம் 18. குடியுரிமை பாதுகாப்பு நடுவம் (சிபிசிஎல்) 19. வீரத் தமிழர் முன்னேற்றக் கழகம் 20. ஆதித் தமிழர் பேரவை 21. அம்பேத்கர் தேசிய இயக்கம் 22. இக்வான் முஸ்லீம் தவ்கீத் ஜமாத் 23. சட்டக் கல்லூரி மாணவர்கள் 24. தமிழக வாழ்வுரிமை கட்சி 25. தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு கட்சி 26. வனவேங்கைகள் கட்சி 27. இந்திய தேசிய லீக் கட்சி 28. தைப் புரட்சி இயக்கம் 29. திருவள்ளுவர் பேரவை 30. தமிழக மக்கள் சனநாயக கட்சி 31. புரட்சிக்கவிஞர் பேரவை 32. தமிழ் தமிழர் இயக்கம் 32 ஒத்துழையாமை இயக்கம் 33. சமூகநீதி பண்பாட்டு மையம் 34. நாணல் நண்பர்கள் 35. 7தமிழர் விடுதலைக்கட்சி 36. திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை 37. மருது மக்கள் இயக்கம் 38. மக்கள் அதிகாரம் இந்த ஏழு தமிழரில் 4 பேர் ஈழத் தமிழர்கள். ஆனால் இவர்களின் விடுதலைக்காக இதுவரை ஒரு ஈழத் தமிழர் அமைப்புகூட குரல் கொடுக்கவில்லை. இந்த ஏழு தமிழர் விடுதலையில் உண்மையில் ஈழத் தமிழ் அமைப்புகளுக்கு அக்கறை இல்லையா? அல்லது குரல் கொடுத்தால் இந்திய அரசின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சுகின்றனவா? அடிக்கடி லண்டனுக்கு வந்து தன் மகளை பார்த்துச் செல்லும் சுமந்திரன்கூட அதே லண்டனில் இருக்கும் முருகன் நளினியின் மகள் தன் பெற்றோரை பார்க்க முடியாத நிலையில் இருப்பதையிட்டு குரல் கொடுக்க கூடாதா? Image may contain: 6 people

•இவர் யார் என்று தெரிகிறதா?

•இவர் யார் என்று தெரிகிறதா? இவர் தர்பார் நடித்த சிவாஜிராவ் கெய்வாட் (ரஜனி) இல்லை. இவர் இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலி இன்று இவரது பிறந்த தினம் ஆகும். இவர் இத்தாலியின் பிசா நகரில் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பிறந்தார். 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இறந்தார். வானவியல் அறிஞர், இவர் வேதியியல் வல்லுநர், கணிதவியலாளர், தத்துவஞானி, கண்டுபிடிப்பாளர் என பன்முக ஆற்றல் பெற்றவர். தொலைநோக்கி, காம்பஸ், தெர்மாமீட்டர் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை. இயற்பியலின் தந்தை, நவீன அறிவியலின் தந்தை, நவீன வானியலின் தந்தை என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இன்று விஞ்ஞானிகளுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்கிறது। அரசு மரியாதை செய்கிறது। அறிவியல் உலகத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்யும் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு கூடக் கிடைக்கிறது। 16-17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் நிலைமை இவ்வளவு இனிமையாக இல்லை. அவர்களது கண்டுபிடிப்புகள் மதநம்பிக்கைகளுக்கு விரோதமானதாகக் கருதப்பட்டால் கண்டு பிடிப்புகளை அவர்கள் வெளியிட முடியாது. மீறி வெளியிட்டால், அவர்களது உயிருக்கே கூட ஆபத்து காத்திருந்தது. இப்படிப்பட்ட சிக்கலை இந்த உலகம் கண்ட மாபெரும் விஞ்ஞானி கலிலியோ தன் வாழ்நாளில் சந்தித்தார். பல நூற்றாண்டுகளாக பூமி நடுவில் இருப்பதாகவும் சூரியன் உள்ளிட்ட மற்ற எல்லா கோள்களும் பூமியைச் சுற்றி வருவதாகவும் நம்பப்பட்டது. ஆனால், கலிலியோ, ஆய்வுகள் முதன்முறையாக சூரியனை நடுநாயகமாகக் கொண்டு பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருவதாக நிரூபித்தன. இது, கிறிஸ்தவ மதத்தின் நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி கலிலியோவை கிறிஸ்தவ தலைமையகம் தண்டித்தது. அவருடைய பல கருத்துக்களை திரும்பப் பெறும்படி வற்புறுத்தியது. சாகும்வரை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்தது. 1992-இல்-கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து-கலிலியோவைத் தண்டித்தது தவறு என போப்பாண்டவர் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரினார். அறிவியல் உண்மைகள் அவை வெளியிடப்படும் காலத்தில் ஏற்கப்படாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் ஏற்கப்படும் என்பதற்கு கலிலியோவின் வாழ்க்கை ஓர் உதாரணம். இங்கு வேதனை என்னவென்றால் கலிலியோ தன் உயிரைப் பணயம் வைத்து பூமியே சூரியனை சுற்றி வருகிறது என்ற உண்மையை உலகிற்கு கூறினார். ஆனால் நம்மவர்கள் இப்பவும் காலையில் சூரியன் உதிக்கிறது. மாலையில் மறைகிறது என்று எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். Image may contain: 1 person, beard

கடவுள் - குழந்தையே ! என்ன வரம் வேண்டும்

கடவுள் - குழந்தையே ! என்ன வரம் வேண்டும் உனக்கு? போட்டுக்க நல்ல உடுப்பு வேண்டுமா? குழந்தை - இல்லை கடவுளே. நான் நிர்வாணமாகவே இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் முதலில் இந்த சுமந்திரனுக்கும் அவரது செம்புகளுக்கும் ஒரு நல்ல புத்தியை கொடு கடவுளே. இவங்களுடைய தொல்லை தாங்க முடியவில்லை. செய்தி - 200க்கு அதிகமானவர்கள் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தமையினால் ஒழுங்கு செய்த மண்டபத்தில் இடம்போதாமையினால் சுமந்திரனின் லண்டன் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாம். இதைத்தான் கேட்பவன் கேணையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்று கதை கூறுவது. Image may contain: one or more people

செய்தி - சுமந்திரனின் லண்டன் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

செய்தி - சுமந்திரனின் லண்டன் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிருபர் - என்ன சேர் இந்த ஓட்டம் பிடிக்கிறியள்? சுமந்திரன் - யோவ் சும்மா இருய்யா. என்ர கஸ்டம் எனக்கெல்லோ தெரியும்? நிருபர் - ஏன் சேர்! என்ன பிரச்சனை? சுமந்திரன் - இந்த லண்டன் தமிழன் பூராவும் முரட்டுகாரன்களாய் இருக்கிறான்களடா. கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் செருப்பால அடிக்க ஓடி வாராங்கள். நிருபர் - அப்படியா என்ன நடந்தது? நீங்கதான் ரொம்ப தைரியமான ஆள் ஆச்சே? சுமந்திரன் - அட சும்மா இருய்யா நீ வேற. இலங்கையில எஸ்.ரி.எவ் பொலிஸ் பாதுகாப்பில் வீரம் பேசுவன். ஆனால் லண்டனில அப்படி பேச முடியுமா? அவனுகள் கழுத்து வெட்டுவன் என்று கூறிய பிரிகேடியர் பிரசன்ன வீரதுங்கவையே விரட்டி அடிச்சவங்கள். என்னை சும்மா விடுவாங்களா? நிருபர் - அப்ப கூட்டம் நடக்கவில்லையா சேர் ? சுமந்திரன் - யோவ் எப்படி நடத்த முடியும்? அவனவன் லீவு போட்டுவிட்டு எனக்கு அடிக்க என்று அலைஞ்சு திரிந்து செருப்பு பொறுக்கி வைத்திருக்கிறாங்களாம். இதை பெருமையாய் பேஸ்புக்கில் பதிவு வேற போடுறாங்கள். நிருபர் - என்ன கொடுமை சேர்? இதை தடுக்க முடியாதா? சுமந்திரன் - இலங்கையில் என்றால் சி.ஜ.டி பொலிசுக்கு சொல்லி மிரட்டலாம். லண்டனில் என்ர பருப்பு எதுவும் வேகாதே? நிருபர் - உங்கள் தொண்டர் படை பாதுகாப்பு தரவில்லையா? சுமந்திரன் - அட நீங்க வேற தம்பி. எனக்கு சந்தேகமே அந்த இரண்டு செம்புகள்மீதுதான். அவங்கள் எனக்கு அடி வேண்டித்தரத்தான் கூட்டத்தை ஒழுங்கு பண்ணினாங்களோ என்று எனக்கு சந்தேகமாய் இருக்கு. Image may contain: 1 person, standing

காடுகளில் உள்ள மரங்கள் அழிந்துகொண்டே வந்தன

காடுகளில் உள்ள மரங்கள் அழிந்துகொண்டே வந்தன ஆனால் மரங்களோ மீண்டும் மீண்டும் கோடரிக்கே வாக்களித்தன ஏனெனில் மரத்தினால் செய்த தன் கைப்பிடியைக் காட்டி “ நானும் உங்களில் ஒருவன்தான் “ என கோடரி ஏமாற்றியதை மரங்கள் முழுமையாக நம்பின. மனதார நம்பின. இது ஒரு துருக்கிய பழமொழி. ஆனாலும் சுமந்திரனுடன் நின்று படம் பிடிப்பதை பெருமையாக நினைக்கும் மரங்களுக்கு மன்னிக்கவும் மனிதர்களுக்கு பொருத்தமானது. இதை இனியாவது உணருவார்களா? Image may contain: one or more people, people standing and sunglasses

•இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

•இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? ஒருவர் தமிழ் மக்கள் மத்தியில் வந்து என்னை நீங்கள் தெரிவு செய்தால் உங்களுக்கு ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்றார். தமிழ் மக்களும் அவர் வாக்குறுதியை நம்பி அவரை எம்.பி யாக தெரிவு செய்கின்றனர். அவரும் தன் பொக்கற்றைக் காட்டி “ இதோ என் ராஜினாமாக் கடிதம். பொக்கற்றில் தயாராக இருக்கிறது. தீர்வு பெற்று தரவில்லை என்றால் உடனடியாக ராஜினாமா செய்வேன்” என்றார். பதவி பெற்றதும் “நடந்தது இனப்படுகொலை அல்ல. அது வெறும் போர்க்குற்றம் மட்டுமே” என்றார். அதன்பின்பு “சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும்” என்றார். அதுமட்டுமன்றி இலங்கை அரசு கோராமலே இரண்டுமுறை தவணை பெற்றுக் கொடுத்தார். இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு ஆதாரம் இல்லை என்றவர் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது இனப்படுகொலை என்றும் அது விசாரிக்கப்பட வேண்டும் எனக் கோரினார். இந்நிலையில்தான் தமிழ் மக்கள் இவரது துரோகத்தனதிற்கு எதிராக கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். ஆனால் சிலர் கொஞ்சம்கூட கூச்சமின்றி அவருடன் சேர்ந்து சாப்பிட்டு படம் பிடித்து முகநூலில் பெருமையாக போடுகின்றனர். பாவம். அவர்களுக்கும் பசிக்கும்ல்லே. அவர்களுடைய சில வாதங்களும் அவற்றுக்கான பதில்களும் (1) சுமந்திரன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா? பதில் - பிரதமர் மோடி ஜனாதிபதி ட்ரம்ப் எல்லோரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே. ஆனால் அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும்போது இப்படி யாரும் கூறவதில்லை என்பதை இவர்கள் கவனிக்க வேண்டும். (2) சுமந்திரன் தன் கருத்தை சொல்ல அனுமதிக்க வேண்டாமா? பதில் - ஆம். சுமந்திரன் தன் கருத்தை சொல்ல எந்தளவு உரிமை உண்டோ அதேயளவு உரிமை அவருடைய துரோகத்தனத்pற்கு எதிர்ப்பு தெரிக்க மக்களுக்கும் உண்டு. (3) பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் மீது செருப்பு எறிவோம் என்று கூறுவது தவறு இல்லையா? பதில் - உலகின் பெரிய ஜனநாயகநாடு அமெரிக்கா என்கிறார்கள். அந்த அமெரிக்காவின் ஜனாதிபதிகளே உலகில் அதிகளவு எதிர்ப்பு போராட்டங்களை சந்தித்துள்ளார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஈராக் சென்றபோது ஒரு ஊடகவியலாளரே செருப்பு வீசினார். அதை யாரும் தவறு என்று கூறுவதில்லை. அமெரிக்க தேசியக்கொடி பல இடங்களில் எரிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட எதிர்ப்பு வடிவமே. (4) சுமந்திரனை குறைகூறும் நீங்கள் என்ன சாதித்துள்ளீர்கள்? பதில் - சுமந்திரனைவிட அதிகம் சாதித்தவர்தான் சுமந்திரனை கேள்வி கேட்க முடியும் என கருதுவது தவறு. தமிழ் மக்கள் அனைவருக்கும் கேள்வி கேட்கும் உரிமையும் தகுதியும் உண்டு. அத்துடன் சுமந்திரன்தானே மக்களை ஏமாற்றி பதவி பெற்றிருக்கிறார். எனவே அவரிடம்தானே கேட்க வேண்டும். Image may contain: 1 person, eating, sitting, table and food

லக்ஸ்மன் கதிர்காமரும் சின்ன கதிர்காமரும்!

• லக்ஸ்மன் கதிர்காமரும் சின்ன கதிர்காமரும்! லக்ஸ்மன் கதிர்காமர் என்ற ஒரு தமிழர் சந்திரிக்கா அரசில் அமைச்சராக இருந்தார். அவரது வேலை, சந்திரிக்காவின் ராணுவம் பாடசாலை மீது குண்டு போட்டு மாணவர்கள் இறந்தால் அவர்களை புலிப் பயங்கரவாதிகள் என்று சர்வதேசத்திற்கு கூறுவது, தேவாலயம் மீது குண்டு போட்டால் அது புலிகளின் முகாம் என்று பொய் கூறுவது. அதனால் தமிழ் மக்கள் இவரை வெறுத்தார்கள். இவரை துரோகி என்று அழைத்தார்கள். ஆனாலும் அவருக்கு ஒரு ஆசை இருந்தது. தமிழ் மக்கள் தன்னை பாராட்ட வேண்டும் என்று விரும்பினார். தன் விருப்பத்தை அவர் சந்திரிக்காவிடம் தெரிவித்தார். சந்திரிக்காவும் அவர் இறுதி விருப்பத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பினார். அப்போது அருகில் இருந்த சம்பந்தர் ஜயா “ மேடம்! கவலைப் படாதீர்கள். இது ஒரு சின்ன விடயம். நான் நிறைவேற்றிக் காட்டுகிறேன் “ என்றார். சம்பந்தர் ஜயா சுமந்திரனை அழைத்து அவருக்கு பதிவியைக் கொடுத்தார். அவரும் பதவி கிடைத்ததும் நடந்தது இனப்படுகொலை அல்ல என்றார். அடுத்து சர்வதேச விசாரணை தேவையில்லை, உள்ளக விசாரணை போதும் என்றார். அதன் பின்னர் இலங்கை அரசு கோராமலேயே இரண்டு முறை தவணை பெற்றுக் கொடுத்தார். அத்துடன் புலிகளின் கொலைகளும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றார். தமிழ் இனப் படுகொலைக்கு ஆதாரம் இல்லை என்றவர் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது இனப்படுகொலை என்றும் அதை விசாரிக்க வேண்டும் என்றும் கோரினார். இதனைப் பார்த்த தமிழ் மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அதுமட்டுமல்ல இவருடன் ஒப்பிடும்போது லக்ஸ்மன் கதிர்காமர் பரவாயில்லை என்று கூறினார்கள். இதைக் கேட்ட சந்திரிக்கா மிக்க மகிழ்ச்சி அடைந்தார். தமிழ் மக்களின் வாயாலேயே லக்ஸ்மன் கதிர்காமர் பரவாயில்லை என்று கூறவைத்துவிட்டீர்களே என்று சம்பந்தர் ஜயாவை கட்டியணைத்து பாராட்டினார். குறிப்பு - நண்பர் - தோழர்! சுமந்திரன் செம்பு ஒன்று உங்களை “பன்னாடை” என்று எழுதியிருக்குது. நான் - அப்படியா? சரியாகத்தானே சொல்லியிருக்கு. நண்பர் - எப்படி தோழர்? நான் - சுமந்திரன் என்ற சக்கையை வடித்து மக்களுக்கு நான் இனம் காட்டுவதால் அவர் என்னை பன்னாடை என்கிறார். Image may contain: 1 person, suit Image may contain: 1 person 143You, Gowripal Sathiri Sri, Gauri Suki and 140 others 17 comments 65 share

மாட்டு மூத்திரம் குடிச்சு குடிச்சு

மாட்டு மூத்திரம் குடிச்சு குடிச்சு இவனுகள் மூளையும் மாட்டு மூளை ஆகிவிட்டது. இவனுகளை வைச்சுக் கொண்டு எப்படியடா இந்தியா வல்லரசு ஆகும்? பாரத் மாதாக்கி ஜே! Image may contain: 1 person, eating, food and text

•சர்வதேச தாய் மொழி தினம்! (21.02.2020)

•சர்வதேச தாய் மொழி தினம்! (21.02.2020) எல்லோருக்கும் அவர்களது தாய்மொழி பெருமை மிக்கதுதான். ஆனால் மொழிகளின் தாய் மொழி என்ற பெருமை எமது தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழியாலேதான் நாம் தமிழ் இனம் ஆனோம். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும் என்பார்கள். அதனால்தான் தமிழர்கள் தம் உயிரைக் கொடுத்தேனும் தமிழ் மொழியை காத்து வருகிறார்கள். மொழி என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் வெறும் ஊடகம்தானே, அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சிலர் கேட்கலாம். உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து விட்டன. தமிழும் இனி மெல்ல சாகும் என சிலர் கூறலாம். ஆனால் வரலாற்றில் எத்தனை படையெடுப்புகள். அத்தனையும் தாண்டி தமிழ் மொழி எப்படி நிமிர்ந்து நிற்கிறது? போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர்கள் 350 வருடங்களுக்கு மேலாக ஆண்டபோதும் அவர்களின் சில சொற்களை தமிழ் உள்வாங்கியதேயொழிய தமிழ் அழிந்து விடவில்லை. இனியும்கூட எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் தமிழ் அழிந்துவிடப் போவதில்லை. அது நிமிர்ந்து நிற்கும். ஏனெனில் தமிழர்கள் தம் தாய்க்காக மட்டுமன்றி தாய்மொழி தாய்நிலத்திற்காகவும் உயிர் துறக்கக்கூடியவர்கள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்புகள் இருக்கும்வரை தமிழ் மொழியையும் தமிழர்களையும் யாராலும் அழித்துவிட முடியாது. தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் இந்தியா முழுவதும் பேசப்படும் மொழி சமஸ்கிருதம் என்றும் அதனை தமிழர்கள் எற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். நாற்பதாயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருத மொழியை தமிழ் மொழி பேசும் எட்டுக்கோடிப் பேர் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஏனெனில் தமிழனை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவனின் தமிழ் மொழியை அழிக்க வேண்டும் என்று எதிரி நன்கு தெரிந்து வைத்திருக்கிறான். கைபர் கணவாய் வழியாக வந்த இல.கணேசன் கும்பல்களுக்கு சமஸ்கிருதம் புனித மொழியாக இருக்கலாம். ஆனால் அதற்காக செத்த மொழியான சமஸ்கிருதத்தை தமிழர்கள் ஒருபோதும் எற்றுக்கொள்ள மாட்டார்கள். Image may contain: 1 person

இனிவரும் நம் தலைமுறைக்கு

இனிவரும் நம் தலைமுறைக்கு ஜ.நா வில் நியாயம் கேட்பது சாத்தியாமா? நடந்தது இனப் படுகொலை அல்ல என்று கூறிச் சென்றவன் யாருடா? சுவாசம்கூட விஷமுமான முள்ளிவாய்க்கால் மண்ணிலே நியாயம் கேட்டோம் கொல்லப்பட்டோம் என்ன பதில் என்று கூறடா? தமிழர் காடுகளை அழித்து அழித்து ரிசாத் பதியுதீன் கட்டும் வீடுகள் தமிழர் கடலையும் நிலங்களையும் ஆக்கிரமித்து நிற்கும் இலங்கை ராணுவம் கிழக்கு பறிபோய்விட்டது வடக்கும் பறிபோகிறது தடுத்து நிறுத்த போராடியவன் எல்லாம் கண் முன்னே தவிச்சு சாகிறானே? மாணவர் கதற மக்கள் மடிய சம்பந்தருக்க சிங்கள பொலிஸ் தேவையா? இவருக்கு பதவி வேண்டும் என்றால் நாம் பெற்ற தாயை விற்க வேண்டுமா? நெருப்பு பூக்கள் பூத்து நிற்கும் பூமிப் பந்தின் அருகிலே உரிமை காக்க உயிரைக் கொடுத்து ஒன்றாய் சேர வாருங்கள். இனிவரும் நம் தலைமுறைக்கு ஈழம்தான் இருக்குமா? குறிப்பு - எதிர்வரும் பங்குனிமாதம் ஜ.நா முன்றலில் ஒன்று கூடுவோம். சர்வதேசத்திடம் நியாயம் கேட்போம். Image may contain: தோழமையுடன் தமிழ்ச்செல்வன், smiling

மோடிஜி அவர்களே!

மோடிஜி அவர்களே! இதையேதான் நாங்களும் சொல்கிறோம். தமிழ்நாட்டுக்கு தாராளமாக வந்து போங்க வேணுமானால் தமிழில் “வணக்கம்” சொல்லுங்க ஆனால் தமிழ்நாட்டில் ஈழத் தமிழனுக்கு குடியுரிமை இல்லை என்றுகூற உங்களுக்கு உரிமை கிடையாது. ஏனெனில் தமிழ்நாடு தமிழர்களின் நாடு. Image may contain: மைக்கேல் ராஜ் நே, text

சேர்! எங்களுக்கு தனிநாடு வேண்டாம்

சேர்! எங்களுக்கு தனிநாடு வேண்டாம் அப்படியா? அப்ப என்ன வேணும்? சேர்! எனக்கு சொகுசு பங்களா வேண்டும். அதற்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு வேண்டும். என் தம்பி சுமந்திரனுக்கு ஜனாதிபதி சட்டதரணி பதவியும் நிதிக்குழுத் தலைவர் பதவியும் வேண்டும். இது போதுமா? அல்லது வேறு ஏதாவது வேண்டுமா? ஹி ஹி சேர் ! எனக்கு “வாழும் வீரர்” பட்டமும் தம்பிக்கு “போராளி” பட்டமும் தந்தால் நல்லது. Image may contain: one or more people, people standing and text

சுமந்திரன் ஆதரவாளர்களே!

சுமந்திரன் ஆதரவாளர்களே! தாராளமாக கனவு காணுங்கள். அது உங்கள் உரிமை . ஆனால் சுமந்திரனை மன்னிக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு. எனவே அவரை கடவுளிடம் அனுப்பி வைக்க வேண்டிய கடமை தமிழ் மக்களுக்கு உண்டு. அதை அவர்கள் செய்வார்கள். Image may contain: 1 person

•ஒருபுறம் இந்துகோயில்கள் அழிப்பு

•ஒருபுறம் இந்துகோயில்கள் அழிப்பு மறுபுறம் சிவராத்திரிக்கு வாழ்த்து !! இதுவரை தைப் பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு போன்றவற்றுக்குத்தான் வாழ்த்து கூறுவது வழக்கம். ஆனால் இம்முறை ஜனாதிபதி கோத்தா சிவராத்திரிக்கும் இந்துக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல விடயம். வரவேற்போம். ஆனால் இது உண்மையான வாழ்த்தா? அல்லது தமிழ் மக்களை ஏமாற்றும் வாழ்த்தா? ஏனெனில் இலங்கை பௌத்த நாடு என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் இந்து மதத்தவருக்கு வாழ்த்து கூறினால்; அதன் அர்த்தம் என்ன? சரி. அதுகூடப் பரவாயில்லை. ஆனால் ஒருபுறம் இந்துக் கோயில்களை ஆக்கிரமித்து பௌத்த விகாரைகள் கட்டிக் கொண்டு மறுபுறத்தில் இந்துக்களுக்கு வாழ்த்து கூறினால் அதன் அர்த்தம் என்ன? சரி. ஒரு பேச்சுக்கு இது இந்து மதத்தை மதிக்கும் பண்பு என்று எடுத்துக்கொண்டாலும், நீராவியடி பிள்ளையார் கோவில் வீதியில் பிக்குவின் உடலை எரிக்கும் போது இந்துக்களை மதிக்கும் பண்பு எங்கே போனது? நெற்றியில் திருநீறு பட்டையை பூசிக்கொண்டு கையில் உருத்திராட்சம் கொட்டைகளைக் கட்டிக்கொண்டு வாழ்த்து கூறினால் அதை இந்து மதத்தவர்கள் நம்பிவிடுவார்களா? அப்படியென்றால் எதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்? அவர்கள் உண்மையில் இந்து மதக் கடவுள்களை நம்புவதாக சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. ஏனெனில் இவர்கள் புத்தமதக் கடவுளான புத்தரையே நம்பவில்லை. அப்புறம் எப்படி இந்து மதக் கடவுளை நம்புவார்கள்? இந்தியாவில் இந்துமதவாதியான மோடி பிரதமராக இருக்கிறார். அவரை ஏமாற்றுவதற்காக இப்படி செய்வதாக சிலர் நம்புகிறார்கள். அதுவும் தவறு. ஏனெனில் இந்தியாவில் இருக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்களையே மோடி பொருட்படுத்துவதில்லை. எனவே அவர் இலங்கையில் இருக்கும் இந்து மத தமிழர்கள் மீது அக்கறை கொள்வாரா? உண்மையில் இலங்கை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல உலகில் உள்ள ஆட்சியாளர்கள் பலரும் தற்போது மதங்களை உயர்த்திப் பிடிக்கின்றனர். ஏனெனில் மதங்களும் அவற்றின் கடவுள்களும் இவர்களின் ஆட்சியினை தொடர்வதற்கு உதவி வருகின்றன. அதனால்தான் பலகோடி ரூபா பணங்களை செலவு செய்து மதங்களை காப்பாற்றி கொண்டாடி வருகின்றனர். இப்போது உதாரணத்திற்கு கோத்தா வாழ்த்து தெரிவித்த சிவராத்திரி பற்றி கொஞ்சம் பார்ப்போம். கடவுள் சிவபெருமானை நினைத்து விரதம் இருக்கும் இந்துக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். அதாவது மக்கள் தமக்குரிய நியாயத்தைப் பெறுவதற்கு அமைதியாக விரதம் இருந்தால் அதை அவர் வரவேற்று வாழ்த்துவார். ஆனால் கடவுள் புராணம் என்ன கூறுகின்றது என்றால் அக்கிரமங்களை அழித்து நியாயத்தை நிலைநாட்ட கடவுள் சிவன் ஒருபோதும் விரதம் இருக்க வில்லை. தேர்தலில் போட்டியிட வில்லை. அகிம்சை வழியில் போராடவில்லை. மாறாக கையில் சூலாயுதம் எந்தி வன்முறை மூலம் அக்கிரமார்களை கொன்றே நியாயம் கிடைக்கச் செய்துள்ளார் என்றே கூறுகின்றது. கடவுள் சிவன் மட்டுமல்ல, கையில் ஆயுதம் இன்றி எந்தவொரு இந்துக் கடவுளையும் நாம் காண முடியாது. அனைத்து இந்துக் கடவுளும் வன்முறை மூலமே தீர்வு கிடைக்கும் என்கின்றனர். எனவே கடவுள் சிவன் காட்டிய வழியில் இந்தக்கள் தமக்குரிய நியாயத்திற்காக ஆயுதம் ஏந்தினால் கோத்தா வாழ்த்து தெரிவிப்பாரா? கொஞ்சம் யோசியுங்கள் இந்துக்களே. குறிப்பு - வர்க்கப் போராட்டத்தில் வன்முறையின்றி எந்தவொரு தீர்வும் கிடைத்ததில்லை - தோழர் லெனின் Image may contain: one or more people Image may contain: 1 person, glasses and close-up

•எச்சரிக்கை!

•எச்சரிக்கை! கோராணா வைரஸைவிட கொடிய சிவசேனா வைரஸ் வன்னியில் வேகமாக பரவ ஆரம்பித்துவிட்டது! இந்திய உளவுப்படையால் அனுப்பி வைக்கப்பட்ட ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தமக்கு வழங்கப்பட்ட பணியை வேகமாக செய்து வருகிறார். இந்தியாவில் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து பல அப்பாவி முஸ்லிம்களை கொன்ற பாஜக எம்.பி யான ராம் விலாஸ் வேதாந்தி மகாராஜை வன்னிக்கு அழைத்து வந்துள்ளார். இவர்கள் மன்னாரில் திருக்கேதீஸ்வரம் ஆலைய வளைவு , ஊர்காவற்துறையில் வீதிகளுக்கு கிருத்தவ பெயர் வைப்பு போன்ற விடயங்களை கையில் எடுத்துள்ளனர். மிக விரைவில் மன்னார் மற்றும் தீவுப் பகுதிகளில் தமிழ் மக்களிடையே இந்து கிருத்தவ மோதல்களை உருவாக்க நன்கு திட்டமிட்டு வேலை செய்கின்றனர். இந்த பாஜக (ஆ)சாமிகளுக்கு இந்தியாவில் இருக்கும் இந்து தமிழ் அகதிகள் மீது அக்கறை இல்லை. அவர்களுக்கு குடியுரிமை கொடுக்க மறுக்கின்றனர். ஆனால் ஈழத்திற்கு வந்து இந்து மக்கள் மீது அக்கறை இருப்பதாக காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர். இந்த சிவசேனைத் தலைவர் கிழவர் சச்சிதானந்தம் இலங்கை அரசின் புத்த மத ஆக்கிரமிப்பைக் கண்டு கொள்ளமாட்டார். மாறாக புத்த பிக்குகளுக்கு தன் வேட்டியை உரிஞ்சு கொடுப்பார். ஆனால் கிருத்தவ மதத்திற்கு எதிராக என்றால் அவரது அனைத்து உறுப்புகளும் பொங்கி எழும். ஏனெனில் அவருக்கு இந்திய உளவுப்படை வழங்கிய அசைமென்டே தமிழ் மக்களிடையே ஒற்றுமையை குழப்பி இந்து கிருத்தவ கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதே. அதை அவர் நன்கு திட்டமிட்டு மிக வேகமாக செய்து வருகிறார். Image may contain: one or more people, people sitting, people on stage and indoor

கருணாகரன் அடிகளாரே!

•கருணாகரன் அடிகளாரே! பிளீஸ் , எங்களை மன்னித்து விடுங்கள் !! நீங்கள் போர்த்துக்கேயரின் அடிவருடிகள் என்;றும் நீங்கள் காக்கை வன்னியனின் வாரிசுகள் என்றும் ஈழத்து சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தம் கண்டு பிடித்துவிட்டார். போர் நடக்கும்போது நீங்கள்தான் எங்களுடன் நின்று எங்கள் மனிதவுரிமைக்காக குரல் கொடுத்தீர்கள். அதற்காக உங்கள் உயிரையும் கொடுத்தீர்கள். ஆனால் போர் நடக்கும்போது இந்தியாவில் இந்திய உளவுப்படையின் அரவணைப்பில் சொகுசாக இருந்த சச்சிதானந்தம் ஜயா இப்போது வந்து இதனை எங்களுக்கு கூறுகிறார். இப்போது எங்களுக்கு பௌத்த மதமோ அதன் பிக்குகளோ ஆக்கிரமிப்பாளர்களாக தெரிவதில்லை. இப்போது எங்களுக்கு கிருத்தவ மதமே ஆக்கிரமிப்பு மதமாக தெரிகிறது. கிருத்தவர்கள் போர்த்துக்கேயரின் அடிவருடிகளாகவும் காக்கை வன்னியனின் வாரிசுகளாகவும் தெரிகிறார்கள். என்ன, எங்கள் கண்ணில் ஏதும் நோய் வந்து விட்டதா என எண்ணுகிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். இன்னொரு செய்தியையும் கூறுகிறேன். அதன் பின்பு என்ன வேண்டுமானாலும் நினைத்தக் கொள்ளுங்கள். இந்து கோயில்கள் மீது குண்டுபோட்ட கோத்தபாயா இன்று சிவராத்திரிக்கு இந்து தமிழர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். என்ன பாதர் சத்தத்தைக் காணோம்? Image may contain: 1 person, smiling

•எதிர் மீடியா வழங்கிய

•எதிர் மீடியா வழங்கிய நூல் வெளியீடும் உரையாடலும்! இன்று (22.02.20) லண்டனில் ரெய்னேர்ஸ்லேன் பகுதியில் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் அவர்களின் நூல் வெளியீடும் உரையாடலும் நிகழ்வு இடம்பெற்றது. சாரா ராஜன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சேனன், கஜமுகன், மயுPரன், கௌரி பரா, தயாபரன் ஆகியோர் நூல் அறிமுக உரை நிகழ்த்தினார்கள். அடுத்து நூல் ஆசிரியர் யமுனா ராஜேந்திரன் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பார்வையாளர்களின் கலந்துரையாடல் இடம் பெற்றது. இறுதியாக லாவண்யா அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. சில அவதாணிப்புகள் • யமுனா ராஜேந்திரன் அவர்களின் ஜந்து நூல்களின் அறிமுகம் இடம்பெற்றது. அவர் இதுவரை 50 நூல்கள் எழுதியிருப்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டியதே. • இடதுசாரி எழுத்தாளர் என அறியப்பட்டிருக்கும் யமுனா ராஜேந்திரன் அவர்களின் நூலை இடதுசாரி உணர்வாளர்களும் செயற்பாட்டாளர்களுமான எதிர் மீடியா அமைப்பினர் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். Image may contain: 2 people Image may contain: Gowry Para Image may contain: 1 person Image may contain: 1 person, beard

• இது கேவலம் இல்லையா?

• இது கேவலம் இல்லையா? தீர்வு பெற்று தருவேன். இல்லையேல் ராஜினாமா செய்வேன் என்று கூறிய மானஸ்தர் சுமந்திரன், வைரவர் கோவில் முன் வளைவை திறந்து வைத்து அபிவிருத்தி செய்ததாக கூறுவது கேவலம் இல்லையா? ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவோம் என்று கூறி பதவி பெற்றவர்கள், இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டபோது “அபிவிருத்தி முக்கியம் இல்லை தீர்வு தான் முக்கியம்” என்று கூறியவர்களுக்கு இது கேவலமாக தோன்றவில்லையா? வயிரவர் கோவில் முன் வளைவை திறந்து வைத்து படம் போடுவது, ஒழுங்கைக்கு தார் போட்டு அதனை திறந்து வைத்து படம் போடுவது,, மயானத்திற்கு மதில் கட்டி அதனை திறந்து வைத்து படம் போடுவது, கிணறு வெட்டி அதனை திறந்து வைத்து படம் போடுவது இதுதானா நீங்கள் கூறிய தீர்வு? அல்லது இதுதானா நீங்கள் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் அபிவிருத்தி? 1977ல் இவ்வாறு வந்த தமிழ் எம்.பி மார்களை “ கேட்டது தமிழீழம், கிடைத்தது ஜப்பான் ஜீப்பா?” என்று கேட்டு அவர்களது ஜீப் வண்டிகளை கொளுதியவர்கள் குட்டி மணி தங்கத்துரை போன்ற தமிழ் இளைஞர்கள். இன்று குட்டிமணி தங்கத்துரை போன்ற இளைஞர்கள் இல்லாதபடியால்தான் இத்தனை துணிவாக, ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவோம் என்று கூறியவர்கள் அரசு வழங்கிய 7 கோடி ரூபா சொகுசு வாகனத்தில் வந்து வயிரவர் கோயில் வளைவுக்கு திறப்புவிழா செய்கிறார்கள். மாலை போட்டு சென்று இதனை திறந்து வைப்பவங்களுக்கும் வெட்கம் இல்லை. இவங்களுக்கு மாலை போட்டு வரவேற்றவங்களுக்கும் வெட்கம் இல்லை ஏனெனில் இவங்கள் செய்யிறதை எல்லாம் சாதனை என்று எழுத நாலு செம்புகள் இவர்களுக்கு இருக்கும்வரை இவர்கள் இதற்கு வெட்கப்படப் போவதில்லை. குறிப்பு - இதுவரை கக்கூஸ்தான் திறந்து வைக்கவில்லை. தேர்தலுக்கு முன்னர் அதையும் எங்கேயாவது திறந்து வையுங்கடா! Image may contain: 9 people, people standing, wedding and outdoor

1988ல் ஒருநாள் நானும் தமிழ்நாடு விடுதலைப்படையைச் சேர்ந்த தோழர் மாறனும்

1988ல் ஒருநாள் நானும் தமிழ்நாடு விடுதலைப்படையைச் சேர்ந்த தோழர் மாறனும் திருவல்லிக்கேணியில் உள்ள தோழர் பொழிலனைச் சந்திக்க சென்றோம். அப்போது வழியில் வந்துகொண்டிருந்த சில இளம் பெண்களை மறித்து கெட்ட வார்த்தைகளால் மாறன் திட்டினார். எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஏன் இப்படி செய்தீர்கள?; என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் “ தோழர்! இவர்கள் எல்லாம் பார்ப்பணர்கள். இவர்கள் எமது எதிரிகள்” என்றார். அதுமட்டுமல்ல “பாம்பையும் பார்ப்பாணையும் கண்டால் முதலில் பார்ப்பாணையே அடிக்க வேண்டும். ஏனெனில் பாம்பைவிட விஷமானவன் பார்ப்பான்” என்றார். அப்போது அவரிடம் “ அதெப்படி எல்லா பார்ப்பாணும் கெட்டவனாக இருக்க முடியும்? அவர்களில் ஒருவரான மருதையன் என்பவர் மகஇக என்ற நக்சலைட் அமைப்பின் தலைவராக இருக்கிறாரே” என்று நான் உதாரணம் காட்டினேன். 1988ல் நான் உதாரணம் காட்டிய அதே பார்ப்பணர் மருதையன் இன்று 2020ல் பலவேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு மகஇக வில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக ஈழத் தமிழரான குகநாதன் என்பவர் சென்னையில் தமிழக பொலிசாரின் உதவியோடு கடத்தப்பட்ட போது பிரான்சில் இருக்கும் ராயாகரன் தனது கண்டனங்களை தெரிவித்தார். அப்போது இதே மருதையன் ராயகரனை கண்டித்ததோடு அவருடனாக அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக பொதுவெளியில் அறிவித்தார். ஆனால் இதே ராயகரன் கீழைக்காற்று பதிப்பகத்திற்கு கடனாக கொடுத்த பணத்தை மருதையன் திருப்பி கொடுக்கவில்லை. இன்று மருதையன் வெளியிட்டிருக்கும் தனது விளக்கத்தில் இப் பிரச்சனை பற்றி ஏதும் கூறப்பட்டிருக்கிறதா என தேடினேன். ஆனால் எதுவும் இல்லை. Image may contain: 1 person, text

நாய்க்கு எங்கு அடிபட்டாலும்

•நாய்க்கு எங்கு அடிபட்டாலும் அது பின்னங்காலைத்தான் தூக்கும்! தமது ராணுவ தளபதிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தமையினால் ஜநா வின் மனதவுரிமை தீர்மானத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார். அமெரிக்கா விசா வழங்க மறுத்தால் அமெரிக்காவுடன் செய்து கொள்ள இருக்கும் ஒப்பந்தத்தை மறுக்கலாம். அல்லது அமெரிக்காவுடனான உறவுகளை முறித்துக் கொள்ளலாம். அதைவிடுத்து எதற்காக ஜ.நா மனிதவுரிமை தீர்மானத்தில் இருந்து விலகுவதாக முடிவு எடுக்க வேண்டும்? எப்போதும் இறுதியில் தமிழ் இனமே பலியாகிறது அல்லது பலியாக்கப்படுகிறது. Image may contain: 1 person, smiling

இந்த வலி எந்தளவு கொடுமையானது

இந்த வலி எந்தளவு கொடுமையானது என்பதை ஈழத் தமிழராகிய நாம் நன்கு அறிவோம். தலைநகர் டில்லி பற்றி எரிகிறது. முஸ்லிம் மக்கள் நன்கு திட்டமிட்டு தாக்கப்படுகிறார்கள். தலைநகரில் அதுவும் அமெரிக்க ஜனாதிபதி இருக்கும் வேளையிலேயே முஸ்லிம் மக்கள் தாக்கப்படுகின்றார்கள் எனில் இந்திய அரசு எந்தளனவு துணிவுடன் இதனை செய்கிறது? குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடி வந்த முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்துத்தவா வெறியர்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்துகிறார்கள். மோடியின் ராணுவமும் பொலிசும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. ஊடகங்கள்கூட இதனை எழுதாமல் மறைக்கின்றன. eye-crossed-out Image may contain: 3 people, beard and shoes Image may contain: 1 person, fire and outdoor Image may contain: one or more people Image may contain: one or more people, people standing and outdoor

இவர்கள் விரும்பியிருந்தால் சுமந்திரனுடன் சேர்ந்து சோத்துப் பார்சல் சாப்பிட்டிருக்கலாம்.

இவர்கள் விரும்பியிருந்தால் சுமந்திரனுடன் சேர்ந்து சோத்துப் பார்சல் சாப்பிட்டிருக்கலாம். இவர்கள் விரும்பியிருந்தால் சுமந்திரனுடன் நின்று படம் பிடித்து பேஸ்புக்கில் போட்டிருக்கலாம். ஆனால் இவர்கள் எதற்காக இந்த குளிரில் ஜ.நா நோக்கி சயிக்கிள் பவனி செல்கிறார்கள்? ஜ.நா போவதுதான் இவர்கனள் குறிக்கோள் என்றால் மற்றவர்கள் போல் பஸ் வண்டியில் சென்றிருக்கலாம். அல்லது காரில் சென்றிருக்கலாம். ஆனால் இவர்கள் மக்களிடம் செல்கிறார்கள். வழி எங்கும் மக்களுக்கு இனப் படுகொலையை விளக்கி செல்கிறார்கள். ஆம். இன்றைக்கு பெயருக்காவது ஜ.நா வில் ஈழப் படுகொலை பேசப்படுகிறது என்றால் அதற்கு சுமந்திரன் காரணம் இல்லை. மாறாக இவர்களைப் போன்றவர்களின் அர்ப்பணிப்பே காரணம். மேலும் மேலும் மக்களிடம் செல்வோம். மக்கள் நிச்சயம் எமக்கான நியாயத்தை பெற்று தருவார்கள். தம்மை நம்பி வருபவர்களை மக்கள் ஒருபோதும் ஏமாற்றியதில்லை. மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள் வெற்றி பெறாமல் இருந்ததில்லை. Image may contain: one or more people and outdoor

இரண்டு பேருமே குழந்தைகள்தான்.

இரண்டு பேருமே குழந்தைகள்தான். ஆனால் அந்த சிறுவனுக்காக இரங்கிய உலகம் இந்த இந்திய சிறுமிக்காக இரங்கவில்லையே? இந்திய அரசு மட்டுமா முழு உலகமே கைகட்டி வேடிக்கை பார்க்கிறதே? இந்த சிறுமி செய்த தவறு என்ன? நீங்களாகவே இந்த சிறுமிக்கு மத அடையாளத்தை வழங்கினீர்கள் அப்புறம் நீங்களே அந்த மத அடையாளத்திற்காக சிறுமியின் கண்ணைக் குத்துகிறீர்களே? இதுவரை 22 பேர்வரை பலி. உங்களின் பதவி நலன்களுக்காக இன்னும் எத்தனை பேரை பலி வாங்கப் போகிறீர்கள்? எப்போதுதான் உங்கள் ரத்தவெறி அடங்கப் போகிறது? Image may contain: 1 person, close-up Image may contain: 1 person, smiling

உலகில் எப்படிப்பட்ட இழப்பை சந்தித்த மனிதனும்

உலகில் எப்படிப்பட்ட இழப்பை சந்தித்த மனிதனும் வாழ்வதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கின்றன ஆனால் தம் காணாமல்போன உறவுகளை தேடுவதையே வாழ்வதற்கான காரணமாக கொண்டிருப்பது கொடுமையானது. தம் காணாமல்போன உறவுகளை தேடுவது கொடுமை என்றால் அதைவிடக் கொடுமையானது அது பற்றி எந்த முடிவும் தெரியாமல் இறப்பது. கடந்த மூன்று வருடமாக மழையிலும் வெயிலிலும் உட்கார்ந்து தம் உறவைத் தேடிய தாய் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதுவரை இவ்வாறு 60க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இவர்கள் இறப்பதற்கு முன் ஒரு முடிவை பெற்றுக் கொடுப்பதற்கு தமிழ்தலைவர்கள் தவறி விட்டனர். தன்னை ஒரு தமிழன் (சுமந்திரன்) காப்பாற்றி விட்டான் என்று சிங்களவரான ரஞ்சன் ரமநாயக்கா பெருமையுடன் கூறுகின்றார். ஆனால் அந்த தமிழன் (சுமந்திரன்) யாரால் எம்.பி யானோ அவர்களை காப்பாற்ற முன்வரவில்லை. தமிழ் இனத்தின் மிகப் பெரும் சாபக்கேடு இது! Image may contain: one or more people Image may contain: one or more people

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் தமிழர்கள் அனைவரும் ஒன்றாதல் கண்டே!

•எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் தமிழர்கள் அனைவரும் ஒன்றாதல் கண்டே! 2009ல் ஈழத் தமிழருக்கு ஒருபுறம் பெரும் அழிவு ஏற்பட்டது என்றால் மறுபுறத்தில் அந்த அழிவு உலகில் தமிழர்கள் ஒன்றுபடுவதற்கு உதவியுள்ளது. உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஈழத் தமிழர்களுக்கு உதவி வருகின்றனர். இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சா மலேசியா சென்றபோது விமான நிலையம்வரை விரட்டி அடித்தவர்கள் மலேசியா தமிழர்கள். விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் 11 மலேசிய தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நான்கு மாத சிறைவாசத்தின் பின்னர் தற்போது அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே தடா பொடா சட்டங்கள் மூலம் ஈழத் தமிழருக்கு உதவுவதை தடுத்திட முடியாது என்பதை இந்தியாவில் தமிழக தமிழர்கள் காட்டியிருக்கின்றனர். தற்போது அதையே மலேசிய தமிழர்களும் உலகிற்கு காட்டியுள்ளனர். தமிழர்கள் இந்த உலகிற்கு கூறிக்கொள்ள விரும்புவது, பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

மறப்பது மக்கள் வழமை நினைவூட்ட வேண்டியது எமது கடமை

•மறப்பது மக்கள் வழமை நினைவூட்ட வேண்டியது எமது கடமை! முதலாவது படத்தில் இருப்பவர் ரஞ்சன் என்ற சிங்கள எம்.பி. அவர் தமிழருக்காக சிறை செல்லவில்லை. மாறாக, அவர் பதிவு செய்து வைத்திருந்த தொலைபேசி உரையாடல்களுக்காக சிறை வைக்கப்பட்டவர். அவர் தனக்கு சுமந்திரன் என்ற தமிழன் விடுதலை பெற்று தந்திருப்பதாக பெருமையுடன் கூறுகிறார். இரண்டாவது படத்தில் இருப்பவர் மலேசிய தமிழர். இவர் ஈழத் தமிழருக்கு உதவிய குற்றச்சாட்டில் கடந்த நான்கு மாதமாக சிறை வைக்கப்பட்டவர். ஈழத் தமிழருக்கு உதவிய அந்த மலேசிய தமிழரின் விடுதலைக்கு ஈழத் தமிழரான சுமந்திரன் ஏன் உதவிவில்லை என்று நாம் கேட்க வில்லை. மாறாக, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒரு அறிக்கையாவது ஈழத் தமிழ் தலைவரான சுமந்திரன் ஏன் விடவில்லை? Image may contain: 4 people, people smiling, suit Image may contain: 1 person