Friday, February 28, 2020

ஆமைக்கு மயிர் கிடையாது

ஆமைக்கு மயிர் கிடையாது முதலைக்கு நாக்கு கிடையாது மீனுக்கு இரைப்பை கிடையாது பாம்புக்கு காது கிடையாது நண்டுக்கு தலை கிடையாது சுமந்திரனுக்கு ---------- கிடையாது! நான் சுமந்திரனுக்கு அறிவு கிடையாது என்றே எழுத நினைத்தேன். ஆனால் உங்களுக்கு வேறு ஏதும் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பு கிடையாது. முதலில், நடந்தது இனப்படுகொலை இல்லை, போர்க்குற்றம் மட்டுமே என்றார் அடுத்து, சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்றார். பின்னர் இலங்கை அரசுக்கு இரண்டு முறை கால அவகாசம் பெற்றுக் கொடுத்தார். இப்போது , விசாரணைகள் யாவும் முடிந்துவிட்டது. இனி சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது என்கிறார். அதுமட்டுமல்ல சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பேசி வைத்திருந்தேன். அதற்குள் ஆட்சி மாற்றம் எற்பட்டுவிட்டது என்கிறார். ஜந்து வருடமாக அவர் முக்கியது இதுதான். இத்தனைக்கும் பிறகுகம்கூட அவரை சிலர் நம்புகிறார்களே? குறிப்பு - அந்த மானஸ்தன் பாக்கட்டில் இப்பவும் அந்த ராஜினாமாக் கடிதம் இருக்கிறதா? Image may contain: one or more people, people standing and text

No comments:

Post a Comment