Friday, February 28, 2020

•செய்தி - இந்தியாவின் உதவி இல்லாமல்

•செய்தி - இந்தியாவின் உதவி இல்லாமல் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது. - பிரதமர் மகிந்த ராஜபக்ச மகிந்த - மோடிஜி! இத்தனை அழிவிற்கு பிறகும் இத்தனை அழிவிற்கும் இந்தியாவே காரணம் என்று தெரிந்த பிறகும்கூட தமிழர் எப்படி இந்தியா உதவும் என்று இப்பவும் நம்புகிறார்கள்? மோடி- ஓ! அதுவா? அது ரொம்ப சிம்;பிள். அவர்களில் சில நாய்களை பிடித்து அவற்றுக்கு இறைச்சித்துண்டு போட்டால் அவை விசுவாசமாக வாலாட்டிக் கொண்டிருக்கும். எமக்காக குரைத்துக் கொண்டடே இருக்கும். மகிந்த - புரியவில்லையே மோடிஜி? நானும்தான் சம்பந்தருக்கு சொகுசு பங்களா கொடுத்துள்ளேன். சுமந்திரனுக்கு நிதிக்குழுத் தலைவர் பதவி கொடுத்துள்ளேன். ஆனாலும் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லையே? மோடி - இப்போ உதாரணத்திற்கு, இந்து தமிழீழம் கேட்டால் இந்தியா உதவும் என்று சில நாய்களை தமிழ் மக்களிடம் கூற வைப்போம். இந்தியா இல்லாமல் தீர்வு கிடைக்காது என்று இன்னொரு பக்கத்தில் சில நாய்களை தமிழ் மக்களிடம் கூற வைப்போம். மகிந்தா - இந்தியாவில் இருக்கும் இந்து தமிழ் அகதிகளுக்கு உதவி செய்யாத இந்தியா, ஈழத்தில் உள்ள இந்து தமிழருக்கு உதவுமா என்று தமிழ் மக்கள் கேட்க மாட்டார்களா? மோடி - ஆம். தமிழ் மக்கள் புத்திசாலிகள். நிச்சயம் கேட்பார்கள். அப்போது “ புலிகள் ராஜீவ்காந்தியை கொன்றபடியால்தான் இந்தியா ஈழத் தமிழருக்கு உதவி செய்ய தயங்குது” என்று கூறுவதற்கு சில நாய்களை செட் பண்ணி வைத்திருக்கிறோம். அத்துடன் “இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு. அதை புலிகள் குழப்பியது தவறு” என்றும் இந்த நாய்கள் மூலம் கூற வைப்போம். மகிந்தா - இந்தமுறைகூட நீங்கள் நிறைய பண உதவி எமக்கு செய்துள்ளீர்கள். இராணுவ உதவி தந்துள்ளீர்கள். ஒரு பேச்சுக்குகூட தமிழருக்கு தீர்வு வழங்கும்படி நீங்கள் கேட்டதில்லை. ஆனாலும் இப்பவும் தமிழர்கள் உங்களை நம்புகிறார்களே? மோடி - நம்ம சுமந்திரன் லாப்டப் கொடுத்து சில ஊடகவியலாளர்களை செட்பண்ணி வைத்திருக்கிறார். அவர்கள் “ தமிழருக்கு சம உரிமை வழங்குமாறு மோடி வலியுறுத்தல்” என்று செய்தி போடுவார்கள். அதை தமிழர் நம்பிவிடுவார்கள். மகிந்தா - ஆனாலும் நீங்கள் தரும் உதவிகளை நான் என் சிங்கள மக்களுக்கு கூறிவிடுவேன் அல்லவா? மோடி - பரவாயில்லை. உடனே நம் நாய்கள் “ அமைச்சர் ஜெய்சங்கர் தமிழில் உரையாடினார். இந்திய ஜனாதிபதி தமிழில் வணக்கம் கூறினார்” என்ற செய்திகளை பரப்புவார்கள். உடனே தமிழர் கவனம் அதில் போய்விடும். மகிந்தா – ஓ! இவ்வளவு இருக்கா? இத்தனை நாளும் தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்களுக்கு மூளையே இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் கவனம், அவர்களில்தான் தானுவும் இருக்கிறாள். Image may contain: 2 people, people standing and beard

No comments:

Post a Comment