Friday, February 28, 2020

ஏழு தமிழர் விடுதலைக்கு

•ஏழு தமிழர் விடுதலைக்கு ஒரு ஈழத் தமிழர் அமைப்புகூட குரல் கொடுக்கவில்லையே? ஏழு தமிழர் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கவும், அரசமைப்பு சட்டத்தின் 161 ஆவது பிரிவு மாநில அரசுக்கு வழங்கிய இறையாண்மை உரிமையை பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்தியும், வரும் 17.2.2020 திங்களன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கீழ்வரும் 38 அமைப்புகள் முற்றுகை செய்யப்போவதாக அறிவித்துள்ளன. 1. நாம் தமிழர் கட்சி 2. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3. மார்க்சிய பொதுவுடமைக் கட்சி 4. இந்திய பொதுவுடமைக் கட்சி 5. தமிழ்ப்புலிகள் கட்சி 6. புரட்சிப் புலிகள் கட்சி 7. தமிழ்த் தேசிய பேரியக்கம் 8. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் 9. தமிழ்த் தேச மக்கள் முன்னணி 10. உயர் நீதிமன்றத்தில் தமிழ் போராட்டக் குழு 11. சம நீதி வழக்கறிஞர்கள் சங்கம் 12. ஆதித்தமிழர் கட்சி 13. புரட்சிகர இளைஞர் முன்னணி 14. மே 17 இயக்கம் 14. பெரியார் திராவிடர் கழகம் 15. திராவிடர் விடுதலை கழகம் 16. மக்கள் சட்ட உரிமை இயக்கம் 17. இஸ்லாமிய சேவைச் சங்கம் 18. குடியுரிமை பாதுகாப்பு நடுவம் (சிபிசிஎல்) 19. வீரத் தமிழர் முன்னேற்றக் கழகம் 20. ஆதித் தமிழர் பேரவை 21. அம்பேத்கர் தேசிய இயக்கம் 22. இக்வான் முஸ்லீம் தவ்கீத் ஜமாத் 23. சட்டக் கல்லூரி மாணவர்கள் 24. தமிழக வாழ்வுரிமை கட்சி 25. தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு கட்சி 26. வனவேங்கைகள் கட்சி 27. இந்திய தேசிய லீக் கட்சி 28. தைப் புரட்சி இயக்கம் 29. திருவள்ளுவர் பேரவை 30. தமிழக மக்கள் சனநாயக கட்சி 31. புரட்சிக்கவிஞர் பேரவை 32. தமிழ் தமிழர் இயக்கம் 32 ஒத்துழையாமை இயக்கம் 33. சமூகநீதி பண்பாட்டு மையம் 34. நாணல் நண்பர்கள் 35. 7தமிழர் விடுதலைக்கட்சி 36. திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை 37. மருது மக்கள் இயக்கம் 38. மக்கள் அதிகாரம் இந்த ஏழு தமிழரில் 4 பேர் ஈழத் தமிழர்கள். ஆனால் இவர்களின் விடுதலைக்காக இதுவரை ஒரு ஈழத் தமிழர் அமைப்புகூட குரல் கொடுக்கவில்லை. இந்த ஏழு தமிழர் விடுதலையில் உண்மையில் ஈழத் தமிழ் அமைப்புகளுக்கு அக்கறை இல்லையா? அல்லது குரல் கொடுத்தால் இந்திய அரசின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சுகின்றனவா? அடிக்கடி லண்டனுக்கு வந்து தன் மகளை பார்த்துச் செல்லும் சுமந்திரன்கூட அதே லண்டனில் இருக்கும் முருகன் நளினியின் மகள் தன் பெற்றோரை பார்க்க முடியாத நிலையில் இருப்பதையிட்டு குரல் கொடுக்க கூடாதா? Image may contain: 6 people

No comments:

Post a Comment