Friday, February 28, 2020

•எச்சரிக்கை!

•எச்சரிக்கை! கோராணா வைரஸைவிட கொடிய சிவசேனா வைரஸ் வன்னியில் வேகமாக பரவ ஆரம்பித்துவிட்டது! இந்திய உளவுப்படையால் அனுப்பி வைக்கப்பட்ட ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தமக்கு வழங்கப்பட்ட பணியை வேகமாக செய்து வருகிறார். இந்தியாவில் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து பல அப்பாவி முஸ்லிம்களை கொன்ற பாஜக எம்.பி யான ராம் விலாஸ் வேதாந்தி மகாராஜை வன்னிக்கு அழைத்து வந்துள்ளார். இவர்கள் மன்னாரில் திருக்கேதீஸ்வரம் ஆலைய வளைவு , ஊர்காவற்துறையில் வீதிகளுக்கு கிருத்தவ பெயர் வைப்பு போன்ற விடயங்களை கையில் எடுத்துள்ளனர். மிக விரைவில் மன்னார் மற்றும் தீவுப் பகுதிகளில் தமிழ் மக்களிடையே இந்து கிருத்தவ மோதல்களை உருவாக்க நன்கு திட்டமிட்டு வேலை செய்கின்றனர். இந்த பாஜக (ஆ)சாமிகளுக்கு இந்தியாவில் இருக்கும் இந்து தமிழ் அகதிகள் மீது அக்கறை இல்லை. அவர்களுக்கு குடியுரிமை கொடுக்க மறுக்கின்றனர். ஆனால் ஈழத்திற்கு வந்து இந்து மக்கள் மீது அக்கறை இருப்பதாக காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர். இந்த சிவசேனைத் தலைவர் கிழவர் சச்சிதானந்தம் இலங்கை அரசின் புத்த மத ஆக்கிரமிப்பைக் கண்டு கொள்ளமாட்டார். மாறாக புத்த பிக்குகளுக்கு தன் வேட்டியை உரிஞ்சு கொடுப்பார். ஆனால் கிருத்தவ மதத்திற்கு எதிராக என்றால் அவரது அனைத்து உறுப்புகளும் பொங்கி எழும். ஏனெனில் அவருக்கு இந்திய உளவுப்படை வழங்கிய அசைமென்டே தமிழ் மக்களிடையே ஒற்றுமையை குழப்பி இந்து கிருத்தவ கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதே. அதை அவர் நன்கு திட்டமிட்டு மிக வேகமாக செய்து வருகிறார். Image may contain: one or more people, people sitting, people on stage and indoor

No comments:

Post a Comment