Friday, February 28, 2020

இனிவரும் நம் தலைமுறைக்கு

இனிவரும் நம் தலைமுறைக்கு ஜ.நா வில் நியாயம் கேட்பது சாத்தியாமா? நடந்தது இனப் படுகொலை அல்ல என்று கூறிச் சென்றவன் யாருடா? சுவாசம்கூட விஷமுமான முள்ளிவாய்க்கால் மண்ணிலே நியாயம் கேட்டோம் கொல்லப்பட்டோம் என்ன பதில் என்று கூறடா? தமிழர் காடுகளை அழித்து அழித்து ரிசாத் பதியுதீன் கட்டும் வீடுகள் தமிழர் கடலையும் நிலங்களையும் ஆக்கிரமித்து நிற்கும் இலங்கை ராணுவம் கிழக்கு பறிபோய்விட்டது வடக்கும் பறிபோகிறது தடுத்து நிறுத்த போராடியவன் எல்லாம் கண் முன்னே தவிச்சு சாகிறானே? மாணவர் கதற மக்கள் மடிய சம்பந்தருக்க சிங்கள பொலிஸ் தேவையா? இவருக்கு பதவி வேண்டும் என்றால் நாம் பெற்ற தாயை விற்க வேண்டுமா? நெருப்பு பூக்கள் பூத்து நிற்கும் பூமிப் பந்தின் அருகிலே உரிமை காக்க உயிரைக் கொடுத்து ஒன்றாய் சேர வாருங்கள். இனிவரும் நம் தலைமுறைக்கு ஈழம்தான் இருக்குமா? குறிப்பு - எதிர்வரும் பங்குனிமாதம் ஜ.நா முன்றலில் ஒன்று கூடுவோம். சர்வதேசத்திடம் நியாயம் கேட்போம். Image may contain: தோழமையுடன் தமிழ்ச்செல்வன், smiling

No comments:

Post a Comment