Friday, February 28, 2020

•எதிர் மீடியா வழங்கிய

•எதிர் மீடியா வழங்கிய நூல் வெளியீடும் உரையாடலும்! இன்று (22.02.20) லண்டனில் ரெய்னேர்ஸ்லேன் பகுதியில் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் அவர்களின் நூல் வெளியீடும் உரையாடலும் நிகழ்வு இடம்பெற்றது. சாரா ராஜன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சேனன், கஜமுகன், மயுPரன், கௌரி பரா, தயாபரன் ஆகியோர் நூல் அறிமுக உரை நிகழ்த்தினார்கள். அடுத்து நூல் ஆசிரியர் யமுனா ராஜேந்திரன் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பார்வையாளர்களின் கலந்துரையாடல் இடம் பெற்றது. இறுதியாக லாவண்யா அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. சில அவதாணிப்புகள் • யமுனா ராஜேந்திரன் அவர்களின் ஜந்து நூல்களின் அறிமுகம் இடம்பெற்றது. அவர் இதுவரை 50 நூல்கள் எழுதியிருப்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டியதே. • இடதுசாரி எழுத்தாளர் என அறியப்பட்டிருக்கும் யமுனா ராஜேந்திரன் அவர்களின் நூலை இடதுசாரி உணர்வாளர்களும் செயற்பாட்டாளர்களுமான எதிர் மீடியா அமைப்பினர் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். Image may contain: 2 people Image may contain: Gowry Para Image may contain: 1 person Image may contain: 1 person, beard

No comments:

Post a Comment