Friday, February 28, 2020

செய்தி - சுமந்திரனின் லண்டன் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

செய்தி - சுமந்திரனின் லண்டன் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிருபர் - என்ன சேர் இந்த ஓட்டம் பிடிக்கிறியள்? சுமந்திரன் - யோவ் சும்மா இருய்யா. என்ர கஸ்டம் எனக்கெல்லோ தெரியும்? நிருபர் - ஏன் சேர்! என்ன பிரச்சனை? சுமந்திரன் - இந்த லண்டன் தமிழன் பூராவும் முரட்டுகாரன்களாய் இருக்கிறான்களடா. கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் செருப்பால அடிக்க ஓடி வாராங்கள். நிருபர் - அப்படியா என்ன நடந்தது? நீங்கதான் ரொம்ப தைரியமான ஆள் ஆச்சே? சுமந்திரன் - அட சும்மா இருய்யா நீ வேற. இலங்கையில எஸ்.ரி.எவ் பொலிஸ் பாதுகாப்பில் வீரம் பேசுவன். ஆனால் லண்டனில அப்படி பேச முடியுமா? அவனுகள் கழுத்து வெட்டுவன் என்று கூறிய பிரிகேடியர் பிரசன்ன வீரதுங்கவையே விரட்டி அடிச்சவங்கள். என்னை சும்மா விடுவாங்களா? நிருபர் - அப்ப கூட்டம் நடக்கவில்லையா சேர் ? சுமந்திரன் - யோவ் எப்படி நடத்த முடியும்? அவனவன் லீவு போட்டுவிட்டு எனக்கு அடிக்க என்று அலைஞ்சு திரிந்து செருப்பு பொறுக்கி வைத்திருக்கிறாங்களாம். இதை பெருமையாய் பேஸ்புக்கில் பதிவு வேற போடுறாங்கள். நிருபர் - என்ன கொடுமை சேர்? இதை தடுக்க முடியாதா? சுமந்திரன் - இலங்கையில் என்றால் சி.ஜ.டி பொலிசுக்கு சொல்லி மிரட்டலாம். லண்டனில் என்ர பருப்பு எதுவும் வேகாதே? நிருபர் - உங்கள் தொண்டர் படை பாதுகாப்பு தரவில்லையா? சுமந்திரன் - அட நீங்க வேற தம்பி. எனக்கு சந்தேகமே அந்த இரண்டு செம்புகள்மீதுதான். அவங்கள் எனக்கு அடி வேண்டித்தரத்தான் கூட்டத்தை ஒழுங்கு பண்ணினாங்களோ என்று எனக்கு சந்தேகமாய் இருக்கு. Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment