Friday, February 28, 2020

கருணாகரன் அடிகளாரே!

•கருணாகரன் அடிகளாரே! பிளீஸ் , எங்களை மன்னித்து விடுங்கள் !! நீங்கள் போர்த்துக்கேயரின் அடிவருடிகள் என்;றும் நீங்கள் காக்கை வன்னியனின் வாரிசுகள் என்றும் ஈழத்து சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தம் கண்டு பிடித்துவிட்டார். போர் நடக்கும்போது நீங்கள்தான் எங்களுடன் நின்று எங்கள் மனிதவுரிமைக்காக குரல் கொடுத்தீர்கள். அதற்காக உங்கள் உயிரையும் கொடுத்தீர்கள். ஆனால் போர் நடக்கும்போது இந்தியாவில் இந்திய உளவுப்படையின் அரவணைப்பில் சொகுசாக இருந்த சச்சிதானந்தம் ஜயா இப்போது வந்து இதனை எங்களுக்கு கூறுகிறார். இப்போது எங்களுக்கு பௌத்த மதமோ அதன் பிக்குகளோ ஆக்கிரமிப்பாளர்களாக தெரிவதில்லை. இப்போது எங்களுக்கு கிருத்தவ மதமே ஆக்கிரமிப்பு மதமாக தெரிகிறது. கிருத்தவர்கள் போர்த்துக்கேயரின் அடிவருடிகளாகவும் காக்கை வன்னியனின் வாரிசுகளாகவும் தெரிகிறார்கள். என்ன, எங்கள் கண்ணில் ஏதும் நோய் வந்து விட்டதா என எண்ணுகிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். இன்னொரு செய்தியையும் கூறுகிறேன். அதன் பின்பு என்ன வேண்டுமானாலும் நினைத்தக் கொள்ளுங்கள். இந்து கோயில்கள் மீது குண்டுபோட்ட கோத்தபாயா இன்று சிவராத்திரிக்கு இந்து தமிழர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். என்ன பாதர் சத்தத்தைக் காணோம்? Image may contain: 1 person, smiling

No comments:

Post a Comment