Friday, February 28, 2020

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் தமிழர்கள் அனைவரும் ஒன்றாதல் கண்டே!

•எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் தமிழர்கள் அனைவரும் ஒன்றாதல் கண்டே! 2009ல் ஈழத் தமிழருக்கு ஒருபுறம் பெரும் அழிவு ஏற்பட்டது என்றால் மறுபுறத்தில் அந்த அழிவு உலகில் தமிழர்கள் ஒன்றுபடுவதற்கு உதவியுள்ளது. உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஈழத் தமிழர்களுக்கு உதவி வருகின்றனர். இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சா மலேசியா சென்றபோது விமான நிலையம்வரை விரட்டி அடித்தவர்கள் மலேசியா தமிழர்கள். விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் 11 மலேசிய தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நான்கு மாத சிறைவாசத்தின் பின்னர் தற்போது அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே தடா பொடா சட்டங்கள் மூலம் ஈழத் தமிழருக்கு உதவுவதை தடுத்திட முடியாது என்பதை இந்தியாவில் தமிழக தமிழர்கள் காட்டியிருக்கின்றனர். தற்போது அதையே மலேசிய தமிழர்களும் உலகிற்கு காட்டியுள்ளனர். தமிழர்கள் இந்த உலகிற்கு கூறிக்கொள்ள விரும்புவது, பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

No comments:

Post a Comment