Friday, February 28, 2020

இவர்கள் விரும்பியிருந்தால் சுமந்திரனுடன் சேர்ந்து சோத்துப் பார்சல் சாப்பிட்டிருக்கலாம்.

இவர்கள் விரும்பியிருந்தால் சுமந்திரனுடன் சேர்ந்து சோத்துப் பார்சல் சாப்பிட்டிருக்கலாம். இவர்கள் விரும்பியிருந்தால் சுமந்திரனுடன் நின்று படம் பிடித்து பேஸ்புக்கில் போட்டிருக்கலாம். ஆனால் இவர்கள் எதற்காக இந்த குளிரில் ஜ.நா நோக்கி சயிக்கிள் பவனி செல்கிறார்கள்? ஜ.நா போவதுதான் இவர்கனள் குறிக்கோள் என்றால் மற்றவர்கள் போல் பஸ் வண்டியில் சென்றிருக்கலாம். அல்லது காரில் சென்றிருக்கலாம். ஆனால் இவர்கள் மக்களிடம் செல்கிறார்கள். வழி எங்கும் மக்களுக்கு இனப் படுகொலையை விளக்கி செல்கிறார்கள். ஆம். இன்றைக்கு பெயருக்காவது ஜ.நா வில் ஈழப் படுகொலை பேசப்படுகிறது என்றால் அதற்கு சுமந்திரன் காரணம் இல்லை. மாறாக இவர்களைப் போன்றவர்களின் அர்ப்பணிப்பே காரணம். மேலும் மேலும் மக்களிடம் செல்வோம். மக்கள் நிச்சயம் எமக்கான நியாயத்தை பெற்று தருவார்கள். தம்மை நம்பி வருபவர்களை மக்கள் ஒருபோதும் ஏமாற்றியதில்லை. மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள் வெற்றி பெறாமல் இருந்ததில்லை. Image may contain: one or more people and outdoor

No comments:

Post a Comment