Tuesday, May 31, 2016

•6 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் இறக்குமதி செய்த தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்!

•6 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் இறக்குமதி செய்த தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்!
•தமிழ் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை
•காணாமல் போனோர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை
•இடம்பெயர்ந்தோர் இன்னும் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
•உள்ளக விசாரணைகூட இன்னும் ஆரம்பிக்கப்டவில்லை
இந்நிலையில் தமிழ் மக்களுக்கு சேவை செய்யவென தெரிவுசெய்யப்பட்ட தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொகுசு வாகனம் இறக்குமதி செய்துள்ளார்.
•வன்னியில் ஒரு தாய் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தனது 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்.
•கிளிநொச்சியில் ஒரு சிறவன் பரீட்சைக் கட்டணம் கட்டுவதற்காக திருடியதாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான்.
•முல்லைத்தீவில் மரணமான முன்னாள் பெண் போராளி ஒருவர் தனது மரணச்சடங்கு செலவை அரச செலவில் செய்யும்படி கடிதம் எழுதிவிட்டு இறந்துள்ளார்.
நாடும் மக்களும் இப்படியான நிலையில் இருக்கும்போது மக்களுக்கு சேவை செய்ய என தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் 6 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் இறக்குமதி செய்துள்ளார்.
மக்களுக்கு சேவை செய்ய வாகனம் தேவைதான். ஆனால் அதற்காக இத்தனை பெறுமதியான சொகுசு வாகனம் தேவையா?
அதைக்கூட மதிப்பு குறைவாக காட்டி சட்டவிரோதமாக மோசடி செய்து இறக்குமதி செய்வது கேவலம் இல்லையா?
புதிய வாகனத்தை இறக்குமதி செய்துவிட்டு பழைய பயன்படுத்திய வாகனம் என பொய் கூறப்பட்டுள்ளது.
லண்டனில் அவ் வாகனத்தின் விலை 1 கோடியே 67 லட்சம். ஆனால் அதன் விலை 88 லட்சம் என பொய் கூறப்பட்;டுள்ளது.
Rs 2,652,636 on Customs Import Duty (CID),
Rs 663,159 on Port Aviation Levy (PAL),
Rs 29,488,467 on Excise Import Duty (XID),
Rs. 1,042,928 on Nation Building Tax (NBT)
Rs. 7,821,960 on Value Added Tax (VAT).
6 கோடி பெறுமதியான இந்த சொகுசு வாகனத்திற்கு வரியாக வெறும் 1750 ரூபா மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தை விற்று வங்கியில் போட்டால் வட்டியாகவே மாதம் 6 லட்சம் ரூபா வரும். இவர் மட்டுமல்ல இவர் பரம்பரையே எந்த வேலைக்கும் போகாமல் சொகுசாக வாழலாம்.
இப்போது புரிகிறதா ஏன் எல்லோரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக துடிக்கிறார்கள் என்று?

•அற்பனுக்கு காலம் வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்.

•அற்பனுக்கு காலம் வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்.
அமெரிக்க வல்லரசின் ஜனாதிபதி ஒபாமா தன் கையாலே தனக்கு குடை பிடிக்கிறார்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் தன் கையாலே தனக்கு குடை பிடிக்கிறார்.
இவர்களுக்கு மற்றவர்கள் யாரும் குடை பிடிப்பதில்லை.
ஆனால் நமது தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களை விட உயர்ந்தவர்கள்.
இவர்கள் ஆண்டவனுக்கு நிகரானவர்கள். ஏனெனில் எமது ஊர்களில் ஆண்டவனுக்கு மட்டுமே பக்தர்கள் குடை பிடிப்பார்கள்.
சரவனன் எம.பி
இவர் ஒரு கையால் வேட்டியை தூக்கி பிடிக்கிறார். மறுகையால் குடை பிடிக்கலாம்தானே? ஆனால் அவர் மறு கையால் 6 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை இறக்குமதி செய்வதால் இன்னொருவர் குடை பிடிக்க வேண்டியுள்ளது .
சிறீதரன் எம்.பி
இவர் பாராளுமன்ற உறுப்பினராகும் முன்னர் இதே மண்ணில் வாத்தியாக இருந்தவர். சாதாரணமாக சயிக்கிளில் திரிந்தவர். இப்போது எம்.பி யானவுடன் நாட்டாண்மை பாணியில் அவருக்கும் மற்றவர்கள் குடை பிடிக்க வேண்டியுள்ளது.
மட்டக்களப்பு எம்.பி
பதிவியேற்ற 10 மாதம்கூட ஆகவில்லை. அவருக்கும் தன் கையால் தனக்கு குடை பிடிக்க முடியாத நிலை. இன்னொருவர் அவருக்க குடை பிடிக்க வேண்டிய நிலை
எதற்கு இந்த வெட்டிப் பந்தா?
எப்போது இவர்கள் மக்களுக்கு சேவை செய்யப் போகிறார்கள்?

•ரோம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த மன்னர்

•ரோம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த மன்னர்
முள்ளிவாய்க்காலில் மக்கள் அஞ்சலி செலுத்துகின்றார்கள்
பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்துகின்றார்கள்
புலம்பெயர் நாடுகளில் உறவுகள் அஞ்சலி செலுத்துகின்றார்கள்.
தமிழ்நாட்டில் தமிழ் உணர்வாளர்கள் அஞ்சலி செலுத்துகின்றார்கள்
மலேசியா சிங்கப்பூர் நாடுகளிலும் அஞ்சலி செலுத்துகின்றார்கள்
மொரிசியஸ்தீவிலும்கூட அஞ்சலி செலுத்துகின்றார்கள்.
ஆனால் தமிழர்களின் தலைவர் சம்பந்தர் அய்யா,
சுதந்திரதின நிகழ்வில் சிங்கக்கொடி பிடிக்கிறார்
இந்தியா சென்று கும்பமேளாவில் கலந்துகொள்கிறார்
பின் ஒடி வந்து விஜயராஜபக்ச மகன் திருமணத்தில் கலந்துகொள்கிறார்.
ஆனால் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வில்தான் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை
கைதிகள் விடுதலை பற்றி பேசச் சென்ற இளைஞர்களை கவனியாது அசால்டாக பத்திரிகை படிக்கிறார்.
அப்புறம் தன்னிடம் திறப்பு இல்லை என்று நக்கல் அடிக்கிறார்.
ஆனால் பிக்குகள் பேச சென்றால் உட்காரவைத்து கவனமாக கேட்கிறார்.
இவரைப் பார்க்கும்போது ரோம் பற்றியெரியும்பொது அது பற்றி கவலைகொள்ளாது பிடில் வாசித்த மன்னர் கதைதான் நினைவுக்கு வருகிறது.
யாவற்றையும் மக்கள் கவனமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
அடுத்த தேர்தலில் நிச்சயம் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

•பிசாசைவிட பேய் சிறந்தது என்று தமிழக மக்கள் முடிவு செய்துள்ளார்கள்!

•பிசாசைவிட பேய் சிறந்தது என்று தமிழக மக்கள் முடிவு செய்துள்ளார்கள்!
பேய் அல்லது பிசாசை தெரிவு செய்யும்படி தமிழக மக்கள் முன் தேர்தல் வைக்கப்பட்டது.
தமிழக மக்கள் திமுக காங்கிரஸ் கூட்டை பிசாசுவாக கணித்து அதைவிட அதிமுக என்னும் பேய் பரவாயில்லை என முடிவு செய்துள்ளார்கள்.
தமிழக மக்கள் இந்த தேர்தலில் பல சிறந்த முடிவுகளை கொடுத்துள்ளார்கள்.
(1) வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தைவிட அதிக பணத்தை தேர்தல் கமிசன் செலவு செய்து பல விளம்பரங்களை போட்டும் மக்கள் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகளவு புறக்கணிப்பை செய்துள்ளார்கள்.
(2) மக்கள் தேர்தல் பாதையில் நம்பிக்கை இழந்து வருவது தேர்தல் கமிசனுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாகும்.
(3) கலைஞர் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து ஈழத் தமிழ்மக்களுக்கு செய்த துரோகத்தை தமிழக மக்கள் மறக்கவோ அல்லது மன்னிக்கவோ தயாரில்லை என்பதைக் காட்டியுள்ளார்கள்.
(4) பணத்தின் மூலம் மற்ற கட்சியினரை உடைத்து, பணத்தின் மூலம் ஊடகங்களை வாங்கி பணத்தின் மூலம் வெற்றியை பெற்றுவிட முடியும் என நினைத்த கலைஞரின் எண்ணத்தை முறியடித்துள்ளார்கள்.
(5) மதவெறி பிஜேபி கட்சிக்கு படுதோல்வியைக் கொடுத்துள்ளார்கள்.
(6) போலிக் கம்யுனிஸ்ட்டுகள் மட்டுமன்றி சாதிக்கட்சிகளும் தூக்கியெறியப்பட்டுள்ளார்கள்.
(7) அனைத்து கட்சிகளுடனும் இறுதிக்கணம்வரை பேரம் பேசிய விஜயகாந் கட்சியை தோற்கடித்துள்ளார்கள்.
(8) கலைஞர் தன் மகனுக்கு செய்யவிருந்த வாரிசு அரசியலை முறியடித்துவிட்டார்கள்.
(9) தேர்தலை முன்னிட்டு கட்சிகள் முன்வைத்த தேர்தல் அறிக்கையை நம்பவில்லை என்பதை மக்கள் காட்டியுள்ளார்கள்.
(10) எல்லாவற்றையும்விட ஒரு சிறந்த மாற்றுக்கான இடைவெளியை மக்கள் கொடுத்துள்ளார்கள்.
•யார் வெல்ல வேண்டும் என்பதைவிட திமுக காங்கிரஸ் கூட்டு வெல்லக்கூடாது என்பதை தமிழக மக்கள் உறுதியாக தெரியப்படுத்தியுள்ளார்கள்.
•எந்தவொரு தேசியக் கட்சியையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை காட்டியுள்ளார்கள்.
•மக்கள் தந்த இந்த இடைவெளியைப் பயன்படுத்தி உண்மையான மாற்று சக்தி உருவாக்கப்பட வேண்டும்.
•தேர்தல் பாதைக்கு மாற்று என்பது ஆயுதம் ஏந்திய மக்கள் யத்தப் பாதையாகும். இதை மாற்று சக்திகள் உணர வேண்டும்.
எதிர்காலம் குறித்து நம்பிக்கையளிக்கும் முடிவு தந்த தமிழக மக்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
மக்கள் சக்தி அணுகுண்டை விட வலிமையானது என்பது உண்மைதான்.

ஞாயன்மாரே! இதற்கு ஒரு நியாயம் சொல்வீரா?

ஞாயன்மாரே!
இதற்கு ஒரு நியாயம் சொல்வீரா?
ராஜீவ் காந்தி கொலைக்காக 36 பேருக்கு நீதிமன்ற தீர்ப்பாக மரணதண்டனை விதித்தீர்கள்.
25 வருடமாகியும் 7 பேரை விடுதலை செய்யாமல் சிறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள்.
பரோல் லீவுகூட அவர்களுக்கு வழங்காமல் அநீதி இழைக்கின்றீர்கள்.
1987ல் அமைதிப்படை என்ற பெயரில் இலங்கை வந்த இந்திய ராணுவம்
•8000க்கு அதிகமாக அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றது
•500 க்கு அதிமான தமிழ் போராளிகளைக் கொன்றது
•600 க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது
•பல கோடி ரூபா பெறுமதியான தமிழர்களின் சொத்துகளை சேதமாக்கியது
இத்தனைக்கும் காரணமான இந்திய ராணுவம் ஏன் விசாரிக்கப்படவில்லை?
இத்தனைக்கும் உத்தரவிட்ட ராஜீவ் காந்தி ஏன் விசாரிக்கப்படவில்லை?
இவையாவும் எப்போது விசாரிக்கபடும்?
இவர்களுக்கு எப்போது தண்டனை வழங்கப்படும்?
இந்த தமிழ் மக்களுக்கு எப்போது நியாயம் வழங்கப்படும்?
1991ம் ஆண்டு நடந்த ராஜீவ் கொலை விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட்டதாக கூறும் ஞாயம்மார், 1987ல் நடந்த அப்பாவி தமிழ் மக்களின் கொலைக்கு எப்போது நியாயம் வழங்குவார்கள்?
இந்திராகாந்தி கொலையடுத்து சீக்கிய மக்கள் கொல்லப்பட்டமைக்கு பொது மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி தமிழ் மக்களிடம் இதுவரை மன்னிப்பு கோராதது ஏன்?
ராஜவ்காந்தி உயிர் மட்டும்தான் பெறுமதியானது. தமிழ் மக்களின் உயிர்கள் பெறுமதியற்றதா?

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில் தமிழீழம் மலர இந்திய அரசு உதவியிருக்குமா?

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில்
தமிழீழம் மலர இந்திய அரசு உதவியிருக்குமா?
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடின் இந்திய அரசு தமிழீழம் பெற்றுத் தர உதவியிருக்கும் என இன்றும் சிலர் முட்டாள்தனமாக கூறிக்கொண்டிருக்கின்றனர்.
இலங்கை அரசு சிலவேளை தமிழீழத்திற்கு சம்மதித்தாலும் இந்திய அரசு ஒருபோதும் தமிழீழம் மலர சம்மதிக்காது என்பதே உண்மை .
ராஜீவ் காந்தி மட்டுமல்ல இந்திராகாந்தி உயிருடன் இருந்திருந்தால்கூட தமிழீழம் மலர இந்திய அரசு உதவியிருக்காது.
ஏனெனில் இந்திய அரசு ஒருபோதும் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. இனியும்கூட ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை.
இலங்கை அரசை மிரட்டி முழு இலங்கையையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்காகவே ஆரம்பத்தில் இந்திய அரசு இயக்கங்களுக்கு சில உதவிகள் செய்தது.
பின்னர் இலங்கை அரசு தனது பிடிக்குள் வந்துவிட்டதும் அனைத்து இயக்கங்களையும் அழிக்கும் முயற்சியையே இந்திய அரசு மேற்கொண்டது.
அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்திய ராணுவம்,
•ஆயிரக் கணக்கில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தது.
•பல நூற்றுக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வல்லறவு செய்து கொன்றது.
•தமிழ் மக்களின் கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்களை நாசமாக்கியது.
இந்திய ராணுவத்தைவிட இலங்கை ராணுவம் மேல் என தமிழ் மக்கள் நினக்கும் அளவிற்கு இந்திய ராணுவம் அழிவுகளை மேற்கொண்டது.
இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு யாரும் நீதி வழங்கவில்லை? இந்தியாவில் எதாவது ஒரு நீதிமன்றத்தில் நியாயம் வழங்கப்பட்டிருந்தால் ராஜீவ் காந்தி கொலை நிகழந்திருக்காது.
ராஜீவ் காந்தியினால் கொல்லப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க குரல் கொடுக்காதவர்கள் ராஜீவ் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் எனக் கோருவதற்கு என்ன தகுதி இருக்கு?
புலிகள் அமைப்பு இந்திய ராணுவத்துடன் போர் புரிந்த வேளை பாகிஸ்தான் உளவு அமைப்பு தேவையான உதவிகள் செய்ய முன்வந்தது. ஆனால் பிரபாகரன் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் உதவியை பெற்றுக் கொள்ளவில்லை.
அதுமட்டுமல்ல இந்தியாவுக்குள் போராடிக் கொண்டிருக்கும் சில அமைப்புகள் கூட தங்களுக்கு ஆயுத உதவி செய்யுமாறு கோரிய போது புலிகள் அமைப்பு அதற்கு மறுத்து விட்டனர்.
இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக செயற்பட விரும்பாத புலிகள் அமைப்பை இந்தியாவே அழிப்பதற்கு பெரிதும் உதவியது என்பதை இனியாவது இந்திய அரசை நம்புவோர் புரிந்து கொள்வார்களா?
தற்போது தமிழர்களின் வளங்கள் யாவும் இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது.
•சம்பூரில் 650 ஏக்கர் நிலம் கொடுத்தாயிற்று
•மன்னாரில் எண்ணெய் வயல்கள் கொடுத்தாயிற்று
•புல்மோட்டையில் இல்மனைற் வளம் கொடுத்தாயிற்று
•திரிகோணமலை துறைமுகமும் கொடுத்தாயிற்று
•பலாலி விமான நிலையம் கொடுத்தாயிற்று
•காங்கேசன் துறைமுகம், சீமெந்து தொழிற்சாலை கொடுத்தாயிற்று
•திக்கம் வடிசாரய நிலையமும் கொடுத்தாயிற்று
இப்படி தமிழர் வளம் ஒவ்வொன்றாக இந்தியாவினால் பறிக்கப்டுகிறது.
அனால் சமஸ்டி தீர்வைக்கூட அதரிக்காத இந்தியா தமிழீழம் பெற்று தரும் என இன்னமும் கூறிக்கொண்டிருப்பவர்களை என்னவென்று அழைப்பது?

•மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்றால் பெரிய கருப்பன் வெற்றியும் மகேசன் தீர்ப்பா?

•மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்றால்
பெரிய கருப்பன் வெற்றியும் மகேசன் தீர்ப்பா?
100 படம் ரிலீஸ் செய்த சரத்குமார் தோல்வி
150 படம் ரிலீஸ் செய்த விஜயகாந் தோல்வி
ஆனால் ஒரேயொரு பிட்டு படம் ரிலீஸ் செய்த பெரியகருப்பன் வெற்றி.
அதுவும் 40 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகளால் வெற்றி
மக்களுக்காக குடும்பத்தை விட்டு வந்து போராடும் உதயகுமார் தோல்வி
ஆனால் பிட்டு பட புகழ் பெரியகருப்பன் வெற்றி.
இதுதான் மகேசன் தீர்ப்பா?
இயக்குனர் பாலச்சந்தர் படத்தில் கதாநாயகன் விபச்சாரியை பார்த்து “அந்த தலைவர் சொல்வது போல் நீ ஒழுங்காக வாழலாம்தானே?” என்று கேட்க அதற்கு அந்த விபச்சாரி “அந்த தலைவர் பேசி முடித்த பின்பு தன்னிடம்தான் படுக்க வருவார்” என்று பதில் கூறுவார். இது தலைவர் கருணாநிதியைத்தான் மறைமுகமாக குறிப்பதாக அப்போது பேசிக்கொண்டார்கள்.
நான் மதுரை சிறையில் இருந்தபோது போஸ்ட்ஆபீஸ் வெடிகுண்டு வழக்கில் ஆயள்தண்டனை பெற்று இருந்த திமுக இளைஞரணி பொறுப்பாளர் ஜெயப்பெருமாள் என்பவரிடம் “ உங்கள் தலைவர் கருணாநிதி பல மனைவிகள் வைத்திருப்பதும் அதையும்விட பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதும் சரியா?” எனக் கேட்டேன்.
அதற்கு அவர் உடனே” தலைவருக்கு கெத்து இருக்கிறது. அதனால் பல பெண்களை வைத்திருக்கிறார். நீ ஏன் பொறாமைப்படுகிறாய்? என்று பதில் கூறினார்.
“அப்படியென்றால் நீயும் பல பெண்களுடன் தொடர்பு கொள்வாயா? என்று நான் திருப்பி கேட்டேன்.
“அதெப்படி? என் மனைவிக்கு துரோகம் செய்யக்கூடாது அல்லவா” என்றார்.
இந்த உரையாடலில் இருந்து நான் புரிந்துகொண்டது மக்கள் தாங்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் தலைவர்களிடம் அதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அதனால்தான் தன் பக்கத்தில் இரு மனைவிகளை வைத்தக்கொண்டு கொஞ்சம்கூட கூசாமல் கலைஞர் “ஒருவனுக்கு ஒருத்தியே தமிழர் பண்பாடு” என்று பேச முடிகிறது.
சோபன்பாபுவுடன் ஒன்றாக வாழ்ந்துவிட்டு எம்.ஜி.ஆர் இறந்ததும் தான் உடன்கட்டை ஏற நினைத்தாக ஜெயா அம்மையாரால் கூற முடிகிறது.
அமெரிக்க மக்கள் தாங்கள் எப்படி வாழ்ந்தாலும் தமது ஜனாதிபதி ஒழுக்கமாக வாழ வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
தமிழ் மக்கள் தாங்கள் ஒழுக்கமாக வாழ்ந்து கொண்டு தமது தலைவர்கள் எப்படியும் வாழலாம் என்று நினைக்கிறார்கள்.
அதனால்தான் பெரியகருப்பன் போன்றவர்கள் தேர்தலில் ஜெயிக்க முடிகிறது.
மகேசன் தீர்ப்பு இப்படி அமைந்துவிடுகிறது!

•சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

•சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜெயா அம்மையாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்ற நிலையில் செல்வம் அடைக்கலநாதன் மட்டும் எதற்காக அவசரமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்?
அதுவும் சம்பிரதாயத்திற்கான வாழ்த்தாக இருந்தாலும் பரவாயில்லை. வலிந்து எதற்காக புகழ்ந்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும்?
ஜெயா அம்மையாரின் ஆட்சியில் ஜனநாயத்தினை நிலை நிறுத்தியுள்ளது என்று பாராட்டியுள்ளார்.
ஜெயா அம்மையாரின் ஜனநாயத்தை பாடகர் கோவனிடம் கேட்டால் தெரியும்.
அல்லது மதுக்கடைகளை மூடக்கோரி அடிவாங்கிய பெண்களிடம் கேட்டால் தெரியும்
.
அல்லது மாணவர்களிடம் கேட்டால் தெரியும்.
இவர்களிடம் கேட்க விரும்பாவிடில் தமிழகத்தில் உள்ள அகதிகளிடம் கேட்டால் ஜெயா அம்மையாரின் ஜனநாயகத்தை நன்கு தெரிந்தகொள்ள முடியும்.
ஜெயா அம்மையாரின் ஆட்சியில்தான் மதுரையில் ஒரு அகதி வருவாய்துறை அதிகாரியின் தொல்லை பொறுக்காமல் மின்சாரக்கம்பியில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
ஜெயா அம்மையாரின் அட்சியில்தான் கும்மிடிப்பூண்டி அகதிமுகாமில் ஒரு அகதியின் காலை பொலிசார் அடித்து முறித்துள்ளனர்.
ஜெயா அம்மையாரின் ஆட்சியில்தான் மண்டபத்தில் ஒரு அகதிப்பெண் நான்கு பொலிசாரால் பாலியல் வல்லறவு செய்யப்பட்டுள்ளார்.
இவையெல்லாம் ஜெயா அம்மையார் சிறந்த ஜனநாயகத்தை நிலை நிறுத்தியதாக எப்படி செல்வம் அடைகலநாதன் அவர்களுக்கு தெரிகிறது?
இந்த சம்பவங்கள் நடந்தபோது எல்லாம் மௌனமாக இருந்த செல்வம் அடைக்கலநாதன் இப்ப எதற்காக ஜெயா அம்மையாருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்?
சிறப்புமகாம் என்னும் சித்திரவதை முகாமில் பல வருடங்களாக அப்பாவி அகதிகள் பலர் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஜெயா அம்மையாருக்க வாழ்த்து தெரிவித்த செல்வம் அவர்களால் இந்த அகதிகளை விடுதலை செய்யும்படி ஏன் கேட்க முடியவில்லை?
இத்தனைக்கும் செல்வம் அவர்களும் ஒரு காலத்தில் புதுக்கோட்டை சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தவர். அவரும் சிறப்பு முகாம் கொடுமைகளை அனுபவித்தவர்.
அவரே சிறப்புமுகாமில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யம்படி கேட்காவிடின் வேறுயார்தான் கேட்பார்கள்?
திருச்சியில் இருக்கும் தனது கோடிக் கணக்கான சொத்துக்களுக்கு எந்த பாதிப்பும்; வரக்கூடாது என்பதற்காகவா செல்வம் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்?
ஏனெனில், உங்கள் ஆட்சி சர்வதேசரீதியில் ஒரு எடுத்தக்காட்டு என்று வேறு புகழ்ந்துள்ளார். இந்த வரியை அந்த ஜெயாஅம்மையார்கூட நம்பமாட்டார்.

•மக்கள் என்றும் மகத்தானவர்களே!

•மக்கள் என்றும் மகத்தானவர்களே!
ஒரு மனிதனுக்கு ஆபத்து என்றால் இன்னொரு மனிதன் உதவும் மனித்தன்மை அழிந்துவிட வில்லை என்பதை இலங்கை மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்கள்.
வரலாறு காணாத மழை. வெள்ளம். மண்சரிவு. 80க்கு மேற்பட்டோர் இறந்துவிட்டனர் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை.
அரசு வழக்கம்போல் தூங்கிக்கொண்டு இருக்கிறது. அமைச்சர்கள் மக்கள் போராட்டம் வெடிக்காதவகையில் பார்க்கிறேர்களேயொழிய உரிய நிவாரணம் வழங்கவில்லை.
மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாகனம் இறக்குமதி செய்யும் அரசு மக்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டு உதவியை எதிர்பார்க்கிறது.
அனால் மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். தங்கள் உணவை பாதிக்கப்ட்டவர்களுக்க வழங்குகிறார்கள்.
சென்னை வெள்ளத்தில் எப்படி மக்கள் தாங்களாகவே முன்வந்து உதவினார்களோ அதேபோன்று இலங்கையிலும் மூவின மக்களும் ஒருவருக்கொருவர் உதவி வருகின்றனர்.
சென்னை வெள்ளதின்போது மக்கள் கொடுத்த நிவாரணப் பொருட்களில் எப்படி ஜெயா அம்மையார் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதோ அதேபோன்று இலங்கையிலும் அமைச்சர் ஒருவர் வாழைப்பழத்தில் ஸடிக்கர் ஒட்டியுள்ளார்.
போர்க்கப்பலில் உதவி அனுப்பிய இந்தியாவும்கூட போட்டோ பிடித்து விளம்பரம் செய்வதிலேயே அதிகம் அக்கறை செலுத்துகிறது.
கொழும்பில் எந்த பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்தோh அதே பள்ளிவாசல்களில்தான் உணவுகள் சேகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது.
மலையகத்தில் எந்த தமிழ் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதோ அதே மலையக தமிழ் மக்களுக்கு முதன்முதலாக சிங்கள மக்களே உணவு வழங்கியுள்ளனர்.
சுனாமி காலத்pலும்கூட கிழக்கு மாகாணதில் உள்ள தமிழ் மக்களுக்கு எல்லைக் கிராமங்களில் இருந்த சிங்கள மக்களே முதன் முதலாக உணவு கொண்டு வந்து வழங்கியிருந்தார்கள்.
இயல்பாகவே மக்கள் ஒருபோதும் இனம் மதம் மொழி பார்ப்பதில்லை. சுயநல அரசியல்வாதிகளே இன மத குரோதங்களை மக்கள் மனங்களில் வளர்க்கிறார்கள்.
சென்னை மழையின் போது முகநூல் மூலம் எப்படி நன்கு சேவை செய்யப்பட்டதோ அதேபோன்று இன்றைய இலங்கை மழையிலும் முகநூல் பல பயன்களை செய்கிறது.
அமைச்சர் மனோ கணேசனின் முகமூடியை பதிவாளர் Nila Loganathanகிழித்து தொங்கவிட்டிருக்கிறார். கீழே உள்ள இணைப்பில் விபரம் பாhக்கலாம்.
https://www.facebook.com/nilashayene/posts/1186409874703138

•சிறீதரன் எம்.பி யின் கேள்விக்கு “டெலோ” தலைவர் செல்வம் எம்.பி பதில் அளிப்பாரா?

•சிறீதரன் எம்.பி யின் கேள்விக்கு “டெலோ” தலைவர் செல்வம் எம்.பி பதில் அளிப்பாரா?
தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இன்னொரு தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் தமிழர்விடுதலைக்கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் ஆகியோர் கொல்லப்பட்டதற்கான காரணம் என்னவென்று கேட்டுள்ளார்.
1983ம் ஆண்டு இனக் கலவரத்தையடுத்து அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், யோகேஸ்வரன் , சம்பந்தன் போன்றவர்கள் எல்லாம் இந்தியா சென்று தங்கியிருந்தனர்.
தர்மலிங்கம், ஆலாலசுந்தரம், இராசலிங்கம், துரைரத்தினம் ஆகிய நாலு பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தனர்.
இந்திய உளவுப்படை “றோ” வின் வேண்டுகோளுக்கிணங்க டெலோ தவைர் சிறீசபாரத்தினம் இந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் சுட்டுக்கொல்லுமாறு தமது இயக்கத்தினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
யாழ்ப்பாண டெலோ பிரிவால் கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரமும் உடுவில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கமும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
வடமராட்சி டெலோ தளபதி தாஸ் சிறீசபாரட்ணத்தின் உத்தரவை ஏற்றுக்கொள்ள மறுத்தமையினால் துரைரத்தினமும் இராசலிங்கமும் சுட்டுக்கொல்லப்படவில்லை.
இவர்கள் ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்ற காரணத்தை தற்போதைய டெலோ தலைவர் செல்வம் கூறுமாறு சிறீதரன் கேட்டுள்ளார்.
இவ்வளவு காலமும் கூடஇருந்த செல்வம் அடைகலநாதனிடம் கேட்காத இந்த கேள்வியை இப்போது ஏன் சிறீதரன் கேட்கிறார் என்று புரியவில்லை?
அதுமட்டுமல்ல 30 வருடம் நாட்டைவிட்டு ஓடியவர்கள் இப்போது எதற்காக வந்து புலிகளால் சுடப்பட்டவர்களுக்கு விழா எடுக்கிறார்கள் என்றும் அவர் கேட்டுள்ளார்?
அத்தோடு இவற்றின் பின்னால் மறைந்திருக்கும் கரம் எது வென்றும் அது விரைவில் அம்பலத்திற்கு வரும் என்றும் கூறியளள்hர்.
மீண்டும் இந்திய உளவுப்படையின் பின்னனியில் டொலோ அமைப்பு செயற்பட முனைவதாகவே அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
சிறீதரன் எழுப்பியுள்ள கேள்விகள். நியாயமானவை. இதற்கு செல்வம் அடைக்கலநாதன் கண்டிப்பாக பதில் சொலல வேண்டும்.

•கொடி முக்கியம்தான். ஆனால் அதைவிட மக்களை ஒன்றுபடுத்தி போராடுவது மிகவும் முக்கியம்!

•கொடி முக்கியம்தான். ஆனால் அதைவிட
மக்களை ஒன்றுபடுத்தி போராடுவது மிகவும் முக்கியம்!
அண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கொடி தொடர்பாக பிரச்சனை எற்பட்டது.
பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்ட ஒரு டிவி நிகழ்வில்கூட கொடி தொடர்பாகவே அதிகம் பேசப்பட்டிருக்கிறது.
இந்தப் பிரச்சனை தொடர்பாக புலம்பெயர் மக்கள் மத்தியில் விரக்தி தோன்றியிருப்பதாக சில ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் காட்ட முனைகின்றன.
போராட்டம் இருக்கும் சமூகத்தில் பிரச்சனை இருப்பது சகஜம். பிரச்சனை இல்லையேல் அங்கு போராட்டம் இல்லை , இயக்கம் இல்லை என்று பொருள்.
ஒரு பொருள் எதிர் எதிர் தன்மை கொண்டிருப்பதும் அவ் தன்மையே அப்பொருளின் இயக்கத்திற்கு காரணம் என்றும் அறிவியல் கூறுகிறது.
அதேபோல் சமூகத்தின் அகத்தே மற்றும் புறத்தே உள்ள முரண்பாடுகள் பற்றியும் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் ஆசான் மாவோ எமக்கு போதித்துள்ளார்.
நாட்டில் ஆயுத முனையில் மக்களை அடக்கிவைத்திருக்கும் இரலங்கை அரசு புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் போராட்டங்களை எப்படி நசுக்குவது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றது.
எனவே இலங்கை அரசானது எமக்கிடையேயான முரண்பாடுகளை பயன்படுத்தி எம்மை நசுக்கி அழிப்தற்கு நாம் ஒருபொதும் இடமளித்துவிடக்கூடாது.
ஆயிரம் மலர்கள் மலரட்டும். நூறு கருத்துகள் முட்டி மோதட்டும் என்று கூறி கருத்து முரண்பாடுகளை எப்படி தீர்த்தக்கொள்வது என்பதற்கு தோழர் மாவோ எமக்கு வழிகாட்டியுள்ளார்.
எனவே அவர் காட்டியபடி எமக்கிடையேயான கருத்து முரண்பாடுகளை ஆக்கபூர்வமான உரையாடல்கள் மூலம் நிச்சயமாக தீர்க்க முடியும். அவ்வாறே தீர்க்க வேண்டும்.
ஒரு இனத்திற்கு அடையாளம் முக்கியம். அந்தளவில் கொடியும் முக்கியம்தான். ஆனால் அதனை மக்கள் புரிந்து ஏற்றுக் கொள்ளும்வரை அவர்களை ஒருபோதும் பலவந்தமாக நிர்ப்பந்திக்க கூடாது.
கொடியின் அவசியத்தை வலியுறுத்தபவர்கள் இதனை உணர்ந்து அதன் வழியில் மக்களை ஒன்றுபடுத்த முயல வேண்டும்.
இங்கு மிக மிக முக்கியம் என்னவென்றால் எந்தவொரு போராட்டமும் மக்களை ஒன்றுபடுத்தவதாக அமைய வேண்டுமேயொழிய எக் காரணம் கொண்டும் மக்களை மேலும் மேலும் பிரிக்க வழி செய்யக்கூடாது.
50 ஆயிரம் மக்கள் திரண்ட போராட்டங்கள் இப்போது வெறும் 500 பேர் கலந்து கொள்ளும் போராட்டமாக ஏன் சுருங்கியது என்ற கேள்வியை நாம் எமக்குள் முதலில் எழுப்ப வேண்டும்.
தமது தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ளாத எந்த இனமும் விடுதலை அடைய முடியாது என்று ஆசான் லெனின் கூறியுள்ளார். இதனை நாம் கவனத்தில் கொள்வோம்.

•தோழர் தமிழரசனும் அவரது தத்துவ வழிகாட்டியும்

•தோழர் தமிழரசனும் அவரது தத்துவ வழிகாட்டியும்
தோழர் தமிழரசன் ஒரு புரட்சியாளர். அவர் மாக்சிச லெனினிய மாவோயிச சிந்தனைகளை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டிருந்தார்.
தோழர் தமிழரசன் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப்பாதையை முன்னெடுத்தார்.
தோழர் தமிழரசன் பின்பற்றிய ததத்துவமும் அவர் முன்னெடுத்த பாதையும் சரியானது மட்டுமன்றி இன்றும்கூட அவசியமானது என்பதை வரலாறு நிரூபிக்கின்றது.
இந்திய அரசு அவரை பயங்கரவாதி என்கிறது. தங்களை புரட்சியாளர்கள் என கூறிக்கொள்ளும் சிலர் அவரை இடது விலகல்வாதி என்கிறார்கள்.
ஆனால் வரலாறு அவரை மக்களுக்காக போராடிய உண்மையான புரட்சியாளர் என்றே பதிவு செய்கிறது.
கீழ்வரும் இணைப்பில் “தோழர் தமிழரசனும் அவரது தத்துவ வழிகாட்டியும்” என்னும் கட்டுரையை படிக்கலாம்.
http://tholarbalan.blogspot.co.uk/2016/05/blog-post_25.html

•தோழர் தமிழரசனும் அவரது மரணமும்

•தோழர் தமிழரசனும் அவரது மரணமும்
01.09.1987 யன்று பொன்பரப்பி வங்கியை கொள்ளையடிக்க முயன்றபோது தோழர் தமிழரசனும் அவரது தோழர்களும் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்கள் என்று தமிழக அரசும் அதன் காவல்துறையும் கூறியது. அதனை அவ்வாறே பத்திரிகைகளும் பிரசுரம் செய்தன. உண்மையில் நடந்தது என்ன?
• யார் இந்த தமிழரசன்?
• அவர் ஏன் வங்கியை கொள்ளையிட முயன்றார்?
• அவர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டாரா?
• அவர் இழைத்த தவறுகள் என்ன?
• இதுவரை எத்தனை பேர் விசாரணையின்றி கொல்லப்பட்டனர்?
• தமிழரசனைக் கொன்றதன் மூலம் அவரது இலட்சியைத்தைக் தடுக்க முடிந்ததா?
என்பன பற்றிய விபரங்களை அறிய விரும்புவோர் கீழ்வரும் இணைப்பில் உள்ள கட்டுரையை படிக்கவும்.

•எல்லோரும் கல்வி கற்றால் தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைத்துவிடுமா?

•எல்லோரும் கல்வி கற்றால்
தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைத்துவிடுமா?
டெலோ இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் கணேஸ் வேலாயுதம் தமிழ் மக்கள் இனி ஆயுதப் போராட்டம் நடத்த தேவையில்லை என்றும் கல்வி மூலம் இஸ்ரேல் போன்ற வலிமையான நாட்டை உருவாக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
முதலாவது, கல்வி மூலம் தமிழ் மக்கள் மட்டுமல்ல எந்த மக்களும் விடுதலை பெற முடியாது
இரண்டாவது, இஸ்ரேல் கல்வி மூலம் விடுதலை பெறவும் இல்லை. கல்வி மூலம் வலிமையான நாடாக மாறவும் இல்லை
மூன்றாவது, கல்வி மூலம் எப்படி தமிழ் மக்கள் விடுதலை பெற முடியும் என்பதையும் அவர் விளக்கவில்லை
•தமிழ் மக்கள் அனைவரும் கல்வி கற்க விரும்பினாலும் தரப்படுத்தல் காரணமாக அனைவரும் உயர் கல்வி கற்கும் வாய்ப்பு இல்லை.
•கல்வி கற்ற அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்காது. எற்கனவே பல்லாயிரம் தமிழ் பட்டதாரிகள் வேலையின்றி இருக்கிறார்கள்.
போராட்டம் இன்றேல் வாழ்க்கை இல்லை என்று தோழர் லெனின் கூறினார். ஆனால் தமிழ் மக்கள் இனி போராட தேவையில்லை என்று கணேஸ் வேலாயுதம் கூறுகிறார்.
துப்பாக்கி குழாயில் இருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்று தோழர் மாவொ கூறினார். ஆனால் கல்வி கற்றால் அரசியல் அதிகாரம் பெறலாம் என்று கணேஸ் வேலாயுதம் எமக்கு போதிக்கிறார்.
கணேஸ் வேலாயுதம் 1983களில் எமது அமைப்பில் சேருவதற்காக என்னுடன் பலமுறை பேசினார். அப்போது அவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். எனவே படிப்பை குழப்பாமல் தொடர்ந்து படிக்கும்படி அவருக்கு ஆலோசனை கூறினேன். ஆனால் அவர் டெலொவில் போய் சேர்ந்துவிட்டார். அங்கேயும் சில காலம் இருந்துவிட்டு லண்டன் சென்றுவிட்டார்.
லண்டனில் பணம் சம்பாதித்துவிட்டு வந்து இப்போது கல்வி மூலம் விடுதலை பெறலாம் என தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கிறார்.
வறிய மாணவர்களுக்கு பென்சில் பேனை கொடுத்து தானும் ஒரு எம்.பி யாக கணேஸ் வேலாயுதம் கனவு காண்கிறார் போலும்.
ஆனால் இலவசங்களைக் கண்டு ஏமாறுவதற்கு இது தமிழகம் இல்லை. இலங்கை என்பதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் எந்த காரணங்களுக்காக போராடினார்களோ அதில் ஒன்றுகூட இதுவரை தீர்க்கப்படவில்லை.
ஆயுதம் எந்திப் போராடிய புலிகள் அழிக்கப்பட்டுள்ளார்களே யொழிய தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் இதுவரை வழங்கப்படவில்லை.
கோடீஸவரர்களான கணேஸ் வேலாயுதம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்களுக்கு போராட்டம் தேவையில்லாமல் இருக்கலாம்.
ஆனால் அவர்கள் “தமிழ் மக்கள் போராட தேவையில்லை. கல்வி கற்றால் விடுதலை பெற முடியும்” எனக் கூறுவது போராட்டத்தை திசை திருப்பும் செயலாகும்.
இந்தியாவின் கைக்கூலியாக மாறி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கிறார்கள்.
அவர்களின் இச் செயலானது மகிந்த வீசிய கொத்துக் குண்டுகளை விடப் பயங்கரமானது.

•இந்த சிறு பிள்ளைக்கு இருக்கும் உணர்வு ஏன் சம்பந்தர் அய்யாவுக்கு இல்லை?

•இந்த சிறு பிள்ளைக்கு இருக்கும் உணர்வு
ஏன் சம்பந்தர் அய்யாவுக்கு இல்லை?
முள்ளிவாய்க்காலில் கூத்து நடக்pறது
லண்டனில் ஜேசுதாசை அழைத்து கச்சேரி நடக்கிறது
சம்பந்தர் அய்யாவுக்கு அஞ்சலி செலுத்த நேரம் இல்லை
சுமந்திரனுக்கு அஞ்சலி செய்ய விருப்பம் இல்லை
ஆனால் இந்த சிறு பிள்ளையின் அஞ்சலி என்பது
தமிழ் இனத்தின் எதிர்கால நம்பிக்கை இது.
இவர் தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை
இவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இல்லை
இவர் எதிர்க்கட்சி தலைவரும் இல்லை
இந்த பிள்ளை ஒரு ஈழத் தமிழர் இல்லை
இந்த பிள்ளை ஈழ மண்ணில் பிறக்கவும் இல்லை
முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் இவரின் உறவினர்கள் இல்லை
இருப்பினும் இவர் சென்னையில் முள்ளிவாய்க்கால் அழிவிற்காக அஞ்சலி செய்கிறார்.
இவர் விரும்பியிருந்தால் வீட்டடில் இருந்து டிவி பார்த்திருக்கலாம்
இவர் நினைத்திருந்தால் சிநேகிதிகளுடன் சேர்ந்து வீடியோ கேம் விளையாடியிருக்கலாம்
இவர் குடும்பத்தவர்களுடன் சேர்ந்து படம் பார்க்க போயிருக்கலாம்.
ஆனால் அத்தனையும் விட்டுவிட்டு அஞ்சலி செலுத்த வந்திருப்பது
சம்பந்தர் அய்யாவின் முகத்தில் ஓங்கி குத்தியதாகவே எனக்கு தோன்றுகிறது.
உங்களுக்கு எப்படி தோன்றுகிறது நண்பர்களே?

•காட்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் முன்மாதிரியாக திகழுமா?

•காட்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் முன்மாதிரியாக திகழுமா?
வடமராட்சியில் ஒரு புகழ்பெற்ற பாடசாலை காட்லிக் கல்லூரி.
அது அதிக அளவிலான பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது.
அதிகளவிலான போராளிகளையும் உருவாக்கியுள்ளது.
அதில் படித்தவர்கள் உலகெங்கும் உயர் பதவிகளில் இருக்கிறார்கள்.
அதன் பழைய மாணவர் சங்கம் லண்டனில் பல காலமாக இயங்கி வருகிறது.
உலகெங்கும் முள்ளிவாய்க்கால் அழிவிற்கு அஞ்சலி செலுத்தும் வேளையில் அச் சங்கம் லண்டனில் பாடகர் ஜேசுதாசை அழைத்து கச்சேரி நடத்தியுள்ளது.
இவர்கள் ஜேசுதாசுக்கு மட்டும் அதிக பணம் செலவு செய்யவில்லை.
அந்த நிகழ்வு நடத்த அதிக செலவு மிக்க மண்டபத்தையே புக் செய்துள்ளார்கள்.
கடந்த வருடம் பாடகர் பாலசுப்பிரமணியத்தை அழைத்து கச்சேரி நடத்தினார்கள்.
அடுத்தவருடம் ஏ.ஆர் ரகுமானை அழைப்பார்கள் போல் இருக்கிறது!!
ஏன் இப்படி இந்திய வியாபாரிகளை அழைத்து பணத்தை கரியாக்கிறார்கள்?
ஏன் இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள்?
ஒரு முறை தமது வருடாந்த நிகழ்வை லண்டன் தேம்ஸ் நதியில் மிதக்கும் ஓட்டலில் நடத்தினார்கள்.
வெள்ளைக்காரர்களே நடத்த அஞ்சும் இந்த ஆடம்பரங்களை எதற்காக பாடசாலையின் பெயரால் நடத்துகிறார்கள்.
இவர்கள் வரவு செலவு கணக்கை பொதுவில் காட்டுவார்களா?
இதுவரை பாடசாலைக்கு எந்தளவு பணம் கொடுத்தார்கள் என்பதையாவது தெரிவிப்பார்களா?
நான் காட்லிக் கல்லூரிக்கு சென்ற வேளை அங்குள்ள கம்பியூட்டர் பிரிண்டருக்குரிய ரோனர் வாங்கவே பணம் இன்றி அதிபர் இருந்ததை நேரில் கண்டேன்.
இந்த நிலையில் பாடசாலையின் பெயரால் பழைய மாணவர்கள் இப்படி வீண் செலவு செய்வது நியாயமா?
காட்லிக் கல்லூரி மட்டுமல்ல யாழ்பாணத்தின் பிரபல பாடசாலைகள் பலவற்றின் பெயரால் இந்த கூத்துகளே லண்டனில் நடக்கிறது.
இந்த கூத்துகள் நிறத்தப்பட வேண்டும். இனியாவது பழைய மாணவர் சங்கங்கள் பொறுப்புடன் முன் மாதிரியாக திகழ வேண்டும்.
நானும் ஒரு காட்லிக் கல்லூரி பழைய மாணவன் என்பதற்காக முதன் மதலாக தற்போது வெட்கப் படுகிறேன்.

ஜெயா அம்மையார் மாறிவிட்டாரா? அல்லது திருந்தி விட்டாரா?

•ஜெயா அம்மையார் மாறிவிட்டாரா?
அல்லது திருந்தி விட்டாரா?
ஜெயா அம்மையார் ஸ்டாலினுக்கு வணக்கம் கூறியதையும்
ஸ்டாலினுக்கு முன் சீட் ஒதுக்காமைக்கு வருத்தம் தெரிவித்தமையையும்
சுட்டிக்காட்டி அவர் மாறி விட்டார் என்று சிலர் கூறுகிறார்கள்.
ஜெயா அம்மையார் மாறவில்லை என்றும் அவர் நடிக்கிறார் என்றும் கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்.
500 டாஸ்மாக் கடைகளை மூடியதற்காகவும்
100 யுனிட் மின்சாரம் இலவசமாக தந்தந்தமைக்காகவும்
இன்னும் சிலர் அவர் திருந்திவிட்டதாக கூறுகின்றனர்.
ஆனால் ஒருபுறம் 100 யுனிட் மின்சாரம் தந்துவிட்டு
மறுபுறத்தில் பால் உட்பட்ட பொருட்களின் விலையை ஏற்றிவிட்டார்.
500 கடைகளை மூடினாலும் டாஸ்மாக் மொத்த விற்பனை குறையவில்லை.
ஜெயா அம்மையாரின் முதல் கையெழுத்து,
பேரறிவாளன் உட்பட்ட எழுவரின் விடுதலையாக இருந்திருந்தால்
அதிக காலம் சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளின் விடுதலைக்கு உத்தரவிட்டிருந்தால்
சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளின் விடுதலைக்கு உத்தரவிட்டிருந்தால்
அவர் மாறிவிட்டார் அல்லது திருந்திவிட்டார் என நம்பியிருக்கலாம்.
மாறாக அவர் திருந்தவும் இல்லை. மாறவும் இல்லை என்பதையே அவரின் நடத்தைகள் காட்டுகின்றன.