Tuesday, May 31, 2016

•இந்த சிறு பிள்ளைக்கு இருக்கும் உணர்வு ஏன் சம்பந்தர் அய்யாவுக்கு இல்லை?

•இந்த சிறு பிள்ளைக்கு இருக்கும் உணர்வு
ஏன் சம்பந்தர் அய்யாவுக்கு இல்லை?
முள்ளிவாய்க்காலில் கூத்து நடக்pறது
லண்டனில் ஜேசுதாசை அழைத்து கச்சேரி நடக்கிறது
சம்பந்தர் அய்யாவுக்கு அஞ்சலி செலுத்த நேரம் இல்லை
சுமந்திரனுக்கு அஞ்சலி செய்ய விருப்பம் இல்லை
ஆனால் இந்த சிறு பிள்ளையின் அஞ்சலி என்பது
தமிழ் இனத்தின் எதிர்கால நம்பிக்கை இது.
இவர் தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை
இவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இல்லை
இவர் எதிர்க்கட்சி தலைவரும் இல்லை
இந்த பிள்ளை ஒரு ஈழத் தமிழர் இல்லை
இந்த பிள்ளை ஈழ மண்ணில் பிறக்கவும் இல்லை
முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் இவரின் உறவினர்கள் இல்லை
இருப்பினும் இவர் சென்னையில் முள்ளிவாய்க்கால் அழிவிற்காக அஞ்சலி செய்கிறார்.
இவர் விரும்பியிருந்தால் வீட்டடில் இருந்து டிவி பார்த்திருக்கலாம்
இவர் நினைத்திருந்தால் சிநேகிதிகளுடன் சேர்ந்து வீடியோ கேம் விளையாடியிருக்கலாம்
இவர் குடும்பத்தவர்களுடன் சேர்ந்து படம் பார்க்க போயிருக்கலாம்.
ஆனால் அத்தனையும் விட்டுவிட்டு அஞ்சலி செலுத்த வந்திருப்பது
சம்பந்தர் அய்யாவின் முகத்தில் ஓங்கி குத்தியதாகவே எனக்கு தோன்றுகிறது.
உங்களுக்கு எப்படி தோன்றுகிறது நண்பர்களே?

No comments:

Post a Comment