Sunday, May 15, 2016

லண்டன் ஈஸ்ட்காம் நகரில் இடம்பெற்ற கந்தையா சிறீகணேசனுடனான சந்திப்பு நிகழ்வு

•லண்டன் ஈஸ்ட்காம் நகரில் இடம்பெற்ற
கந்தையா சிறீகணேசனுடனான சந்திப்பு நிகழ்வு
இன்று (03.05.2016) லண்டன் ஈஸ்ட்காம் நகரில் இலங்கையில் இருந்து வருகை தந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கந்தையா சிறிகணேசனுடன் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
பௌசர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு மாலை 6 மணியளவில் ஆரம்பித்து 8.00மணியளவில் முடிவுற்றது.
அரங்க செயற்பாட்டாளரும், எழுத்தாளரும் , யாழ் பல்கலைக்கழக ஆங்கில விரிவரையாளருமான கந்தையா சிறீகணேசன் அவர்கள் "இலங்கையின் சமகால கலை இலக்கிய சூழலும் சமூக நிலைமைகளும்" என்னும் தலைப்பில் தமது கருத்துகளை பகிர்ந்தளித்தார்.
அவர் தமது உரையாடலின் இறுதியில் கலந்துகொண்ட பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
குறிப்பு-
திடீர் அறிவிப்பு மற்றும் வேலை நாளாக இருந்தும் குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மேலும் வெறும் சம்பிரதாய சடங்கு சம்பவமாக இல்லாமல் காத்திரமான உரையாடல்களாக அமையும் வண்ணம் நிகழ்வை ஒழுங்கு செய்பவர்கள் செய்ய முயல வேண்டும்.

No comments:

Post a Comment