Sunday, May 15, 2016

•இவர்கள் பிழைக்க தெரியாதவர்கள் இல்லை!

•இவர்கள் பிழைக்க தெரியாதவர்கள் இல்லை!
செய்தி- லண்டன் வந்த ஜனாதிபதி மைத்திரிக்கு கொட்டும் மழையிலும் தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவர்கள் விரும்பியிருந்தால்,
•வேலைக்கு போய் ஆகக் குறைந்தது 50 பவுண்ஸ்( 10 ஆயிரம் ரூபா) உழைத்திருக்க முடியும்
•அல்லது தியேட்டருக்குப் போய் சூரியா படம் பார்த்திருக்க முடியும்
•அல்லது பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு சொப்பிங் போயிருக்க முடியும்
•அல்லது குடும்பத்துடன் கோயிலுக்கு போயிருக்க முடியும்
•அல்லது வீட்டில் இருந்துகொண்டு டிவி யில் சுப்பர் சிங்கர் பார்த்திருக்க முடியும்
.
•அல்லது தண்ணியடித்து பாபர்கியூ போட்டு சாப்பிட்டிருக்க முடியும்
இதையெல்லாம் செய்யாமல் கொட்டும் மழையில் ஜனாதிபதி மைத்திரிக்கு எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்?
இவர்கள் மற்றவர்கள் போல் பிழைக்க தெரியாதவர்களா?
இல்லை. நிச்சயமாக இல்லை.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நம்பிக்கையுடன் போராடுகிறார்கள்.
பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்தாலும் தமிழ் இனம் அடிமையாக உறங்கிக் கிடக்காது என்பதை காட்டுகிறார்கள்.
ஒரு சிலருக்கு எதிர்க்ட்சி தலைவர், மாகாண முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை கொடுத்தாலும் மொத்த தமிழ் இனத்தையும் வாங்க முடியாது என்பதை காட்டுகிறார்கள்.
புலத்தில் இருந்தாலும் தமது உறவுகளுக்காக போராட தயங்கமாட்டோம் என்பதைக் காட்டுகிறார்கள்.
நியாயம் கிடைக்கும் வரை தமிழன் ஓயமாட்டான் என்பதை முழு உலகிற்கும் காட்டுகிறார்கள்.
இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் இவர்கள் சொல்லியிருக்கும் செய்தி நிச்சயம் கனதியானது.
போராட்டம் இன்றேல் வாழ்க்கை இல்லை- தோழர் லெனின்.

No comments:

Post a Comment