Sunday, May 15, 2016

•"ராகுலே திரும்பிப்போ" என்று இவர்கள் கோசம் போடுவது எதற்காக?

•"ராகுலே திரும்பிப்போ" என்று இவர்கள் கோசம் போடுவது எதற்காக?
கொலைகார ராகுலே திரும்பிப் போ என்று இந்த சிறுவர்களும் பெண்களும் குரல் எழுப்புகிறார்கள்.
இவர்களுக்கு இருக்கும் இன உணர்வு கலைஞருக்கும் அவர் மகன் ஸ்டாலினுக்கும் ஏன் இல்லை?
ஈழத்தில் அழித்தாலும் தன் இனத்தை அழித்தவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டோம் என்று இந்த சிறுவர்கள் போராடுகிறார்கள்.
ஆனால் தமிழனை அழித்தாலும் பரவாயில்லை. தனக்கு பதவி கிடைத்தால் போதும் என்று கலைஞர் சோனியாவை வரவேற்கிறார்.
காங்கிரசுடன் கூட்டு சேரமாட்டோம் என்று கூறிய ஸ்டாலின் தமிழின அழிப்பை மேற்கொண்ட ராகுலுடன் ஒன்றாக மேடை ஏறுகிறார்.
பதவிக்காகவும் ஊழல் செய்வதற்காகவும கலைஞரும் ஸ்டாலினும் ; தமிழின அழிப்பை மேற்கொண்ட சோனியா ராகுலுடன் கூட்டு சேருகிறார்கள்.
ஆனால் இந்த சிறவர்களும் பெண்களும் தேர்தலுக்காக இன அழிப்பை மேற்கொண்டவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக அவர்களை திரும்பிப்போ என்று குரல் கொடுக்கிறார்கள்.
கலைஞருக்கு சில அமைச்சு பதவிகளை கொடுத்துவிட்டு தமிழ் இனத்தை அழித்துவிட முடியும் என கனவு கண்ட சோனியா கும்பலுக்கு இவர்களின் போராட்டம் முகத்தில் அறைந்துள்ளது.
கனிமொழி, ஸ்டாலின் கும்பலுக்கு 2ஜி ஊழல் பணத்தை கொடுத்துவிட்டு தமிழ் இனத்தை அழித்துவிட முடியும் என நினைத்த ராகுல் கும்பலுக்கு இவர்களுடைய போராட்டம் தகுந்த பாடத்தை புகட்டியுள்ளது.
ஒரு இனத்தை அழித்தால், அழித்தவர்களை அந்த இனம் ஒருபோதும் மறக்காது மன்னிக்காது என்பதை இவர்கள் உலகிற்கு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்
இவர்களது இந்த போராட்டம் ஈழத் தமிழர்களுக்கு ஆறுதல் தருகிறது. இவர்களது இந்த உணர்வு நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

No comments:

Post a Comment