Tuesday, May 31, 2016

•எல்லோரும் கல்வி கற்றால் தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைத்துவிடுமா?

•எல்லோரும் கல்வி கற்றால்
தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைத்துவிடுமா?
டெலோ இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் கணேஸ் வேலாயுதம் தமிழ் மக்கள் இனி ஆயுதப் போராட்டம் நடத்த தேவையில்லை என்றும் கல்வி மூலம் இஸ்ரேல் போன்ற வலிமையான நாட்டை உருவாக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
முதலாவது, கல்வி மூலம் தமிழ் மக்கள் மட்டுமல்ல எந்த மக்களும் விடுதலை பெற முடியாது
இரண்டாவது, இஸ்ரேல் கல்வி மூலம் விடுதலை பெறவும் இல்லை. கல்வி மூலம் வலிமையான நாடாக மாறவும் இல்லை
மூன்றாவது, கல்வி மூலம் எப்படி தமிழ் மக்கள் விடுதலை பெற முடியும் என்பதையும் அவர் விளக்கவில்லை
•தமிழ் மக்கள் அனைவரும் கல்வி கற்க விரும்பினாலும் தரப்படுத்தல் காரணமாக அனைவரும் உயர் கல்வி கற்கும் வாய்ப்பு இல்லை.
•கல்வி கற்ற அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்காது. எற்கனவே பல்லாயிரம் தமிழ் பட்டதாரிகள் வேலையின்றி இருக்கிறார்கள்.
போராட்டம் இன்றேல் வாழ்க்கை இல்லை என்று தோழர் லெனின் கூறினார். ஆனால் தமிழ் மக்கள் இனி போராட தேவையில்லை என்று கணேஸ் வேலாயுதம் கூறுகிறார்.
துப்பாக்கி குழாயில் இருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்று தோழர் மாவொ கூறினார். ஆனால் கல்வி கற்றால் அரசியல் அதிகாரம் பெறலாம் என்று கணேஸ் வேலாயுதம் எமக்கு போதிக்கிறார்.
கணேஸ் வேலாயுதம் 1983களில் எமது அமைப்பில் சேருவதற்காக என்னுடன் பலமுறை பேசினார். அப்போது அவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். எனவே படிப்பை குழப்பாமல் தொடர்ந்து படிக்கும்படி அவருக்கு ஆலோசனை கூறினேன். ஆனால் அவர் டெலொவில் போய் சேர்ந்துவிட்டார். அங்கேயும் சில காலம் இருந்துவிட்டு லண்டன் சென்றுவிட்டார்.
லண்டனில் பணம் சம்பாதித்துவிட்டு வந்து இப்போது கல்வி மூலம் விடுதலை பெறலாம் என தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கிறார்.
வறிய மாணவர்களுக்கு பென்சில் பேனை கொடுத்து தானும் ஒரு எம்.பி யாக கணேஸ் வேலாயுதம் கனவு காண்கிறார் போலும்.
ஆனால் இலவசங்களைக் கண்டு ஏமாறுவதற்கு இது தமிழகம் இல்லை. இலங்கை என்பதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் எந்த காரணங்களுக்காக போராடினார்களோ அதில் ஒன்றுகூட இதுவரை தீர்க்கப்படவில்லை.
ஆயுதம் எந்திப் போராடிய புலிகள் அழிக்கப்பட்டுள்ளார்களே யொழிய தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் இதுவரை வழங்கப்படவில்லை.
கோடீஸவரர்களான கணேஸ் வேலாயுதம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்களுக்கு போராட்டம் தேவையில்லாமல் இருக்கலாம்.
ஆனால் அவர்கள் “தமிழ் மக்கள் போராட தேவையில்லை. கல்வி கற்றால் விடுதலை பெற முடியும்” எனக் கூறுவது போராட்டத்தை திசை திருப்பும் செயலாகும்.
இந்தியாவின் கைக்கூலியாக மாறி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கிறார்கள்.
அவர்களின் இச் செயலானது மகிந்த வீசிய கொத்துக் குண்டுகளை விடப் பயங்கரமானது.

No comments:

Post a Comment