Tuesday, May 31, 2016

•ரோம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த மன்னர்

•ரோம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த மன்னர்
முள்ளிவாய்க்காலில் மக்கள் அஞ்சலி செலுத்துகின்றார்கள்
பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்துகின்றார்கள்
புலம்பெயர் நாடுகளில் உறவுகள் அஞ்சலி செலுத்துகின்றார்கள்.
தமிழ்நாட்டில் தமிழ் உணர்வாளர்கள் அஞ்சலி செலுத்துகின்றார்கள்
மலேசியா சிங்கப்பூர் நாடுகளிலும் அஞ்சலி செலுத்துகின்றார்கள்
மொரிசியஸ்தீவிலும்கூட அஞ்சலி செலுத்துகின்றார்கள்.
ஆனால் தமிழர்களின் தலைவர் சம்பந்தர் அய்யா,
சுதந்திரதின நிகழ்வில் சிங்கக்கொடி பிடிக்கிறார்
இந்தியா சென்று கும்பமேளாவில் கலந்துகொள்கிறார்
பின் ஒடி வந்து விஜயராஜபக்ச மகன் திருமணத்தில் கலந்துகொள்கிறார்.
ஆனால் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வில்தான் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை
கைதிகள் விடுதலை பற்றி பேசச் சென்ற இளைஞர்களை கவனியாது அசால்டாக பத்திரிகை படிக்கிறார்.
அப்புறம் தன்னிடம் திறப்பு இல்லை என்று நக்கல் அடிக்கிறார்.
ஆனால் பிக்குகள் பேச சென்றால் உட்காரவைத்து கவனமாக கேட்கிறார்.
இவரைப் பார்க்கும்போது ரோம் பற்றியெரியும்பொது அது பற்றி கவலைகொள்ளாது பிடில் வாசித்த மன்னர் கதைதான் நினைவுக்கு வருகிறது.
யாவற்றையும் மக்கள் கவனமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
அடுத்த தேர்தலில் நிச்சயம் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

No comments:

Post a Comment