Sunday, May 15, 2016

இவர்கள், வவுனியாவில் மேதின கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

இவர்கள்,
வவுனியாவில் மேதின கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
பின்னர் மக்கள் கொடுத்த உணவை வழியில் ஓமந்தை ரயில்நிலையத்தில் உண்ணுகிறார்கள்.
அதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் மேதினவிழாவில் கலந்து கொள்கிறார்கள்.
இவர்களிடம் பாராளுமன்ற பதவி இல்லை.
இவர்களிடம் மாகாணசபை பதவி இல்லை
இவர்களிடம் பிரதேசசபை பதவி இல்லை
இவர்களிடம் சொகுசு வாகனம்கூட இல்லை
என்றாலும் இவர்கள்தான்
மக்களுடன் சேர்ந்து வாழ்கிறார்கள்
மக்களுடன் சேர்ந்து உழைக்கிறார்கள்
மக்களுடன் சேர்ந்து உறங்குகிறார்கள்.
இவர்கள் இந்தியாவில் வாழ்வதில்லை
இவர்கள் இந்தியாhவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதில்லை
அதனாலதான்; யாழ் இந்திய தூதருக்கும் இவர்களைப் பிடிப்தில்லை
இவர்கள்தான்,
சுன்னாகம் குடிநீருக்காவும் போராடுகிறார்கள்
சம்பூர் மக்களுக்காகவும் பொராடுகிறார்கள்
இராணுவ பாலியல் வல்லுறவுகளுக்கு எதிராகவும் போராடுகிறார்கள்.
மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் இவர்களை
மக்கள் ஏன் இனங்கண்டு ஆதரிப்பதில்லை?

No comments:

Post a Comment