Tuesday, May 31, 2016

•அற்பனுக்கு காலம் வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்.

•அற்பனுக்கு காலம் வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்.
அமெரிக்க வல்லரசின் ஜனாதிபதி ஒபாமா தன் கையாலே தனக்கு குடை பிடிக்கிறார்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் தன் கையாலே தனக்கு குடை பிடிக்கிறார்.
இவர்களுக்கு மற்றவர்கள் யாரும் குடை பிடிப்பதில்லை.
ஆனால் நமது தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களை விட உயர்ந்தவர்கள்.
இவர்கள் ஆண்டவனுக்கு நிகரானவர்கள். ஏனெனில் எமது ஊர்களில் ஆண்டவனுக்கு மட்டுமே பக்தர்கள் குடை பிடிப்பார்கள்.
சரவனன் எம.பி
இவர் ஒரு கையால் வேட்டியை தூக்கி பிடிக்கிறார். மறுகையால் குடை பிடிக்கலாம்தானே? ஆனால் அவர் மறு கையால் 6 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை இறக்குமதி செய்வதால் இன்னொருவர் குடை பிடிக்க வேண்டியுள்ளது .
சிறீதரன் எம்.பி
இவர் பாராளுமன்ற உறுப்பினராகும் முன்னர் இதே மண்ணில் வாத்தியாக இருந்தவர். சாதாரணமாக சயிக்கிளில் திரிந்தவர். இப்போது எம்.பி யானவுடன் நாட்டாண்மை பாணியில் அவருக்கும் மற்றவர்கள் குடை பிடிக்க வேண்டியுள்ளது.
மட்டக்களப்பு எம்.பி
பதிவியேற்ற 10 மாதம்கூட ஆகவில்லை. அவருக்கும் தன் கையால் தனக்கு குடை பிடிக்க முடியாத நிலை. இன்னொருவர் அவருக்க குடை பிடிக்க வேண்டிய நிலை
எதற்கு இந்த வெட்டிப் பந்தா?
எப்போது இவர்கள் மக்களுக்கு சேவை செய்யப் போகிறார்கள்?

No comments:

Post a Comment