Monday, August 31, 2020

இவர்கள் ஏன் நடக்கிறார்கள்?

•இவர்கள் ஏன் நடக்கிறார்கள்? இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் கொரோனோ என்று வீட்டுக்குள் இருந்திருக்கலாம். அல்லது, இவர்கள் விரும்பியிருந்தால் நண்பர்களுடன் பாபர்கியூ சாப்பிட்டு மகிழ்ந்திருக்கலாம். அல்லது இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் குடுமபத்தினருடனும் பிள்ளைகளுடனும் நேரத்தை செலவு செய்திருக்கலாம். அல்லது இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்திருக்கலாம். ஆனால் இவர்கள் இதையெல்லாம் விட்டிட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி ஒட்டாவா செல்கிறார்கள். உண்மையில் ஒட்டாவில் சென்று கேட்பது என்றால் இவர்கள் காரிலோ அல்லது ரயில் மூலமோ சென்றிருக்கலாம். ஆனால் இவர்களோ கனடாவில் பிறம்டனில் இருந்து நடந்து ஒட்டாவா செல்கிறார்கள். வழியெங்கும் தமிழ் மக்களுக்கு எற்பட்ட இன அழிப்பை மக்களுக்கு கூறிச் செல்கிறார்கள். இதன் மூலம் மக்கள் ஆதரவை திரட்டுகிறார்கள். மக்களின் ஆதரவின் மூலமே தமிழருக்கான நீதியைப் பெற முடியும் என்பதை உணர்ந்து செயற்படுகிறார்கள். சரியான பாதையில்தான் நடக்கிறார்கள். எனவே அவர்கள் தமக்குரிய இலக்கை மக்கள் ஆதரவுடன் அடைந்தே தீருவார்கள்;. கோத்தபாயா ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் பயத்தில் போராட்டத்தை கைவிட்டுவிடுவார்கள் என சிலர் நக்கலாக கூறினார்கள். ஆனால் தாயகத்தில்கூட இரண்டு இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதுதவிர தமிழ்நாட்டில் இலங்கை தூதரக முற்றுகை, டிவிட்டரில் கவனயீர்ப்பு என பலவகைப் போராட்டங்கள். இவ்வாறு தமிழ் மக்கள் போராட்டம் நடத்தியிருப்பது மட்டுமல்ல உலகில் பல இடங்களில் ஒன்றுபட்டு போராட ஆரம்பித்திருப்பது நம்பிக்கை தருகிறது. ஆம். போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை. Image may contain: one or more people, people standing, sky and outdoor

சீமான் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்

•சீமான் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள் செங்கொடி வீர வணக்க நிகழ்வில் தோழர் தமிழரசன் அவர்களின் தாயாரை மேடையேற்றி கௌரவித்த “நாம்தமிழர்” கட்சி தலைவர் சீமான் அவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். மக்கள் மத்தியில் தனது மகன் தமிழரசன் நினைவு கூரப்படுவது நிச்சயம் அத் தாயாருக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும். தனது மகன் கொள்ளைக்காரன் என பழி சுமத்தப்பட்டு பொலிசாரால் கொல்லப்பட்டுவிட்டானே என்ற ஏக்கம் அத் தாயை இத்தனை நாள் வாட்டியிருக்கும். குறிப்பு - இப் பதிவு 25.08.2014யன்று எழுதப்பட்டது. செப் -1 தோழர் தமிழரசன் நினைவு தினத்தை முன்னிட்டு மீள்பதிவு செய்கிறேன். Image may contain: 1 person, sitting

எம்மால் மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை!!

•எம்மால் மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை!! “உலகத் தொழிலார்களே ஒன்று சேருங்கள்” என்று காரல் மார்க்ஸ் சொல்லுமுன்னரே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கூறிய இனம் தமிழ் இனம். வந்தாரை வாழ வைத்த அந்த இனம் கைபர் கணவாய் வழியே வந்த திருட்டு கூட்டத்திடம் இரந்து கேட்டது. 17 பேர் தீக்குளித்து இறந்தும் கேட்டனர். தன் கைக்கெட்டும் தூரத்தில் தன் தொப்புள் கொடி உறவுகள் ஒன்றரை லட்சம்பேர் இறந்தபோது தாய்த் தமிழகம் செய்வதறியாது திகைத்து நின்றது. ஆனாலும் அந்த வெளிவிவகார அமைச்சர் இரங்க மறுத்தார். அவர் கொஞ்சம்கூட இரக்கம் இன்றி “போர் நிறுத்தம் செய்யுமாறு அண்டை நாட்டை நாம் வலியுறுத்த முடியாது, அது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகிவிடும்” என்றார். ஆனால் யுத்தத்தை இலங்கை இந்திய அரசுகள் சேர்ந்தே செய்தன. தமிழ் இனப் படுகொலையை சேர்ந்தே செய்தன என்ற உண்மைகள் இப்போது வெளிவந்துவிட்டன. அதுமட்டுமன்றி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்த விடயத்திலும் இந்திய அரசு சார்பில் இவருக்கும் நேரடிப்பங்கு உண்டு. பல்லாயிரம் ஈழத்தமிழ் மக்களின் மரணங்களுக்கு காரணமானவர். பல கோடி தமிழக தமிழ் மக்களின் கோரிக்கையை மதிக்காதவர். இன்று இவர் மரணமடைந்துவிட்டார் எனில் தமிழனாகிய எம்மால் எப்படி வருத்தப்பட முடியும்? ஏனெனில் எம்மால் இவரை மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை. Image may contain: one or more people

சங்க இலக்கியங்களில் ஒரு வீட்டில் மரண ஓலம் ஒலிக்கையில்

சங்க இலக்கியங்களில் ஒரு வீட்டில் மரண ஓலம் ஒலிக்கையில் இன்னொரு வீட்டில் மங்கள ஒசை கேட்டது" - நன்றி கலைஞர் கருணாநிதி. இன்று தமிழர் மனங்களில் மகிழ்ச்சி இது கைபர் கணவாய் வழியே வந்தவர்களுக்கு தெரியட்டும்! Image may contain: 3 people, including மைக்கேல் ராஜ் நே and Prabakaran Praba, people standing

மரணம் ஒருவரின் தவறுகளை மன்னித்துவிடுமா?

•மரணம் ஒருவரின் தவறுகளை மன்னித்துவிடுமா? எந்தளவுதான் அயோக்கியனாக இருந்தாலும் அவன் மரணமடைந்துவிட்டால் அவனது அயோக்கியத்தனத்தை விமர்சிக்க கூடாது என்று ஒரு மரபு எம்மத்தியில் இருக்கிறது. இது தொடர்பாக கவிஞர் தாமரை கூறிய கருத்துகள் கவனிக்கத்தக்கவை. பாராட்டுக்குரியவை. “சாவதினாலேயே ஒருவர் 'புனித'ராகி விடமாட்டார். செத்தவர்களை விமர்சிப்பதில்லை என்பது தமிழர் நன்மரபு ! எனினும் மரபுகளுக்கும் காலாவதி உண்டு ; காலத்துக்கேற்ற மாற்றம் உண்டு. செத்தாலும் அயோக்கியன் அயோக்கியனே என்று சொல்லப் பழகுவோம். செத்தாலும் அயோக்கியன் புனிதனாக முடியாது என்பதைப் புது மரபாக்குவோம்” என்று கவிஞர் தாமரை கூறியுள்ளார். Image may contain: Kavignar Thamarai

Saturday, August 29, 2020

சுமந்திரனுக்கு எதிராக திறக்காத வாயும்

சுமந்திரனுக்கு எதிராக திறக்காத வாயும் சுமந்திரனுக்கு எதிராக உயராத கையும் அடிமையாக இருக்க மட்டுமே அருகதையானது! சுமந்திரன் பற்றி ஒரு படிப்பறிவற்ற பாமரத் தமிழன் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது, “சுமந்திரனுக்கு வாய் சரியில்லை. ஒரு உண்மையான தமிழன் வாயில் இருந்து இவர் கூறும் வார்த்தைகள் வராது” ஒரு படிப்பறிவற்ற பாமரத் தமிழன் இவ்வாறு கூறுவதில் இருந்து என்ன தெரிகிறது? பாமர மக்கள் வரை சுமந்திரன் மீதான எதிர்ப்பு உணர்வு பரவிவிட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும். ஆனாலும் சுமந்திரன் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என தொடர்ந்து கூறிவருவது எப்படி? தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக கூறுகிறாரா அல்லது இலங்கை இந்திய அரசுகள் தன்னை தோல்வியடைய விடமாட்டாது என்ற நம்பிக்கையில் கூறுகிறாரா? தான் தேர்தலில் தோல்வி அடைந்தால் வேறு வழியில் பதவி பெற்றுக்கொள்ள மாட்டேன் என சுமந்திரன் கூறியிருக்கிறார். ஆனால் சுமந்திரனை நம்ப முடியாது. ஏனெனில் தீர்வு வரவில்லை எனில் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியவர் இதுவரை ராஜினாமா செய்யவில்லை. எனவே தேர்தலில் தோல்வியுற்றாலும் அவர் ஏதோவொரு வழியில் பதவியை பெறவே முயற்சி செய்வார். பதவி இல்லாமல் அவரால் இருக்க முடியாது. ஆதலால் தேர்தலுக்கு பின்னரும் சுமந்திரன் தனது துரோக அரசியலை தொடரத்தான் போகிறார். அதனால் அவருக்கு எதிரான எதிர்ப்பு அரசியலும் தொடரத்தான் போகிறது. இது அவருடைய மரணம் வரை நிகழப் போகிறது! Image may contain: 2 people, including Anthonippillai Reginoldraj, people standing

உதம்சிங்கிற்கு ஒரு நியாயம் தாணுவிற்கு இன்னொரு நியாயம்

உதம்சிங்கிற்கு ஒரு நியாயம் தாணுவிற்கு இன்னொரு நியாயம் இதுதான் இந்திய அரசின் நியாயமா? பஞ்சாபில் 400 இந்தியர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட டயர் என்னும் ஆங்கிலேய அதிகாரியை இங்கிலாந்து சென்று சுட்டுக் கொன்றவர் உதம்சிங. 1940ல் இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்ட உதம்சிங் உடல் எச்சங்களை 1974ம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி இந்தியாவுக்கு எடுத்துவந்து அரச மரியாதையுடன் அடக்கம் செய்தார். இந்திய பிரதமர் , ஜனாதிபதி உட்பட பலரும் உதம்சிங் உடலுக்கு மரியாதை செலுத்தி அவரை மாபெரும் தியாகி என புகழாரம் சூட்டினார்கள். இலங்கையில் 7000 தமிழர்களைக்கொன்ற, 800 பெண்களை பாலியல் வல்லுறவு செய்த இந்திய ராணுவத்தை அனுப்பிய ராஜீவ்காந்தியை இந்தியா சென்று கொன்றவர் தானு. ஆனால் உதம்சிங்கை மாபெரும் தியாகி என்று கௌரவிக்கும் இந்திய அரசு தானுவை பயங்கரவாதி என்கிறது. "என் சகோதரியின் கற்பு பறிபோகும்போது என்னால் நிச்சயமாக அகிம்சையைக் கடைப்பிடிக்க முடியாது" என்று இந்தியாவின் தாத்தா காந்தி கூறினார். ஆனால் 800 பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டமைக்கு தானு என்ற பெண் ராஜீவை பழிவாங்கினால் அதை பயங்கரவாதம் என இந்திய அரசு அழைக்கிறது. இந்திரா காந்தியின் கொலையை அடுத்து இந்தியாவெங்கும் 5000 அப்பாவி சீக்கியர் கொல்லப்பட்டார்கள். அதற்கு பிரதமர் மோடி சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் 7000 அப்பாவி தமிழர்கள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டமைக்கு இதுவரை மன்னிப்பு கோராதது மட்டுமல்ல ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கிறது. சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரியதுடன் அவர்களுக்கு ஆட்சியிலும் பிரதமர் பதவி வழங்கப்படுகிறது. ஆனால் தமிழர்களிடம் மன்னிப்பு கோராதது மட்டுமல்ல தொடர்ந்தும் தமிழினம் நசுக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? தமிழினம் அடிமையாக இருப்பதால்தானே இந்திய அரசு அதன் முதுகில் ஏறி சவாரி செய்கிறது! தமிழினம் விடுதலை பெற்று சுதந்திரமாக இருந்தால் இந்நிலை வந்திருக்குமா? உதம்சிங் நினைவை மட்டுமல்ல இனி தானுவின் நினைவையும் போற்றுவோம்! Image may contain: 1 person, beard, text that says "இந்திய சுதந்திர போராட்டத்தின் மாவீரன் உத்தம்சிங் நினைவு தினம் இன்று ஜூலை 31 ஜாலியன் வாலாபா க் படுகொலைக்காக ஜெனரல் டயரை காத்திருந்து லண்டனில் சுட்டுத்தள்ளினார் உத்தம் சிங்." Image may contain: 1 person, close-up

செய்தி - முதற் கடற்கரும்புலி அங்கையற்கண்ணி அவர்களின் தந்தை மரணம் அடைந்துள்ளார்.

செய்தி - முதற் கடற்கரும்புலி அங்கையற்கண்ணி அவர்களின் தந்தை மரணம் அடைந்துள்ளார். தன் மகள் கரும்பலியாக இறந்துவிட்டாள் என்ற செய்தி அறிந்ததும் நிச்சயம் ஒரு தந்தையாக இவரும் கவலைப்பட்டிருப்பார். ஆனாலும் தன் மகள் தமிழ் இனத்தின் விடுதலைக்காகவே மரணம் அடைந்தாள் என தன்னைத்தானே ஆறுதல் படுத்தியிருப்பார். அதேவேளை, இவ்வாறு இறந்தவர்களை வன்முறையாளர்கள் என்றும் இவர்களது வன்முறையும் விசாரிக்கப்பட வேண்டும் என சுமந்திரன் இப்போது கூறிவருவது நிச்சயம் இந்த தந்தைக்கு தாங்க முடியாத வேதனையை கொடுத்திருக்கும். சுமந்திரன் போன்று தானும் தன் மகளை வெளிநாட்டு அனுப்பி படிக்க வைக்காதது தவறோ என்று கூட இந்த தந்தை தன் இறுதிக்காலத்தில் சிந்தித்திருக்கக் கூடும். ஒரு தந்தை தன் கண் முன்னே மகளை இழப்பது கொடுமை என்றால் அதைவிடக் கொடுமையானது மகளின் இழப்பை இன்னொருவர் இகழ்வதை கேட்க வேண்டி நேருவது. சுமந்திரன் இவ்வாறு பல போராளிகளின் பெற்றோருக்கும் உறவினருக்கும் தாங்க முடியாத வலியைக் கொடுத்து வருகிறார். அவர்களின் சாபம் சுமந்திரனை நிச்சயம் பொசுக்காமல் விடாது. குறிப்பு - அங்கையற்கண்ணி அவர்களின் தந்தைக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள். Image may contain: 1 person

சுமந்திரன் மட்டுமல்ல, சம்பந்தரையும் சேர்த்தே நிராகரிக்கும்பட

சுமந்திரன் மட்டுமல்ல, சம்பந்தரையும் சேர்த்தே நிராகரிக்கும்படி ஈழத் தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் எத்தனையோ வாய்ப்புகளை வழங்கியாயிற்று இவர்களுக்கும் இவர்கள் சார்ந்த தமிழ்க் கூட்டமைப்புக்கும்.... உருப்படியாக ஒன்றைக் கூட சாதிக்காததோடு அல்லாமல், இன அழிப்பு என்பதைக்கூட போர்க் குற்றமாகக் குறைக்க முயன்ற புண்ணியவான் இந்த சுமந்திரன்... ஒழுங்காக ஒரு சர்வதேச விசாரணைக் குழுவை அமைக்க வைக்கத் துப்பில்லை, மீண்டும் தேர்தலுக்கு எந்த முகத்தைக் கொண்டு வருகிறார்கள் வாக்குக் கேட்டு ??? . சிங்களரைக் கூட நம்பி விடலாம், இந்தத் தமிழ்த் துரோகிகளை நம்பக் கூடாது. தமிழ் மக்கள் புதிய தளத்தை நோக்கி நகர ஆரம்பிக்க வேண்டும். போதும் மக்களே நம்பி ஏமாந்தது !. இவர்கள் தோற்பதால் நமக்குப் புதிய நட்டம் எதுவுமில்லையல்லவா ??? ஆனால் அடைவதற்கு ஏதேனும் புதிய இலாபம் இருக்கக் கூடும். தேர்தலில் இவர்கள் கட்சிக்கு மரண அடி விழுந்தால், தமிழ் மக்களிடையே புதிய அலை ஏற்படும் !. புதிய நிலை ஏற்படும் !. - கவிஞர் தாமரை. Image may contain: Kavignar Thamarai, close-up

ஒருவரை ஏமாற்ற வேண்டும் எனில் முதலில் அவர் ஆசையை தூண்ட வேண்டும் என்பார்கள்.

ஒருவரை ஏமாற்ற வேண்டும் எனில் முதலில் அவர் ஆசையை தூண்ட வேண்டும் என்பார்கள். அதுபோல் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு வருடத்தில் தீர்வு என்ற ஆசையை காட்டி சம்பந்தர் ஐயா தூண்டுகிறார். கடந்த முறை தீபாவளிக்கு தீர்வு என்றார். இம்முறை ஒரு வருடத்தில் அரசியல் அமைப்பு உருவாகும் என்கிறார். ஆனால் சம்பந்தர் ஐயா கூறுவதுபோல் ஒரு வருடத்தில் தீர்வு வர வாய்ப்பு இல்லை. தேவையானால் ஒரு வருடத்தில் அவரது செத்தவீட்டுச் செய்தி வர வாய்ப்பு இருக்கிறது. Image may contain: 1 person

ஐபிஎல் கிரிக்கட் ஸ்பான்சர் சீனா என்பது

•ஐபிஎல் கிரிக்கட் ஸ்பான்சர் சீனா என்பது ஈழத்து தாய்லாமாவுக்கு தெரியுமா? இந்திய மத்திய அரசின் அனுமதியோடு இந்திய ஐபிஎல் கிரிக்கட் செம்டம்பர் 19ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் கிரிக்கட்டின் ஸ்பான்சர் கடந்த வருடம் போன்று இம்முறையும் சீன நிறுவனம் ஒன்றிற்கே வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசை நம்பி சீனாவின் தொலைக்காட்சி பெட்டிகளை வீதியில் போட்டு உடைத்த சங்கிகளை நினைத்தால்தான் பாவமாய் இருக்கிறது. அதைவிட பரிதாபத்திற்குரியவர்கள் இந்திய சீன மோதல் ஆரம்பித்துவிட்டது என நம்பி விக்கினேஸ்வரனை ஈழத்து தாய்லாமாவாக அறிவித்தவர்கள். Image may contain: Nalli Thaya, beard Image may contain: 1 person, beard

மக்களுக்கு கொரோனோ பாதிப்பு எற்பட்டபோத

மக்களுக்கு கொரோனோ பாதிப்பு எற்பட்டபோது "கை தட்டுங்கள்" "விளக்கு பிடியுங்கள்" என்டாங்கள். மாட்டு மூத்திரம் குடித்தால் கொரோனோ வராது என்றுவேற சொன்னாங்கள். இப்போது தங்களுக்கு கொரோனோ என்றதும் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி ஓடிப் போய் மருத்துவமனையில் படுத்துவிட்டாங்கள். உண்மையில் இவங்களுக்கு கொரோனோவா அல்லது மக்களின் கோபத்தை திசை திருப்ப நாடகம் போடுறாங்களான்னு தெரியவில்லை. சரி. பரவாயில்லை. ஆனால் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கடா நீங்கள் மாட்டு மூத்திரம் குடித்தீங்களா? இல்லையா? Image may contain: 2 people, people sitting and meme, text that says "நான் கண்டுபிடிச்ச கொரோனா தடுப்பு மருந்தை சாப்பிடுறீங்களா..? எதுக்கு ஒரேயடியா மேல போய் சேரவா..?"

தமிழ் இனம் விடுதலை பெறவேண்டும்

தமிழ் இனம் விடுதலை பெறவேண்டும் என்ற எமது இலக்கு வெற்றி பெற வேண்டுமாயின் அதனை அடைவதற்குரிய பாதை எது என்பது குறித்தும் நாம் தெளிவாக கண்டறிய வேண்டும். இன்று இரண்டு பாதைகள் எம்முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதை. இன்னொன்று அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையாகும். ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதையை பலாத்கார முறையென்றும் அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையை சாத்வீக பாதையென்றும் இன்னொரு வடிவத்தில் சிலர் வரையறை செய்கிறார்கள். புலிகள் இயக்கம் வெற்றி பெறவில்லை என்பதை வைத்து ஆயுதப் போராட்டம் பயனற்றது என இன்று சிலர் போதிக்க முற்படுகின்றனர். புலிகள் மௌனித்தது தங்களது ஆயுதங்களையே ஒழிய ஆயுதப் போராட்டத்தை அல்ல. 1948ம் ஆண்டு முதல் பாராளுமன்ற பாதை மூலம் எந்த ஒரு தீர்வையும் பெற முடியாத நிலையில் தமிழரசுக்கட்சி 1962ம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த அகிம்சைப் போராட்டத்தை வெகு இலகுவாக பலாத்காரத்தை பாவித்து இலங்கை அரசால் முறியடிக்க முடிந்தது. அகிம்சையை போதித்த தமிழரசுக்கட்சி தலைவர்களால் இலங்கை அரசின் பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்க வேண்டும் என்ற தர்க்கத்தை முன்வைக்க முடியவில்லை. இருந்தபோதும் இவர்கள் பின்னால் சென்ற தமிழ் இளைஞர்கள் அந்த உண்மையைக் கண்டு கொண்டார்கள். அவர்கள் ஆயுதம் தாங்கி அரச பலாத்காரத்திற்கு தகுந்த பதில் அளித்தார்கள். இதனை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். மக்கள் தமது பூரண ஆதரவை இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வழங்கினார்கள். இவ்வாறே இலங்கை அரசின் பலாத்காரத்திற்கு எதிராக தமிழ் மக்களின் எதிர்ப்பலாத்காரம் உருவாகியது. மக்களை ஏமாற்றவும் புரட்சியின் கவனத்தில் இருந்து மக்களை திசைதிருப்பவுமே முதலாளித்துவ நாடுகளில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பேணுகின்றனர். இதன்மூலம் இந் நாடுகளில் உண்மையான அதிகாரம் ஆயுதம் தாங்கிய படைகளின் கையில்தான் இருக்கின்றது என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது. பாராளுமன்ற வழி மூலம் பேச்சுவாhத்தைகளினால் தீர்வு பெறும்படி கூறுவதன் மூலம் ஆயுதப் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துகின்றனர். எல்லா நாடுகளிலும் ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கத்தை அடக்கிவைத்திருப்பது பலாத்காரத்தின் மூலமே. ஆயுதம் தாங்கிய படைகள் உள்ளடங்கிய ஒரு அரசு இயந்திரத்தை இதற்காக உருவாக்கி வைத்திருக்கின்றனர். ஆளும் வர்க்கத்தின் காவல் நாய்களான ஆயுதப் படைகளின் கைகளில் இருக்கும் துப்பாக்கி இல்லாமல் ஒரு நிமிடமேனும் ஆளும் வர்க்கத்தால் ஆட்சி நடத்த முடியாது. அதனால்தான் “அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழாயில் இருந்து பிறக்கின்றது” என்று தோழர் மாசேதுங் கூறினார். இதன் அடிப்படையில்தான் ஆளும் வர்க்கத்தின் பலாத்காரத்திற்கு எதிராக ஆளப்படும் வர்க்கம் எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்காமல் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்று புரட்சியாளர்கள் கூறிவருகிறார்கள். கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். ஆயுதம் ஏந்தியவன் ஆயுதத்தால் அழிவான். இது கடவுள் செயல் என்று சாத்வீக வாதிகள் போதிக்கின்றனர். ஆனால் அவர்களின் கடவுள்கள்கூட ஆயுதத்தைப் பாவித்தே அதர்மத்தை ஒழித்ததாக உள்ள கதைகளை இவர்கள் மறந்துவிடுகின்றனர். இந்துசமயப் புராணக் கதைகளை எடுத்துப் பார்த்தாலும் அதர்மத்தை அழித்து தர்மம் வெல்வதற்கு பலாத்காரமே காரணமாய் இருப்பதைக் காணலாம். இந்துமத சிவன் கையில் சூலாயுதம் இருக்கிறது. கிருஸ்ணன் கையில் சக்கராயுதம் இருக்கிறது. முருகன் கையில் வேலாயுதம் இருக்கிறது. காளி கையில் கத்தி இருக்கிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கடந்த 71 வருட தேர்தல் வரலாற்றில் இருந்து நாம் தெரிந்துகொண்டது தேர்தல் மூலம் ஆளும் வர்க்கத்தில் ஆட்களை மாற்ற முடியுமேயொழிய ஆளும் வர்க்கத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதே. லெனின் ஒரு தடவை கூறியது- “பூர்சுவா வர்க்க நுகத்தடிகளின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையை பெற வேண்டும், அதற்கு பிறகுதான் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்று கயவர்கள் அல்லது முட்டாள்கள்தான் சிந்திப்பார்கள். வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்கத்தின் தலைமை ஆகியவற்றின் இடத்தில் பழைய முறையிலான பழைய அதிகாரமுடைய வாக்களிப்பை வைப்பது முட்டாள்தனத்தின் சிகரமாகும். மாறாக பாட்டாளி வர்க்கம் அதன் பக்கத்திற்கு மக்களை வென்றெடுக்க பூர்சுவா வர்க்கத்தை முதலில் தூக்கியெறிந்துவிட்டு அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்” என்று கூறினார். பாராளுமன்ற தேர்ல்களை பகிஸ்கரிகும்படி கோரிய இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் சண்முகதாசன் தமது அனுபவங்களில் இருந்து கூறியது “ இன்றுள்ள நவகாலனிச பொருளாதார கட்டுக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே அவை செயற்படும். எனவே அடக்கு முறையான பூர்சுவாவர்க்க அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது”. எனவே தேர்தலைப் பகிஸ்கரிப்போம்! Image may contain: 1 person

“இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வை படுகொலைகள்!

•“இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வை படுகொலைகள்! 1968 மார்ச் 16 யன்று அமெரிக்க ராணுவம் வியட்நாமில் 347 அப்பாவி வியட்நாம் மக்களை சுட்டுக் கொன்றது. இது மைலாய் படுகொலைகள் (My Lai Massacre ) என அழைக்கப்படுகிறது. 1989 ஆகஸ்ட் 2 யன்று வல்வெட்டித்துறையில் அமைதிப்படை என வந்த இந்திய ராணுவம் தமிழ் மக்களை படுகொலை செய்தது. இப் படுகொலைகள் “இந்தியன் மைலாய்” என அழைக்கப்படுகிறது. •64 பொது மக்கள் கொல்லப்பட்டனர் •100 க்கு மேற்பட்டோர் காய மடைந்தனர் •50 க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். •சுமார் 200 வீடுகள் தீயிட்டு கொழுத்தப்பட்டன. •40 க்கு மேற்பட்ட கடைகள் எரிக்கப்பட்டன. •150 க்கு மேற்பட்ட மீன்பிடி வள்ளங்கள் சேதமாக்கப்பட்டன. •வல்வை நூலகம் முற்றாக எரித்து சேதமாக்கப்பட்டது. இத் தாக்குதல்கள் ஆகஸ்ட் 2, 3. 4 திகதிகளில் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. இறந்தவர்களின் உடல்களை எடுத்து அடக்கம் செய்யக்கூட இந்திய ராணுவம் அனுமதிக்கவில்லை. வியட்நாம் கொலைகளுக்காக 26 அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு வழக்கு தாக்கல் செய்தது. அதில் ஒரு அதிகாரிக்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. வல்வெட்டித்துறையில் படுகொலை செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வல்வைப் படுகொலைகளுக்காக எந்தவொரு இந்திய ராணுவ அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. சீக்கிய படுகொலைகளுக்காக சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி, வல்வை படுகொலைகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை. மன்னிப்பு கோர விட்டாலும் பரவாயில்லை. ஆனால் இறந்த தம் உறவுகளை வல்வெட்டித்துறை மக்கள் நினைவுகூர்வதைக்கூட யாழ் இந்திய தூதர் மிரட்டி தடுக்கிறார். என்னே கொடுமை இது? பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்பது போல் நியாயம் வழங்காவிட்டாலும் பரவாயில்லை, நினைவு கூர்வதையாவது அனுமதிக்கும்படி கெஞ்ச வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். வியட்நாம் படுகொலைக்காக அனுதாபப்பட்ட சர்வதேசம்கூட வல்வைப் படுகொலைகளையிட்டு கவனம் கொள்ளவில்லை. Image may contain: plant, tree and outdoor

தோழர் பிரடெரிக் எங்கெல்சின் நினைவு நாள் இன்று .

தோழர் பிரடெரிக் எங்கெல்சின் நினைவு நாள் இன்று . தோழர் எங்கெல்ஸ் இல்லையேல் கால் மார்க்ஸ் இல்லை. மாக்சியமும் இல்லை என்று தோழர் லெனின் கூறியிருந்தார். ஆனால் தோழர் எங்கெல்ஸ் “அனைத்து பெருமைகளையும் தன் நண்பன் கால் மார்க்ஸ்ற்கே உரியது” என்று அடக்கத்துடன் கூறுகிறார். அத்தகைய மாபெரும் ஆசான் தோழர் எங்கெல்ஸ் நினைவு தினம் இன்று ஆகும். உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு. கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு. இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். மான்செசுடரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார். அங்கிருந்து ஜெர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார். 1849-இல் ஜெர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் நடத்தும் கார்ல்மார்க்சுக்கு உதவுவதையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றுவிட்டு வணிக அடிமைத்தனத்திலிருந்து தன்னையே விடுவித்துக்கொண்டார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார். நேரடியாக பொருளாதார உதவி செய்வதோடு மட்டுமல்ல, நியுயார்க் டெய்லி டிரிபூனல் பத்திரிகைக்கு மார்க்ஸ் பெயரால் கட்டுரைகளை எழுதி அதன்முலம் மார்க்சுக்கு பணம் கிடைக்கச் செய்தார். தன்னலம் கருதாத எங்கல்சின் இடையறாத நிதி உதவி மட்டும் இல்லையேல் மார்க்ஸ் மூலதனத்தை முடித்திருககமாட்டார், என்று லெனின் எங்கல்ஸின் உதவி பற்றி கூறுகிறார். மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார். தன்னுடைய தனித்தன்மையை அதிகம் வெளிக்காட்டாவிட்டாலும் மிகப்பெரிய அறிஞர் இவர் என்பதை அனைவரும் அறிவர். மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார். எங்கெல்சு மிகப்பெரிய அறிஞர்; தத்துவஞானி;. எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். மார்க்சின் நெருங்கிய நண்பர் எங்கெல்சு 1895-ஆம் ஆண்டு ஆகத்து 5-ஆம் நாள் இறந்தார். Image may contain: 1 person

ஒருபுறம் கொரோனோவினால் மக்கள் இறக்கின்றனர்.

ஒருபுறம் கொரோனோவினால் மக்கள் இறக்கின்றனர். இன்னொருபுறம் வேலைவாய்ப்பு இன்றி மக்கள் பட்டினியால் இறக்கின்றனர். இந்தியாவில் கடந்த வருடம் மட்டும் பன்னிரண்டாயிரம் படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் இந்திய அரசு பல ஏக்கர் நிலத்தில் 1200 கோடி ரூபா செலவில் ராமர் கோவில் கட்டுகிறது. ஏனெனில், உழைத்து உழைத்து உருக்குலைந்த மக்களை மேலே எழும்பவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களாக கடவுளும் மதமும் இருக்கின்றன. Image may contain: one or more people, people sitting and indoor

ராமருக்கு மாற்று ராவணன் இல்லை!

ராமருக்கு மாற்று ராவணன் இல்லை! மோடி அரசு ராமரை முன்னிறுத்துவதற்கு பதிலடியாக சில தமிழர்கள் ராவணனை முன்னிறுத்த முயலுகின்றனர். ராமருக்கு பதிலாக ராவணனை முன்னிறுத்துவது ஒருபோதும் உரிய மாற்று இல்லை. மாறாக இரண்டுமே உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைக்காக எழும்பவிடாமல் அழுத்திப்பிடிக்கும் ஆபத்தான ஆயுதங்களே. எனவே இந்த இரண்டு பிற்போக்குதனங்களையும் எதிர்த்து அம்பலப்படுத்த வேண்டியது முற்போக்கு சக்திகளின் கடமையாகும். Image may contain: one or more people

1200 கோடி ரூபாவில் கட்டப்படும் ராமர் தன்னை காப்பாற்றுவார் என மோடி நம்பவில்லை.

1200 கோடி ரூபாவில் கட்டப்படும் ராமர் தன்னை காப்பாற்றுவார் என மோடி நம்பவில்லை. மாறாக நூறு ரூபா மாஸ்கே தன்னை கொரோனோவில் இருந்து காப்பாற்றும் என மோடி நம்புகிறார். என்னதான் தன்னை ஆன்மீகவாதியாக காட்டிக் கொண்டாலும் நடைமுறையில் மோடியும் கடவுளை நம்பாத நாத்திகவாதியே. Image may contain: one or more people and people standing

•எது நடக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டதோ

•எது நடக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டதோ அது நன்றாகவே நடந்து விட்டது! சுமந்திரன் தனது தோல்வியை ஒத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் தனது கட்சியின் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனாலும் தனது கட்சியின் தோல்விக்கு தானே காரணம் என்பதையும் அவர் எற்றுக்கொள்ளவில்லை. மாறாக கட்சியின் செயற் திறன் அற்ற நிலையே தோல்விக்கு காரணம் என்கிறார். இவர் கேட்டவுடன் இவரைக் கணக்கு கேட்ட மகிளிர் அணிப் பொறுப்பாளர் மீது வழக்கத்திற்கு மாறாக கட்சி உடன் நடவடிக்கை எடுத்தது. இருந்தும் கட்சி செயற் திறன் அற்றது என்கிறார். யாழ் மாவட்டத்தில் அதிகளவு விருப்பு வாக்கு பெற்றது மகிந்த கட்சியை சேர்ந்த அங்கஐன் ராமநாதன். மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு விருப்பு வாக்கு பெற்றது மகிந்த ஆதரவு பிள்ளையான். சுமந்திரனும் சம்பந்தரும் மானஸ்தர்களாக இருந்தால் இதற்காகவே தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும். சரி. பரவாயில்லை. தேர்தல் நேர்மையாக நடைபெற்றது என்று தேர்தல் திணைக்களம் கருதினால் பின்வரும் மூன்று கேள்விகளுக்கு பதில் தர வேண்டும். (1) யாழ் மாவட்டத்தை விட அதிகளவு வாக்குகள் கொண்ட மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ் மாவட்ட முடிவு அறிவிக்க தாமதமானது ஏன்? (2) மூன்று வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒரு வீடியோவில் சுமந்திரனுக்காக தனது முடிவு மாற்றப்பட்டதாக சித்தார்த்தன் விசனப்படுகிறார். இது ஏன் நடந்தது? (3) இன்னொரு வீடியோவில் சசிகலா ரவிராஜ் அழுது கொண்டு வெளியேறுகிறார். அவரது மகள் “அப்பாவைக் கொன்ற மாதிரி எங்களையும் கொன்று விடுவார்கள். வா அம்மா போய்விடுவோம்” என்கிறார் அழுதபடியே. தனது வெற்றி சுமந்திரனுக்காக மாற்றப்பட்டு விட்டது என சசிகலா ரவிராஜ் கூறுகிறார். இது ஏன் நடந்தது? மாலை 6 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்டு இரவு 12 மணிவரை முடிவு அறிவிக்காமல் தாமதப்படுத்திய வேளையில்தான் இவை நடைபெற்றன. யாரோ ஒருவருக்காகவே இது நடை பெற்றுள்ளது என்று எழும் நியாயமான சந்தேகத்தை தேர்தல் திணைக்களம் போக்குமா? குறிப்பு - இந்த தேர்தலில் சுமந்திரனை மட்டுமல்ல சம்பந்தர் ஐயாவையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளார்கள் என்பதே உண்மை. Image may contain: 2 people, including Lingadurai K, close-up

•பார்வதி அம்மாள் !

•பார்வதி அம்மாள் ! பிரபாகரனின் தாயார். அவர் எந்த அரசியல் செயற்பாடும் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் வயதான அந்த தாயாரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவரின் தாயாரும் பயங்கரவாதி. அதனால் அவரையும் கைது செய்ததாக காரணம் சொன்னார்கள். அதெப்படி தாயாரை பயங்கரவாதி என்று கூறமுடியும்? என நாம் இங்கு கேட்க வரவில்லை. நாம் கேட்க விரும்புவது அதேபோல் ஜேவிபி தலைவர் ரோகண விஜேயவீராவையும் பயங்கரவாதி என்றார்களே. ஆனால் அவருடைய தாய் தந்தையரை ஏன் பயங்கரவாதிகள் என்று கூறவில்லை? அதையும்விட பிரபாகரனின் 12 வயது மகனைக்கூட பயங்கரவாதி என்று கொன்றார்கள். ஆனால் விஜேயவீராவின் 6 குழந்தைகளையும் பராமரித்து படிக்க வைத்தார்கள். ஆனால் கைது செய்த பிரபாகரனின் தாயாருக்கு உரிய மருத்துவ வசதிகூட வழங்காமல் அடைத்து வைத்திருந்தார்கள். இறுதியாக அந்த தாயார் சிகிச்சைக்காக சென்னை சென்றபோது கலைஞர் கருணாநிதி அவரை வயதான நோயாளி என்றும் பார்க்காமல் திருப்பி அனுப்பினார். இத்தனை கொடுமைகளும் பார்வதி அம்மாள் ஒரு தமிழர் என்பதால்தானே நடைபெற்றது? ஒருவேளை அவர் சிங்கள இனத்திலோ அல்லது வேறு இனத்திலோ பிறந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என கேள்வி எழுவது தவறா நண்பர்களே? குறிப்பு – விஜேயவீராவின் குடும்பமும் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என நாம் கோரவில்லை. மாறாக பிரபாகரன் குடும்பம் கொல்லப்பட்டமைக்கு அவர்கள் தமிழர்கள் என்பதே காரணம் என்பதை சுட்டிக் காட்டுவதே இந்த பதிவின் நோக்கம். Image may contain: 1 person

•அற்புதங்கள் நிகழ்த்தும் ஆபிரகாம் சுமந்திரன்!

•அற்புதங்கள் நிகழ்த்தும் ஆபிரகாம் சுமந்திரன்! சிலுவையில் அறையப்பட்ட இயேசுபிரான்கூட மூன்றாம்நாள்தான் உயிர்த்தெழுந்தார் என்கிறார்கள். ஆனால் ஐந்தாம் நிலையில் இருந்த சுமந்திரன் ஒரே இரவில் இரண்டாவது நிலைக்கு வந்து அற்புதம் நிகழ்த்திக் காட்டியுள்ளார். இது எப்படி நிகழ்ந்தது என்று சசிகலா ரவிராஜ் மட்டுமல்ல சுமந்திரனின் ஆதரவாளர்கள்கூட திகைத்து நிற்கிறார்கள். இங்கு வேடிக்கை என்னவெனில் “சுமந்திரன் நேர்மையானவர். அவர் மோசடி செய்யவில்லை” என்று அவரின் விசுவாசிகளால்கூட கூற முடியவில்லை. மாறாக, இலங்கை தேர்தல் திணைக்களம் நேர்மையானது. அதில் மோசடி செய்ய முடியாது என்றே கூற முற்படுகிறார்கள். சுமந்திரன்கூட, 75 கள்ள வாக்கு தானே போட்டேன் என்று கூறிய சிறீதரனை பக்கத்தில் வைத்துக்கொண்டு தேர்தலில் மோசடி செய்ய முடியாது என்று சிரிக்காமல் கூறுகிறார். சரி. பரவாயில்லை. “30 வோட்டுடன் ஈபிடிபி 7 எம்.பி களைப் பெற்றது” என்று இதுவரை கிண்டலாக கூறிவந்தவர்கள் இப்போது இலஙகை தேர்தலில் மோசடி செய்ய முடியாது என்று கூற முற்படுகிறார்கள். இதுகூடப் பரவாயில்லை. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மோசடி செய்து வென்றார் என்று எழுதிய ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார் இலங்கை தேர்தலில் யாரும் மோசடி செய்ய முடியாது என்று. என்னத்தைச் சொல்ல. எல்லோருக்கும் தலையில் மூளையை வைத்த கடவுள் இவனுகளுக்கு மட்டும் முழங்காலில் மூளையை வைத்து விட்டார் போல் இருக்கிறது. எல்லாத்தையும் தலை கீழாகவே சொல்லுறான்கள். சுமந்திரன் அவர்களே! சசிகலா ரவிராஜ் தேர்தலுக்கு புதிது. அவருக்கு வாக்கு எண்ணிக்கை நடைமுறை தெரியாது என்கிறீர்கள். சரி. ஏற்றுக்கொள்கிறோம். சித்தார்த்தனும் புதிதா? அவருக்கும் தேர்தல் நடைமுறைகள் தெரியாதா? உங்கள் பேட்டியில் “நான் தொடர்ந்து இரண்டாம் நிலையில் இருந்தேன்” என்று முதலில் கூறியுள்ளீர்கள். அதன்பின் “ எங்கட ஆட்களே நான் தோத்து விட்டேன் என்றார்கள். அதற்கு நான் அப்படியா சரி என்று கூறினேன்” என்று கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் இரண்டாம் நிலையில் உள்ள உங்களை தோத்துவிட்டதாக எப்படி உங்கட ஆட்களே கூறினார்கள்? அதை நீங்கள் ஏன் ஏற்றுக் கொண்டீர்கள்? Image may contain: 1 person

2020 தேர்தல் தமிழ் மக்கள் கூறுவது என்ன?

•2020 தேர்தல் தமிழ் மக்கள் கூறுவது என்ன? 2020 தேர்தல் முடிவுகள் தமிழத்;தேசியத்தை தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று சிலர் கூற முற்படுகின்றனர். இது தவறு. ஏனெனில், முதலாவது, இந்த தேர்தல் தமிழ்தேசியத்தை முன்வைத்து நடக்கவில்லை. அத்துடன் போட்டியிட்ட யாருமே தமிழ் தேசியத்தை மறுப்பதாகவும் கூறவில்லை. எனவே தமிழ்த் தேசியத்தை தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டார்கள் எனக் கூறுவது தவறு. இரண்டாவது, தமிழ் மக்கள் அபிவிருத்திக்காக வாக்களித்துள்ளார்கள் என்று கூறுவதும் தவறு. மாறாக, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்பதை நிராகரித்துள்ளார்கள் என்பதே உண்மை. எனவே, தமிழ் மக்களுக்கான தீர்வை அனைவரும் ஒன்றுபட்டு பெற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பம் என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் இந்த தேர்தலில் ஏற்பட்டுள்ள மிக முக்கிய கவனிக்கத்தக்க மாற்றம் என்னவெனில் வழக்கத்திற்கு மாறாக தமிழக அமைப்புகள் சில தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்தமையாகும். இது ஆதரவு நிலையில் இருந்து சேர்ந்து பங்களித்தல் என்ற அடுத்த கட்ட நிலைக்கு தமிழ் இனம் நகருகின்றது என்பதைக் காட்டுகிறது. என்னதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மகிந்த ராஜபக்சா ஆட்சி அமைத்தாலும் அவர் இம்முறை இலங்கை அரசைவிட நான்கு மடங்கு பலமுள்ள ஒன்றிணைந்த தமிழர்களை சந்திக்கப் போகின்றார். 2020 தேர்தல் தமிழ் இனத்திற்கு இத்தகைய நம்பிக்கையை ஊட்டுவதகாவே இருக்கின்றது. Image may contain: one or more people and text

ஈழத் தமிழருக்கு சீனா உதவுமா?

ஈழத் தமிழருக்கு சீனா உதவுமா? விக்னேஸ்வரனை ஈழத்து தாய்லாமாக பயன்படுத்தி இந்திய உதவியை பெற வேண்டும் என ஒரு ஆய்வாளர் கூறினார். அதற்கு பதிலடியாக சிலர் “ஈழத் தமிழர்கள் இனி சீனாவுடன் பேச வேண்டும். சீனாவின் உதவியை பெற வேண்டும்” என எழுதுகின்றனர். இரண்டுமே தவறான கருத்துகள். ஏனெனில் இந்தியாவும் சீனாவும் இலங்கையில் ஒருமித்தே செயற்படுகின்றன. இரண்டுமே ஈழத் தமிழருக்கு எதிராகவே செயற்படுகின்றன. 1971ல் ஜே.விபி புரட்சி செய்தபோது அதனை அடக்க இந்தியா ராணுவத்தை அனுப்பியது. சீனா ராணுவ தளபாடங்களை வழங்கி உதவியது. அதன்பின்னர் இந்திய அரசு 1987ல் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்தபோது அதனை ஆதரித்து கருத்து வெளியிட்ட முதல் நாடு சீனா ஆகும். அதன் பின்னர் இந்திய ராணுவத்துடன் புலிகள் யுத்தம் செய்த வேளையில்கூட சீனா புலிகளுக்கு உதவவில்லை. மாறாக இலங்கை அரசுக்கே உதவி செய்தது. அதன் பின்னர் 2009ல் இலங்கை அரசும் இந்திய அரசும் சேர்ந்து தமிழ் மக்களையும் புலிகளையும் அழித்தபோதும் சீனா இலங்கை அரசுக்கே உதவி செய்தது. அதுமட்டுமல்ல இன்றுவரை ஜ.நா வில் இலங்கை அரசை இந்திய அரசு மட்டுமல்ல சீனா அரசும் சேர்ந்தே காப்பாற்றி வருகின்றன. இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் முதலில் இந்தியாவிடமே கேட்கப்பட்டது. இந்தியா வேண்டாம் என்ற பிறகே இந்திய அனுமதியுடனே சீனாவுக்கு வழங்கப்பட்டது. அதே அம்பாந்தோட்டையில் இந்திய தூதரகம் அமைய அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அம்பாந்தோட்டை விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் ஒருபகுதி கடன் அடிப்படையில் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்போது அக் கடனுக்குரிய வட்டியைக்கூட கட்ட முடியாமல் இந்திய அரசிடம் இலங்கை அரசு உதவி கோருகிறது. எல்லாவற்றையும்விட இதுவரை இலங்கையில் சீனா செய்த முதலீட்டைவிட இந்தியாவிலேதான் அதிக முதலீட்டை செய்துள்ளது. எனவே இலங்கைக்காக இந்தியாவுடன் சீனா ஒருபோதும் முரண்படாது என்ற நிலையில் அதுவும் ஈழத் தமிழருக்கு சீனா உதவும் என நம்புவது முட்டாள்தனம் ஆகும். எனவே சீனாவின் உதவியை ஈழத் தமிழர் பெற வேண்டும் என்று கூறுவதால் ஈழத் தமிழருக்கு எந்த நன்மையும் பயக்காது. மாறாக ஈழத் தமிழரை சீனாவின் கைக்கூலிகள் என்று ஒதுக்குவதற்கே இந்திய அரசுக்கு உதவும். எல்லாவற்iறுயும்வி;ட உருவாகி வரும் ஈழ மற்றும் தமிழக தமிழர்களின் ஜக்கியத்தைக் குழப்புவதற்கே இது இந்திய அரசுக்கு பெரிதும் உதவும். Image may contain: 1 person

•அபிவிருத்தி என்றால் என்ன?

•அபிவிருத்தி என்றால் என்ன? எம்.பி யாகி அமைச்சுப் பதவி பெறுவதன் மூலம் அபிவிருத்தி அடைய முடியுமென்றால் இன்று மிகவும் அபிவிருத்தி அடைந்த பிரதேசங்களாக சிங்களப்; பிரதேசங்கள் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் சிங்கள பிரதிநிதிகளே அதிகளவு அமைச்சு பதவிகளை இதுவரை கொண்டிருக்கிறார்கள். இனியும் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையவில்லை என்பதே உண்மை. உண்மை இவ்வாறு இருக்கும்போது அமைச்சு பதவி பெறுவதால் எப்படி தமிழ் பிரதேசம் அபிவிருத்தி அடைய முடியும் என சிலர் நம்புகிறார்கள்? றோட்டு போடுவது, சிலருக்கு வேலை வாய்ப்பு பெறுவதுதான் அபிவிருத்தி என்றால் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே இவை எல்லாம் கிடைத்தனவே. பேசாமல் அவர்களின் கீழ் அடிமையாக இருந்திருக்கலாமே? அபிவிருத்தி முக்கியமே. ஆனால் அதைச் செய்வதற்கு அதிகாரம் வேண்டும். எனவே அதிகாரப் பரவலாக்கம் செய்யாதவரை தமிழ் பிரதேசம் ஒருபோதும் உண்மையான அபிவிருத்தியை அடைய முடியாது. 1948வரை ஆங்கிலேயர் மட்டுமே எம்மை ஆக்கிரமித்து சுரண்டினார்கள். இப்போது வடக்கு கிழக்கில் இந்தியா சுரண்டுகிறது. தெற்கில் சீனா சுரண்டுகிறது. இதற்கிடையில் தன்னுடன் ஒப்பந்தம் செய் என்று அமெரிக்கா மிரட்டுகிறது. கடன் சுமையோ வருடா வருடம் அதிகரிக்கிறது. பெற்ற கடனுக்குரிய வட்டியைக் கட்டுவதற்கே கடன் வாங்க வேண்டிய நிலையில் இலங்கை அரசு இருக்கிறது. இந்த நிலையில் இலங்கை அரசுடன் சேர்ந்தால் அபிவிருத்தி அடைய முடியும் என பதவி வெறி பிடித்த சுயநலவாதிகளைவிட வேறு யார் நினைப்பார்கள்? Image may contain: 1 person, standing

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளுக்காக

•ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளுக்காக தேர்தலில் மோசடிகள் இடம் பெற்றுள்ளனவா? தனது விருப்பு வாக்குகள் சுமந்திரனுக்காக மோசடி செய்யப்பட்டதாக சசிகலா ரவிராஜ் கூறினார். சசிகலா ரவிராஜ் அரசியலுக்கு புதிது. அவருக்கு தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரங்கள் தெரியாது என்று சுமந்திரன் நக்கலாக கூறினார். இப்போது தோழர் செந்தில்வேல் அவர்கள் தமது சுயேட்சைக் குழுவின் வாக்குகள் மோசடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். தோழர் செந்தில்வேல் அரசியலுக்கு புதிது என்று சுமந்திரனால் கூறமுடியாது. ஏனெனில் அவர் சுமந்திரனைவிட அதிகளவான தேர்தல் அனுபவங்களைக் கொண்டிருப்பவர். தேர்தலில் மோசடி செய்ய முடியாது என்று சுமந்திரனின் விசுவாசிகள் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், “இம்முறை தேர்தலில் தெளிவான தேர்தல் மோசடி நடந்துள்ளது” என்று ஐக்கியதேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமா கூறியுள்ளார். வழக்கமாக லட்சக்கணக்கில் விருப்பு வாக்கு பெற்றுவந்த தனக்கு இம் முறை கிடைத்த விருப்பு வாக்கு மோசடி நடந்துள்ளதைக் காட்டுகிறது என்கிறார் அவர். இவை எல்லாவற்றையும்விட கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட அவர்கள் “ விகிதாசார தேர்தல் முறைமையில் எந்தவொரு ஆசனமும் இன்றி ஜதேக கட்சி தோல்வியுற்றது என்பது ஆச்சரியமளிக்கிறது” என்று கூறுகிறார். இவ்வாறு சிங்கள பகுதிகளில்கூட தேர்தல் மோசடி பற்றிய குற்றச்சாட்டுகள், சந்தேகங்கள் எழுகின்றன. ஆனால், கள்ள வோட்டு போடுவது மட்டும்தான் தேர்தல் மோசடி என்று நம்புகின்ற ஒரு முட்டாள் கூட்டம் எமக்கு போதிக்கிறது தேர்தலில் மோசடிகள் செய்ய முடியாது என்று. Image may contain: one or more people and people sitting

அண்ணன் பிரதமர்

அண்ணன் பிரதமர் தம்பி ஜனாதிபதி 22 குடும்ப உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள். கேட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் பெற்றாயிற்று. இத்தனையும் கொடுத்த சிங்கள மக்களுக்கே இவர்கள் எதுவும் செய்யப் போவதில்லை. அப்படியிருக்க இவர்கள் தமிழ் மக்களுக்கும் ஏதும் செய்வாhகள்; என்று எப்படி சம்பந்தர் ஐயா நம்புகிறார்? எதைப் பெற முடியும் என்று நம்பி அரசுடன் சேர்ந்து பயணிக்க தயார் என்று ஐயா கூறுகிறார். தேவையானால் தனக்கு சொகுசு பங்களா பெற முடியும். சுமந்திரனுக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெற முடியும். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு ம - - ம் பெற முடியாது! Image may contain: one or more people

இவர்கள் அனைவரும் ஈழத் தமிழர்கள்

இவர்கள் அனைவரும் ஈழத் தமிழர்கள் சிலர் மகிந்த ராஜபக்சா தேர்தல் வெற்றியை கிளிநொச்சி சந்தியில் கேக் வெட்டி வெடி கொழுத்தி கொண்டாடுகிறார்கள். சிலர் அதே மகிந்த ராஜபக்சாவின் இனப் படுகொலைக்கு நீதி கோரி ஜெனிவா நோக்கி செல்கிறார்கள். உரிமை என்பது பிச்சை அல்ல இரந்து பெறுவதற்கு. அது போராடிப் பெறுவது என்பதை உணர்ந்தபடியால் இந்த சிலர் கொட்டும் பனியிலும் நீதி கோரி செல்கிறார்கள். ஆனால் வன்னியில் கேக் வெட்டி கொண்டாடினவர்கள் மகிந்த ராஜபக்சாவிடம் இரந்து கேட்டால் நிச்சயம் பிச்சை கிடைக்கும் என நம்புகிறார்கள். எந்த வன்னியில் ஒரு லட்சத்து இருபதாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்களோ அந்த வன்னியில் கொலை செய்த மகிந்தவின் வெற்றியை எப்படி இந்த சில தமிழர்கள் கொண்டாடுகின்றனர் என ஆச்சரியம் வரலாம். இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தலைவர்களான சம்பந்தர் சுமந்திரன் போன்றவர்கள் இதுவரை செய்த துரோக அரசியலே இதற்கு காரணம் ஆகும். இப்போது பிரச்சனை என்னவென்றால், பிச்சை கிடைக்காது என்பதை 5 வருடத்தில் இந்த வெடி கொளுத்தி கொண்டாடியவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என நம்பலாம். ஆனால் 50 வருடம் சென்றாலும் சம்பந்தரும் சுமந்திரனும் நிசச்யம் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். குறிப்பு - சம்பந்தரும் சுமந்திரனும் மகிந்தவுடன் சேர்ந்து பயணிக்க தயார் என்று கூறி மகிந்தவிடம் சொகுசு பங்களாவும் சிங்கள பொலிஸ் பாதுகாப்பும் பெறும்போது இந்த கேக் வெட்டி கொண்டாடியவர்களை எப்படி விமர்சிப்பது? Image may contain: outdoor Image may contain: 6 people, including Yuvendra Rasiah and Parththipan Balakrishnan

கோத்தபாயா ராஜபக்சா – ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு

கோத்தபாயா ராஜபக்சா – ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு மகிந்த ராஜபக்சா – பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் சமல் ராஜபக்சா – நீர்ப்பாசன அமைச்சர் நாமல் ராஜபக்சா – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு சஷிந்திர ராஜபக்சா – உயர் தொழில்நுட்பம் -அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சு பசில் ராஜபக்சா – அமைச்சர் பதவிக்கு நிகரான ஜனாதிபதி செயலணியின் தலைவர் இவ்வாறு இலங்கை திறைசேரியின் 70% மான நிதி மூலங்கள் ராஜபக்சா குடும்பத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதைவிட மாத்தறை மாவட்ட அபிவிருத்திசபைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் மகிந்தராஜபக்சாவின் தங்கையின் மகன். இலங்கை வரலாற்றில் ஒரு குடும்பம் இத்தனை பொறுப்புகளை இப்போதுதான் பெற்றிருக்கிறது. அதேவேளை தமிழ் மற்றும் முஸ்லிம் மலையக மக்களுக்கு உரிய அமைச்சுகள் வழங்கப்படவில்லை. ஒரு குடும்பத்தின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தை சந்திக்க வேண்டிய நிலைக்கு நாடு நகர்கிறது. அது நாடு தழுவிய பாரிய எதிர்ப்பு போராட்டங்களை மிக விரைவில் சந்திக்கப் போகிறது. Image may contain: 4 people, including Parththipan Balakrishnan, close-up

•செத்துவிடுங்கள் ஐயா!

•செத்துவிடுங்கள் ஐயா! மகிந்தவை மைத்திரி பிரதமராக நியமித்தபோது மகிந்தவே உங்களிடம் நேரிடையாக ஆதரவு கேட்டார். ஆனால் நீங்கள் ஆதரவு வழங்கவில்லை. அதன்பின்பு கோத்தபாயா ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கேட்டபோது நீங்கள் வழங்கவில்லை. மாறாக கோத்தா வந்தால் மீண்டும் வெள்ளை வான் வரும்; என்றீர்கள். இப்போது அவர்கள் யாருடைய தயவும் இன்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இருக்கும்போது வலிய சென்று ஆதரவு தருவதாக கூறுகின்றீர்கள். அவர்கள் ஆதரவு கேட்காமலேயே சேர்ந்து பயணிக்க தயார் என்று அறிக்கை விடுகின்றீர்கள். இவ்வாறு கூறுவதன் மூலம் எதனைப் பெற முடியும் என நம்புகிறீர்கள்? ஜனாதிபதி தேர்தலில் தமிழர்தான் தீர்மானிக்கும் சக்தி என்றீர்கள். ஆனால் அவர்கள் தனிச் சிங்கள வோட்டில் ஜனாதிபதியாகிக் காட்டியுள்ளனர். அதன்பின் விகிதாசாரத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற முடியாது என்றீர்கள். இப்போது அவர்கள் அதையும் செய்து காட்டியுள்ளார்கள். இருந்தும் சேர்ந்து பயணிக்க தயார் என்று வலிய கூறுகின்றீர்கள். இதன்மூலம் உங்கள் சொகுசு பங்களாவை தக்க வைப்பதுதான் நோக்கம் என்றால் அதைவிட தயவு செய்து செத்துவிடுங்கள் ஐயா. Image may contain: 1 person, text that says "හිරු TV G DIN Capital NEWS IB தமிழ் orupaper.com அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார் சம்மந்தர்!"

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை!

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை! சர்வதேசத்துடன் சேர்ந்து பயணிக்க தயார் என்றார் இந்தியாவுடன் சேர்ந்து பயணிக்க தயார் என்றார் மகிந்த அரசுடன் சேர்ந்து பயணிக்க தயார் என்றார் இப்ப கடைசியாக, தமிழ்தேசிய தரப்புகளுடன் இணைந்து செயற்படத் தயார் என்கிறார். ஒரு சொகுசு பங்களாவைச தக்க வைக்க இன்னும் யார் யாரோடு எல்லாம் சேர்ந்து பயணிக்கத் தயார் என்று சொல்லித் தொலைக்கப் போறாரோ தெரியவில்லை. பிளீஸ்! யாராவது மகிந்த ராஜபக்சாவிடம் பேசி இந்த சொகுசு பங்களாவை பறிக்க வேண்டாம் என கூறுங்கள். இந்த கொசுவின் தொல்லை தாங்க முடியவில்லை! Image may contain: one or more people and text

நீங்கள் அனைத்து மலர்களையும் நசுக்கி விடலாம்

நீங்கள் அனைத்து மலர்களையும் நசுக்கி விடலாம். ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது! நீங்கள் செஞ்சோலையில் அப்பாவி குழந்தைகளை கொன்றுவிட்டு பயங்கரவாத ஒழிப்பு என்று கொட்டமடிக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் அடிமைத்தனத்திற்கு எதிராக எழுச்சி கொள்வதை உங்களால் ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஒரு புழுகூட நசுக்கும்போது துடித்து எழுகிறது. தமிழ் இனம் மட்டும் நசுக்கும்போது அடிமையாகவே கிடந்துவிடுமா? குறிப்பு - 2006 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ம் திகதி இலங்கை விமானப்படை குண்டு வீச்சில் 62 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். Image may contain: 31 people, including ஏழைகளின் தோழன், வீரத் தமிழச்சி பிரதீபா வீரத் தமிழச்சி and கோ.தியாகராஜன் கஞ்சமலைப்பட்டி, indoor, text that says "கண்ணீர் காணிக்கை செஞ்சோலையில் உதிர்ந்த மலர்கள் நினைவில்...."

அவர்கள் வந்தார்கள்

அவர்கள் வந்தார்கள் “நானும் இந்து நீயும் இந்து” என்றார்கள் “உன் கடவுள் முருகன்கூட எம் கடவுள்தான்” என்றார்கள் அப்படியென்றால் வட மாநிலங்களில் ஏன் முருகனுக்கு கோவில் இல்லை என்று கேட்டால் அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. சரி. பரவாயில்லை. ரஸ்சியாக்காரன் கோரோனோவுக்கு மருந்து கண்டு பிடித்துவிட்டேன் என்கிறான். நீங்கள் என்ன பண்ணுகிறீர்கள் என்று கேட்டால், நாங்கள் அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டிக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். சரி எப்படியோ தொலைந்து போகட்டும் என்று பேசாமல் இருந்தால் மெதுவாக எமது வேலைகளை எல்லாம் பறிக்கிறார்கள். இப்போது எமது கேள்வி என்னவென்றால், தமிழன் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டம் போவதற்கே இ.பாஸ் வேண்டும். அப்படியிருக்க இந்த இந்திக்காரன் எல்லாம் எப்படியடா திருச்சி வந்து சேர்ந்தாங்க? இவங்களுக்கு இ.பாஸ் கொடுத்தவன் யாரடா? Image may contain: Dhalapathi Raj, text that says "திருச்சி ரயில்வே பணிமனையில் 500 பேரில் 450 பேர் வடமாநிலத்தவர்.. திருநாவுக்கரசர் எம்பி கடும் கண்டனம்"

இவரும் கொழும்பில் பல காலமாக வாழ்ந்து வருகிறார்.

இவரும் கொழும்பில் பல காலமாக வாழ்ந்து வருகிறார். ஆனால் இவர் கொழும்பில் வாழ்வதை தான் செய்த பாக்கியம் என்று கூறியதில்லை. இவரும் சட்டம் படித்தவர். ஆனால் இவர் நடந்தது இனப்படுகொலை அல்ல என்று கூறவில்லை. மாறாக, நடந்தது இனப்படுகொலை என்று வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இப்போதுகூட இவர் பாராளுமன்றம் போகுமுன்னர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தியிருப்பதை சிலர் கிண்டல் அடிக்கின்றனர். இது ஒரு சீப்பான விளம்பரம் என்கின்றனர். இது ஒரு போலி நடிப்பு என்கின்றனர். இவர் சிறை வாசலில் அஞ்சலி செய்வது பொருத்தமாக இருக்கும் என நீதிபதியாக இருந்தபோது வழங்கிய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி கிண்டல் அடிக்கின்றனர். சரி. அப்படியே இருக்கட்டும். ஆனால் நடிப்பக்காககூட அல்லது போலியாகக்கூட சுமந்திரன் மரணித்தவர்களை நினைவு கூர்வதில்லையே. அது ஏன்? இந்த முள்ளிவாய்க்கால் அஞ்சலி மூலம் இரண்டு செய்திகளை விக்கினேஸ்வரன் கூறியிருக்கிறார். முதலாவது, நடந்த இனப்படுகொலையை தான் மறக்கமாட்டேன் என்பதை இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களுக்கு கூறியிருக்கிறார். இரண்டாவது, இனப்படுகொலையை மறந்து ஆட்சியாளர்களுடன் ஒட்டி உறவாடும் சம்பந்தர் சுமந்திரன் வகையறாக்களுக்கான எச்சரிக்கிறார். நல்லதொரு ஆரம்பம். பாராட்டுவோம். Image may contain: 7 people, people standing and outdoor

ஜெர்மனி முழுமையாக அழியும் வரை

ஜெர்மனி முழுமையாக அழியும் வரை ஹிட்லர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் தேசபக்தியால்தான் என ஜெர்மன் மக்கள் நம்பினார்கள் அதே போலத்தான் ...... கோத்தபாயா எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தமது நலனுக்காகவே என சிங்கள மக்கள் நம்புகிறார்கள் ஆனால், ஹிட்லரை ஜெர்மனி மக்கள் இனங்கண்டு கொண்டதுபோல் கோத்தா கும்பலையும் சிங்கள மக்கள் இனங்கண்டு கொள்வார்கள். இது உறுதி. Image may contain: 1 person, standing and suit, text that says "2020 President GOTLER" Image may contain: one or more people and text

நரி ஊருக்குள் வந்ததே தப்பு

•நரி ஊருக்குள் வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருது! நான் கள்ள வாக்கினால்தான் வென்றேன் என நாளை முதல் யாராவது சொன்னால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என சுமந்திரன் மிரட்டியுள்ளார். சந்தேகமற்ற ஒரு வெற்றியை பெற முடியவில்லை. ஆனால் மிரட்டலுக்கு குறைச்சல் இல்லை. சட்டமும் நீதிமன்றமும் இவரது சட்டைப் பைக்குள் இருப்பதாக நினைப்பு. சிங்கள அதிரடிப் பொலிஸ் பாதுகாப்பு இல்லாமல் ஒண்டுக்கு போகக்கூட தைரியம் இல்லை. ஆனால் வாய் வீரத்திற்கு குறைவில்லை. தலை இருக்கும்வரை தலையிடி இருக்கும். சுமந்திரன் இருக்கும்வரை அவரது துரோக அரசியலும் இருக்கும். அவர் ஒருபோதும் திருந்தப் போவதில்லை. என்னதான் நரிக்கு நாய் வேசம் போட்டாலும் நரி நன்றியுடன் இருக்காது. அதுக்கு குழி பறிக்க மட்டும்தான் தெரியும். அதுபோலவே தமிழ்மக்கள் சுமந்திரனுக்கு என்னதான் பதவியைக் கொடுத்தாலும் அவருக்கு துரோகம் செய்ய மட்டுமே தெரியும். Image may contain: 1 person, outdoor

கள்ள வாக்கு

கள்ள வாக்கு கள்ள வாக்கு கள்ள வாக்கு கள்ள வாக்கு கள்ள வாக்கு கள்ள வாக்கு கள்ள வாக்கு கள்ள வாக்கு கள்ள வாக்கு கள்ள வாக்கு தைரியமிருந்தால் ஒருமுறை சொல்லட்டும் பார்க்கலாம் என்றார் நான் பத்து முறை கூறியிருக்கிறேன். குறிப்பு- சுமந்திரன் என்ன மொழியில் பேசினாரோ அந்த மொழியில் அவருக்கு அளித்த பதில் இது. Image may contain: one or more people, text that says "PAGETAMIL.COM துணிவிருந்தால் இனி கள்ளவாக்கென சொல்லிப் பாருங்கள்; நடப்பதே வேறு: சுமந்திரன் எச்சரிக்..."

செய்தி - நடிகை நிக்கிகல்ராணி கொரோனோவினால் பாதிப்பு

செய்தி - நடிகை நிக்கிகல்ராணி கொரோனோவினால் பாதிப்பு கொரோனோவே! உனக்கு இரக்கமே இல்லையா? ஈழத் தமிழருக்கு நல்ல செய்தி தர மாட்டாயா? இன்னும் உன்மீது நம்பிக்கை இழக்காமல் இருக்கிறோம். Image may contain: 1 person, text Image may contain: one or more people and people standing

• சுதந்திரதின வாழ்த்து தெரிவிப்போரின் சிந்தனைக்கு!

• சுதந்திரதின வாழ்த்து தெரிவிப்போரின் சிந்தனைக்கு! இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம். இங்கு கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் இருக்கிறது என்று நம்புவர்களின் சிந்தனைக்கு சில வினாக்கள். இந்தியாவில் யாருக்கு இருக்கிறது சுதந்திரம்? • தாங்கள் வாழும் காட்டை அழிக்க வேண்டாம் எனக் கோரிய மலைவாழ் மக்களை எந்தவித விசாரணையும் இன்றி சுட்டுக்கொல்வதற்கு பொலிசாருக்கு சுதந்திரம் உண்டு. • கருப்பு சட்டத்தை நீக்கு எனக் கோரும் மணிப்பூர் பெண்களை கற்பழிக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் உண்டு. • காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம்களை கொல்வதற்கு இந்தியபடையினருக்கு சுதந்திரம் உண்டு. • தமிழக மீனவர்களைக் கொல்வதற்கு இலங்கை கடற்படையினருக்கு சுதந்திரம் உண்டு. அந்த கடற்படையினருக்கு பயிற்சி வழங்க இந்திய ஆட்சியாளர்களுக்கு சுதந்திரம் உண்டு. • தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுக்க சுப்பிரமணியசுவாமிக்கு சுதந்திரம் உண்டு. அவருக்கு பொலிஸ் காவலும் உண்டு. ஆனால் அவருக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுத்தால் அவர்களை பிடித்து அடைக்க தமிழக பொலிசுக்கு சுதந்திரம் உண்டு. • கூலிப்படையை ஏவி கொலை செய்ய காஞ்சி சங்கராச்சாரிக்கு சுதந்திரம் உண்டு. அவரை விடுதலை செய்யவும், அப்பாவி பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கவும் இந்திய நீதிதுறைக்கு சுதந்திரம் உண்டு. • கோடிக்கணக்கில் ஊழல் செய்யவும் வெளியில் சுதந்திரமாக திரியவும் ராசா, கனிமொழி வகையறாக்களுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் பல வருடங்களாக சிறையில் வாடும் அப்பாவிகளுக்கு விடுதலை இல்லை. • தீபெத் அகதிகள் சுதந்திரமாக இந்தியாவில் நடமாடலாம். ஆனால் தமிழ் அகதிகளை மட்டும் கொடிய சிறப்பு முகாமில் அடைத்து வைக்க தமிழக அரசுக்கு முழு சுதந்திரம் உண்டு. தமிழா! நீ அடிமையாக இருக்கிறாயா? சுதந்திரமாக இருக்கிறாயா? (மீள் பதிவு) Image may contain: one or more people

•வரலாறு முக்கியம் தமிழ் மக்களே!

•வரலாறு முக்கியம் தமிழ் மக்களே! நாட்டில் பல முக்கிய பதவிளை வகித்தவர். குறிப்பிடத் தக்க பெரும் தலைவர்களில் ஒருவர் என்றுகூட கூறலாம். ஆனால் அவர் இறந்துவிட்டாரா அல்லது உயிரோடு இருக்கிறாரா என்பதுகூட தெரியாத நிலை. அதைவிட “அப்பா இன்னும் இறக்கவில்லை” என்று அவரது சொந்த மகனே அறிக்கை விடவேண்டிய துரதிருஸ்டமான நிலை. அவர் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது “யுத்தத்தை நிறுத்தங்கள்” என்று தமிழகத்தில் இருந்து 7 கோடி தமிழ் மக்கள் கோரினார்கள். அவரோ கொஞ்சம்கூட இரக்கம் இன்றி “போர் நிறுத்தம் செய்யுமாறு அண்டை நாட்டை நாம் வலியுறுத்த முடியாது, அது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகிவிடும்” என்றார். ஆனால் யுத்தத்தை இலங்கை இந்திய அரசுகள் சேர்ந்தே செய்தன. தமிழ் இனப் படுகொலையை சேர்ந்தே செய்தன என்ற உண்மைகள் இப்போது வெளிவந்துவிட்டன. அதுமட்டுமன்றி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்த விடயத்திலும் இந்திய அரசு சார்பில் இவருக்கும் நேரடிப்பங்கு உண்டு. பல்லாயிரம் ஈழத்தமிழ் மக்களின் மரணங்களுக்கு காரணமானவர். பல கோடி தமிழக தமிழ் மக்களின் கோரிக்கையை மதிக்காதவர். இன்று இவர் மரணமடையப்போகிறார் எனில் தமிழனாகிய நான் எப்படி வருத்தப்பட முடியும்? எனக்கு மகிழ்ச்சியே. குறிப்பு – என்ன இருந்தாலும் ஒருவனின் மரணத்தில் மகிழ்வு கொள்ள முடியுமா என்று கேட்பவர்கள் தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது என்பதற்கு முதலில் விளக்கம் தாருங்கள். Image may contain: one or more people

995ம் ஆண்டு அகஸ்டு 15ம் திகதியன்று

995ம் ஆண்டு அகஸ்டு 15ம் திகதியன்று நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த துறையூர் சிறப்புமுகாம் திருச்சி காவல் கண்காணிப்பாளாரால் சோதனை செய்யப்பட்டது. இவ்வாறான சோதனை வழக்கமாக மாதக் கடைசியில் நடைபெறுவதுதான் வழக்கம். மாறாக திடீரென இடையில் சோதனை செய்யப்பட்டால் எங்கேயோ ஏதோ பெரிய பிரச்சனை நடந்துவிட்டது என்று அர்த்தம். ஆம். அன்றும் ஜெயா அம்மையாரின் ஆட்சியையே ஆட்டம்காண வைத்த சிறையுடைப்பு சம்பவம் ஒன்று நடந்து விட்டது. அதாவது வேலூர் கோட்டை சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிகள் தப்பி விட்டார்கள் என்பதே அந்த சம்பவம். பல நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய பொலிசாரின் 24 மணிநேரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த புலிகள் தப்பிவிட்டனர் என்பது ஆச்சரியம் எனில் அதைவிட ஆச்சரியம் அவர்கள்; சுரங்கம் தோண்டி தப்பிவிட்டனர் என்ற செய்தியாகும். கியூ பிரிவு உயர் அதிகாரி ஒருவர் சென்னையில் இருந்து சென்று சுரங்கத்தை வீடியோ எடுத்து காண்பிக்கும்வரை யாருமே அதை நம்பாமல் இருந்தனர். எனக்கும்கூட எப்படி சுரங்கம் தோண்டியிருப்பார்கள்? எப்படி தப்பியிருப்பார்கள்? யார் யார் தப்பினார்கள்? என்ற கேள்விகள் தோன்றின. அதேவேளை இவ்வாறு தப்பிய புலிகளில் இருவர் சென்னையில் பொலிசார் மறித்து சோதனை செய்தபோது சயனைட் அருந்தி இறந்துவிட்டனர் என்ற செய்தியும் பத்திரிகையில் வந்திருந்தது. நானும் வேலூர் கோட்டையில் ஒரு வருடம் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். எனவே எனக்கு அந்த முகாம் சூழல் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்தவர்கள் பலரை எல்லாம் தெரியும். ஆனால் நான் எவ்வளவோ முயன்றும் சிறையுடைப்பு பற்றிய மேலதிக விபரங்களை அப்போது அறிய முடியவில்லை. இந்நிலையில் சிறப்புமுகாம் பற்றிய என் முகநூல் பதிவுகளை படித்துவரும் ஒருவர் ஸ்கொட்லாந்தில் இருந்து என்னுடன் தொடர்பு கொண்டார். அவர் தன் உறவினர் பற்றி அறிவதற்காக என்னுடன் தொடர்பு கொணடார். ஆனால் நல்லவேளையாக அவர் மூலமே நான் பல செய்திகளை அறிய முடிந்தது. சென்னையில் பொலிசார் சோதனை செய்தபோது சயனைட் அருந்தி இறந்த இருவரில் ஒருவர் சங்கர். இன்னொருவர் பஞ்சன் என்ற விபரத்தை அவரே கூறினார். இந்த சங்கர் என்பவர் வேலூர் சிறப்புமுகாமில் வைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு பொறுப்பாக இருந்தவர். இவருக்கு முன்னர் மன்னாரைச் சேர்ந்த அண்ணை என்பவர் இருந்தார். சங்கர் மிகவும் கட்டுப்பாடு நிறைந்தவர். ஆனால் நகைச்சுவை உணர்வு கொண்டவர். எப்போதும் ஏதாவது படித்துக்கொண்டு அல்லது எழுதிக் கொண்டிருப்பார். காயம்பட்ட தனது சக போராளிகளின் மருத்துவ சிகிச்சை தொடர்பாக என்னுடன் அடிக்கடி உரையாடியிருந்தார். அவருடன் நான் பழகிய நாட்கள் மிகவும் குறைவு. ஆனாலும் மறக்கமுடியாத இனிய நினைவுகள் அவை. மேஜர் தாகூர் / சங்கர் (அழகரட்ணம் இரவீந்திரன் ) அவர்களின் 25ம் ஆண்டு நினைவுதினம் 15.08.2020 அன்று ஆகும். குறிப்பு – தென்னிந்திய திரைப்படத்துறையினர் மயிர்கூச்செறியும் மர்மங்கள் நிறைந்த வேலுர் சிறையுடைப்பை ஏன் இன்னும் படமாக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. Image may contain: 1 person

இந்திய சுதந்திரம் ?

இந்திய சுதந்திரம் ? 5 அடி கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் மாட்டை 10 அடிக் கயிற்றில் கட்டி விடும்போது தான் சுதந்திரம் பெற்று விட்டதாக அந்த மாடு நினைக்கும். அதுபோல் தாம் சுதந்திரமாக இருப்பதாக சில மாடுகள் மன்னிக்கவும் சில இந்தியர்கள் நினைக்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சி;க் காலத்தில் ஆங்கிலேயர் சுரண்டியதைவிட அதிகளவு இன்று சுரண்டப்படுகின்றது. ஆனாலும் தாம் சுதந்திரம் பெற்று விட்டதாக சிலர் நினைக்கிறார்கள். 2000கோடி ரூபா செலவு செய்து ராக்கட் விடுவதாகவும் விரைவில் இந்தியா வல்லரசாகி விடும் என்றும் அவர்கள் பெருமை கொள்கிறார்கள். ஆனால் அதே இந்தியாவில்தான் இன்றும் மனிதர்களை வைத்து கையால் மலம் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ராக்கட்டுக்கு 2000கோடி செலவு செய்யும் இந்திய அரசால் மலம் அள்ள ஒரு இயந்திரத்தை பெற பணம் செலவு செய்ய முடியவில்லை. அதுகூடப் பரவாயில்லை. ஆனால் நாட்டின் பிரதமரோ கையால் மலம் அள்ளுவது புனிதமான தொழில் என்று கூறுகிறார். சரி. அது புனிதமான தொழில் என்றால் ஒரேயொரு நாள் அந்த தொழிலை இந்தப் பிரதமர் செய்ய முன்வருவாரா? காட்டுக்கு சென்று புலி யானைகளுக்கு மத்தியில் நின்று தன்னை தைரியமான பிரதமர் என்று காட்டுகிறார். ஆனால் இந்த தைரியமான பிரதமர் பத்திரிகை நிருபர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதில் அளிக்க ஏனோ பயப்பிடுகிறார். அதுமட்டுமல்ல ஈராக்கில் அமெரிக்கா குவித்த ராணுவத்தை விட அதிக ராணுவத்தை காஸ்மீரில் குவித்து விட்டு காஸ்மீர் மக்கள் சந்தோசமாக இருப்பதாக இந்த பிரதமர் அறிக்கை விடுகிறார். இது புரியாமல் சில தமிழர்கள் பிரதமரின் இந்துத்துவாவை நியாப்படுத்த முனைகிறார்கள். ஆனால் நாளை இதே ராணுவம் தமிழகத்திற்கு வரும்போது என்ன செய்யப் போகிறார்கள்? கடந்த வருடம் தூத்தக்குடியில் ஸ்டெர்லைட் க்கு எதிராக அற வழியில் போராடிய மக்களை சுட்டுக் கொன்றார்கள். சுட்டுக் கொன்றதும் அல்லாமல் அவர்களை சமூகவிரோதிகள் என்றும் முத்திரை குத்தியுள்ளார்கள். இதுதான் இந்தியாவின் 73 ஆண்டு சுதந்திரத்தின் சாதனையா? Image may contain: 2 people

இவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லை

இவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லை அதுவும் இதற்கு முன்னர் விக்கினேஸ்வரன் அவர்கள் இந்த இடத்தில் அஞ்சலி செலுத்தியபடியால் இவர்கள் வேண்டுமானால் வேறு இடத்தை தெரிவு செய்திருக்கலாம் ஆனால் அவ்வாறு இல்லாமல் இவர்களும் அதே முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செய்து உறுதி ஏற்றிருப்பது நலலதொரு ஆரம்பமே. பாராட்டுவோம். வாழ்த்துவோம் குறிப்பு – உட்கட்சிப் பிரச்சனையை திசைதிருப்ப நாடகம் ஆடுகிறார்கள் என சுமந்திரன் கும்பல்கள் கிண்டல் அடிக்கத்தான் செய்வார்கள். இருக்கட்டுமே. நாடகத்திற்காவது சுமந்திரன் ஒருமுறை முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தட்டுமே. Image may contain: one or more people, people standing and outdoor

1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் நாங்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தோம்

1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் நாங்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தோம் அப்போது எங்கள் மீது ஒரு போர்வையை போர்த்தி விட்டனர் அது இந்திய தேசியக்கொடி என்ற போர்வை விடிந்ததும் விழித்துப் பார்த்தோம் எம் மீது போர்வை இருந்தது – ஆனால் எமது கோவணத்தைக் காணவில்லை தூங்குபவனுக்கு போர்வை முக்கியம் விழித்துக் கொண்டவனுக்கு கோவணம் முக்கியம் வாருங்கள் தேசியக் கொடியை கிழிப்போம் அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக் கொள்வோம்! நன்றி – பாவலர் அறிவுமதி குறிப்பு – கடந்த வருடம் கீழே உள்ள படத்தை பிரசுரித்தமைக்காக எனது முகநூல் இரண்டு வாரம் தடை செய்யப்பட்டது. Image may contain: 1 person, outdoor and nature

பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை!

பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை! அவர் சுமந்து சென்ற வெடி பொருள் 50 கிலோ வுக்கு மேல் இருக்கும். ஆனால் அவரின் எடையோ 60 கிலோதான். சிறு படகில் சென்றால்கூட ராடரில் தெரிந்துவிடும்; என்பதால் இந்த வெடி பொருட்களுடன் அவர் நீந்தி சென்ற தூரம் கிட்டத்தட்ட 17 மைல்கள் என்கிறார்கள். அவர் எட்டு மணி நேரம் நீந்தி சென்று தாக்குதலை மேற்கொண்டார் என்று கூறுகிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் தான் மரணமடையப் போகிறேன் என்று தெரிந்தும் அவரது கால்கள் சோரவில்லை. கைகள் செயல் இழக்கவில்லை. இலக்கை அடைந்தார். 326 அடி நீளம் , 51 அடி அகலம். 6300 தொன் எடை கொண்ட அதி நவீன ராடர் பொருத்தப்பட்ட போர்க்கப்பலை முழ்கடித்தார். இதைப் படிக்கும்போது இந்த வீர தீரச் செயலை செய்தவர் ஒரு இளைஞனாக இருப்பான் என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால் ஆண்களே வியக்கும் இந்த சாதனையைப் புரிந்தவர் ஒரு பெண். அவர் பெயர் அங்கையற்கண்ணி. அப்போது அவரின் வயது 21. பெண்கள் பல்லிக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்தவர்கள் என்ற கதையே பெரும்பாலும் நாம் கேட்டு வருகிறோம். ஆனால் அவர்கள் பலமிக்கவர்கள் என்பதை கூறும் கதைகள் தந்திரமாக மறைக்கப்பட்டு வருகின்றன. இனி நாம் அங்கையற்கண்ணிகளின் கதைகளை கூறுவோம். Image may contain: Panneerselvan Athiba, text

•வாஜ்பேய் நல்லவரா?

•வாஜ்பேய் நல்லவரா? (இன்று வாஜ்பேயின் 2 ம் ஆண்டு நினைவு தினம் ஆகும்.) வாஜ்பேய் நல்லவர். ஆனால் தவறான கட்சியில் இருந்தார் என்கிறார்கள். ஒரு நல்லவர் எப்படி தவறான கட்சியில் இருக்க முடியும்? என்று கேட்டால் அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்கிறார்கள். காட்டிக் கொடுத்தவர் எப்படியடா சுதந்திர போராட்ட வீரர் என்று அழைக்கலாம்? என்று கேட்டால் பதில் சொல்லாமல் முழிக்கிறார்கள். இதோ நீதிமன்றத்தில் வாஜ்பாய் கொடுத்த வாக்குமூலம், "எனது தந்தை பெயர் கவுரிசங்கர். நான் குவாலியர் கல்லூரியில் படித்துள்ளேன். நான் பிராமண சமூகத்தை சேர்ந்தவன்.ஆக்ரா மாவட்டம் பட்டேஸ்வர் கிராமத்தை சேர்ந்தவன். 1942 ஆகஸ்ட் 27ம் தேதி மதியம் 2 மணி இருக்கும். காகு,மகுன் என்ற இருவரும் ஊர்ச்சாவடி அருகில் வந்தனர் வனத்துறை அலுவலகத்தை உடைக்கவேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். இருநூறுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். நானும், எனது தம்பியும் பின் தொடர்ந்து சென்றோம். பாதி தூரம் சென்றதும் நின்று கொண்டோம். வனத்துறை அலுவலகம் இடிக்கப்பட்டது .உடைந்த செங்கல்கள் விழுவதைப் பார்த்தோம்.ஆடு,மாடுகளை அவிழ்த்துவிட்டனர். தடுப்புகள் உடைக்கப்பட்டது. நாங்கள் அருகில் செல்லவில்லை. காகு,மகுன் மற்றும் ஊர் மக்கள்தான் இதற்குக் காரணம்." இந்த வாக்குமூலத்திற்குப்பிறகு அந்த ஊர் என்ன கதியானது தெரியுமா? வாஜ்பாய் நீதிமன்றத்தில் ஊர் மக்களைக் காட்டிக்கொடுத்து வாக்குமூலம் கொடுத்தவுடன் பட்டேஸ்வர் கிராமத்தை போலீஸ் சுற்றி வளைத்தது. 263 வீடுகள் முற்றிலுமாக அடித்து நொறுக்கப்பட்டது. காகு,மகுன் ஆகிய இருவரும் இரும்புச்சங்கிலியால் கட்டி இழுத்துச்செல்லப்பட்டனர். 300 க்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டுசித்தரவதை செய்யப்பட்டனர். காகு,மகுனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.ஊருக்கு 10,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 65 ஆண்டுகளுக்கு முன்பு அந்தத்தொகை மிகப்பெரியது. ஊர் மக்களால் கட்ட முடியவில்லை. எனவே பொதுமக்கள் மேலும் சித்ரவதை செய்யப்பட்டனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த ஊரில் முஸ்லிம் களோ, கிறிஸ்தவர்களோ யாரும் இல்லை. முற்றிலும் இந்து மக்கள் தான். அந்த இந்து மக்களை காட்டிக் கொடுத்தவர்தான் இந்து தலைவர் வாஜ்பேய். காட்டிக் கொடுத்ததற்கு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். கூட இருந்தவர்களை காட்டித் தரும்படி அவருக்கு சித்திரவதை செய்யப்பட்டது. அவரது மீசை மயிர்கள் தீயினால் சுடப்பட்டது. ஆனாலும் அவர் சிறைவாசத்தை அனுபவித்தார். அந்த இளைஞர் கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு. அவருக்கு பாரத ரத்னா விருதும் இல்லை. அவர் இன்றைக்கும் அரச மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுகிறார். Image may contain: 1 person, text that says "gettyimages Robert NICKELSBERG gettyimages NICKE" Image may contain: 1 person

தமிழா!

தமிழா! கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது காவிரி ஆறு உன்னுடையது ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது நெய்வேலி உன்னுடையது ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு கோவில்கள் உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட முடியாது நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது ,ஆனால் தமிழில் வழக்காட முடியாது அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது உனது ரயில்வேயில் உனக்கு வேலை இல்லை. 90% வேலை வட மாநிலத்தவருக்கு. காஸ்மீர் எல்லையில் காவலுக்கு சென்று நீ சாக வேண்டும். ஆனால் கடலில் உன் மீனவனைக் காக்க யாரும் வருவதில்லை. வருடம் 85 ஆயிரம் கோடி ரூபா வரி நீ கட்ட வேண்டும். ஆனால் கொரோனோவுக்கு காசு கேட்டு நீ கையேந்தினாலும் உதவி கிடைப்பதில்லை. தமிழ்நாடு உன்னுடையது ,ஆனால் நீ அதை ஆள முடியாது! உன் கைக்கு எட்டும் தூரத்தில் 2 லட்சம் தமிழர் உன் கண்முன் கொல்லப்படும்போதும் உன்னால் காப்பாற்ற முடியாது. ஏனெனில் நீ அடிமையாக இருக்கிறாய் தமிழா! இன்னும் எத்தனை நாளைக்கு இதை உணராமல் கிடக்கப் போகிறாய் தமிழா! மூவாயிரம் ஆண்டுக்கு மேலான வரலாறு உனக்கு உண்டு. ஆனால் அதை உணராமல் கைபர் கணவாய் வழியே ஆடு மாடு மேய்த்து வந்தவனிடம் அடிமையாகக் கிடக்கிறாயே. நீ எட்டுக் கோடி தமிழா. ஆனால் இரண்டு கோடி சிங்களவன் எப்படி உன் தொப்புள் கொடி உறவுகளை தைரியமாக கொல்ல முடிந்தது? ஏனெனில் அவன் இரண்டு கோடியாக இருந்தாலும் அவனுக்கு தனி நாடு இருக்கிறது. அவனுக்கு ஒரு அரசும் இருக்கிறது. உனக்கும் ஒரு நாடும் அதில் உன் அரசும் இருந்தால் நீயும் தலை நிமிர்ந்து வாழ முடியும் அல்லவா? உன்னைவிட வரலாறும் சனத் தொகையும் குறைந்த பிரான்ஸ் இன்று வல்லரசு. பிரிட்டன் இன்று வல்லரசு. ஆனால் நீ மட்டும் இதை உணராமல் அடிமையாகக் கிடக்கிறாயே? நீ அடிமையாக கிடப்பது கேவலம் அல்ல. மாறாக நீ அடிமையாக கிடக்கிறாய் என்பதை உணராமல் இருக்கிறாயே அதுதான் கேவலம். உன் அடிமைத்தனத்தை உணர்ந்துகொள் உன் பலத்தை அறிந்துகொள் அதன் பின்னர் கிழக்காசியாவில் ஒரு அதிசயம் நிகழ்வதை நீ காண்பாய். குறிப்பு – ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும். தமிழ்நாட்டு தமிழர்கள் தமிழ்நாடு விடுதலைக்காக போராடுவதே ஈழத்தமிழருக்கு செய்யும் உதவியாகும். – தோழர் தமிழரசன். Image may contain: 1 person

ஒரு காலத்தில் இவர் மீது கல் எறிந்தவர்கள் இப்போது இவர் மீது பூக்களை தூவிறார்கள்.

ஒரு காலத்தில் இவர் மீது கல் எறிந்தவர்கள் இப்போது இவர் மீது பூக்களை தூவிறார்கள். இவர் அரசியலுக்கு வந்த ஆரம்ப நாட்களில் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த மேலூர் சிறப்புமுகாம் முன்னால் மேடை போட்டு “சிறப்பு முகாம்களை மூட வைப்போம்” என்று பேசியது இன்றும் நன்றாக என் நினைவில் இருக்கிறது. ஆனால் துரதிருஸ்டவசமாக கடந்த 25 வருடமாக சிறப்புமுகாம்கள் மூடப்படவில்லை. இன்றும்கூட திருச்சி சிறப்புமுகாமில் அகதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு போராடி வருகின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சிறப்புமுகாமையே மூட வைக்க முடியாத இவரால் ஈழத்தில் இருக்கும் தமிழர்களுக்கு என்ன உதவியை செய்துவிட முடியும் என யாராவது கேட்டுவிட முடியும். அதனால்தான் என்னவோ இப்பெல்லாம் இவர் சிறப்புமுகாம் பற்றி பேசுவதையே நிறுத்திவிட்டார் போலும். பரவாயில்லை. எனது வருத்தம் என்னவெனில் பலமுறை பாராளுமன்றம் சென்றுள்ளார். பலமுறை பல பிரச்சனைகள் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். ஆனால் ஒருமுறைகூட இந்த சிறப்புமுகாம் பற்றி பேசவில்லை என்பதே. அல்லது, இவர் விரும்பியிருந்தால் சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு எதிராக ஒரு வழக்காவது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க முடியும். ஆனால் அதைக்கூட அவர் செய்ய முனையவில்லை. 2009ல் முள்ளிவாய்க்கால் அழிவின்போது புலிகள் சில தமிழக தலைவர்களுடன் பேச முயன்றபோது அவர்களின் தொலைபேசிகள் அணைந்திருந்ததாக கூறுகின்றனர். அவ்வாறு அணைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசிகளில் இவருடைய தொலைபேசியம் ஒன்று என்று கூறுகின்றனர். அது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தமிழர் சிந்திய ரத்தம் காயுமுன்னரே இவர் இலங்கை வந்து மகிந்த ராஜபக்சாவுடன் கைகுலுக்கி பரிசில்கள் பெற்றுச் சென்றது ஈழத் தமிழர் மனங்களில் ஆறாத வேதனையை கொடுத்தது. அதைவிட ஈழத் தமிழின படுகொலைக்கு உதவிய அதே காங்கிரஸ் கட்சியுடன் இவர் கூட்டுச் சேர்ந்திருப்பது ஈழத் தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கொடுத்தது. இது குறித்து கேட்டபோது “இப்போது இந்துத்துவா அபாயம் இருக்கிறது. எனவே அதனை முறியடிக்க காங்கிரஸ் உடன் கூட்டுச் சேர்வது அவசியம்” என்று விளக்கம் தந்தார். ஆனால் அதே காங்கிரஸ் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தாமே காரணம் என்று பாஜக வுக்கு போட்டியாக உரிமை கோருகிறது. இதன் மூலம் இந்துத்வாவை எதிர்ப்பதற்கான தார்மீக தகுதியை காங்கிரஸ் இழந்துவிட்டது. எனவே இனி இவர் என்ன கூறப்போகிறார்? ஆனால் இவ்வாறான சந்தர்ப்பவாதக் கூட்டணியை இவர் மேற்கொள்வது இவரின் தவறு அல்ல. மாறாக இவர் தேர்ந்தெடுத்த தேர்தல் பாதையின் விளைவு ஆகும். Image may contain: 1 person, standing and outdoor

"தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா” என்று வந்ததா?

"தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா” என்று வந்ததா? சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் தேவடியா என்ற சொல்லே மருவி மீடியா என்று வந்துள்ளது என முகநூலில் எழுதியிருந்தார். இதைப் படித்தபோது சீச் சீ அப்படி இருக்காது என நினைத்தேன். ஆனால் இப்போது தமிழகத்தில் இருந்து வரும் சில வீடியோக்களை பார்க்கும்போது அந்த நண்பர் எழுதியது உண்மையாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. பொதுவாக ஈழத் தமிழ் தலைவர்களான சம்பந்தர் ஐயா கூறுவார் இந்தியா தன் பின்னால் இருக்கிறது என்று. அதேபோல் விக்கினேஸ்வரனை ஈழத்து தாய்லாமா என்று திருநாவுக்கரசு கூறுவார். இதையெல்லாம் ஈழத் தமிழர்கள் சீரியஸ்யாக எடுத்துக்கொள்வதில்லை. இன்னும் சொன்னால் வயதானவர்களின் அறளை பெயர்ந்த பேச்சு என்ற மதிப்பே அதற்கு இருந்தது. ஆனால் இப்போது தமிழக ஊடவியலாளர் சிலர் தமிழீழம் அமைய இந்தியா ஈழத் தமிழருக்கு உதவப் போகிறது என்று எழுதவும் கூறவும் ஆரம்பித்துள்ளனர். இவர்கள் இதனை தமது வருமானத்திற்காக கூறலாம். ஆனால் இதனால் ஈழத் தமிழருக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. மாறாக இதைக் காட்டி மேலும் இனவாதத்தை தூண்டவே கோத்தா கும்பலுக்கு இது உதவப் போகிறது. கனடாவுக்கு அகதியாக போன ஈழத் தமிழர் அங்கு பிரஜாவுரிமை பெற்று படித்து தேர்தலில் போட்டியிட்டு எம்.பி யாக கூட இருக்கின்றனர். ஆனால் தாய்த் தமிழகம் என்று நம்பி வந்தவர்கள் 37 வருடமாக அகதியாகவே தமிழக மண்ணில் இருக்கின்றனர். பாகிஸ்தானில் இருந்துவந்த இந்து அகதிக்கு பிரஜாவுரிமை வழங்கும் இந்திய அரசு ஈழ அகதிகளும் இந்துதான். இருந்தும் பிரஜாவுரிமை வழங்க மறுக்கிறது. இந்த அநியாயத்தை கேட்க முடியாதவர்கள் கொஞ்சம்கூட பொறுப்பின்றி, வெட்கமின்றி தமிழீழம் எடுக்க இந்தியா உதவப் போகின்றது என்று எழுதுகின்றனர். ஏனெனில் இவர்கள் ஊடக விபச்சாரிகள்! Image may contain: 1 person, text that says "சழம்தான் இந்தியா India Takes Up Eelam ஈழம்தான் தீர்வு: இந்தியா மனமாற்றம் சீனாவை அடக்..."

•ஈழத் தமிழர்களை பார்த்து குரைக்கும் CBI நாய்!

•ஈழத் தமிழர்களை பார்த்து குரைக்கும் CBI நாய்! தானுவின் உண்மை பெயர் என்னவென்றே இன்னும் கண்டு பிடிக்கவில்லை. அதற்குள்ள அவர் வீர சைவர் மதத்தைச் சேர்ந்தவர் என்றும் கந்தசஷ்டி கவசம் படித்துதான் வீரத்தை வளர்த்தார் என்றும் எப்படியடா கண்டு பிடிச்சனீங்கள்? குண்டு வெடிச்சதில் ராஜீவ் காந்தியின் உடலே பீஸ் பீஸாக பிஞ்சு போச்சு. ஆனால் தானு வைத்திருந்த கந்தஷட்டி கவசம் புத்தகம் மட்டும் பொசுங்காமல் உங்களுக்கு கிடைத்ததா? ஏன்டா, நாயே! சொல்லறதுதான் சொல்லுற கொஞ்சமாவது நம்புறபடியாய் சொல்ல வேண்டாமா? யாரோ நாலு முட்டாள் நித்தியானந்தாவை ஆதரிக்கிறான் என்பதற்காக எப்படியடா ஈழத் தமிழன்தான் நித்தியானந்தாவை ஆதரிக்கிறான் என்று சொல்ல முடியும்? அப்படியென்றால் காஞ்சிபுரம் கோவில் கருவறைக்குள் மேகநாதன் என்ற பார்ப்பான் ஜில்மால் செய்ததை வைத்து இந்தியாவில் உள்ள பார்ப்பான் எல்லாம் ஜில்மால் பேர்வழிகள் என்று நாம் சொல்ல முடியாதா? நீங்களே நித்தியானந்தாவை வளர்த்துவிட்டு, நீங்களே அப்புறம் தப்பிப் போகவும் வழி கொடுத்துவிட்டு இப்ப எப்படியடா பழியை ஈழத் தமிழன் மீது போடுகிறீர்கள்? ஈழத் தமிழன் விட்ட ஒரே தவறு இந்தியாவை நம்பியதுதான். அதனால்தான் நித்தியானந்தா மட்டுமல்ல பங்காரு அடிகளார் முதல் பாபா வரை எல்லோரும் ஈழத் தமிழர் மத்தியில் பிராஞ் ஓப்பின் பண்ணி பிழைக்கிறார்கள். குறிப்பு - ஈழத் தமிழர்களை குற்றம் சாட்டிய சிபிஐ அதிகாரியின் வீடியோ கீழே தரப்பட்டுள்ளது. Image may contain: 2 people

•இவர்கள் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?

•இவர்கள் பெருமை கொள்ள என்ன இருக்கிறது? போராட்டம் நடந்த நாடுகளில் எல்லாம் அந்நாட்டுப் பெண்கள் எப்படி பங்கு பற்றினார்களோ அதே மாதிரித்தான் ஈழப் போராட்டத்திலும் பெண்களின் பங்கு இருக்கிறது. எனவே இதில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது என கேட்க தோன்றலாம். ஆம். உண்மைதான். இப்போதும்கூட குர்திஸ் பெண்கள் ஒரு கையில் குழந்தையை ஏந்திக் கொண்டு மறு கையில் துப்பாக்கி ஏந்தி போராடுகிறார்கள்தான். அப்படியென்றால் ஈழத்து தமிழ் பெண்கள் எப்படி இவர்களைவிட பெருமை கொள்ள முடியும்? ஈழத்து பெண்கள் சாதித்தது ஆச்சரியம் இல்லை. அவர்கள் அதனை எத்தகைய சமூக சூழலில் இருந்துவந்து சாதித்தார்கள் என்பதே ஆச்சரியம். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட காலத்தில் எங்களால் படிக்க மட்டுமல்ல துப்பாக்கி ஏந்தி போராடவும் முடியும் என நிரூபித்துக் காட்டியவர்கள். பல்லிக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்தவர்கள் இவர்கள் என்ற கருத்து கொண்ட சமூகத்தில் அதனை உடைத்து ஆண்களே வியக்கும் வண்ணம் சாதித்துக் காட்டியவர்கள். மாதவிடாய் வந்தால் வீட்டின் மூலையில் குந்த வைக்கப்பட்டவர்கள் இவர்கள் ஆனால் போர்க்களத்தில் அதே மாதவிடாயுடன் சாதனை செய்து காட்டியவர்கள். பெண் சயிக்கிள் ஓடினாலே ஆச்சரிமாய் பார்த்த சமூகத்தில் கனரக வாகனங்களை மட்டுமல்ல போர் இயந்திரங்களையே லாவகமாக ஓட்டிக் காட்டியவர்கள். புறநானூற்றில் கூறப்பட்ட பெண்ணின் வீரம் கற்பனை அல்ல அது நிஜம்தான் என்பதை இன்றைய காலத்தில் நேரில் நிரூபித்து காட்டியவர்கள் இவர்கள். எல்லாவற்றையும்விட துரோகி லிஸ்ட்டில் மாத்தையா கருணா என்று ஆண்களின் பெயர்கள்தான் இருக்கிறது. ஆனால் ஒரு பெண் பெயர்கூட இவ்வாறு இடம்பெறவில்லை. அதைவிட யுத்தத்தின் பின்னர்கூட ஆண் போராளிகளைவிட பெண் போராளிகளே அதிக சிரமப்படுகின்றனர். ஆனாலும் இதுவரை ஒரு முன்னாள் பெண் போராளிகூட போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேட்டி கொடுத்ததில்லை. இன்னுமொரு நூறு வருடம் கழித்து இவர்கள் வீரம்கூட கற்பனை என்று கருதும் சமூகம் இருக்கக்கூடும். ஆனாலும் இன்று இவர்கள் தாராளமாக பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். ஆம். அவர்கள் ஒரு மகத்தான வீரம் செறிந்த வரலாற்றின் சொந்தக்காரர்கள்தான். குறிப்பு - இன்று புலிகளின் பெண் போராளிகள் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட நாள் (18.08.1985) Image may contain: one or more people, people standing, outdoor and nature

கம்போடியா - அங்கவாட் கோயில்கள்

கம்போடியா - அங்கவாட் கோயில்கள் 1998ம் ஆண்டு எனது எட்டு வருட சிறை வாசத்தின் பின் நான் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டபோது தவிர்க்க முடியாமல் கம்போடியா நாட்டுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. உண்மையைக் கூறினால் எனக்கு கம்போடியா பற்றி எதுவுமே அப்போது தெரிந்திருக்கவில்லை. ஈழத் தமிழர்கள் தங்குவதற்கு தேவையான விசாவை அந்நாடு தருகிறது. எனவே அங்கு செல்லுங்கள் என நண்பர்கள் கூறியதால் அங்கு சென்றேன். ஆச்சரியம் என்னவெனில் அந் நாட்டில் நான் சுமார் பத்து மாதம்தான் தங்கியிருந்தேன். ஆனால் அங்கு பெற்ற நினைவுகள் இன்றும் மறக்காமல் இருக்கின்றன. கடந்த வருடம் இதே நாளில் கம்போடிய முருங்கக்காய் பற்றி எழுதியிருந்தேன். அப்போது அங்கவாட் பற்றி எழுதுவதாகவும் கூறியிருந்தேன். இன்று தோழர் தம்பிராஜா அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக அங்கவாட் கோயில்கள் பற்றி நிறைய கதைத்தோம். நான் இத்தனை நாளும் அங்கவாட் கோயில்கள் சோழ மன்னனால் கட்டப்பட்டது என்று நினைத்திருந்தேன். ஆனால் இன்று தம்பிராஜா அவர்கள் அது பல்லவ மன்னனால் கட்டப்பட்டது என்று கூறினார். கம்போடியா நாடு இன்று ஒரு முழு பௌத்தநாடாக விளங்குகிறது. இருப்பினும் அவர்கள் தமது தேசியக்கொடியில் அங்கவாட் இந்துக் கோவிலையே இப்போதும் வைத்திருக்கின்றனர். அங்கவாட்டுக்கு போகும்வரை இப்படி ஒரு பெரிய பிரமாண்டமான இந்துக் கோவில்கள் அங்கு இருப்பதை நான் அறிந்திருக்கவில்லை. டென்மார்க்கில் இருந்து வந்த ராஜா என்ற நண்பரே என்னையும் சபா(ரத்தி) என்பவரையும் அழைத்துச் சென்று இவற்றை காணச் செய்தார். அவருக்கு இவ் வேளையில் மீண்டும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான் கம்போடியாவில் இருந்த வேளையில்தான் பொல்பொட் அவர்கள் மரணமடைந்தார். அவர் பத்து லட்சம் மக்களை கொன்றதாக ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் அது உண்மையா? அவர் பற்றிய கம்போடிய மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பன பற்றி விரைவில் இன்னொரு பதிவில் எழுதுகிறேன். குறிப்பு - இன்று புகைப்பட தினமாம். நானும் நாலு படம் போட்டாச்சு. Image may contain: Balan Chandran, standing and indoor Image may contain: sky and outdoor Image may contain: 4 people, outdoor Image may contain: people standing, sky, cloud, outdoor and nature

மகிந்த ராஜபக்சாவின் மனைவி சிராந்தி அம்மையாருக்கு

•மகிந்த ராஜபக்சாவின் மனைவி சிராந்தி அம்மையாருக்கு இப்போது சிங்கள மொழி தெரியுமா? மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி அம்மையார்; தாஜீதீன் கொலை பற்றிய விசாரணையில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். தனது பொறுப்பில் இருந்த வாகனங்கள் எப்படி கொலைக்கு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். அதுமட்டுமன்றி விசாரணை முடிவில் கையொப்பமிடுமாறு கோரியபோது அவர் தனக்கு சிங்களம் தெரியாது என்றும் கூறினார். தனக்கு சிங்களம் தெரியாது என்று பொய் கூறுவதையிட்டு சிராந்தி அம்மையார் கொஞ்சம்கூட வெட்கப்படவில்லை. அதேபோல் சிங்களம் தெரியாது என்று தன் மனைவி பொய் கூறியதையிட்டு மகிந்த ராஜபக்சவும் வெட்கப்படவில்லை. தாய் தந்தையும் இப்படியென்றால் மகன் ரோகித ராஜபக்சவோ இன்னும் ஒருபடி மேலேபோய் தாஜீதீன் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறினார். இப்போது கோத்தா ஜனாதிபதி. மகிந்தா பிரதமர். எனவே இனி தாஜீதீன் கொலை செய்யப்படவில்லை. அவர் தற்கொலை செய்தார் என்று கூறி கேசை மூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பாவம் தாஜீதீன் குடும்பம். நல்லாட்சி அரசு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் நல்லாட்சி அரசோ மீண்டும் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி விட்டு அழிந்துவிட்டது. பரவாயில்லை. மகிந்த குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் சிராந்தி அம்மையாருக்கு இனி சிங்களம் தெரிந்துவிடும் என்று நம்புவோமாக. Image may contain: 2 people, people standing

இவர்கள் அரசியல் தலைவர்கள்

இவர்கள் அரசியல் தலைவர்கள் இவர்கள் எம்.பி யாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை இவர்கள் அனைவரும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரா சம்பநதன் - 87 வயது திஸ்சவித்தாரண - 85 வயது வாசுதேவ நாணயக்கார - 81 வயது விக்னேஸ்வரன் - 80 வயது இவர்களுக்கு குடை பிடிக்க இவர்களுக்கு பம்பஸ் கட்டிவிட இவர்களை தூக்கித்திரிய என இவர்களுக்கு உதவிட எப்போதும் நாலு பேர் தேவை. ஏன் இவர்கள் ஒதுங்கி இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது? இவர்களை அரசியலில் இருந்து ஒதுங்கும்படி கோரவில்லை. பதவியை இளையவர்களுக்கு விட்டுக்கொடுக்கும்படியே கோருகிறோம். எல்லா வேலைக்கும் பென்சன் வயது உண்டு ஆனால் இந்த எம்.பி வேலைக்கு மட்டும் மரணிக்கும்வரை இருக்கலாம். Image may contain: 1 person, standing Image may contain: 1 person, glasses Image may contain: 1 person, beard Image may contain: 1 person, beard and close-up

இங்கு இரண்டு உரையாடல்கள் நிகழ்கின்றன.

இங்கு இரண்டு உரையாடல்கள் நிகழ்கின்றன. ஒரு உரையாடல் “வன்முறை” என்கின்றனர் இன்னொரு உரையாடல் “ஜனநாயகம்” என்கின்றனர். உண்மைதான். ஆனால் “யாருக்கு?” என்ற கேள்வி இங்கு மறைந்து நிற்கின்றது. பகத்சிங் பாராளுமன்றத்திற்குள் குண்டு வீசியபோது ஆங்கிலேய அரசு அவரை பயங்கரவாதி என்றது. ஆனால் காலம் அவரை சுதந்திரப் போராட்ட தியாகியாக பதிவு செய்துள்ளது. தோழர் தமிழரசன் குண்டு வைச்சபோது அவரை பயங்கரவாதி என்று இந்திய அரசு கொன்றது. ஆனால் காலம் அவரை தமிழ்தேசிய தலைவராக பதிவு செய்துள்ளது. இலங்கை அரசு போராளிகளை பயங்கரவாதிகளாகவும் சுமந்திரனை ஜனநாயகவாதியாகவும் சித்தரிக்கலாம். ஆனால் இதற்கு மாறாக காலம் விரைவில் தெளிவாக பதிவு செய்யும். Image may contain: 2 people, including Rajavelu Needamangalam, people sitting Image may contain: 1 person, sitting

•லண்டனில் கைகேட் மயானத்தில் அமைந்துள்ள காரல் மாக்ஸ் சமாதி

•லண்டனில் கைகேட் மயானத்தில் அமைந்துள்ள காரல் மாக்ஸ் சமாதி (குறிப்பு - 2013 ம் ஆண்டு இதே நாளில் இப் பதிவை பதிவு செய்ததை முகநூல் நினைவூட்டியுள்ளது. இன்றும் இதில் எழுதப்பட்டுள்ள வரிகள் பொருத்தமாக இருப்பதால் மீள்பதிவு செய்துள்ளேன்.) கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.08.2013)யன்று லண்டனில் கைகேட் மயானத்தில் அமைந்திருக்கும் காரல் மாக்ஸ் சமாதிக்கு சென்றிருந்தேன். கனடாவில் இருந்து வந்திருந்த எனது நண்பர் பார்க்க விரும்பியதால் அவரை அழைத்துச் சென்றேன். நான் ஏற்கனவே பல முறை சென்றிருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட ஆட்கள் இல்லாமல் அந்த மயானம் இருந்ததில்லை. அண்மைக்காலமாக மாக்ஸ் சமாதியை பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதை நான் அவதானித்தேன். இம்முறை நானும் நண்பரும் சென்றிருந்த வேளை பின்லாந்தில் இருந்து வந்த ஒரு தாயும் மகளும் மாக்ஸ் சமாதியை அதிக நேரம் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். எனது நண்பர் ஆச்சரியத்தில் அவர்களிடம் “மாக்சியம் காலாவதியாகி விட்டது. மாக்ஸ்ற்கு செல்வாக்கு இல்லை என்று கூறுகிறார்கள். நீங்கள் எதற்காக அங்கிருந்து இங்கு வந்து பார்வையிடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த தாய் “அவர்கள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாக்சை மக்கள் மனங்களில் இருந்து அவர்களால் ஒருபோதும் நீக்க முடிவதில்லை” என்றார். மாக்ஸ் உண்மையாக புதைக்கப்பட்ட இடம் சுமார் 50 அடி தூரம் தள்ளி உள்ளே இருக்கிறது. பார்வையாளர்களின் வசதிக்காக தற்போதைய சமாதி பாதையோரமாக கட்டப்பட்டிருக்கிறது. இந்த சமாதிக்கும் சில சமூக விரோதிகளால் 1960களில் வெடிகுண்டு வீசப்பட்டது. ஆனால் சமாதிக்கு சிறிது சேதமே ஏற்பட்டதால் அது பின்னர் புனரமைப்பு செய்து பார்வையாளருக்கு விடப்பட்டுள்ளது. காரல்மாக்ஸ் புதைக்கப்பட்டபோது வெறும் 16 பேரே வந்திருந்தனர். ஆனால் அதன் பின் பல தலைவர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். அதிக மக்களை கவர்ந்த தத்துவவாதியாக இன்றும் காரல்மாக்ஸே விளங்குவதாக பி.பி.சி எடுத்;த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. பின்குறிப்பு – காரல் மார்க்சுக்கும் அவர் வீட்டில் பணிபுரிந்த பெண்ணிற்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்று மார்க்ஸ் சமாதியை பராமரிக்கும் குழவினர் வெளியிட்ட பிரசுரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக் குழுவினருடனும் இன்னும் பலருடனும் நான் தொடர்பு கொண்டு ஆய்வு செய்தேன். இது தொடர்பான என் கருத்தை விரைவில் பதிவு செய்கிறேன். Image may contain: 2 people, including Balan Chandran, tree and outdoor

இந்திய நீதி?

இந்திய நீதி? வீரப்பன் வழக்கில் 1993 மே மாதம் கர்நாடக அதிரடிப்படையால் கைது செய்யப்பட்ட மார்ட்டல்லி பிலவேந்திரன் நேற்று (19.8.2020) இரவு 11 மணிக்கு மைசூர் சிறையில் உயிரிழந்துள்ளார். பொய் வழக்கில் 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர் உரிய சிகிச்சை வழங்கப்படாமல் சிறையில் மரணமடைந்துள்ளார். பம்பாய் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர் நடிகர் சஞ்சய் தத். அவரிடமிருந்து ஏகே 47 ஆயுதங்கள்கூட கைப்பற்றப்பட்டிருந்தன. அவருக்கு நீதிமன்றம் தண்டனையும் வழங்கியிருந்தது. ஆனால் அவர் இந்திய அரசால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். தற்போது தனது நோய்க்கு சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவும் இருக்கிறார். வீரப்பனுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட பிலவேந்திரன் 27 வருடங்கள் சிறையில் கழித்தபோதும் அவரை அரசு விடுதலை செய்யவில்லை. அதுமட்டுமல்ல அவருக்கு உரிய சிகிச்சைகூட பெறவிடாமல் சாகடித்துவிட்டது. 72 கொலைகள் செய்த கொள்ளைக்காரி பூலான்தேவிக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர் பாராளுமன்ற எம்.பி யாகவும் இந்திய அரசு உதவியது. ஆனால் வீரப்பன் சதி செய்து கொல்லப்பட்டார். அதுமட்டுமல்ல வீரபன் அணியில் கைது செய்தவர்களையும் விடுதலை செய்ய அரசு மறுப்தற்கு என்ன காரணம் என்பதை உணர்வதற்கு அவர் முன்வைத்த கோரிக்கைகள் சிலவற்றை பார்க்க வேண்டும். கொலைகாரன், கொள்ளைக்காரன், கடத்தல்காரன் என்று அழைக்கப்படும் வீரப்பன் முன் வைத்த கோரிக்கைகள் சில, (1) 10ம் வகுப்புவரை தமிழ் வழிக் கல்வி வேண்டும் (2) வாசாத்தியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் (3) தடா சட்டத்தில் அடைக்கப்பட்ட அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் (4) பெங்களுரில் மூடப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறக்க வேண்டும் (5) காவிரி பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இப்போது புரிகிறதா? ஏன் இந்திய அரசு தமிழருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு இன்னொரு நீதி வழங்குகிறது என்று. No photo description available. Image may contain: செந்தழல், standing Image may contain: 1 person, close-up Image may contain: 4 people, people standing

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தோல்விக்கு சுமந்திரன் கூறிய கருத்துக்களும் காரணம் என்று சம்பந்தர் ஐயா கூறியுள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தோல்விக்கு சுமந்திரன் கூறிய கருத்துக்களும் காரணம் என்று சம்பந்தர் ஐயா கூறியுள்ளார். இனி இதற்கு சுமந்திரன் அல்லது அவரது விசுவாசிகள் என்ன கூறப்போகிறார்கள்? வழக்கம்போல் சம்பந்தர் ஐயாவையும் மகிந்தாவின் கைக்கூலி என்பார்களா? அல்லது அவருக்கும் ஆயிரம் கோடி ரூபா நட்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்புவார்களா? அல்லது, “கள்ளவாக்கு” என்றால் வழக்கு போடுவேன் என்று மிரட்டியதுபோல் மிரட்டுவார்களா? ஆனால் நாம் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். சுமந்திரனுக்கு இந்தளவு இடத்தைக் கொடுத்ததே சம்பந்தர்ஐயாதான். Image may contain: 1 person, text that says "PAGETAMIL.COM கூட்டமைப்பின் சறுக்கலிற்கு சுமந்திரனின் கருத்துக்களும் காரணம்: முதல்முறையாக... i"

இந்தியாவில் இந்தி தெரியாத தமிழரை வெளியேறுங்கள் என்று இந்தி(ய) அரசு கூறுகின்றது.

இந்தியாவில் இந்தி தெரியாத தமிழரை வெளியேறுங்கள் என்று இந்தி(ய) அரசு கூறுகின்றது. ஆனால் அந்த இந்தி(ய) அரசு இலங்கையில் ஈழத் தமிழருக்கு உதவுமாம். இதுவரை எத்தனை தடவை இந்த தமிழ் தலைவர்கள் இந்திய அரசை சந்தித்து விட்டார்கள்? இதுவரை எத்தனை தடவை இந்திய அரசு “தீர்வு பெற்று தருவோம்” என வாக்குறுதி அளித்தது? இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி நாடகம் ஆடப் போகின்றார்கள் இவர்கள்? இலுப்பம்பழம் பழுத்தால் வெளவால் (இந்தியா) வரும் என்று இனியும் தமிழ் மக்களை ஏமாற்றாதீர்கள். இந்திய அரசு தமிழ் மக்களின் நண்பன் அல்ல எதிரி என்பதை இனியாவது ஒத்துக்கொள்ளுங்கள். Image may contain: 5 people, people sitting and indoor

•7ம் ஆண்டு நினைவஞ்சலி!

•7ம் ஆண்டு நினைவஞ்சலி! பெயர் - தோழர் உத்ராபதி தாய் தந்தையர் - ரங்கநாதன் , சரசுவதியம்மாள் இடம் - அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் சிலுவைச்சேரி கிராமம். அமைப்பு - தமிழ்நாடு விடுதலைப்படை வழக்குகள் - குள்ளஞ்சாவடி காவல் நிலைய தாக்குதல், பூம்புகார் ராம் இறால் பண்ணை மீதான தாக்குதல், மயிலாடுதுறை டிவி டவருக்கு குண்டு வைத்தது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் டவருக்கு குண்டு வைத்தது, ஆண்டிமடம் காவல்நிலையத்தை தாக்கி ஆயுதங்களை சூறையாடியது சிறை வாழ்க்கை - 10 ஆண்டுகள் மறைவு - 24.08.2013 Image may contain: 1 person, text that says "தமிழ்த்தேச விடுதலைப் போராளி தோழர் உத்ராபதி அவர் களுக்கு வீரவணக்கம் எக்கம்"

கேரளாவில் கம்யுனிஸ்டாக இருந்தாலும் மலையாளி தன்னை மலையாளியாக உணர்கிறான்.

கேரளாவில் கம்யுனிஸ்டாக இருந்தாலும் மலையாளி தன்னை மலையாளியாக உணர்கிறான். அவன் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்று அறைகூவல் விட்டுக்கொண்டு மறுபுறம் அருகில் இருக்கும் தமிழ் தொழிலாளிக்கு தண்ணி கொடுக்க மறுக்கிறான். கர்நாடகாவில் பிஜே.பி யாக இருந்தாலும் சரி அல்லது காங்கிரசாக இருந்தாலும் சரி கன்னடன் தன்னை கன்னடனாகவே உணர்கிறான். அதனால்தான் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழனுக்கு காவிரி தண்ணி கொடுக்க அவன் மறுக்கிறான். ஆனால் தமிழ்நாட்டில் தமிழன் தன்னை தமிழனாக உணர வேண்டும் என்றால் ஒருத்தன் “இல்லை, திராவிடனாக உணர வேண்டும்” என்கிறான். இன்னொருத்தன் “சாதி”யாக உணர வேண்டும் என்கிறான். இதையும்மீறி யாராவது தமிழன் தன்னை தமிழானாக உணர்ந்தால் உடனே அவனை “தமிழ் இன வெறியன்” என்கிறார்கள். மலையாளி தன்னை மலையாளியாக உணர்வதை “மலையாள இனவெறி” என்று கூறாதவர்கள், கன்னடன் தன்னை கன்னடனாக உணர்வதை “கன்னட இனவெறி” என்று கூறாதவர்கள், தமிழன் தன்னை தமிழனாக உணர்வதை மட்டும் “தமிழ் இனவெறி” என்று கூறுகிறார்கள். கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலை வாயப்பு என சட்டம் இயற்றுகிறார்கள். நாகலாந்தில் அம் மாநிலத்தவருக்கே வேலையில் முன்னுரிமை என சட்டம் இயற்றியுள்ளார்கள். குஜராத் உட்பட பல மாநிலங்களில் இப்படி சட்டம் இயற்றி செயற்படுத்துகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் திருச்சி ரயில்வேயில் 90 வீதமான வேலை வாய்ப்பு வட இந்தியருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழனுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குங்கள் என்றால் தமிழன் என்றால் யார் என்று நக்கலாக கேட்கிறார்கள் தமிழன் தனக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலை குறித்து அக்கறை கொள்ளவில்லை. மாறாக தோனி கிரிக்கட்டில் இருந்து விலகியதற்காக கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறான். கேரளாவில் 74 தமிழர் மண்ணில் புதையுண்டு இறந்துள்ளனர். ஆனால் தமிழன் பிரணாப் முகர்ஜி நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான். என்னே அவலம்? ஒரேயொருமுறை தமிழன் தன்னை தமிழனாக உணர்ந்தால் போதும். அது எப்போது நிகழும்? Image may contain: 1 person, text that says "தோழர் தமிழரக சன்"

•நானும் மயிலும் பற்றிய ஒரு நினைவு!

•நானும் மயிலும் பற்றிய ஒரு நினைவு! இந்த படத்தைப் பார்த்ததும் மோடியும் மயிலும் பற்றி எழுதப்பட்ட பதிவு என்று நினைத்து விடாதீர்கள். இந்த படத்தை பார்த்ததும் என் மனதில் தோன்றிய ஒரு நினைவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 1980 ம் ஆண்டில் நாம் இயக்கம் ஆரம்பித்தபோது பயிற்சிக்காக ஒரு பண்ணை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன்படி தோழர் மனோ மாஸ்டர் அவர்கள் ஐந்து அந்தர் விதை வெங்காயம் இலவசமாக தந்து உதவினார். (அந்தக் காலத்தில் நிச்சயம் இது எமக்கு பெரிய உதவி) நெடுங்கேணிக்கு அருகில் மாறாஇலுப்பை என்னும் கிராமத்துக்கு அருகில் தோழர் நெப்போலியன் உதவியுடன் இந்த பண்ணையை அமைத்தோம். ஒருநாள் சிறிது மழைத் தூறலுக்கு பின்னர் ஒரு கூட்டம் மயில்கள் எமது பண்ணைக்கு அருகில் புல் வெளியில் வந்து நின்றன. இதைப் பார்த்த நெப்போலியன் ஒரு சொட்கன் துப்பாக்கியை தந்து அவற்றுக்கு வெடி வைக்கும்படி என்னிடம் கூறினார். எனக்கு மகிழ்ச்சி. ஏனெனில் நான் முதன் முதலாக துப்பாக்கியால் சுடப் போகிறேன். சுட்டபின் எனக்கு இன்னும் மகிழ்ச்சி. ஏனெனில் அதில் மயில் இறந்து விட்டது. உடனே நெப்போலியன் அவற்றை உரித்து கறி சமைத்தார். அந்த கறியும் கோழிக்கறி போல் ருசியாகத்தான் இருந்தது. ஆனால் இதை அறிந்த நெப்போலியனின் தந்தையார் மயில் இறைச்சி சாப்பிட்டால் கால் எலும்பு உறுதியின்றி வளைந்துவிடும் என்றார். அவர் கூறியது உண்மையா பொய்யா என்று தெரியாது. ஆனால் அதன் பின்னர் நாம் மயிலைக் கொல்வதையோ அதன் இறைச்சி சாப்பிடுவதையோ நிறுத்திவிட்டோம். குறிப்பு - மயில் வீட்டில் வளர்க்கக்கூடாது. மயிலை கொல்லக்கூடாது என்கிறார்கள். அப்படி ஏதாவது சட்டம் இலங்கையில் இருக்கிறதா? Image may contain: one or more people, people sitting, bird and plant

•இது தியாகிகள் துரோகிகளாகவும் துரோகிகள் தியாகிகளாகவும் ஆகும் காலம்!

•இது தியாகிகள் துரோகிகளாகவும் துரோகிகள் தியாகிகளாகவும் ஆகும் காலம்! ஈழப் போராட்டத்தின் முதல் தியாகி சிவகுமாரன் பிறந்த நாள் இன்று அகும். (26.08.1950 – 05.06.1974) அவர் தனது 24 வயதில் விதையானார். அவரில் இருந்து பல்லாயிரம் போராளிகள் முளைத் தெழுந்தார்கள். அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்று அவரின் வயது 70 ஆக இருக்கும். மற்றவர்கள் போல் அவரும் ஏதாவது ஒரு வெளிநாடு சென்று வசதியாக வாழ்ந்திருக்கலாம். அல்லது பாராளுமன்ற அரசியலில் புகுந்து ஒரு எம் பி யாகவும் ஆகியிருக்கலாம். ஆனால் அவரோ தமிழ் இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி தன் வாழ்வை அர்ப்பணித்தார். உலகில் கொடியது இன விடுதலைக்காக 24 வயதில் மரணமடைவது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தன் மகனின் உடலை 24 வயதில் பிணமாக பார்க்கும் தாயின் நிலையே கொடியது என நான் கருதுகிறேன். இந்த கொடுமையை சிவகுமாரனின் தாயார் அனுபவித்தார். அவர் அனுபவித்த அந்த கொடுமையை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த இடத்தில் “தாய்” நாவலைப் படைத்த மார்க்சிம் கார்க்கி மீது கொஞ்சம் பொறாமை கொள்கிறேன். ஏனெனில் அவரின் திறமையில் கொஞ்சமேனும் எனக்கிருந்தால் அவர் காட்டிய ரஸ்சிய தாய்க்கு ஒப்பான பல ஈழத் தாய்களை என்னால் காட்டியிருக்க முடியும். இப்போது எனது கவலை எல்லாம் இந்த தியாகிகளைப் பற்றி எழுதவில்லையே என்பது அல்ல. மாறாக தியாகிகளை துரோகிகளாகவும் துரோகிகளை தியாகிகளாகவும் மாற்ற சிலர் முற்படுகிறார்கள். அதை தடுக்க என்னால் எதுவும் எழுத முடியவில்லையே என்பது பற்றியே நான் கவலை கொள்கிறேன். தியாகி சிவகுமார் துரையப்பாவை துரோகி என்றார். அவரை கொல்ல பலமுறை முயன்றார். ஆனால் இப்போது சிலர் துரையப்பாவை தியாகி ஆக்கிறார்கள். இவர்கள் இனி விரைவில் தியாகி சிவகுமாரனை துரோகியாக்குவார்கள். ஏனெனில் இது தியாகிகள் துரோகிகளாகவும் துரோகிகள் தியாகிகளாகவும் ஆக்கும் காலம். த்தூ ....... ! Image may contain: 1 person, text

இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று

•இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று இனியும் ஈழத் தமிழர்கள் நம்ப முடியுமா ? இந்தியாவில் சிறுபான்மை தேசிய இனங்களை நசுக்கிவரும் இந்திய அரசு இலங்கையில் ஈழத் தமிழருக்கு உதவும் என்று எப்படி நம்புவது என்று கேட்டால் அதற்கு, இந்தியாவில் 7 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களின் உணர்வுக்கு மாறாக இந்திய அரசு செயற்பட முடியாது. ஆதலால் ஈழத் தமிழருக்கு இந்திய அரசு உதவும் என்று பதில் அளிக்கிறார்கள். சரி. ஆனால் இந்திய அரசால் தாம் நசுக்கப்படுவதாக தமிழக தமிழர்களே போராடுகின்றார்களே. அப்படியென்றால் தமிழக தமிழர்களை நசுக்கும் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று எப்படி நம்புவது என்று கேட்டால் அதற்கு, இலங்கை அரசு சீனா பக்கம் சாய்கிறது. எனவே இந்திய அரசு தனது பாதுகாப்பிற்காக ஈழத் தமிழர்களை ஆதரிக்க வேண்டியுள்ளனது என்று பதில் அளிக்கிறார்கள். ஆனால் இலங்கையின் புதிய வெளிவிகாரத்துறைச் செயலர் இந்தியாவுக்கே முன்னுரிமை கொடுப்போம் என்று கூறியுள்ளார். அது மட்டுமன்றி அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியது தவறு என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். பாதுகாப்பு விவகாரத்தில் முதல் முன்னுரிமை இந்தியாவுக்கே வழங்கப்படும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாவும் கூறியுள்ளார். இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளின் தயவுடனேயே கோத்தாவும் மகிந்தவும் பதவிக்கு வந்துள்ளனர். அத்துடன் அவர்கள் தமது அரசு இந்தியாவுக்கு ஆதரவாகவே செயற்படும் என்பதையும் வெளிப்படையாக அறிவித்துள்ளார்கள். அதைவிட, இலங்கை இறைமை உள்ள நாடு. அதன் உள் விவகாரங்களில் அந்நிய நாட்டு தூதுவர் தலையிட முடியாது என இலங்கை ராஜாங்க அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். எனவே இனி தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய தூதுவரை சந்திக்க முடியாது. இந்திய தூதுவரும் “தமிழருக்கு தீர்வு கிடைக்க இந்தியா உதவும்” என்று அறிக்கை விட முடியாது. இத்தனையும் மீறி இனியும் இந்தியா ஈழத் தமிழருக்கு உதவும் என்று யாராவது சொல்வார்களேயானால் அவர்கள் “இலவு காத்த கிளிகள்” என்றே கூறவேண்டும். Image may contain: 2 people, people standing

நாசமறுப்பான்

நாசமறுப்பான்” “குறுக்காலபோவான்” என்றெல்லாம் முகநூலில் பெயர்கள் வந்தபோது மௌனமாக இருந்தவர்கள் நான் என் முகநூலுக்கு “தோழர் பாலன்” என்று பெயர் வைத்தவுடன் ஓடிவந்து குய்யோ முறையோ என கத்தினார்கள். அதுவும் ஒருவர் “அதெப்படி ஒரு அம்மா தன்னை அம்மா என்று அழைக்க முடியும்?” என்று முட்டாள்தனமாகவும் கேட்டார். ஆனால் இன்று முகநூலில் பலர் தமது பெயர்களுடன் “தோழர்” சேர்த்து அடையாளப்படுத்துவதைக் காணும்போது மிக்க மகிழ்சியாக இருக்கிறது. அதுவும் சென்னை கே.கே.நகரில் ஒரு உணர்வாளர் “தோழர்” என்ற பெயரில் உணவகம் ஒன்று நடத்திவருகிறார். அவருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். Image may contain: 3 people

இவர் யார்?

•இவர் யார்? இவரை ஏன் தமிழர்கள்; நினைவு கூர வேண்டும்? “பிஎம் கேர் நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாயாவது கொடுத்தீர்களா? தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்க எந்த திட்டமும் கொண்டு வரமாட்டீங்க, தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவுமே தர மாட்டீங்க” என்று கூறியிருப்பது சீமானோ அல்லது மணியரசனோ அல்ல. அகில இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவரான பாலபாரதி அவர்களே இப்படி இப்போது கூறியிருக்கிறார். இதையே தமிழ்நாட்டில் 33 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கூறினார். அவர்தான் தோழர் தமிழரசன். அவர் இதனை கூறியபோது அவரை பயங்கரவாதி என்று கூறி கொன்றார்கள். அதுமட்டுமல்ல, “இந்திய அரசை நம்பாதீர்கள். அது ஒருபோதும் உங்களுக்கு உதவாது. மாறாக உங்களை கொன்று அழிக்கும்” என்று தோழர் தமிழரசன் ஈழத் தமிழர்களுக்கு கூறினார். அவர் கூறியது உண்மைதான் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. எதிர்வரும் செப் -1 யன்று அவரது 33 வது நினைவு தினமாகும். அவரை நன்றியுடன் நினைவு கூர்வோம். Image may contain: 1 person, text that says "1 செப் தமிழினத்தின் விடுதலைக்கான எழுச்சிக் குறியீடே தோழர் தமிழரசன் தமிழ்நாடு விடுதலைக்காகப் போராடிய மாமறவர்களின் ஈகத்தைப் போற்றுவோம்! தமிழ்த்தேச மக்கள் கட்சி"

•செங்கொடியை நினைவில் கொள்வோம்!

•செங்கொடியை நினைவில் கொள்வோம்! இவர், தேர்ந்தெடுத்த பாதை குறித்து விமர்சனம் இருக்கலாம் ஆனால் இவரின் அர்ப்பணிப்பு குறித்து யாருக்கும் விமர்சனம் இருக்க முடியாது. மூன்று தமிழர் உயிர் காக்க தன் உயிரைக் கொடு;த்தவர் வாழ வேண்டி வயதில் சாவை விரும்பி ஏற்றவர். தன் உடல் கருகி உயிர் போகும் நேரத்தில்கூட தன்னைக் காப்பாற்றும்படி அவர் கோரவில்லை தன் உடலை வைத்து 3 பேரின் உயிரையும் காப்பாற்றும்படியே கேட்டார். அவர் அர்ப்பணிப்பு மகத்தானது. உலகில் தமிழ் இனம் உள்ளவரை வரலாற்றில் அவர் பெயர் நிலைத்து நிற்கும். இது உறுதி! குறிப்பு - இன்று செங்கொடியின் 9 வது நினைவு தினம் ஆகும் (28.08.2011) Image may contain: 1 person, text that says "வீரவணக்கம்"

•தமிழா! நீ வஞ்சிகப்படுவதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறாய்?

•தமிழா! நீ வஞ்சிகப்படுவதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறாய்? வருடம்தோறும் 85000கோடி ரூபாவை தமிழ்நாட்டில் இருந்து வரியாக பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு, அதுபோதாதென்று டோல்கேட்கள்; மூலமும் தமிழர்களிடம் வழிப்பறி செய்கிறது. கேரளாவில் 1782 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் இருந்தாலும் அங்கு 5 டோல்கேட்களே உள்ளன. மகாராஷ்ராவில் 15437 கி.மீ தூரம் நெடுஞ்சாலைகள் இருந்தாலும் அங்கு 44 டோல்கேட்களே உள்ளன. 5381 கி.மீ தூரம் நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழகத்தில் 52 டோல்கேட்கள் உள்ளன. ஆக, கேரளாவுடன் ஒப்பிடும்போது 9 டோல்கேட்களே தமிழகத்தில் இருக்க வேண்டும் அல்லது, மகாராட்ராவுடன் ஒப்பிடும்போது 15 டோல்கேட்களே தமிழகத்தில் இருக்க வேண்டும் ஆனால் தமிழகத்தில் உள்ள டோல்கேட்களின் எண்ணிக்கையோ 52. இது வழிப்பறி அன்றி வேறு என்ன? தமிழகத்தில் 52 டோல்கேட்களை அமைத்து வழிப்பறி செய்வதாக பிரதான எதிர்க்கட்சியான திமுக குற்றம் சாட்டியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த 52 டோல்கேட்களில் 23 டோல்கேட்களை அமைத்தவர் திமுக வைச் சேர்ந்த டி.ஆர்.பாலுவே. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த ஜெயா அம்மையாரின் சொத்து மதிப்பு 35000 கோடி ரூபா. கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு 40000 கோடி ரூபா. ஆனால் தமிழக மக்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கும் மொத்த கடன் 5லட்சம் கோடி ரூபா. “ஒரு மனிதன் அடிமையாக பிறந்தது அவன் குற்றமல்ல. ஆனால் தனது விடுதலைக்கு போராட விரும்பாதது மட்டுமன்றி தனது அடிமைத்தனத்தை ஆதரித்து அதை அழகுபட வர்ணிப்பவன் ஒரு கீழ்மகன் ஆவான்” - தோழர் லெனின். Image may contain: 5 people, including தமிழ் அறிவன், text that says "33 நினைவு நாள் ஆம் ஆண்டு செப்டம்பர் 01 2020 தமிழ்த்தேசியத் தலைவர் தோழர். தமிழரசன் மற்றும் தர்மலிங்கம், அன்பழகன், செகநாதன், பழனிவேல் வீரவணக்கம் தோழர்களுக்கு தமிழ்த்தேச மக்கள் கட்சி தொடர்புக்கு- 98657 91957, 91505 89041."

தாய்!

தாய்! 1987.09.01 யன்று எந்த தாயும் தன் வாழ்நாளில் கேட்க விரும்பாத செய்தியை அந்த தாய் கேட்டார். தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தி எந்த தாயும் கேட்க விரும்பாத செய்தி மட்டுமல்ல, அது தாங்க முடியாத கொடுமையும் கூட. மகன் இறந்து விட்டான் என்றாலே பொதுவாக எந்த தாயும் தாங்கமாட்டார். அதுவும் தனது ஒரேயொரு மகன் வங்கி கொள்ளையன் என்று அடித்துக் கொல்லப்பட்டான் என்றால் எந்த தாயால் தாங்க முடியும்? ஆம். அந்த கொடும் துயரை இத்தனை நாளாய் சுமந்து கொண்டிருப்பவர் வேறு யாருமல்ல. தோழர் தமிழரசனின் தாயாரே. தான் வறுமையில் வாடிய போதும் தன் மகன் எதிர்காலத்தில் வசதியாக வாழ வேண்டும் என்று கோவை பொறியியல் கல்லூரியில் விட்டுப் படிப்பித்தவர் இந்த தாய். தான் ஆசையாக பெற்று வளர்த்த மகன் போராட்ட வாழ்வை தேர்ந்தெடுத்தபோதும் அதையிட்டு அவர் ஏமாற்றம் அடையவில்லை. மகனை தேடி வரும் பொலிசார் அவர் கிடைக்கவில்லை என்றவுடன் ஏமாற்றத்தில் தன்னை சித்திரவதை செய்தபோதும் அவர் மகன் மீது கோபம் கொண்டதில்லை. நீண்ட சிறைவாசம் அனுபவித்துவிட்டு வந்த மகன் மீண்டும் போராடச் சென்றபோதுகூட அவர் “போராட்டத்தை விட்டுவிடு” என்று மகனிடம் கூறியதில்லை. அத்தகைய தாயாரிடம் வந்து “உங்க மகன் தமிழரசன் இறந்துவிட்டான்” என்று கூறியபோது அதை அவர் ஏற்கவில்லை. கடந்த 32 வருடங்களாக தன் மகன் உயிரோடு இருப்பதாகவே அந்த தாய் கூறிவருகிறார். ஆம். அவர் கூறுவது உண்மைதான். தோழர் தமிழரசன் இறந்தாலும் அவர் முன்னெடுத்த போராட்டம் இறக்கவில்லை. இன்று தோழர் தமிழரசன் பெயரை தவிர்த்துவிட்டு யாராலும் தமிழ்தேசியம் பேச முடியாது. அந்தளவுக்கு இன்று தோழர் தமிழரசன் அறியப்பட்டிருக்கிறார். பலரும் அவர் பெயரை உச்சரிக்கின்றனர். அதனால்தான் இன்று பலரும் தோழர் தமிழரசனின் அந்த தாயாரை மேடைகளில் ஏற்றி கௌரவிக்கின்றனர். இந்த தாயாரைப் பார்க்கும்போது எனக்கு இரட்டிப்பு மகிழ்சி ஏற்படுகிறது. ஏனெனில் அவரது மகன் தோழர் தமிழரசன் பற்றி நூல் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததோடு அந்த நூலை இவரிடம் சேர்ப்பிக்கவும் முடிந்தது. Image may contain: 1 person

•இந்தியாவில் சட்டத்தைவிட பூணூல் உயர்ந்ததா?

•இந்தியாவில் சட்டத்தைவிட பூணூல் உயர்ந்ததா? இருவரும் இந்தியர்கள். இருவரும் இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் ஒருவர் திலீபன் மகேந்திரன். இன்னொருவர் நடிகர் எஸ.வி.சேகர். இருவர் மீதும் இந்திய தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுன்ளது. திலீபன் மகேந்திரன் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதுமட்டுமன்றி அவருடைய கையும் பொலிசாரால் அடித்து முறிக்கப்பட்டது. ஆனால் எஸ.வி.சேகர் கைது செய்யப்படவும் இல்லை. சிறையில் அடைக்கப்படவும் இல்லை. மாறாக, அவர் மன்னிப்பு கோரினால் அவர் மீதான வழக்கை கைவிடுவதாக பொலிசார் கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி மன்னிப்பு கோருவது சம்பந்தமாக அவர் யோசிப்பதற்கு ஒருவாரகால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் சட்டத்தின் முன் திலீபன் ஒரு மாதிரியும் எஸ்.வி.சேகர் இன்னொரு மாதிரியும் நடத்தப்படுகிறார்கள். ஏனெனில் திலீபன் மகேந்திரன் உடலில் பூணூல் இல்லை. எஸ.வி.சேகர் உடலில் பூணூல் உண்டு. இந்தியாவில் பூணூல் சட்டத்தைவிட வலிமையானது. Image may contain: 1 person, sitting Image may contain: திலீபன் திலீபன், standing and night

மக்களோடு சேர்ந்து உழையுங்கள்!

• மக்களோடு சேர்ந்து உழையுங்கள்! • மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்! • மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்! தோழர்மாஓ சேதுங் சிந்தனையை கற்றுத் தந்த தோழர் தமிழரசன்! 1984ல் தமிழ்நாட்டில் மலையாளப்பட்டி என்னும் இடத்தில் அமைந்திருந்த அரசியல் பயிற்சி முகாமில் எமது தோழர்களுக்கு தோழர் தமிழரசன் அவர்கள் மாக்சிய தத்துவங்களை போதித்தார். அப்போது ஒரு நாள் பெரம்பலூருக்கு அருகில் இருந்த மிகவும் வறிய மக்களின் அழைப்பின் பேரில் எமது சில தோழர்களை அழைத்துக்கொண்டு சென்றார். அந்த மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகவும் கஸ்டப்படுபவர்கள். இருப்பினும் அவர்கள் ஈழப்போராளிகளுக்கு உணவு வழங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதனால் தோழர் தமிழரசன் எமது தோழர்களை அவர்களது இடத்திற்கு அழைத்து சென்றார். உணவு உண்பதற்கு முன்னர் எல்லோரும் குளத்தில் குளிக்கலாம் என்று தோழர் தமிழரசன் கூறினார். இதைக் கேட்டதும் எமது தோழர்கள் மிகவும் மகிழ்வு கொண்டு குளத்தை நோக்கி ஓடினார்கள். மிகவும் ஆர்வமுடன் குளிப்பதற்காக ஒடியவர்கள் குளிக்காமல் குளக்கரையில் நிற்பதைக் கண்ட தோழர் தமிழரசன் ஆச்சரியத்துடன் ஏன் என்று வினவினார். எமது தோழர்கள் என்னதான் பாட்டாளி வர்க்க சிந்தனை கொண்டிருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்தவர்கள். எனவே அவர்களின் உணவு உடை பழக்க வழக்கங்களில் அந்த வர்க்க குணாம்சம் இருக்கவே செய்தது. அந்த குளம் குட்டையாகவே இருந்தது. கால் பாதம் நனையும் அளவிற்கே தண்ணீர் இருந்தது. அதுவும் கலங்கி மஞ்சள் நிறத்தில் இருந்தது. அதில் ஒரு புறத்தில் எருமைகள் கிடந்து புரண்டு கொண்டிருந்தன. இன்னொரு புறத்தில் பன்றிகள் குட்டிகளுடன் நடமாடிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த எமது தோழர்கள் அருவருத்து குளிப்பதற்கு தயங்கினர். இதைப் பரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “ மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று சொல்லிக்கொண்டு தான் முதலில் தண்ணீரில் இறங்கி குளித்தார். மாவோ வின் வரிகளைக் கேட்தும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட எமது தோழர்கள் “புரட்சி ஓங்குக” என்று உரத்துக் கோசம் இட்டவாறு ஒவ்வொருவராக குளத்தில் குதித்து விளையாடினர். பின்பு சாப்பிடுவதற்காக அந்த மக்களின் வீடுகளுக்கு சென்றபோது அங்கு இலையில் சோறும் சுண்டெலிக் கறியும் வைக்கப்பட்டிருந்தது. எலிக்கறி அதுவும் அதன் தலையுடன் பார்த்ததும் எமது தோழர்களுக்கு வாந்தி வராத குறை. யாருமே சாப்பிட வில்லை. இதைப் புரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “அந்த மக்கள் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கே சோறு சாப்பிடுவார்கள். அந்தளவுக்கு சோறே அம் மக்களுக்கு மிகவும் உயர்ந்த சாப்பாடு. அதை உங்களுக்கு தந்திருக்கிறார்கள். நீங்கள் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள” என்றார். தோழர்கள் புரிந்து கொண்டனர். இம்முறை தோழர் தமிழரசன் கூறுமன்னரே எமது தோழர்கள் “மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று உரத்து கூறிக்கொண்டு சாப்பிட்டார்கள். என்ன வேடிக்கை என்றால் முதலில் சாப்பிட தயங்கியவர்கள் சாப்பிட்டு சுவை பிடித்துக்கொள்ள மேலும் மேலும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். அந்த மக்களும் மிக்க மகிழ்வோடு உணவு பரிமாறினார்கள். உணவு முடிந்த பின்பு அவர்களும் எமது தோழர்களும் மாறி மாறி சில பாடல்கள் பாடியும் மற்றும் நடிப்புகள் செய்து காட்டியும் அனைவரையும் மகிழ்வுறச் செய்தார்கள். இந்த சம்பவத்திற்கு பின்பு எமது தோழர்கள் எப்போதும் தோழர் தமிழரசனை இந்த மாவோவின் வரிகளை உரத்து உச்சரித்து கிண்டல் செய்வார்கள். அவரும் நன்றாக சிரித்து நகைச்சுவை செய்வார். குறிப்பு- செப்-1 திகதி தோழர் தமிழரசன் நினைவு தினத்தை முன்னிட்டு இது ஒரு மீள் பதிவு ஆகும் Image may contain: 1 person