Saturday, August 29, 2020

செய்தி - முதற் கடற்கரும்புலி அங்கையற்கண்ணி அவர்களின் தந்தை மரணம் அடைந்துள்ளார்.

செய்தி - முதற் கடற்கரும்புலி அங்கையற்கண்ணி அவர்களின் தந்தை மரணம் அடைந்துள்ளார். தன் மகள் கரும்பலியாக இறந்துவிட்டாள் என்ற செய்தி அறிந்ததும் நிச்சயம் ஒரு தந்தையாக இவரும் கவலைப்பட்டிருப்பார். ஆனாலும் தன் மகள் தமிழ் இனத்தின் விடுதலைக்காகவே மரணம் அடைந்தாள் என தன்னைத்தானே ஆறுதல் படுத்தியிருப்பார். அதேவேளை, இவ்வாறு இறந்தவர்களை வன்முறையாளர்கள் என்றும் இவர்களது வன்முறையும் விசாரிக்கப்பட வேண்டும் என சுமந்திரன் இப்போது கூறிவருவது நிச்சயம் இந்த தந்தைக்கு தாங்க முடியாத வேதனையை கொடுத்திருக்கும். சுமந்திரன் போன்று தானும் தன் மகளை வெளிநாட்டு அனுப்பி படிக்க வைக்காதது தவறோ என்று கூட இந்த தந்தை தன் இறுதிக்காலத்தில் சிந்தித்திருக்கக் கூடும். ஒரு தந்தை தன் கண் முன்னே மகளை இழப்பது கொடுமை என்றால் அதைவிடக் கொடுமையானது மகளின் இழப்பை இன்னொருவர் இகழ்வதை கேட்க வேண்டி நேருவது. சுமந்திரன் இவ்வாறு பல போராளிகளின் பெற்றோருக்கும் உறவினருக்கும் தாங்க முடியாத வலியைக் கொடுத்து வருகிறார். அவர்களின் சாபம் சுமந்திரனை நிச்சயம் பொசுக்காமல் விடாது. குறிப்பு - அங்கையற்கண்ணி அவர்களின் தந்தைக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள். Image may contain: 1 person

No comments:

Post a Comment