Saturday, August 29, 2020

•வரலாறு முக்கியம் தமிழ் மக்களே!

•வரலாறு முக்கியம் தமிழ் மக்களே! நாட்டில் பல முக்கிய பதவிளை வகித்தவர். குறிப்பிடத் தக்க பெரும் தலைவர்களில் ஒருவர் என்றுகூட கூறலாம். ஆனால் அவர் இறந்துவிட்டாரா அல்லது உயிரோடு இருக்கிறாரா என்பதுகூட தெரியாத நிலை. அதைவிட “அப்பா இன்னும் இறக்கவில்லை” என்று அவரது சொந்த மகனே அறிக்கை விடவேண்டிய துரதிருஸ்டமான நிலை. அவர் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது “யுத்தத்தை நிறுத்தங்கள்” என்று தமிழகத்தில் இருந்து 7 கோடி தமிழ் மக்கள் கோரினார்கள். அவரோ கொஞ்சம்கூட இரக்கம் இன்றி “போர் நிறுத்தம் செய்யுமாறு அண்டை நாட்டை நாம் வலியுறுத்த முடியாது, அது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகிவிடும்” என்றார். ஆனால் யுத்தத்தை இலங்கை இந்திய அரசுகள் சேர்ந்தே செய்தன. தமிழ் இனப் படுகொலையை சேர்ந்தே செய்தன என்ற உண்மைகள் இப்போது வெளிவந்துவிட்டன. அதுமட்டுமன்றி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்த விடயத்திலும் இந்திய அரசு சார்பில் இவருக்கும் நேரடிப்பங்கு உண்டு. பல்லாயிரம் ஈழத்தமிழ் மக்களின் மரணங்களுக்கு காரணமானவர். பல கோடி தமிழக தமிழ் மக்களின் கோரிக்கையை மதிக்காதவர். இன்று இவர் மரணமடையப்போகிறார் எனில் தமிழனாகிய நான் எப்படி வருத்தப்பட முடியும்? எனக்கு மகிழ்ச்சியே. குறிப்பு – என்ன இருந்தாலும் ஒருவனின் மரணத்தில் மகிழ்வு கொள்ள முடியுமா என்று கேட்பவர்கள் தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது என்பதற்கு முதலில் விளக்கம் தாருங்கள். Image may contain: one or more people

No comments:

Post a Comment