Saturday, August 29, 2020

பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை!

பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை! அவர் சுமந்து சென்ற வெடி பொருள் 50 கிலோ வுக்கு மேல் இருக்கும். ஆனால் அவரின் எடையோ 60 கிலோதான். சிறு படகில் சென்றால்கூட ராடரில் தெரிந்துவிடும்; என்பதால் இந்த வெடி பொருட்களுடன் அவர் நீந்தி சென்ற தூரம் கிட்டத்தட்ட 17 மைல்கள் என்கிறார்கள். அவர் எட்டு மணி நேரம் நீந்தி சென்று தாக்குதலை மேற்கொண்டார் என்று கூறுகிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் தான் மரணமடையப் போகிறேன் என்று தெரிந்தும் அவரது கால்கள் சோரவில்லை. கைகள் செயல் இழக்கவில்லை. இலக்கை அடைந்தார். 326 அடி நீளம் , 51 அடி அகலம். 6300 தொன் எடை கொண்ட அதி நவீன ராடர் பொருத்தப்பட்ட போர்க்கப்பலை முழ்கடித்தார். இதைப் படிக்கும்போது இந்த வீர தீரச் செயலை செய்தவர் ஒரு இளைஞனாக இருப்பான் என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால் ஆண்களே வியக்கும் இந்த சாதனையைப் புரிந்தவர் ஒரு பெண். அவர் பெயர் அங்கையற்கண்ணி. அப்போது அவரின் வயது 21. பெண்கள் பல்லிக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்தவர்கள் என்ற கதையே பெரும்பாலும் நாம் கேட்டு வருகிறோம். ஆனால் அவர்கள் பலமிக்கவர்கள் என்பதை கூறும் கதைகள் தந்திரமாக மறைக்கப்பட்டு வருகின்றன. இனி நாம் அங்கையற்கண்ணிகளின் கதைகளை கூறுவோம். Image may contain: Panneerselvan Athiba, text

No comments:

Post a Comment