Saturday, August 29, 2020

"தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா” என்று வந்ததா?

"தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா” என்று வந்ததா? சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் தேவடியா என்ற சொல்லே மருவி மீடியா என்று வந்துள்ளது என முகநூலில் எழுதியிருந்தார். இதைப் படித்தபோது சீச் சீ அப்படி இருக்காது என நினைத்தேன். ஆனால் இப்போது தமிழகத்தில் இருந்து வரும் சில வீடியோக்களை பார்க்கும்போது அந்த நண்பர் எழுதியது உண்மையாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. பொதுவாக ஈழத் தமிழ் தலைவர்களான சம்பந்தர் ஐயா கூறுவார் இந்தியா தன் பின்னால் இருக்கிறது என்று. அதேபோல் விக்கினேஸ்வரனை ஈழத்து தாய்லாமா என்று திருநாவுக்கரசு கூறுவார். இதையெல்லாம் ஈழத் தமிழர்கள் சீரியஸ்யாக எடுத்துக்கொள்வதில்லை. இன்னும் சொன்னால் வயதானவர்களின் அறளை பெயர்ந்த பேச்சு என்ற மதிப்பே அதற்கு இருந்தது. ஆனால் இப்போது தமிழக ஊடவியலாளர் சிலர் தமிழீழம் அமைய இந்தியா ஈழத் தமிழருக்கு உதவப் போகிறது என்று எழுதவும் கூறவும் ஆரம்பித்துள்ளனர். இவர்கள் இதனை தமது வருமானத்திற்காக கூறலாம். ஆனால் இதனால் ஈழத் தமிழருக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. மாறாக இதைக் காட்டி மேலும் இனவாதத்தை தூண்டவே கோத்தா கும்பலுக்கு இது உதவப் போகிறது. கனடாவுக்கு அகதியாக போன ஈழத் தமிழர் அங்கு பிரஜாவுரிமை பெற்று படித்து தேர்தலில் போட்டியிட்டு எம்.பி யாக கூட இருக்கின்றனர். ஆனால் தாய்த் தமிழகம் என்று நம்பி வந்தவர்கள் 37 வருடமாக அகதியாகவே தமிழக மண்ணில் இருக்கின்றனர். பாகிஸ்தானில் இருந்துவந்த இந்து அகதிக்கு பிரஜாவுரிமை வழங்கும் இந்திய அரசு ஈழ அகதிகளும் இந்துதான். இருந்தும் பிரஜாவுரிமை வழங்க மறுக்கிறது. இந்த அநியாயத்தை கேட்க முடியாதவர்கள் கொஞ்சம்கூட பொறுப்பின்றி, வெட்கமின்றி தமிழீழம் எடுக்க இந்தியா உதவப் போகின்றது என்று எழுதுகின்றனர். ஏனெனில் இவர்கள் ஊடக விபச்சாரிகள்! Image may contain: 1 person, text that says "சழம்தான் இந்தியா India Takes Up Eelam ஈழம்தான் தீர்வு: இந்தியா மனமாற்றம் சீனாவை அடக்..."

No comments:

Post a Comment