Saturday, August 29, 2020

சுமந்திரனுக்கு எதிராக திறக்காத வாயும்

சுமந்திரனுக்கு எதிராக திறக்காத வாயும் சுமந்திரனுக்கு எதிராக உயராத கையும் அடிமையாக இருக்க மட்டுமே அருகதையானது! சுமந்திரன் பற்றி ஒரு படிப்பறிவற்ற பாமரத் தமிழன் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது, “சுமந்திரனுக்கு வாய் சரியில்லை. ஒரு உண்மையான தமிழன் வாயில் இருந்து இவர் கூறும் வார்த்தைகள் வராது” ஒரு படிப்பறிவற்ற பாமரத் தமிழன் இவ்வாறு கூறுவதில் இருந்து என்ன தெரிகிறது? பாமர மக்கள் வரை சுமந்திரன் மீதான எதிர்ப்பு உணர்வு பரவிவிட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும். ஆனாலும் சுமந்திரன் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என தொடர்ந்து கூறிவருவது எப்படி? தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக கூறுகிறாரா அல்லது இலங்கை இந்திய அரசுகள் தன்னை தோல்வியடைய விடமாட்டாது என்ற நம்பிக்கையில் கூறுகிறாரா? தான் தேர்தலில் தோல்வி அடைந்தால் வேறு வழியில் பதவி பெற்றுக்கொள்ள மாட்டேன் என சுமந்திரன் கூறியிருக்கிறார். ஆனால் சுமந்திரனை நம்ப முடியாது. ஏனெனில் தீர்வு வரவில்லை எனில் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியவர் இதுவரை ராஜினாமா செய்யவில்லை. எனவே தேர்தலில் தோல்வியுற்றாலும் அவர் ஏதோவொரு வழியில் பதவியை பெறவே முயற்சி செய்வார். பதவி இல்லாமல் அவரால் இருக்க முடியாது. ஆதலால் தேர்தலுக்கு பின்னரும் சுமந்திரன் தனது துரோக அரசியலை தொடரத்தான் போகிறார். அதனால் அவருக்கு எதிரான எதிர்ப்பு அரசியலும் தொடரத்தான் போகிறது. இது அவருடைய மரணம் வரை நிகழப் போகிறது! Image may contain: 2 people, including Anthonippillai Reginoldraj, people standing

No comments:

Post a Comment