Saturday, August 29, 2020

நரி ஊருக்குள் வந்ததே தப்பு

•நரி ஊருக்குள் வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருது! நான் கள்ள வாக்கினால்தான் வென்றேன் என நாளை முதல் யாராவது சொன்னால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என சுமந்திரன் மிரட்டியுள்ளார். சந்தேகமற்ற ஒரு வெற்றியை பெற முடியவில்லை. ஆனால் மிரட்டலுக்கு குறைச்சல் இல்லை. சட்டமும் நீதிமன்றமும் இவரது சட்டைப் பைக்குள் இருப்பதாக நினைப்பு. சிங்கள அதிரடிப் பொலிஸ் பாதுகாப்பு இல்லாமல் ஒண்டுக்கு போகக்கூட தைரியம் இல்லை. ஆனால் வாய் வீரத்திற்கு குறைவில்லை. தலை இருக்கும்வரை தலையிடி இருக்கும். சுமந்திரன் இருக்கும்வரை அவரது துரோக அரசியலும் இருக்கும். அவர் ஒருபோதும் திருந்தப் போவதில்லை. என்னதான் நரிக்கு நாய் வேசம் போட்டாலும் நரி நன்றியுடன் இருக்காது. அதுக்கு குழி பறிக்க மட்டும்தான் தெரியும். அதுபோலவே தமிழ்மக்கள் சுமந்திரனுக்கு என்னதான் பதவியைக் கொடுத்தாலும் அவருக்கு துரோகம் செய்ய மட்டுமே தெரியும். Image may contain: 1 person, outdoor

No comments:

Post a Comment