Monday, August 31, 2015

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

• பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!
மதுக் கடைகளை மூடும் படி கேட்ட மாணவர்கள் மீது பொலிஸ் தடியடி.
மதுவை ஒழிக்கும்படி கேட்போர் மீது பிணையில் வராதபடி பொய் வழக்குகள்.
66 கோடி ரூபா மக்கள் பணத்தை ஊழல் செய்து நாலரை வருடம் தண்டனை பெற்றவரை முதலமைச்சர் பதவியில் உட்கார வைத்தமைக்கு அவர் தரும் பரிசு.
• சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்.
மாணவர்கள் திரண்டு எழுந்தால் ஆட்சி நிலைக்க முடியாது.
• மதுவிற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். ஆனால் தமிழக அரசு மக்களை அடக்க காவல் துறையை ஏவுகிறது.
மக்கள் போராட்டம் தோற்றதாக சரித்திரம் இல்லை.
மக்களை மதிக்காத அரசுகள் தூக்கியெறியப்பட்டதே வரலாறு.
ஜெயா அம்மையார் மீண்டும் சிறை செல்லும் நாள் விரைவில் வரும்.
மாணவர்களுடன் அனைத்து மக்களும் இணையட்டும்.
மதுவிற்கு எதிரான மக்கள் போராட்டம் வெற்றி பெறட்டும்!

ஜெயா அம்மையாரின் ஆட்சியால் தமிழகம் தலை குனிகிறது!

• ஜெயா அம்மையாரின் ஆட்சியால்
தமிழகம் தலை குனிகிறது!
இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே மதுக் கடைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கிய பெருமை தமிழ்நாடு அரசுக்கு மட்டுமே!
மதுவிற்கு எதிராக போராடிய மாணவர்களை தாக்கிவிட்டு மதுக் கடைகளுக்கு பாதுகாப்பு வழங்கியிருக்கும் ஒரே நாடு தமிழ்நாடு மட்டுமே!
மாணவிகளை பூட்ஸ் காலால் மிதித்தவிட்டு மதுக்கடைகளுக்கு பெண் காவலர்களை பாதுகாப்பிற்கு வழங்கியிருக்கும் ஒரே பெண் முதலமைச்சர் ஜெயா அம்மையார் மட்டுமே!
மதுவிற்கு எதிராக போராடிய சட்டக் கல்லூரி மாணவி நந்தினிக்கு வீட்டுக்காவல். மதுவிற்கு எதிராக போராடிய 9வயது சிறுவனையும் கைது செய்து வழக்கு போடும் ஒரே அரசு தமிழ்நாடு அரசு மட்டுமே!
இனி
"அம்மா" காவல் நிலையத்தில்
"அம்மா" டாக்ஸ்மார்க் பிரிவு தொடங்கப்படும்.
அங்கு "அம்மா" பியரை
"அம்மா" தொண்டன் பொலிஸ் காவலுடன் குடிப்பான்.
இது ஆச்சரியமில்லை. ஏனெனில்
தமிழ்நாட்டில் நடப்பது "அம்மா" ஆட்சியல்லவா!

தவிச்ச முயல்

 தவிச்ச முயல்
லண்டனில் லூசியம்சிவன் கோவில் மண்டபத்தில் 30.05.2015 யன்று ந. வினோதரன் எழுதிய "தவிச்சமுயல்" நூல் வெளியீடு இடம்பெற்றது.
என். கெங்காதரன் அவர்களின் தலைமையில் இந் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
திருவேணி சதீஸ் அவர்கள் அறிமுகவுரை வழங்கினார்கள்.
மு.நித்தியானந்தன், எம்.பௌசர், ராஜினி நடராசா ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இறுதியாக நூல் ஆசிரியர் ந. வினோதரன் ஏற்புரை வழங்கினார்.
நூல் ஆசிரியர் வினோதரன் அவர்கள் தனது கிராமத்து மண் வாசனையுடன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே "தவிச்சமுயல்" ஆகும்.
போர் தந்த வலிகள், அம் மக்கள் அனுபவித்த வேதனைகள் அவரது கிராமத்து மண் வாசனையுடன் பதிவு செய்ய முயன்றுள்ளார்.
தற்போது லண்;டனில் வசிக்கும் நாலாசிரியர் தனது முன்னுரையில் " அகதியாக உலகெல்லாம் ஓடி ஓடி உலைந்தாலும் இந்த பிறப்புணர்வு மறுக்கும் யாருடனும் மண்டியிட்டு சமரசப்படவும் முடியவில்லையே!" என குறிப்பிட்டுள்ளார்.
அவரிடமிருந்து இன்னும் காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கின்றோம்.

• லண்டனில் நடைபெற்ற இரு நிகழ்வுகள்

• லண்டனில் நடைபெற்ற இரு நிகழ்வுகள்
லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் 25.07.2015 யன்று "தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் " சார்பில் இரு நிகழ்வுகள் இடம்பெற்றன.
ந.சுசீந்திரன் வழிப்படுத்தலில் முதல் நிகழ்வாக தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்திருந்த கவிஞர் திலகபாமா உரையாற்றினார். சமூக செயற்பாட்டாளரான திலகபாமா தனது உரையில் பெண் எழுத்தும் எழுத்தின் அரசியலும் பற்றிக் குறிப்பிட்டார்.
இரண்டாம் நிகழ்வாக பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் அவர்கள் உரையாற்றினார். இவர் அமெரிக்க மிக்சிகன் பல்கலைக்கழக திரைப்படத்துறை பேராசிரியராவார். இவர் தனது உரையில் "தேடலும் வாசிப்பும் திரைப்படங்களை முன்வைத்து" உரையாற்றினார்.
இறுதியாக வந்திருந்த பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நல்லதொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
சுசீந்திரன் திறம்பட வழி நடத்தினார். உரையாற்றியவர்கள் சுருக்கமாக அதே நேரம் பொருள் பொதிந்த உரையை வழங்கினார்கள். உண்மையிலே ஒரு நல்ல நிகழ்வாக இது அமைந்தது.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் பணி பாராட்டுக்குரியது.
அவதானிப்பு:-
ஈஸ்ட்காம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் அவர்கள் கவிஞர் திலகபாமா அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
தனது ஈஸ்ட்காம் நகருக்கு வருகை தரும் தமிழர்களை கௌரவிப்பதில் போல் சத்தியநேசன் அவர்கள் எப்போதும் முன் நிற்பவர். ஆனால் இந்த பொன்னாடை போர்த்தும் கலாச்சாரம் லண்டனுக்கு தேவையில்லை என நாம் கருதுகிறோம். இதை கவுன்சிலர் கவனத்தில் எடுப்பார் என நம்புகிறோம்.

• இவர்களின் அழு குரல் அரசியல்வாதிகளின் காதுகளுக்கு ஏன் கேட்பதில்லை?

• இவர்களின் அழு குரல் அரசியல்வாதிகளின் காதுகளுக்கு ஏன் கேட்பதில்லை?
ஒருவர் ஒரு வருடத்தில் தீர்வு என்கிறார்.
இன்னொருவர் ஒரு நாடு இரு தேசம் என்கிறார்.
மற்றொருவர் அதிக சீட் தந்தால் அதிக பேரம் பேசுவேன் என்கிறார்.
ஆனால் யாருமே இந்த காணாமல் போனவர்கள் பற்றி
எந்த தீர்வும் கூறுவதில்லையே?
இவர்கள் ஈழம் கேட்கவில்லை.
இவர்கள்; சமஸ்டி கேட்க வில்லை.
இவர்கள் கேட்பதெல்லாம் காணாமல் போன தமது உறவுகளை
கண்டு பிடித்துத் தாருங்கள் என்பதே!
இவர்களிடம் வாக்கு பிச்சை கேட்பவர்கள்
ஏன் தக்க பதில் கூற மறுக்கிறார்கள்?
காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க முடியாதவர்கள்
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய முடியாதவர்கள்
அகதிகளை மீள் குடியேற்றம் செய்ய முடியாதவர்கள்
ஒரு வருடத்தில் தீர்வு தருவார்கள் என்று எப்படி நம்புவது?
சமஸ்டி பெற்று தருவார்கள் என்று எப்படி நம்புவது?
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்
வானம் எறி வைகுண்டம் போவதை நம்ப முடியுமா?
தேர்தலுக்கு தேர்தல் மட்டும் மக்களை சந்தித்து
தமது பதவிக்காக பொய் வாக்குறுதி கொடுக்கும்
இந்த போலி அரசியல்வாதிகளை இனியும் நம்பலாமா?

• முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களுக்கு

• முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களுக்கு
பிரபாகரன் சம்மதித்தால் ஒரு இரவில் தமிழர்களுக்கான தீர்வை பெற்று தருவேன் என முன்னர் பல தடவை நீங்கள் கூறியிருக்கின்றீர்கள்.
இப்பொது பிரபாகரன் இல்லாமல் 6 வருடம் கழிந்து விட்டது. அதாவது 2190இரவுகள் கழிந்து விட்டன. ஆனால் உங்களால் இதுவரை எந்த தீர்வையும் பெற்று தர முடியவில்லை.
உங்களால் தமிழர்களுக்கு எந்த தீர்வையும் பெற்று தர முடியவில்லை என்பதைவிட நீங்களே உங்கள் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்குரிய சுதந்திரத்தையும் தமிழ் மக்களே பெற்று தந்துள்ளார்கள்.
நீங்கள் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சயாட்சி என்கிறீர்கள். ஆனால் பேரினவாத கட்சிகள் எல்லாம் சுயாட்சியும் பிரிவினைக்கு ஒப்பானது என்றும் அதனை எற்க முடியாது என்றும் அறிவித்துள்ளன. எனவே நீங்கள் எப்படி சுயாட்சி பெறப்போகிறீர்கள்?
நீங்கள் உண்மையிலே தமிழ் மக்களுக்கு ஏதாவது தீர்வு பெற முயன்றால் உங்கள் மீதான வழக்குகள் தூசு தட்டப்படும். நீங்கள் மீண்டும் பணாகொட இராணுவ முகாமில் அடைக்கப்படுவீர்கள். முன்பு நடந்ததுபோல் அங்கு கணுக்கால் நீரில் நிர்வாணமாக நீச்சல் அடிக்க வைக்கப்படுவீர்கள்.
"அகிம்சை போராட்ட மூலமோ அல்லது தேர்தல் பாதை மூலமோ தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் பெற முடியாது. ஆயுதம் ஏந்திய போராட்ட பாதை மூலமே தீர்வு பெற முடியும்." இதனை நீங்களே முன்பு மக்களுக்கு கூறினீர்கள். அந்த வரிகளை மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

ஜே.வி.பி- "மாக்சிய" இனவாதிகள்?

• ஜே.வி.பி- "மாக்சிய" இனவாதிகள்?
தமிழீழத்தை பிரிவினை என்று எதிர்த்தார்கள்
சமஸ்டியையும் பிரிவினை என்று எதிர்க்கின்றார்கள்.
வட- கிழக்கு மாகாண சபையை வழக்கு போட்டு பிரித்தார்கள்
யுத்தத்திற்கு பங்கர் வெட்டிக் கொடுத்தார்கள்
ராணுவத்திற்கு ஆள் சேர்த்துக் கொடுத்தார்கள்
மகிந்தவின் இன அழிப்பக்கு துணை போனார்கள்
இத்தனையும் செய்துவிட்டு கொஞ்சம்கூட கூச்சமின்றி
தங்களை "மாக்சியவாதிகள்" என்று அழைக்கிறார்கள்.
தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இவர்கள் "மாக்சியவாதிகள்" என்றால், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை முன்வைத்த கால்மாக்ஸ் இனவாதியா?
ஜே.வி.பி பற்றி தோழர் சண்முகதாசன் கூறியது,
"ஜே.வி.பி நடத்திய வகுப்புவாத பிரச்சாரம் பற்றி சந்தேகத்திற்கு இடமில்லை. மலையக தமிழர்கள் இந்திய விஸ்தரிப்புவாதிகளின் பகடைக்காய்கள் என்று அவர்களுடைய ஜந்தாவது விரிவுரை கூறியது. ஜே.வி.பி புதியதோர் கலவையைச் செய்தது. அது வகுப்புவாதத்துடன் பரட்சிகர வார்த்தைகளைக் கலந்தது." ( பக்-239. ஓரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்)
அன்று தோழர் சண்முகதாசன் கூறியது உண்மைதான் என்பதை தற்போது ஜே.வி.பியினர் நன்கு நிரூபித்து வருகின்றனர்.
இதுவரை
மாக்சிய "சந்தர்ப்பவாதிகள"; அறிந்திருக்கிறோம்.
மாக்சிய "திரிபுவாதிகள்" அறிந்திருக்கிறோம்
மாக்சிய "சீர்திருத்தவாதிகள்" அறிந்திருக்கிறோம்.
ஆனால் இப்பொது ஜே.வி.பி மூலம்
மாக்சிய "இனவாதிகள்" அறிகிறோம்.

• எதற்காக சோ. அய்யரை எல்லோரும் சென்று பார்வையிடுகிறார்கள்?

• எதற்காக சோ. அய்யரை எல்லோரும் சென்று பார்வையிடுகிறார்கள்?
சோ.அய்யர் ஒரு முன்னாள் கமெடியன் நடிகர். கோர்ட்டுக்கு போகாத வக்கீல். பலரும் படிக்காத "துக்ளக்" பத்திரிகை ஆசிரியர்.
ஆனால் அவரை எல்லா அரசியல்வாதிகளும் போட்டீ போட்டு சென்று சந்திப்பது ஏன்?
தள்ளாத வயதிலும் கலைஞர் சென்று சந்தித்து நலம் விசாரிக்கிறார்.
பிரதமர் மோடி இந்தியாவில் இருப்பதே அரிது. அந்த அரிதான வேளையிலும் ஓடோடி வந்து மருத்துவமனையில் பார்வையிடுகிறார்.
முதலமைச்சர் ஜெயா அம்மையாருக்கு அப்துல் கலாம் மரணத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு சுகயீனமாம். ஆனால் அத்தனை சுகயீனத்தின் மத்தியிலும் சோ அய்யரை சென்று பார்வையிடுகிறார்.
ஏனெனில் சோ அய்யர் செய்வது தமிழின அழிப்பு மட்டுமல்ல அரசியல் புரோக்கரும் கூடவே.
அதனால்தான்; அவரால் சசிகலாவின் சாராய ஆலையில் பங்குதாராக இருந்துகொண்டு மதுவிலக்கு சாத்தியமில்லை என எழுத முடிகிறது.
ஜே.அர் ஜெயவர்த்தனா மற்றும் மகிந்த ராஜபக்சவிடம் அன்பளிப்பு பெறற்றுக்கொண்டு தமிழ் போராளிகளை பயங்கரவாதிகள் என எழுத முடிகிறது.
கொலைகாரன் காஞ்சிப் பெரியவரை தண்டிக்கக்கூடாது என குரல் கொடுக்கும் அதேவேளை அப்பாவி பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது என எழுத முடிகிறது.
தனது மரண படுக்கையிலும் தமிழின அழிப்பை முழு மூச்சாக கொண்டு இயங்கும் சோ .அய்யரின் மூச்ச இன்னும் ஏன் அடங்கவில்லை என தமிழினம் பெரு மூச்சு விடுகிறது.

"இறுதியில் நாம் எதிரிகளின் வார்த்தைகளை நினைவு வைத்துக்கொள்ளப் போவதில்லை. ஆனால் நமது நண்பர்களின் மௌனத்தை நினைவில் வைத்திருப்போம்" - மார்டின் லூதர் கிங்

"இறுதியில் நாம் எதிரிகளின் வார்த்தைகளை நினைவு வைத்துக்கொள்ளப் போவதில்லை. ஆனால் நமது நண்பர்களின் மௌனத்தை நினைவில் வைத்திருப்போம்" - மார்டின் லூதர் கிங்
எமது தமிழ் இளைஞர்கள் இன்னும் விடுதலை செய்யப்படாமைக்காக மகிந்தவை நாம் நினைவில் வைத்துக்கொள்ளப்போவதில்லை. ஆனால் இந்த இளைஞர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்காமல் மௌனம் காக்கும் சம்பந்தர் அய்யாவை நினைவில் வைத்திருப்போம்.
எமது மக்கள் இன்னும் மீள் குடியேற்றம் செய்யப்படாமைக்காக சிங்கள இனவெறி அரசை நாம் நினைவு வைத்தக்கொள்ளப் போவதில்லை. ஆனால் இந்த அகதி மக்களின் மீள் குடியேற்றத்திற்கு குரல் கொடுக்காமல் மௌனம் காக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பினரை நினைவில் வைத்திருப்போம்.
காணாமல் போனோர் பற்றி காலில் விழுந்து கெஞ்சினாலும் அது குறித்து அக்கறையின்றி இருக்கும் ரணில் அவர்களை நாம் நினைவு வைத்தக்கொள்ளப் போவதில்லை. அனால் இது பற்றி கள்ள மௌனம் சாதிக்கும் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரனை நினைவில் வைத்திருப்போம்.

அவர்தான் "மாமனிதர்" தோழர் தமிழரசன் !

• தன்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைப்பவன் மனிதன். ஆனால் தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையும் பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன்- மாமேதை காரல் மாக்ஸ்
தனகென்று வாழாமல் தமிழ் மக்களுக்காக வாழ்ந்தவர்
தனக்கென்று உழைக்காமல் தமிழ் மக்களுக்காக உழைத்தவர்
தமிழ் மக்களுக்காக தன் உயிரை அர்ப்பணித்தவர்
அவர்தான் "மாமனிதர்" தோழர் தமிழரசன் !
மூன்று மீற்றர் கயிற்றில் கட்டியிருந்த மாட்டை அவிழ்த்து பத்து மீற்றர் கயிற்றில் கட்டிவிட்டு போனான் ஒருவன். மாடு மா, மா என்று கத்தியது , தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று.
தமிழக மாடுகளும் மன்னிக்கவும் மக்களும் தமக்கு கிடைத்த சட்டசபையை வைத்துக்கொண்டு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கற்பனையில் மிதக்கிறார்கள்.
ஆனால் தாங்கள் அடிமையாக இருப்பதால்தான் ஈழத் தமிழின அழிவை தடுக்க முடியவில்லை என்பதை மட்டுமல்ல, தமது காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளைக்கூட தீர்க்க முடியவில்லை என்பதையும் அவர்களால் உணர முடியவில்லை.
எனவேதான் "ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்" என்று தோழர் தமிழரசன் கூறினார்.
தமிழக மக்கள் விடுதலை பெற்று வாழ வேண்டும் என்று கூறியதாலேயே தோழர் தமிழரசன் தமிழக காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டார்.
தோழர் தமிழரசனைக் கொன்று விட்டு தமிழக விடுதலையை நசுக்கி விட்டதாக தமிழக அரசும் அதன் காவல்துறையும் கனவு கண்டது.
ஆனால் தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. அவர் விதைக்கப்பட்டார்; என்பதை நிரூபிக்கும் வண்ணம் அவரில் இருந்து அயிரம் ஆயிரம் தமிழரசன்கள் முளைத் தெழுந்துள்ளார்கள்.
ஆம். 1984ம் ஆண்டு தமிழரசன் தமிழக விடுதலையை முன்வைத்த அதே பெண்ணாடம் நகரில் அவரின் தோழர்கள் இந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி ஒன்று கூடுகிறார்கள்.
தமிழின விடுதலையை விரும்புவர்களை அணிதிரண்டு வருமாறு அறைகூவல் விடுக்கின்றனர்.
வாருங்கள் தோழர்களே!
மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனை வழிகாட்டலில்
தோழர் தமிழரசன் முன்னெடுத்த பாதையில் செல்வோம்.

உதம்சிங்கிற்கு ஒரு நியாயம். தானுவிற்கு இன்னொரு நியாhயம். இதுதானா இந்திய நியாயம்?

• உதம்சிங்கிற்கு ஒரு நியாயம்.
தானுவிற்கு இன்னொரு நியாhயம்.
இதுதானா இந்திய நியாயம்?
பஞ்சாபில் 400 இந்தியர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட டயர் என்னும் ஆங்கிலேய அதிகாரியை இங்கிலாந்து சென்று சுட்டுக் கொன்றவர் உதம்சிங.
1940ல் இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்ட உதம்சிங் உடல் எச்சங்களை 1974ம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி இந்தியாவுக்கு எடுத்துவந்து அரச மரியாதையுடன் அடக்கம் செய்தார்.
இந்திய பிரதமர் , ஜனாதிபதி உட்பட பலரும் உதம்சிங் உடலுக்கு மரியாதை செலுத்தி அவரை மாபெரும் தியாகி என புகழாரம் சூட்டினார்கள்.
இலங்கையில் 7000 தமிழர்களைக்கொன்ற, 800 பெண்களை கற்பழித்த, இந்திய ராணுவத்தை அனுப்பிய ராஜீவ்காந்தியை இந்தியா சென்று தானு கொன்றார்.
உதம்சிங்கை மாபெரும் தியாகி என்று கௌரவித்த இந்திய அரசு தானுவை பயங்கரவாதி என்கிறது.
"என் சகோதரியின் கற்பு பறிபோகும்போது என்னால் நிச்சயமாக அகிம்சையைக் கடைப்பிடிக்க முடியாது" என்று இந்தியாவின் தாத்தா காந்தி கூறினார்.
ஆனால் 800 பெண்கள் கற்பழிக்கப்பட்டமைக்கு தானு என்ற பெண் ராஜீவை பழிவாங்கினால் அதை பயங்கரவாதம் என இந்திய அரசு அழைக்கிறது.
இந்திரா காந்தியின் கொலையை அடுத்து இந்தியா வெங்கும் 5000 அப்பாவி சீக்கியர் கொல்லப்பட்டார்கள். அதற்கு பிரதமர் மோடி சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஆனால் 7000 அப்பாவி தமிழர்கள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டமைக்கு இதுவரை மன்னிப்பு கோராதது மட்டுமல்ல ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யக்கூடாது என மோடி அரசு உச்ச நீதிமன்றில் வாதாடுகிறது.
சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரியதுடன் அவர்களுக்கு ஆட்சியிலும் பிரதமர் பதவி வழங்கப்படுகிறது. ஆனால் தமிழர்களிடம் மன்னிப்பு கோராதது மட்டுமல்ல தொடர்ந்தும் தமிழினம் நசுக்கப்படுகிறது.
இதற்கு காரணம் என்ன?
தமிழினம் அடிமையாக இருப்பதால்தானே இந்திய அரசு அதன் முதுகில் ஏறி சவாரி செய்கிறது!
தமிழினம் விடுதலை பெற்று சுதந்திரமாக இருந்தால் இந் நிலை வந்திருக்குமா?
தோழர் தமிழரசன் பாதையில் தமிழ்நாடு தனிநாடானால்....!

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டால் மகிழ்ச்சி விடுதலை செய்யப்படாவிடின் பெரு மகிழ்ச்சி!

• பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டால் மகிழ்ச்சி
விடுதலை செய்யப்படாவிடின் பெரு மகிழ்ச்சி!
இந்திராகாந்தியை கொன்றவரை தியாகி என சீக்கிய மதபீடம் அறிவித்துள்ளது. இந்திய அரசு சீக்கிய மதத்தை தடை செய்யவுமில்லை. அதன் தலைவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கவுமில்லை.
மாறாக சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கோரியதுடன் சீக்கிய இனத்தவருக்கு பிரதமர் பதவியும் வழங்கியுள்ளது.
ஆனால், இது என்ன நியாயம்? எனக்கேட்ட தமிழர்கள் "புலிகள் ஆதரவாளர்கள்" என்று சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அகதிகள் சிறப்புமுகாமில் அடைக்கப்படுகிறார்கள்.
பேரறிவாளன் வாக்குமூலத்தை தான் திருத்தி எழுதினேன் என்று விசாரணை அதிகாரி கூறிய பின்பும்கூட அவரை விடுதலை செய்ய இந்திய அரசு மறுக்கிறது.
காங்கிரசும,; பி.ஜே.பி அரசும் இழைத்த துரோகங்களினால் இந்திய அரசு மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.
உச்ச நீதிமன்றமும் பேரறிவாளனுக்குரிய நீதியை வழங்க மறுத்தால் தமிழ் மக்கள் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையையும் இழப்பார்கள்.
இந்திய அரசு மீதும், இந்திய நீதிமன்றத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழப்பார்களேயானால் அது தமிழ்நாடு தனிநாடாகுவதற்கு வழி வகுக்கும்.
எனவே தமிழ்நாடு விடுதலைக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு வழி வகுக்குமாயின் அது பெரு மகிழ்வுக்குரியதே!

ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்- தோழர் தமிழரசன்

• ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்- தோழர் தமிழரசன்
வர்க்கப் போராட்டத்தின் ஒரு சிக்கல்கூட வன்முறையின்றி தீர்க்கப்ட்டதாக வரலாறே இல்லை என்று மாபெரும் ஆசான் லெனின் கூறுகிறார்.
ஆனால் 2016ல் ஒரு தமிழன் முதலமைச்சரானால் தமிழீழம் அமையும் என்று "நாம்தமிழர் " சீமான் கூறுகிறார்.
அடக்குமுறையான முதலாளித்துவ அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்கிறார் தோழர் சண்முகதாசன்.
ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவதன் மூலம் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு காணலாம் என்று சீமான் கனவு காண்கிறார்.
அடிமையாக இருக்கும் தமிழக மக்கள் விடுதலைக்காக போராடுவதே ஈழத் தமிழருக்கு செய்யும் உதவியாகும் என்று தோழர் தமிழரசன் கூறினார்.

மீள்பதிவு-1

மீள்பதிவு-1
(செப்-1 பெண்ணாடம் ஈகியர் மாநாட்டை முன்னிட்டு மீள்பதிவு செய்யப்படுகிறது)
• மக்களோடு சேர்ந்து உழையுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்!
-தோழர்மாவோசேதுங்
1984ல் மலையாளப்பட்டியில் அமைந்திருந்த அரசியல் பயிற்சி முகாமில் எமது தோழர்களுக்கு தோழர் தமிழரசன் அவர்கள் மாக்சிய தத்துவங்களை போதித்தார். அப்போது ஒரு நாள் பெரம்பலூருக்கு அருகில் இருந்த மிகவும் வறிய மக்களின் அழைப்பின் பேரில் சில தோழர்களை அழைத்துக்கொண்டு சென்றார்.
அந்த மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகவும் கஸ்டப்படுபவர்கள். இருப்பினும் அவர்கள் ஈழப்போராளிகளுக்கு உணவு வழங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதனால் தோழர் தமிழரசன் எமது தோழர்களை அழைத்து சென்றார்.
உணவு உண்பதற்கு முன்னர் எல்லோரும் குளத்தில் குளிக்கலாம் என்று தமிழரசன் கூறினார். இதைக் கேட்டதும் எமது தோழர்கள் மிகவும் மகிழ்வு கொண்டு குளத்தை நோக்கி ஓடினார்கள். மிகவும் ஆர்வமுடன் குளிப்பதற்காக ஒடியவர்கள் குளிக்காமல் குளக்கரையில் நிற்பதைக் கண்ட தோழர் தமிழரசன் ஆச்சரியத்துடன் ஏன் என்று வினவினார்.
எமது தோழர்கள் என்னதான் பாட்டாளி வர்க்க சிந்தனை கொண்டிருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்தவர்கள். எனவே அவர்களின் உணவு உடை பழக்க வழக்கங்களில் அந்த வர்க்க குணாம்சம் இருக்கவே செய்தது.
அந்த குளம் குட்டையாகவே இருந்தது. கால் பாதம் நனையும் அளவிற்கே தண்ணீர் இருந்தது. அதுவும் கலங்கி மஞ்சள் நிறத்தில் இருந்தது. அதில் ஒரு புறத்தில் எருமைகள் கிடந்து புரண்டு கொண்டிருந்தன. பன்றிகள் குட்டிகளுடன் நடமாடிக் கொண்டிருந்தன.
இதைப் பார்த்த எமது தோழர்கள் அருவருத்து குளிப்பதற்கு தயங்கினர். இதைப் பரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “ மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று மாவோ கூறினார் “ என்று சொல்லிக்கொண்டு தான் முதலில் தண்ணீரில் இறங்கி குளித்தார்.
மாவோ வின் வரிகளைக் கேட்தும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட எமது தோழர்கள் “புரட்சி ஓங்குக” என்று உரத்து கோசம் இட்டவாறு ஒவ்வொருவராக குளத்தில் குதித்து விளையாடினர்.
பின்பு சாப்பிடுவதற்காக அந்த மக்களின் வீடுகளுக்கு சென்றபோது அங்கு இலையில் சோறும் சுண்டெலிக் கறியும் வைக்கப்பட்டிருந்தது. எலிக்கறி அதுவும் அதன் தலையுடன் பார்த்ததும் எமது தோழர்களுக்கு வாந்தி வராத குறை. யாருமே சாப்பிட வில்லை. இதைப் புரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “அந்த மக்கள் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கே சோறு சாப்பிடுவார்கள். அந்தளவுக்கு சோறே அம் மக்களுக்கு மிகவும் உயர்ந்த சாப்பாடு. அதை உங்களுக்கு தந்திருக்கிறார்கள். நீங்கள் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள” என்றார். தோழர்கள் புரிந்து கொண்டனர். இம்முறை தோழர்களே மாவோ வின் வரிகளை உரத்து கூறிக்கொண்டு சாப்பிட்டார்கள்.
என்ன வேடிக்கை என்றால் முதலில் சாப்பிட தயங்கியவர்கள் சாப்பிட்டு சுவை பிடித்துக்கொள்ள மேலும் மேலும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். அந்த மக்களும் மிக்க மகிழ்வோடு உணவு பரிமாறினார்கள். உணவு முடிந்த பின்பு அவர்களும் எமது தோழர்களும் மாறி மாறி சில பாடல்கள் பாடியும் மற்றும் நடிப்புகள் செய்து காட்டியும் அனைவரையும் மகிழ்வுறச் செய்தார்கள்.
இந்த சம்பவத்திற்கு பின்பு எமது தோழர்கள் எப்போதும் தோழர் தமிழரசனை இந்த மாவோவின் வரிகளை உரத்து உச்சரித்து கிண்டல் செய்வார்கள். அவரும் நன்றாக சிரித்து நகைச்சுவை செய்வார்.

• தமிழக தலைவர்களால் ஏன் வழி காட்ட முடியவில்லை?

• தமிழக தலைவர்களால் ஏன் வழி காட்ட முடியவில்லை?
நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக தலைவர்கள் இதுவரை கருத்து கூறாதது ஆச்சரியமாக இருக்கிறது.
தான் சாவதற்குள் தமிழீழத்தைக் காண வேண்டும் என்று டெசோ மாநாடு நடத்தும் கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்கள் இந்த தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏன் இன்னும் கூறவில்லை?
இராணுவத்தை அனுப்பி ஈழத்தை பெற்றுக்கொடுப்பேன் என்று கூறி ஈழத்தாய் பட்டம் பெற்றிருக்கும் ஜெயா அம்மையார் தேர்தலில் ஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஏன் வழிகாட்டவில்லை?
2016ல் சட்டசபையை கைப்பற்றி தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கவிருக்கும் "நாம் தமிழர்" சீமான் அவர்கள் அதற்குமுன்னர் ஈழத் தமிழர்கள் தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்று கூறக்கூடாதா?
வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எல்லாம் ஏன் மௌனம் காக்கின்றார்கள்?
இவர்களுக்கு ஈழத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இல்லையா? அல்லது தமது கூற்றுக்கு எந்த மதிப்பும் ஈழத் தமிழர் மத்தியில் கிடைக்காது என்று எண்ணுகிறார்களா?
இவர்கள் எல்லாம் ஈழத்தமிழருக்கு தமிழீழம் மட்டுமே தீர்வு என்கிறார்கள். ஆனால் தேர்தலில் போட்டி போடும் எந்தவொரு கட்சியுமே தமிழீழ தீர்வை முன்வைக்கவில்லை.
அதுமட்டுமன்றி போட்டி போடும் எந்தவொரு கட்சியுமே தமிழக தலைவர்களின் ஆதரவையோ உதவியையோ இதுவரை கோரவில்லை.
தீக் குளிப்தற்கு தமிழக தமிழர்கள் தேவை
போராடுவதற்கு தமிழக மாணவர்கள் தேவை
ஜ.நா மனுவில் கையொப்பம் இட தமிழகம் தேவை
உலகில் குரல் கொடுக்க தமிழக தலைவர்கள் தேவை.
ஆனால் தேர்தலில் வழிகாட்ட தமிழகம் தேவையில்லையா?
ஈழத் தமிழ் வேட்பாளர்களே! இது நியாயமா?

"வந்தே மாதரமா?" அல்லது "வந்தே ஏமாத்திறமா?"

 "வந்தே மாதரமா?" அல்லது "வந்தே ஏமாத்திறமா?"
இன்று இந்தியாவின் சுதந்திரதினமாம். அனைவருக்கும் மிட்டாய் வழங்கி "வந்தேமாதரம்" பாடுகிறார்கள்.
ஆனால் தமிழருக்கு உண்மையில இந்தியாவில்; சுதந்திரம் இருக்கிறதா?
மூன்று முழக் கயிற்றால் கட்டப்பட்ட மாட்டிற்கு 10 முழக் கயிற்றால் கட்டியபோது அந்த மாடு தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கத்தினால் அது எந்தளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள்தனமானது இந்தியாவில் தமிழர்கள் தமக்கு சுதந்திரம் கிடைத்தவிட்டது என மிட்டாய் வழங்கி வந்தேமாதரம் பாடுவது.
வெள்ளைக்காரன் காலத்தில் தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட வரித்தொகை ஒரு வருடத்தில் சுமார் 350 கோடி ரூபா. ஆனால் தற்போது கொள்ளைக்கார இந்திய மத்திய அரசு தமிழகத்தில் வச+லிக்கும் வரி கடந்த ஆண்டு மட்டும் 85000கோடி ரூபா.
85000கோடி ரூபா வரியாக வசூலிக்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி உதவியாக கொடுக்கும் பணம் 28000கோடி ருபா மட்டுமே. அதிலும் அடுத்த அண்டு முதல் 6000கோடி ரூபா குறைக்கப்படவிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு தமிழகத்தில் இருந்து 57000கோடி ரூபா வரியாக பெற்றுக்கொள்கிறது.
அதேவேளை தமிழக அரசின் இன்றைய கடன் 1.21லட்சம் கோடி ரூபா. இதற்கு வட்டியாக 10754 கோடி ரூபா தமிழக அரசு கட்டுகிறது. ஒவ்வொரு தமிழன் தலையிலும் 13862 ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது. அதாவது பிறக்கும் ஒவ்வொரு தமிழக்; குழந்தையும் 13862ரூபா கடனுடனே பிறக்கின்றது.
வருடம் 57000கோடி ரூபாவை தமிழகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு அந்த பணத்தில் இருந்தே தமிழ் மீனவனை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படைக்கு பயிற்சி அளிக்கிறது.
தமிழகத்தில் இருந்து பெற்றக் கொள்ளும் நிதியில் இருந்தே தமிழர்களை கொன்றொழித்த இலங்கை ராணவத்திற்க உதவி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் தமிழர்களிடமிருந்து பெறப்படும் நிதியில் இருந்தே இந்திய அரசு இலங்கை அரசின் துண்டு விழும் பட்ஜட் நிதிக்கு கடன் கொடுத்து காப்பாற்றுகின்றது.
உலகில் தன்னை கொல்லும் கடற்படைக்கு தானே நிதி வழங்கிய தமிழக தமிழர்களின் அறியாமையை என்னவென்று அழைப்பது?
தமிழ் இனத்தை அழிக்கும் இலங்கை அரசுக்கு நிதி வழங்கும் தமிழக தமிழர்களின் அடிமைத்தனத்தை என்னவென்பது?
இப்போது கூறுங்கள் தமிழர்களே!
இந்தியாவில் தமழிழக தமிழனுக்கு உண்மையில் சுதந்திரம் கிடைத்தவிட்டதா?

• 1000கோடி ருபா செலவில் நடக்கும் தேர்தல் திருவிழா!

• 1000கோடி ருபா செலவில் நடக்கும் தேர்தல் திருவிழா!
அடக்குமுறையான முதலாளித்துவ அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது - தோழர் சண்முகதாசன்.
225 எம்.பி பதவிகளுக்கு 6124 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பதவியை பிடிப்பதற்காக ஒவ்வொரு வேட்பாளரும் சராசரி 10 லட்சம் ரூபாவுக்கு மேல் செலவு செய்கின்றனர். எனவே மொத்தம் 600 கோடி ருபாவுக்கு மேல் செலவாகிறது.
தேர்தலை நடத்த அரசு 400 கோடி ருபாவுக்கு மேல் செலவு செய்கிறது. ஆக மொத்தம் ஒரு தேர்தலில் 1000 கோடி ருபாவுக்கு அதிகமாக பணம் விரயமாகிறது.
தெரிவு செய்யப்படும் எம்.பி யின் சம்பளம் மாதம் 1லட்சத்து 20 ஆயிரம் ரூபா. அவர் தான் செலவு செய்த 10 லட்சம் ரூபா பணத்தை ஒரு வருடத்திற்குள் சம்பாதித்துவிடுவார். அதன் பின் நாலு வருட சம்பளம் மற்றும் பென்சன் , வாகன பெர்மிட் மூலம் ஒரு கோடி ரூபா எல்லாம் மேலதிக வருமானம் ஆகும்.
அரசியலில் இவ்வாறு இலகுவாக பல கோடி ருபா சம்பாதிக்க முடியும் என்பதால்தான்; எல்லொரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். எம்.பி பதவி பெறுவதற்கு அலைகின்றனர்.
இவ் அரசியல்வாதிகள் தாம் பதவி பெறுவதற்காக மக்களை ஏமாற்றுகின்றனர். போலி வாக்குறுதிகளை வழங்குகின்றனர். மக்களுக்கு சேவை செய்யவே தாம் தேர்தலில் போட்டியிடுவதாக நாடகம் ஆடுகின்றனர்.
இந்த நாடகத்தை இவர்கள் இந்த முறை மட்டும் போடவில்லை. மாறாக 1948 முதல் பல வருடங்களாக போட்டு வருகின்றனர். ஆனால் மக்கள் இதனை உணர்ந்து கொள்ளாது தொடர்ந்தும் ஏமாறி வருகின்றனர்.
"வர்க்கப் போராட்டத்தின் ஒரு சிக்கல்கூட வன்முறையின்றி தீர்க்கப்பட்டதாக வரலாறு இல்லை" என்று ஆசான் தோழர் லெனின் கூறுகிறார். ஆனால் தேர்தல் மூலம் தமிழ் மக்களின் பிரச்சனை தீர்ப்போம் என தமிழ் அரசியல்வாதிகள் ஏமாற்றுகின்றனர்.
புலிகள் தமது ஆயுதங்களையே மௌனித்தார்களேயொழிய ஆயதப் போராட்டத்தை மௌனிக்கவில்லை.
புலிகள் தமது ஆயுதங்களை மௌனித்தது ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்து விட்டது என்று அர்த்தம் அல்ல.
ஆயுதப் போராட்டம் இன்னும் வெற்றி பெறாமல் இருக்கலாம். ஆனால் அதன் அர்த்தம் தோல்வி என்று அல்ல. ஏனெனில் விடுதலைப் போராட்டத்திற்கு தோல்வி என்பதே இல்லை.
தேர்தல்பாதை, அகிம்சை பாதை எல்லாம் பயனற்ற நிலையிலேயே தமிழ் இளைஞர்கள் ஆயதம் ஏந்தினார்கள்.
தமிழ் இளைஞர்கள் என்ன காரணத்திற்காக ஆயதம் ஏந்தினார்களோ அதில் ஒன்றுகூட இதுவரை தீர்க்கப்படவில்லை.
எனவே தமிழ்மக்கள் தொடர்ந்தும் ஆயுதம் ஏந்திப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

• மக்களுக்கு கற்றுக் கொடுப்போம்! மக்களிடமிருந்து கற்றுக் கொள்வோம்!

• மக்களுக்கு கற்றுக் கொடுப்போம்!
மக்களிடமிருந்து கற்றுக் கொள்வோம்!
யுத்த வெற்றியுடன் இனவாதத்தையும் கக்கி பிரதமர் பதவியைப் பிடிக்க மகிந்த போட்ட திட்டத்தை மக்கள் தோற்கடித்துள்ளார்கள்.
யுத்தத்தை நடத்திய சரத்பொன்சேகா குடும்பத்துடன் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
யுத்தத்திற்கு பங்கர் வெட்டி உதவி புரிந்த ஜே.வி.பி கட்சியும்; தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட 115 புத்த பிக்குகளில் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை.
நடந்து முடிந்த தேர்தலில் இனவாதிகளுக்கு சிங்கள மக்கள் தகுந்த பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
இந்த படிப்பினையைவிட சிறந்த ஆசான் இந்த உலகில் வேறு உண்டா?
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு வருடத்திற்கள் தீர்வு பெற்று தரப்படும் என்று கூறிய தமிழ்தேசியகூட்டமைப்பிற்கு முழு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.
வாக்குறுதி வழங்கியபடி ஒரு வருடத்திற்குள் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையேல் அடுத்த தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களால் நிச்சயம் நிராகரிக்கப்படும்.
தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கும் வீதம் குறைந்து வருகிறது. குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த விகிதத்தைவிட பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைந்துள்ளது.
வாக்களிப்பு வீதம் குறைந்து வருவது பாராளுமன்ற தேர்தல் பாதையில் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதையே காட்டுகிறது.
தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் வழங்காமல் தொடர்ந்தும் நசுக்கப்படுமாயின் அடக்கு முறைக்கு எதிராக தமிழ் மக்கள் நிச்சயம் கிளர்ந்து எழுவார்கள்.
மற்ற நாடுகள் போன்று இலங்கையிலும் சிறுவர்கள் ராணுவத்திற்கு எதிராக கல் எறியும் போராட்டம்; வெடிக்கும். அந்த போராட்டம் மக்களின் ஆயுதப் போராட்டமாக மாறும்.
வன்முறையின்றி எந்த தீர்வும் கிடைக்காது என்பதை புரட்சியாளர்கள் மக்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஆறுதல் அளிக்கும் ஆதரவு

 ஆறுதல் அளிக்கும் ஆதரவு
தமிழ்நாட்டில் உள்ள சிறப்புமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியதுடன் அக் கொடுமைக்கு எதிராக போராட்டம் நடத்தவிருப்பதாக வேல்முருகன் அறிவித்துள்ளார்.
ஈழத் தமிழ் தலைவர்களே இந்த அகதிகளை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள வேல்முருகன் அவர்கள் குரல் கொடுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யா எத்தனையோ தடவை டில்லி சென்று இந்தியப் பிரதமரை சந்திக்கின்றார். ஆனால் ஒருமுறைகூட சிறப்பு மகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படி கோரியதில்லை.
மாவை சேனாதிராசா குடும்பத்துடன் சென்னையில்தான் வாழ்ந்து வருகிறார். ஆனால் ஒருமுறைகூட இந்த அகதிகளை சென்று பார்வையிடாதது மட்டுமன்றி இவர்களின் விடுதலைக்கு குரல்கூட கொடுத்ததில்லை.
மன்னார் எம்.பி செல்வம் அடைக்கலநாதன் குடும்பத்துடன் திருச்சியில் குடியிருக்கிறார். இவர் முன்னர் புதுக்கோட்டை சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டவர். சிறப்புமுகாம் கொடுமைகளை இவரும் அனுபவித்தவர். ஆனால் இவர் இந்த சிறப்புமுகாம்களை மூடும்படியோ அல்லது அதில் அடைத்து வைக்கப்ட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படியோ இதுவரை ஒருமுறைகூட கேட்டதில்லை.
வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழகம் சென்றபோது தமிழகத்தில் வெளிமுகாம்களில் இருக்கும் அகதிகளை இலங்கை அனுப்பி வைக்குமாறு இந்திய அரசிடம் கோரினார். ஆனால் அவரும்கூட சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரவில்லை.
ஊழல் செய்த ஜெயா அம்மையாரை விடுதலை செய்யும்படி கோரிய நாடுகடந்த தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமார், சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரவில்லை.
இவ்வாறு ஈழத் தமிழ் தலைவர்களே ஈழ அகதிகளை மறந்துவிட்ட நிலையில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரியதுடன் அதற்காக போராட்டம் நடத்தப் போவதாக வேல்முருகன் அவர்கள் அறிவித்திருப்பது உண்மையிலே அவ் அகதிகளுக்கு அறுதல் அளிக்கும் செய்தியாகும்.
வேல்முருகன் அவர்களின் ஆதரவு ஈழத் தமிழ் மக்களால் என்றும் நன்றியுடன் நினைவு கூரப்படும்.

சிறப்புமுகாம்களை மூடக்கோரி வேல்முருகன் போராடுகிறார்.

• சிறப்புமுகாம்களை மூடக்கோரி வேல்முருகன் போராடுகிறார்.
மற்ற தலைவர்களும் இதேபோல் போராடுவார்களா?
அகதிகளுக்கு இனியாவது விடுதலை கிடைக்குமா?
தமிழகத்தில் சிறப்புமுகாம்களை உடனடியாக மூடி அதில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரி தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளார்.
திருச்சி சிறப்புமுகாமை முற்றுகையிட்ட வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து 1252பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெட்டவார்த்தையில் திட்டிய அதிகாரி -
இந்த போராட்டத்தின் போது காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர்,முன்னாள் எம்.எல்.ஏ..காவேரியை பார்த்து ஹிந்தியில் மொழியில் கெட்ட வார்த்தையில் திட்டினார். இதனால் வாழ்வுரிமை கட்சியினருக்கும், துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூருக்கும் இடையே பயங்கர வாக்கு வாதம் ஏற்பட்டது.
ஒரு முன்னாள் எம்.எல்.ஏ யையே கெட்ட வார்த்தைகளால் இந்த காவல்துறை அதிகாரிகள் திட்டுகிறார்கள் எனில் கேட்பதற்கு யாருமற்ற அகதிகளை எப்படி திட்டுவார்கள் என்பதை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
இந்த அவல நிலையில் இருந்து அகதிகள் விடுதலை பெறவேண்டும். சிறப்புமுகாம் கொடுமைகள் முற்றுப்பெற வேண்டும்.
இவ்வேளையில் அனைத்து தலைவர்களும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். குறிப்பாக ஈழத் தமிழர்களின் தலைவர்களான சம்பந்தர் அய்யா மாவை சேனாதிராசா போன்றவர்கள் இதற்காக மத்திய மாநில அரசுகளுடன் பேச வேண்டும்.

• தோழர் தமிழரசன் தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் எனக் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது?

• தோழர் தமிழரசன் தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் எனக் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது?
இந்திய மத்திய அரசு தமிழகத்தில் வச+லிக்கும் வரி கடந்த ஆண்டு மட்டும் 85000கோடி ரூபா.
மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி உதவியாக கொடுக்கும் பணம் 28000கோடி ருபா மட்டுமே. அதிலும் அடுத்த அண்டு முதல் 6000கோடி ரூபா குறைக்கப்படவிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மத்திய அரசுக்கு 57000கோடி ரூபா வழங்கி வருகிறது.
அதேவேளை தமிழக அரசின் இன்றைய கடன் 1.21லட்சம் கோடி ரூபா. இதற்கு வட்டியாக 10754 கோடி ரூபா தமிழக அரசு கட்டுகிறது. ஒவ்வொரு தமிழன் தலையிலும் 13862 ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது. அதாவது பிறக்கும் ஒவ்வொரு தமிழக்; குழந்தையும் 13862ரூபா கடனுடனே பிறக்கின்றது.
வருடம் 57000கோடி ரூபாவை தமிழகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு அந்த பணத்தில் இருந்தே தமிழக மீனவனை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படைக்கு பயிற்சி அளிக்கிறது.
தமிழகத்தில் இருந்து பெற்றக் கொள்ளும் நிதியில் இருந்தே தமிழர்களை கொன்றொழித்த இலங்கை ராணவத்திற்க மத்திய அரசு உதவி வழங்கிவருகிறது.
தமிழகத்தில் தமிழர்களிடமிருந்து பெறப்படும் நிதியில் இருந்தே இந்திய அரசு இலங்கை அரசின் துண்டு விழும் பட்ஜட் நிதிக்கு கடன் கொடுத்து காப்பாற்றுகின்றது.
எனவே இந்திய அரசின் கீழ் இருப்பதால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. மாறாக நட்டமே ஏற்படுகிறது.
எனவே இந்திய அரசிடமிருந்து தமிழகம் விடுதலை பெற்றால் 57000கோடி ரூபாவையும் தமிழக வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும் அல்லவா!
தமிழகம் விடுதலை அடைந்தால்
தமிழக கடனை முற்றாக நீக்க முடியும்.
ஈழத் தமிழர்களையும் காப்பாற்ற முடியும்.
இதனையே அன்று தோழர் தமிழரசன் சிந்தித்தார். அவர் அவ்வாறு சிந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது?
தமிழன் அடிமை நிலையில் இருக்கிறான். அவன் விடுதலை பெற வேண்டும் என அவர் குரல் கொடுத்தது தவறா?
அவ்வாறு கேட்டதற்காக தோழர் தமிழரசனை இந்திய அரசு அடித்துக்கொல்ல வேண்டுமா?

• வாருங்கள் தோழர்களே பெண்ணாடத்திற்கு வீர வணக்கம் செலுத்துவோம் ஈகையர்களுக்கு!

• வாருங்கள் தோழர்களே பெண்ணாடத்திற்கு
வீர வணக்கம் செலுத்துவோம் ஈகையர்களுக்கு!
செப்-1 தோழர் தமிழரசன் நினைவு தினம்.
1984ம் ஆண்டு பெண்ணாடத்தில் தோழர் தமிழரசன் மாநாடு நடத்தினார். அம் மாநாட்டிற்கு எம்மை அழைத்து சென்றார். 2015ல் மீண்டும் அதே பெண்ணாடத்தில் தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கம் செலுத்தும் மாநாடு நடக்கும் என அப்போது நாம் நினைத்திருக்கவில்லை.
தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார். அவரில் இருந்து ஆயிரம் ஆயிரம் தமிழரசன்கள் தோன்றியுள்ளார்கள்.
அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழினம் விடுதலை பெற வேண்டும் என தோழர் தமிழரசன் குரல் கொடுத்தார். அதனாலேயே அவர் இந்திய அரசின் காவல்துறை நாய்களால் அடித்தக் கொல்லப்பட்டார்.
தோழர் தமிழரசனைக் கொன்றுவிட்டு அவரது இலட்சியத்தை அழித்துவிட்டதாக இந்திய அரசு கனவு கண்டது.
அனால் இன்று அதே இடத்தில் ஆயிரமாயிரம் தமிழரசன்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்கள் தோழர் தமிழரசன் காட்டிய பாதையில் வீர நடை போடுகிறார்கள்.
வாருங்கள் தோழர்களே!
தோழர் தமிழரசனை நினைவு கூர்வோம்!
அவருக்கு வீர வணக்கம் செலுத்துவோம்!

சோ" அய்யரை நலம் விசாரித்த டாக்டர் அய்யா!

சோ" அய்யரை நலம் விசாரித்த டாக்டர் அய்யா!
பாம்பையும் பார்ப்பாணையும் கண்டால் பாம்பை விடு. பார்ப்பாணை அடி. ஏனெனில் பாம்பின் விஷத்தைவிட பார்ப்பான் கொடியவன்.- தந்தை பெரியார்.
சோ அய்யர் அவர்களை,
கலைஞர் கருணாநிதி சென்று பார்க்கிறாவ!
பிரதமர் மோடி சென்று பார்க்கிறாவ!
ஜெயா அம்மையார் சென்று பார்க்கிறாவ!
நம்ம டாக்டர் அய்யாவும் சென்று பார்க்கிறாவ!
இந்த கொடுமையை என்னவென்று சொல்வது?
"ஈழத் தமிழனை ஆதரிப்பேன். அதற்காக எட்டு அல்ல எண்பது வருட சிறையையும் சந்திப்பேன்" என்று ஒரு காலத்தில் முழங்கியவர் நம்ம டாக்டர் அய்யா ராமதாஸ் அவர்கள். (அவருடைய இந்த அறிக்கையை நம்பி அவரது வீட்டுக்கு உதவி கேட்டு சென்ற விடுதலைப் புலிப் போராளியை வீட்டுக்குள் இருந்துகொண்டே தான் இல்லை என்று பொய் கூறி அனுப்பியது இன்னொரு கதை.)
அண்மையில் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட ஒரு ஈழஅகதி தம்பதியினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழனுக்காக எண்பது வருடம் சிறையில் இருப்பேன் என்று அறிக்கைவிட்ட டாக்டர் அய்யா இவர்களை மருத்துவமனை சென்று பார்வையிடாதது மட்டுமன்றி இவர்களுக்கு நடந்த கொடுமைக்கு எதிராக ஒரு அறிக்கைகூட விடவில்லை.
ஆனால் வாழ்நாள் எல்லாம் தமிழினத்திற்கு எதிராக விஷத்தைக் கக்கிவரும் சோ அய்யர் அவர்களை சென்று பார்வையிட்டது மட்டுமன்றி அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்தும் அக்கறையுடன் விசாரித்தள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாம்பை விடக் கொடிய விஷமுள்ள ஒரு பார்ப்பாணை சென்று பார்வையிட்டு நலம் விசாரிக்கும் இவர்கள் எல்லாம் தமிழினத் தலைவர்களா?

இந்தியாவில் கருத்துரிமை இல்லையா?

 இந்தியாவில் கருத்துரிமை இல்லையா?
பெண்ணாடத்தில் ஈகையர் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி பெற்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் திடீரென்று காவல்துறை மாநாட்டிற்கு தடை விதித்துள்ளது.
இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்கிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த ஈகையர்களுக்கு நினைவுகூர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது என்ன நியாயம்? இதுதான் இந்திய ஜனநாயகமா?
தோழர் தமிழரசனைக் கொன்றுவிட்டு அவரது பாதையை அழித்துவிட்டதாக காவல்துறையினர் கனவு கண்டனர். ஆனால் இன்று ஆயிரமாயிரம் தமிழரசன்கள் உருவாகி அவரது பாதையில் பயணிக்கின்றார்கள்.
இது தமிழக காவல்துறைக்கு நடுக்கத்தைத் தோற்றுவித்துள்ளது. எனவேதான் அவசர அவசரமாக மாநாட்டை தடை செய்துள்ளார்கள்.
மாநாட்டை தடைசெய்வதால் ஈகையர் நினைவுகளை மக்களிடமிருந்து அகற்றிவிடலாம் என காவல்துறை நினைக்கிறது. ஆனால் மக்கள் இன்னும் பன்மடங்கு ஈகையர்களை போற்றுவார்கள்.
இறுதியாக ஒரு குறிப்பு- மாநாட்டை தடை செய்த தமிழக காவல்துறையினருக்கு நன்றிகள். ஏனெனில் மாநாடு நடைபெற்றிருந்தால் தமிழ்நாட்டில் மட்டுமே அதுகுறித்து தெரிந்திருக்கும். ஆனால் அதை தடை செய்ததன் மூலம் இந்தியாவெங்கும் அல்ல உலகத்திற்கே தெரியப்படுத்தியுள்ளார்.
எனவே ஓசி விளம்பரம் தந்த தமிழக காவல்துறையினருக்கு நன்றி. நன்றி. நன்றி.