Monday, August 31, 2015

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

• பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!
மதுக் கடைகளை மூடும் படி கேட்ட மாணவர்கள் மீது பொலிஸ் தடியடி.
மதுவை ஒழிக்கும்படி கேட்போர் மீது பிணையில் வராதபடி பொய் வழக்குகள்.
66 கோடி ரூபா மக்கள் பணத்தை ஊழல் செய்து நாலரை வருடம் தண்டனை பெற்றவரை முதலமைச்சர் பதவியில் உட்கார வைத்தமைக்கு அவர் தரும் பரிசு.
• சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்.
மாணவர்கள் திரண்டு எழுந்தால் ஆட்சி நிலைக்க முடியாது.
• மதுவிற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். ஆனால் தமிழக அரசு மக்களை அடக்க காவல் துறையை ஏவுகிறது.
மக்கள் போராட்டம் தோற்றதாக சரித்திரம் இல்லை.
மக்களை மதிக்காத அரசுகள் தூக்கியெறியப்பட்டதே வரலாறு.
ஜெயா அம்மையார் மீண்டும் சிறை செல்லும் நாள் விரைவில் வரும்.
மாணவர்களுடன் அனைத்து மக்களும் இணையட்டும்.
மதுவிற்கு எதிரான மக்கள் போராட்டம் வெற்றி பெறட்டும்!

No comments:

Post a Comment