Monday, August 31, 2015

• இவர்களின் அழு குரல் அரசியல்வாதிகளின் காதுகளுக்கு ஏன் கேட்பதில்லை?

• இவர்களின் அழு குரல் அரசியல்வாதிகளின் காதுகளுக்கு ஏன் கேட்பதில்லை?
ஒருவர் ஒரு வருடத்தில் தீர்வு என்கிறார்.
இன்னொருவர் ஒரு நாடு இரு தேசம் என்கிறார்.
மற்றொருவர் அதிக சீட் தந்தால் அதிக பேரம் பேசுவேன் என்கிறார்.
ஆனால் யாருமே இந்த காணாமல் போனவர்கள் பற்றி
எந்த தீர்வும் கூறுவதில்லையே?
இவர்கள் ஈழம் கேட்கவில்லை.
இவர்கள்; சமஸ்டி கேட்க வில்லை.
இவர்கள் கேட்பதெல்லாம் காணாமல் போன தமது உறவுகளை
கண்டு பிடித்துத் தாருங்கள் என்பதே!
இவர்களிடம் வாக்கு பிச்சை கேட்பவர்கள்
ஏன் தக்க பதில் கூற மறுக்கிறார்கள்?
காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க முடியாதவர்கள்
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய முடியாதவர்கள்
அகதிகளை மீள் குடியேற்றம் செய்ய முடியாதவர்கள்
ஒரு வருடத்தில் தீர்வு தருவார்கள் என்று எப்படி நம்புவது?
சமஸ்டி பெற்று தருவார்கள் என்று எப்படி நம்புவது?
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்
வானம் எறி வைகுண்டம் போவதை நம்ப முடியுமா?
தேர்தலுக்கு தேர்தல் மட்டும் மக்களை சந்தித்து
தமது பதவிக்காக பொய் வாக்குறுதி கொடுக்கும்
இந்த போலி அரசியல்வாதிகளை இனியும் நம்பலாமா?

No comments:

Post a Comment