Monday, August 31, 2015

ஜெயா அம்மையாரின் ஆட்சியால் தமிழகம் தலை குனிகிறது!

• ஜெயா அம்மையாரின் ஆட்சியால்
தமிழகம் தலை குனிகிறது!
இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே மதுக் கடைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கிய பெருமை தமிழ்நாடு அரசுக்கு மட்டுமே!
மதுவிற்கு எதிராக போராடிய மாணவர்களை தாக்கிவிட்டு மதுக் கடைகளுக்கு பாதுகாப்பு வழங்கியிருக்கும் ஒரே நாடு தமிழ்நாடு மட்டுமே!
மாணவிகளை பூட்ஸ் காலால் மிதித்தவிட்டு மதுக்கடைகளுக்கு பெண் காவலர்களை பாதுகாப்பிற்கு வழங்கியிருக்கும் ஒரே பெண் முதலமைச்சர் ஜெயா அம்மையார் மட்டுமே!
மதுவிற்கு எதிராக போராடிய சட்டக் கல்லூரி மாணவி நந்தினிக்கு வீட்டுக்காவல். மதுவிற்கு எதிராக போராடிய 9வயது சிறுவனையும் கைது செய்து வழக்கு போடும் ஒரே அரசு தமிழ்நாடு அரசு மட்டுமே!
இனி
"அம்மா" காவல் நிலையத்தில்
"அம்மா" டாக்ஸ்மார்க் பிரிவு தொடங்கப்படும்.
அங்கு "அம்மா" பியரை
"அம்மா" தொண்டன் பொலிஸ் காவலுடன் குடிப்பான்.
இது ஆச்சரியமில்லை. ஏனெனில்
தமிழ்நாட்டில் நடப்பது "அம்மா" ஆட்சியல்லவா!

No comments:

Post a Comment