Monday, August 31, 2015

"இறுதியில் நாம் எதிரிகளின் வார்த்தைகளை நினைவு வைத்துக்கொள்ளப் போவதில்லை. ஆனால் நமது நண்பர்களின் மௌனத்தை நினைவில் வைத்திருப்போம்" - மார்டின் லூதர் கிங்

"இறுதியில் நாம் எதிரிகளின் வார்த்தைகளை நினைவு வைத்துக்கொள்ளப் போவதில்லை. ஆனால் நமது நண்பர்களின் மௌனத்தை நினைவில் வைத்திருப்போம்" - மார்டின் லூதர் கிங்
எமது தமிழ் இளைஞர்கள் இன்னும் விடுதலை செய்யப்படாமைக்காக மகிந்தவை நாம் நினைவில் வைத்துக்கொள்ளப்போவதில்லை. ஆனால் இந்த இளைஞர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்காமல் மௌனம் காக்கும் சம்பந்தர் அய்யாவை நினைவில் வைத்திருப்போம்.
எமது மக்கள் இன்னும் மீள் குடியேற்றம் செய்யப்படாமைக்காக சிங்கள இனவெறி அரசை நாம் நினைவு வைத்தக்கொள்ளப் போவதில்லை. ஆனால் இந்த அகதி மக்களின் மீள் குடியேற்றத்திற்கு குரல் கொடுக்காமல் மௌனம் காக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பினரை நினைவில் வைத்திருப்போம்.
காணாமல் போனோர் பற்றி காலில் விழுந்து கெஞ்சினாலும் அது குறித்து அக்கறையின்றி இருக்கும் ரணில் அவர்களை நாம் நினைவு வைத்தக்கொள்ளப் போவதில்லை. அனால் இது பற்றி கள்ள மௌனம் சாதிக்கும் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரனை நினைவில் வைத்திருப்போம்.

No comments:

Post a Comment