Monday, August 31, 2015

ஓ! எல்லாம் வல்ல ஆண்டவரே!

ஓ! எல்லாம் வல்ல ஆண்டவரே!
நம்மட ஆட்கள் லண்டன் வந்து சேர
கள்ள பாஸ்போர்ட் கொடுத்தாய்!
திறமையான ஏஜென்சி கொடுத்தாய்!
அசைலம் அடிக்க கெட்டிக்கார
சொலிசிற்றரும் கொடுத்தாய்!
இவர்களுக்கு அறிவை எப்போது கொடுப்பாய்?
ஈஸ்ட்காம் ரோட்டில் 4 கோயில் உண்டு.
14 இந்தியன் சாப்பாட்டுக்கடை உண்டு
ஆனால் ஒரு கக்கூஸ் இல்லையே!
லண்டனில் ரோட்டில் மூத்திரம் பெய்யும் காட்சி
ஈஸ்ட்காம் நகரில் மட்டும் காணும் பாக்கியம்.
இது குறித்து நம்ம கவுன்சிலருக்கு
கொஞ்சம் கூட வெட்கம் இல்லை
என்னனே அழகாய் பட்டுவேட்டியுடன்
போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்!
உலகின் நாகரீகமாம் பாரிசிலும்
நம்ம விநாயகர் ஊர்வலம் வருகிறார்.
மருதமலை பாட்டிற்கு வெள்ளைக்காரிகளுக்கும்
உரு வரும் என்று காட்டுகிறார்.
பக்தி என்பது ஒருவித மனநோய் என்று
அமெரிக்க ஆராய்ச்சி கண்டு பிடித்துள்ளார்களாம்
அப்படியென்றால் இந்த மனநோயாளர்களுக்கு
எப்போது ? யார் ? சிகிச்சை கொடுப்பது?

No comments:

Post a Comment