Monday, August 31, 2015

• மக்களுக்கு கற்றுக் கொடுப்போம்! மக்களிடமிருந்து கற்றுக் கொள்வோம்!

• மக்களுக்கு கற்றுக் கொடுப்போம்!
மக்களிடமிருந்து கற்றுக் கொள்வோம்!
யுத்த வெற்றியுடன் இனவாதத்தையும் கக்கி பிரதமர் பதவியைப் பிடிக்க மகிந்த போட்ட திட்டத்தை மக்கள் தோற்கடித்துள்ளார்கள்.
யுத்தத்தை நடத்திய சரத்பொன்சேகா குடும்பத்துடன் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
யுத்தத்திற்கு பங்கர் வெட்டி உதவி புரிந்த ஜே.வி.பி கட்சியும்; தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட 115 புத்த பிக்குகளில் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை.
நடந்து முடிந்த தேர்தலில் இனவாதிகளுக்கு சிங்கள மக்கள் தகுந்த பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
இந்த படிப்பினையைவிட சிறந்த ஆசான் இந்த உலகில் வேறு உண்டா?
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு வருடத்திற்கள் தீர்வு பெற்று தரப்படும் என்று கூறிய தமிழ்தேசியகூட்டமைப்பிற்கு முழு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.
வாக்குறுதி வழங்கியபடி ஒரு வருடத்திற்குள் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையேல் அடுத்த தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களால் நிச்சயம் நிராகரிக்கப்படும்.
தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கும் வீதம் குறைந்து வருகிறது. குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த விகிதத்தைவிட பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைந்துள்ளது.
வாக்களிப்பு வீதம் குறைந்து வருவது பாராளுமன்ற தேர்தல் பாதையில் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதையே காட்டுகிறது.
தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் வழங்காமல் தொடர்ந்தும் நசுக்கப்படுமாயின் அடக்கு முறைக்கு எதிராக தமிழ் மக்கள் நிச்சயம் கிளர்ந்து எழுவார்கள்.
மற்ற நாடுகள் போன்று இலங்கையிலும் சிறுவர்கள் ராணுவத்திற்கு எதிராக கல் எறியும் போராட்டம்; வெடிக்கும். அந்த போராட்டம் மக்களின் ஆயுதப் போராட்டமாக மாறும்.
வன்முறையின்றி எந்த தீர்வும் கிடைக்காது என்பதை புரட்சியாளர்கள் மக்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment