Monday, August 31, 2015

• வாருங்கள் தோழர்களே பெண்ணாடத்திற்கு வீர வணக்கம் செலுத்துவோம் ஈகையர்களுக்கு!

• வாருங்கள் தோழர்களே பெண்ணாடத்திற்கு
வீர வணக்கம் செலுத்துவோம் ஈகையர்களுக்கு!
செப்-1 தோழர் தமிழரசன் நினைவு தினம்.
1984ம் ஆண்டு பெண்ணாடத்தில் தோழர் தமிழரசன் மாநாடு நடத்தினார். அம் மாநாட்டிற்கு எம்மை அழைத்து சென்றார். 2015ல் மீண்டும் அதே பெண்ணாடத்தில் தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கம் செலுத்தும் மாநாடு நடக்கும் என அப்போது நாம் நினைத்திருக்கவில்லை.
தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார். அவரில் இருந்து ஆயிரம் ஆயிரம் தமிழரசன்கள் தோன்றியுள்ளார்கள்.
அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழினம் விடுதலை பெற வேண்டும் என தோழர் தமிழரசன் குரல் கொடுத்தார். அதனாலேயே அவர் இந்திய அரசின் காவல்துறை நாய்களால் அடித்தக் கொல்லப்பட்டார்.
தோழர் தமிழரசனைக் கொன்றுவிட்டு அவரது இலட்சியத்தை அழித்துவிட்டதாக இந்திய அரசு கனவு கண்டது.
அனால் இன்று அதே இடத்தில் ஆயிரமாயிரம் தமிழரசன்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்கள் தோழர் தமிழரசன் காட்டிய பாதையில் வீர நடை போடுகிறார்கள்.
வாருங்கள் தோழர்களே!
தோழர் தமிழரசனை நினைவு கூர்வோம்!
அவருக்கு வீர வணக்கம் செலுத்துவோம்!

No comments:

Post a Comment