Monday, August 31, 2015

• முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களுக்கு

• முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களுக்கு
பிரபாகரன் சம்மதித்தால் ஒரு இரவில் தமிழர்களுக்கான தீர்வை பெற்று தருவேன் என முன்னர் பல தடவை நீங்கள் கூறியிருக்கின்றீர்கள்.
இப்பொது பிரபாகரன் இல்லாமல் 6 வருடம் கழிந்து விட்டது. அதாவது 2190இரவுகள் கழிந்து விட்டன. ஆனால் உங்களால் இதுவரை எந்த தீர்வையும் பெற்று தர முடியவில்லை.
உங்களால் தமிழர்களுக்கு எந்த தீர்வையும் பெற்று தர முடியவில்லை என்பதைவிட நீங்களே உங்கள் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்குரிய சுதந்திரத்தையும் தமிழ் மக்களே பெற்று தந்துள்ளார்கள்.
நீங்கள் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சயாட்சி என்கிறீர்கள். ஆனால் பேரினவாத கட்சிகள் எல்லாம் சுயாட்சியும் பிரிவினைக்கு ஒப்பானது என்றும் அதனை எற்க முடியாது என்றும் அறிவித்துள்ளன. எனவே நீங்கள் எப்படி சுயாட்சி பெறப்போகிறீர்கள்?
நீங்கள் உண்மையிலே தமிழ் மக்களுக்கு ஏதாவது தீர்வு பெற முயன்றால் உங்கள் மீதான வழக்குகள் தூசு தட்டப்படும். நீங்கள் மீண்டும் பணாகொட இராணுவ முகாமில் அடைக்கப்படுவீர்கள். முன்பு நடந்ததுபோல் அங்கு கணுக்கால் நீரில் நிர்வாணமாக நீச்சல் அடிக்க வைக்கப்படுவீர்கள்.
"அகிம்சை போராட்ட மூலமோ அல்லது தேர்தல் பாதை மூலமோ தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் பெற முடியாது. ஆயுதம் ஏந்திய போராட்ட பாதை மூலமே தீர்வு பெற முடியும்." இதனை நீங்களே முன்பு மக்களுக்கு கூறினீர்கள். அந்த வரிகளை மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

No comments:

Post a Comment