Monday, August 31, 2015

உதம்சிங்கிற்கு ஒரு நியாயம். தானுவிற்கு இன்னொரு நியாhயம். இதுதானா இந்திய நியாயம்?

• உதம்சிங்கிற்கு ஒரு நியாயம்.
தானுவிற்கு இன்னொரு நியாhயம்.
இதுதானா இந்திய நியாயம்?
பஞ்சாபில் 400 இந்தியர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட டயர் என்னும் ஆங்கிலேய அதிகாரியை இங்கிலாந்து சென்று சுட்டுக் கொன்றவர் உதம்சிங.
1940ல் இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்ட உதம்சிங் உடல் எச்சங்களை 1974ம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி இந்தியாவுக்கு எடுத்துவந்து அரச மரியாதையுடன் அடக்கம் செய்தார்.
இந்திய பிரதமர் , ஜனாதிபதி உட்பட பலரும் உதம்சிங் உடலுக்கு மரியாதை செலுத்தி அவரை மாபெரும் தியாகி என புகழாரம் சூட்டினார்கள்.
இலங்கையில் 7000 தமிழர்களைக்கொன்ற, 800 பெண்களை கற்பழித்த, இந்திய ராணுவத்தை அனுப்பிய ராஜீவ்காந்தியை இந்தியா சென்று தானு கொன்றார்.
உதம்சிங்கை மாபெரும் தியாகி என்று கௌரவித்த இந்திய அரசு தானுவை பயங்கரவாதி என்கிறது.
"என் சகோதரியின் கற்பு பறிபோகும்போது என்னால் நிச்சயமாக அகிம்சையைக் கடைப்பிடிக்க முடியாது" என்று இந்தியாவின் தாத்தா காந்தி கூறினார்.
ஆனால் 800 பெண்கள் கற்பழிக்கப்பட்டமைக்கு தானு என்ற பெண் ராஜீவை பழிவாங்கினால் அதை பயங்கரவாதம் என இந்திய அரசு அழைக்கிறது.
இந்திரா காந்தியின் கொலையை அடுத்து இந்தியா வெங்கும் 5000 அப்பாவி சீக்கியர் கொல்லப்பட்டார்கள். அதற்கு பிரதமர் மோடி சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஆனால் 7000 அப்பாவி தமிழர்கள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டமைக்கு இதுவரை மன்னிப்பு கோராதது மட்டுமல்ல ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யக்கூடாது என மோடி அரசு உச்ச நீதிமன்றில் வாதாடுகிறது.
சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரியதுடன் அவர்களுக்கு ஆட்சியிலும் பிரதமர் பதவி வழங்கப்படுகிறது. ஆனால் தமிழர்களிடம் மன்னிப்பு கோராதது மட்டுமல்ல தொடர்ந்தும் தமிழினம் நசுக்கப்படுகிறது.
இதற்கு காரணம் என்ன?
தமிழினம் அடிமையாக இருப்பதால்தானே இந்திய அரசு அதன் முதுகில் ஏறி சவாரி செய்கிறது!
தமிழினம் விடுதலை பெற்று சுதந்திரமாக இருந்தால் இந் நிலை வந்திருக்குமா?
தோழர் தமிழரசன் பாதையில் தமிழ்நாடு தனிநாடானால்....!

No comments:

Post a Comment