Monday, August 31, 2015

"வந்தே மாதரமா?" அல்லது "வந்தே ஏமாத்திறமா?"

 "வந்தே மாதரமா?" அல்லது "வந்தே ஏமாத்திறமா?"
இன்று இந்தியாவின் சுதந்திரதினமாம். அனைவருக்கும் மிட்டாய் வழங்கி "வந்தேமாதரம்" பாடுகிறார்கள்.
ஆனால் தமிழருக்கு உண்மையில இந்தியாவில்; சுதந்திரம் இருக்கிறதா?
மூன்று முழக் கயிற்றால் கட்டப்பட்ட மாட்டிற்கு 10 முழக் கயிற்றால் கட்டியபோது அந்த மாடு தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கத்தினால் அது எந்தளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள்தனமானது இந்தியாவில் தமிழர்கள் தமக்கு சுதந்திரம் கிடைத்தவிட்டது என மிட்டாய் வழங்கி வந்தேமாதரம் பாடுவது.
வெள்ளைக்காரன் காலத்தில் தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட வரித்தொகை ஒரு வருடத்தில் சுமார் 350 கோடி ரூபா. ஆனால் தற்போது கொள்ளைக்கார இந்திய மத்திய அரசு தமிழகத்தில் வச+லிக்கும் வரி கடந்த ஆண்டு மட்டும் 85000கோடி ரூபா.
85000கோடி ரூபா வரியாக வசூலிக்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி உதவியாக கொடுக்கும் பணம் 28000கோடி ருபா மட்டுமே. அதிலும் அடுத்த அண்டு முதல் 6000கோடி ரூபா குறைக்கப்படவிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு தமிழகத்தில் இருந்து 57000கோடி ரூபா வரியாக பெற்றுக்கொள்கிறது.
அதேவேளை தமிழக அரசின் இன்றைய கடன் 1.21லட்சம் கோடி ரூபா. இதற்கு வட்டியாக 10754 கோடி ரூபா தமிழக அரசு கட்டுகிறது. ஒவ்வொரு தமிழன் தலையிலும் 13862 ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது. அதாவது பிறக்கும் ஒவ்வொரு தமிழக்; குழந்தையும் 13862ரூபா கடனுடனே பிறக்கின்றது.
வருடம் 57000கோடி ரூபாவை தமிழகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு அந்த பணத்தில் இருந்தே தமிழ் மீனவனை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படைக்கு பயிற்சி அளிக்கிறது.
தமிழகத்தில் இருந்து பெற்றக் கொள்ளும் நிதியில் இருந்தே தமிழர்களை கொன்றொழித்த இலங்கை ராணவத்திற்க உதவி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் தமிழர்களிடமிருந்து பெறப்படும் நிதியில் இருந்தே இந்திய அரசு இலங்கை அரசின் துண்டு விழும் பட்ஜட் நிதிக்கு கடன் கொடுத்து காப்பாற்றுகின்றது.
உலகில் தன்னை கொல்லும் கடற்படைக்கு தானே நிதி வழங்கிய தமிழக தமிழர்களின் அறியாமையை என்னவென்று அழைப்பது?
தமிழ் இனத்தை அழிக்கும் இலங்கை அரசுக்கு நிதி வழங்கும் தமிழக தமிழர்களின் அடிமைத்தனத்தை என்னவென்பது?
இப்போது கூறுங்கள் தமிழர்களே!
இந்தியாவில் தமழிழக தமிழனுக்கு உண்மையில் சுதந்திரம் கிடைத்தவிட்டதா?

No comments:

Post a Comment