Monday, August 31, 2015

ஜே.வி.பி- "மாக்சிய" இனவாதிகள்?

• ஜே.வி.பி- "மாக்சிய" இனவாதிகள்?
தமிழீழத்தை பிரிவினை என்று எதிர்த்தார்கள்
சமஸ்டியையும் பிரிவினை என்று எதிர்க்கின்றார்கள்.
வட- கிழக்கு மாகாண சபையை வழக்கு போட்டு பிரித்தார்கள்
யுத்தத்திற்கு பங்கர் வெட்டிக் கொடுத்தார்கள்
ராணுவத்திற்கு ஆள் சேர்த்துக் கொடுத்தார்கள்
மகிந்தவின் இன அழிப்பக்கு துணை போனார்கள்
இத்தனையும் செய்துவிட்டு கொஞ்சம்கூட கூச்சமின்றி
தங்களை "மாக்சியவாதிகள்" என்று அழைக்கிறார்கள்.
தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இவர்கள் "மாக்சியவாதிகள்" என்றால், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை முன்வைத்த கால்மாக்ஸ் இனவாதியா?
ஜே.வி.பி பற்றி தோழர் சண்முகதாசன் கூறியது,
"ஜே.வி.பி நடத்திய வகுப்புவாத பிரச்சாரம் பற்றி சந்தேகத்திற்கு இடமில்லை. மலையக தமிழர்கள் இந்திய விஸ்தரிப்புவாதிகளின் பகடைக்காய்கள் என்று அவர்களுடைய ஜந்தாவது விரிவுரை கூறியது. ஜே.வி.பி புதியதோர் கலவையைச் செய்தது. அது வகுப்புவாதத்துடன் பரட்சிகர வார்த்தைகளைக் கலந்தது." ( பக்-239. ஓரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்)
அன்று தோழர் சண்முகதாசன் கூறியது உண்மைதான் என்பதை தற்போது ஜே.வி.பியினர் நன்கு நிரூபித்து வருகின்றனர்.
இதுவரை
மாக்சிய "சந்தர்ப்பவாதிகள"; அறிந்திருக்கிறோம்.
மாக்சிய "திரிபுவாதிகள்" அறிந்திருக்கிறோம்
மாக்சிய "சீர்திருத்தவாதிகள்" அறிந்திருக்கிறோம்.
ஆனால் இப்பொது ஜே.வி.பி மூலம்
மாக்சிய "இனவாதிகள்" அறிகிறோம்.

No comments:

Post a Comment