Monday, August 31, 2015

ஈழத் தமிழினத்திற்காக செய்வீர்களா கலைஞர் அவர்களே?

 இந்தியா இலங்கைக்கு வழங்கிய போர்க்கப்பலை திரும்பப் பெற வேண்டும்- கலைஞர் கோரிக்கை
• உள்ளக விசாரணையை வலியுறுத்தும் அமெரிக்காவை இந்திய அரசு கண்டிக்க வேண்டும்- கலைஞர் கோரிக்கை
கலைஞர் அவர்களே!
நீங்கள் பதவியில் இருக்கும்போது இலங்கைக்கு கச்சதீவை வழங்கியதை மறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்
நீங்கள் பதவியில் இருக்கும்போது இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு வழங்கிய உதவிகளை மறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்
நீங்கள் பதவியில் இருக்கும்போது உங்கள் மகள் இலங்கை சென்று மகிந்தவுடன் கைகுலுக்கி பரிசில்கள் பெற்று வந்ததையும் மறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்
நீங்கள் பதவியில் இருக்கும்போது இலங்கை அரசுடன் சேர்ந்து இந்திய அரசும் தமிழர்களை அழித்ததை மறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நீங்கள் பதவியில் இருக்கும்போது வெள்ளைக் கொடியுடன் சரணைய சென்றவர்கள் கொலையுண்டதையும் மறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்
நீங்கள் பதவியில் இருக்கும்போது மருத்துவ சிகிச்சை பெற வந்த பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியதையும் மறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்
இவ்வாறு ஈழத் தமிழினத்திற்கு நீங்கள் செய்த எல்லாக் கொடுமைகளையும் மறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் உங்களிடம் ஒன்றேயொன்றை மட்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்களால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம்களை இனியாவது மூடும்படி கோரிக்கை வையுங்கள்.
ஏனெனில் இதன் கொடுமை தாங்காமல் அண்மையில்கூட ஒரு அகதி தம்பதி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையாவது ஈழத் தமிழினத்திற்காக செய்வீர்களா கலைஞர் அவர்களே?

No comments:

Post a Comment