Friday, July 31, 2015

வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களே!

• வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களே! 
யாருடைய ம-- பிடுங்கப் போயிருந்தீர்கள்?
இதோ வறுமையின் கொடுமையில் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்ட குழந்தைகள் பாரீர். இதை உங்களால் தடுக்க முடிந்ததா? அல்லது இந்த கொடுமையை உலகின் கவனத்திற்காவது கொண்டு செல்ல முடிந்ததா?
மன்னாரில் பள்ளி மாணவி ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டபோது மன்னார் ஆயர்கூட அதற்கு எதிராக குரல் கொடுக்கிறார். ஆனால் மன்னார் எம.பி எங்கு போயிருந்தார்?
புளியங்குளத்தில் பாட்டியுடன் வளர்ந்த மாணவி கூட்டு வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். அது வழக்கு கூட பதிவு செய்யாமல் பொலிசாரினால் மறைக்கப்பட்டபோது வன்னி எம்.பி எங்கு போயிருந்தார்?
நெடுங்கேணியில் ராணுவத்தால் தமிழ் மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டபோது அதற்கு எதிராக மக்கள் போராடினார்கள். ஆனால் முல்லைதீவு எம்.பி எங்கு போயிருந்தார்?
கிளிநொச்சியில் பரீட்சைக்கு பணம் கட்டுவதற்காக சிறுவன் ஒருவன் திருடியதாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான். இதைக்கூட கவனிக்காமல் கிளிநொச்சி எம்.பி எங்கு போயிருந்தார்?
• சிறையில் இருப்பவர்களை விடுவிக்க முடியவில்லை
• காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை
• தமிழ் மாணவிகளை காப்பாற்ற முடியவில்லை.
• சிறுவர்களின் கல்விக்குகூட உதவ முடியவில்லை
• குழந்தைகள் பட்டினி சாவைக்கூட தடுக்க முடியவில்லை.
அப்புறம் என்ன ம-----டா எம்.பி பதவிக்கு போட்டி போடுகிறீர்கள்?

No comments:

Post a Comment